Saturday, 4 July 2020

*🛡️கல்வித்துறைக்கு ஆலோசனை வழங்கிய ஆசிரியர் சங்கத் தலைவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை! - ஆசிரியர் சங்கங்களை அச்சுறுத்தும் செயல்! - கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் நடவடிக்கை! - கல்வித்துறை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை.*

*🛡️கல்வித்துறைக்கு ஆலோசனை வழங்கிய ஆசிரியர் சங்கத் தலைவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை! - ஆசிரியர் சங்கங்களை அச்சுறுத்தும் செயல்! - கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் நடவடிக்கை! - கல்வித்துறை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை.*

*_தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அமைப்பின் செய்தி அறிக்கை எண்:11/2020 நாள்:04.07. 2020._*

*⚔️*
*🛡️கல்வித்துறைக்கு ஆலோசனை வழங்கிய ஆசிரியர் சங்கத் தலைவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை! ஆசிரியர் சங்கங்களை அச்சுறுத்தும் செயல்! கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் நடவடிக்கை! கல்வித்துறை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை.*

*⚔️*
*🛡️பத்தாம் வகுப்பு மற்றும் பதினோராம் வகுப்புப் பொதுத்தேர்வு மதிப்பெண்கள் கணக்கிடுவது தொடர்பாக கல்வித்துறைக்கு ஆலோசனை வழங்கிய ஆசிரியர் சங்கத் தலைவர்கள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள ஒழுங்கு நடவடிக்கையை பள்ளிக் கல்வித்துறை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.*

_இது தொடர்பாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் ச.மயில் வெளியிட்டுள்ள அறிக்கை:_

*⚔️*
*🛡️கொரோனா பெருந்தொற்றின் காரணமாக தமிழ்நாட்டில் 16.03.2020 முதல் அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் 2019-20 ஆம் கல்வியாண்டிற்கான 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வையும், 11ஆம் வகுப்புப் பொதுத்தேர்வையும் (விடுபட்ட பாடங்கள்) நடத்த இயலாத நிலை ஏற்பட்டுவிட்டது.*

*மேற்கண்டவாறு பொதுத்தேர்வுகளை நடத்த இயலாத சூழலில் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் கணக்கிடுவது தொடர்பாக அரசாணை எண்: 54 பள்ளிக்கல்வித்துறை நாள்: 09.06.2020 வெளியிடப்பட்டது. அதில் மாணவர்களின் காலாண்டு, அரையாண்டுத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையிலும், மாணவர்களின் வருகைப்பதிவு அடிப்படையிலும் பொதுத்தேர்வு மதிப்பெண்களைக் கணக்கிட ஆணையிடப்பட்டது.*

*⚔️*
*🛡️அவ்வாறு கணக்கிடும்போது அரசுப்பள்ளி மாணவர்கள், கிராமப்புற மாணவர்கள், மாற்றுத்திறனாளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் ஆகியோருக்கு ஏற்படும் பாதிப்புக்கள், மதிப்பெண் வழங்குவதில் ஏற்படும் குளறுபடிகள் ஆகியவற்றை கல்வித்துறைக்குத் தெரிவிக்கும் வகையிலும் அதற்கான மாற்று ஆலோசனைகளையும் முன்வைத்து தனது சங்கத்தின் கருத்துக்களை தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் மா.ரவிச்சந்திரன் அவர்கள் ஊடகங்கள் வழியே வெளியிட்டார்.*

*⚔️*
*🛡️மதிப்பெண்கள் வழங்கும் விவகாரத்தில் தனியார் சுயநிதிப் பள்ளிகள் செய்யும் முறைகேடுகள் தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திகளைச் சுட்டிக்காட்டி, இந்த சிக்கலைத் தவிர்ப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய ஆலோசனைகள் குறித்து தனது சங்கத்தின் கருத்துக்களை தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் P.பேட்ரிக் ரெய்மாண்ட் ஊடகங்கள் வழியே தெரிவித்தார்.*

*⚔️*
*🛡️மேற்கண்டவாறு தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வித்துறையின் மீது அக்கறை கொண்டு, மாணவர்கள் நலன் கருதி ஆலோசனைகள் வழங்கிய ஆசிரியர் சங்கத் தலைவர்கள் மீது பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டுள்ள ஒழுங்கு நடவடிக்கை என்பது ஜனநாயக நெறிமுறைகளுக்கு மாறான, ஆசிரியர் சங்கத் தலைவர்களை அச்சறுத்துகின்ற நடவடிக்கையாகும்.*

*⚔️*
*🛡️ஒரு முக்கியத்துவம் வாய்ந்த அரசாணையின் மீது கருத்துத் தெரிவிப்பதற்குக் கூட ஆசிரியர் இயக்கங்களுக்கு உரிமை இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை கருதுவது அடிப்படை உரிமையான கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் செயலாகும்.*

*⚔️*
*🛡️ஆசிரியர் சங்கத் தலைவர்கள் தமிழ்நாட்டின் கல்வி நலன் கருதி வெளியிடும் கருத்துக்களை விமர்சனமாக நோக்காமல், ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளாக பள்ளிக்கல்வித்துறை கருத வேண்டும்.*

*⚔️*
*🛡️ஆசிரியர் சங்கத் தலைவர்கள் மீது பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டுள்ள ஒழுங்கு நடவடிக்கை என்பது தமிழ்நாட்டு ஆசிரியர்கள் மத்தியிலும், ஆசிரியர் சங்கங்கள் மத்தியிலும் மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.*

*⚔️*
*🛡️எனவே, பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர் சங்கத் தலைவர்கள் மீது மேற்கொண்டுள்ள 17(ஆ) ஒழுங்கு நடவடிக்கைகளை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.*

_🤝தோழமையுடன்;_

*_ச.மயில்,_*
_தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,_
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*

No comments: