Monday 30 April 2018

*(04.05.2018) வெள்ளிக்கிழமை 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் வெளியிடப்படும்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/04/02052018-1-6-9-11.html




*🌟முதலமைச்சர் பழனிசாமி தலைமையில்  (04.05.2018) வெள்ளிக்கிழமை 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்*


*🌟9 முதல் 12-ம் வகுப்பு வரை அனைத்து பாடத்திட்டமும் கணினிமயமாக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


*புதிய தகவல்கள்! பாட புத்தகத்தில் வேலை வாய்ப்பு தகவல்கள்! : மாணவர் நலனுக்காக தமிழகத்தில் அறிமுகம்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/04/blog-post_63.html


🌟தமிழக அரசின், புதிய பாட திட்டப்படி, ஒவ்வொரு பாட புத்தகத்திலும், அந்த படிப்புக் கான வேலைவாய்ப்பு தகவல்கள் இடம்பெற உள்ளன. மேலும், அந்த துறைகளில் சாதித்த வர்களின் விபரமும் சேர்க்கப்பட உள்ளது. வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், புதுமையாக, தமிழக பள்ளிப் பாட புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளன.



🌟பள்ளி, பாட, புத்தகத்தில், வேலை வாய்ப்பு, தகவல்கள்! , மாணவர், நலனுக்காக ,தமிழகத்தில், அறிமுகம்



*மாற்றம்:*

🌟தமிழக பள்ளி கல்வித்துறையில், 13 ஆண்டு களுக்கு பின், பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டு உள்ளன.



🌟பள்ளிகல்வி அமைச்சர், செங்கோட்டையன் முயற்சியில், தமிழக பாடத் திட்டங்கள், சி.பி.எஸ்.இ., என்ற, மத்திய பாடத்தை மிஞ்சும் வகையில் தயாரிக்கப்பட்டு உள்ளன. பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலர், பிரதீப் யாதவ், செயலர், உதயசந்திரன் மேற்பார்வையில், கல்வியாளர், அனந்தகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர், புதிய பாட திட்டத்தை உருவாக்கினர். மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர், அறிவொளி தலைமையிலான குழுவினர், புத்தகங்களை தயாரித்துள்ளனர்.



🌟வரும் கல்வி ஆண்டில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புக்கு, புதிய பாடத்திட்டம் அமலாகிறது. இதில், பிளஸ் 1 தவிர, மற்ற வகுப்பு களுக்கு, முதல் பருவ தேர்வுக்கான புத்தகங்கள் அச்சிடப்பட்டு, பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. 

🌟புதிய பாடத்திட்ட புத்தகங்களில், கண்ணை கவரும் வண்ணங்களுடன், பக்கத்துக்கு பக்கம் சித்திரம், 'பார்கோடு' மற்றும், இணையதள வீடியோ இணைப்பு என, அசத்தலான அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. பிளஸ் 1 புத்தகத்தில், கூடுதல் 

🌟அம்சமாக, வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், வேலைவாய்ப்பு குறித்த தகவல்களும் இடம்பெற்றுள்ளன.



🌟ஒவ்வொரு பாட புத்தகத்திலும், அந்த பாடத்தை படித்தால், என்னென்ன மேற்படிப்பு வாய்ப்புகள் உள்ளன; அவற்றை படித்தால், எந்தெந்த வேலை வாய்ப்புகளை பெறலாம் என்ற, விரிவான விபரங் கள், புத்தகத்தின் முகப்புரையாக தரப்பட்டுள்ளன. 



🌟மேலும், அந்த படிப்புகளை படித்து, அத்துறை களில் சாதனை படைத்தோர் பற்றிய முழு விபரங்களும் தரப்பட்டுள்ளன. இதனால், பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் போதே, மாணவர் கள், தங்களின் எதிர்கால வேலைவாய்ப்பு மற்றும் அதற்கான படிப்பு வகைகளை அறிந்து, திட்டமிடலாம். 

🌟இந்த தகவல்களை பயன்படுத்தி, மாணவர்கள், கல்வி ஆண்டின் துவக்கம் முதல் தேர்வு வரை, லட்சியத்துடன் படித்து, அதிக மதிப்பெண் பெற முடியும். அடுத்து என்ன படிக்கலாம் என்பதை திட்ட மிடவும் உதவும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

*"தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியும் இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்புப் போராட்டங்களும்" மாநிலப் பொதுச்செயலாளரின் விரிவான கட்டுரை*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/04/blog-post_30.html


*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியும் இடைநிலை ஆசிரியர் ஊதியமீட்புப் போராட்டங்களும்*



*🌟தமிழகம் முழுவதும் போராட்ட மேகங்கள் சூழ்ந்திருக்கின்றன, எத்திசை நோக்கினும் போர்க்குரல்கள் ஒலித்துக் கொண்டேயிருக்கின்றன,  ஆசிரியர்கள், மாணவர்கள், அரசு ஊழியர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், வணிகர்கள், பொதுமக்கள் என அனைவருமே போராட்டக்களத்தில் நின்று கொண்டிருக்கிறார்கள். அரசாங்கம் வழக்கம்போல் அசைவற்ற நிலையிலேயே உள்ளது.*



*“போராட்டங்கள் யாராலே… புத்தி கெட்ட அரசாலே” என்ற முழக்கம் அடிக்கடி நினைவுக்கு வருகிறது.*



*🌟தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சனையான காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கின்ற விவகாரத்தை ஒரு நிர்மலாதேவியே பின்னுக்குத் தள்ளிவிட்டார். இதுதான் வழக்கமான தமிழகத்தின் நிலை. எவ்வளவு பெரிய விஷயத்தையும் எளிதில் மறந்துவிடக்கூடியவர்களாக தமிழக மக்கள் இருக்கிறார்கள்.  தமிழக மக்களில் ஒரு பகுதியினராக உள்ள தமிழக ஆசிரியர்களில் ஒரு பகுதியினரும் இதற்கு விதிவிலக்காக இல்லை என்பதைத்தான் சமீபத்திய இடைநிலை ஆசிரியர் போராட்ட நிகழ்வுகள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.*



*🌟இடைநிலை ஆசிரியர் ஊதியப் பிரச்சனைக்காக கணக்கற்ற களப் போராட்டங்களை நடத்திய தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியைப் பார்த்துக்கூட “என்ன செய்தது இந்த இயக்கம்?” என்று சிலர் கேள்வி கேட்கிற நிலையும், அன்றைக்குப் போராட்டம் நடத்துகிற இயக்கம் எதுவோ அதன் பின்னால் செல்வது என்பதும்கூட கோரிக்கையின் மீதான ஆழமான நியாயத்தை வெளிப்படுத்தினாலும் கூட, அக்கோரிக்கைக்காக எண்ணற்ற களப்போராட்டங்களை நடத்திய, நடத்திக் கொண்டிருக்கிற இயக்கங்களை விமர்சிப்பது என்பது வேடிக்கையான ஒன்றாகவே உள்ளது.*



*🌟பொதுவாக, அநீதிக்கு எதிரான நியாயமான போராட்டங்கள் வரவேற்கப்பட வேண்டியவை; வாழ்த்தப்பட வேண்டியவை ஆதரிக்கப்பட வேண்டியவை என்பதில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணிக்கு இருவேறு கருத்துக்கள் கிடையாது. நியாயமான கோரிக்கைக்காக களத்தில் நிற்பது நேரெதிர்; கொள்கை கொண்ட அமைப்பாக இருந்தாலும் அக்கோரிக்கை வெற்றி பெற நெஞ்சார வாழ்த்துவதுதான் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் இயல்பு. அவ்வகையில் நடந்து முடிந்த போராட்டத்தை நமது பேரியக்கம் வாழ்த்துகிறது. இருந்தாலும், இந்நேரத்தில் நம் இயக்கத்தின் நிலைப்பாட்டில் நமது உறுப்பினர்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்கள், அவர்கள் முன் வைத்த சில விமர்சனங்கள் ஆகியவற்றின் வெளிப்பாடாக சில கள எதார்த்தங்களை நாம் சுட்டிக் காட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.*



*🌟2016 ஆம் ஆண்டில் இதேபோன்று “உயிர் துறக்கும் போராட்டம்” என்ற பெயரில் போராட்டம் நடத்திய இதே நண்பர்கள் தொடக்கக்கல்வி இயக்குநர் மீது நம்பிக்கை வைத்து அப்போராட்டத்தை முடித்துக் கொண்டனர். அனைத்துக் களப்போராட்டங்களும் வெற்றியில்தான் முடியும் என்று நாம் எதிர்பார்க்க இயலாது.*



*🌟அவ்வகையில் அது ஒன்றும் தவறில்லை ஆனால், அதன்பின்பு இப்பிரச்சனைக்கு நீதிமன்றம் மூலமே தீர்வுகாண முடியும் என்ற நிலைப்பாட்டை எடுத்து தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான இடைநிலை ஆசிரியர்களிடம் வழக்குநிதி வசூலித்து ஜேக்டோ ஜியோவில் இருந்து கொண்டே தனியே வழக்குப் போட்டதும்,  அவ்வழக்கில் ஒரு சில தினங்களில் தீர்ப்பு வந்துவிடும் என்று ஆசிரியர்களை நம்ப வைத்ததும், வழக்கு இன்று வரை நிலுவையில் உள்ள நிலையிலும், தாங்கள் தொடுத்த வழக்கு நிலுவையில் இருக்கும்போதே மீண்டும் போராட்டத்தின் மீது நம்பிக்கை கொண்டு சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டத்தை அறிவித்ததும், கூட்டுப்போராட்டத்தின் வலிமைக்கு பயன் தருமா? என்பதைத் தொடர்புடைய நண்பர்கள் சிந்திக்க வேண்டும்.*



*🌟இந்த இரட்டை நிலைப்பாட்டை நாம் எப்படி எடுத்துக்கொள்வது? போராட்டக்களத்தில் நடைபெறுகின்ற பேச்சுவார்த்தை நிகழ்வுகளில் “நீங்கள் தொடுத்த வழக்கே நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.  வழக்கின் இறுதித் தீர்ப்பின்படி அரசு செயல்படும்” என்று அரசுத் தரப்பு சொல்வதற்கு நாமே ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததாக ஆகிவிடாதா? என்பதையும் தொடர்புடையவர்கள் சிந்திக்க வேண்டும்.*



*🌟ஜேக்டோ ஜியோவின் வீரஞ்செறிந்த தொடர் போராட்டங்களால் நீதிமன்ற தலையீட்டால் 8-வது ஊதியக்குழு அமல்படுத்தப்பட்டபோது இடைநிலை ஆசிரியர்களுக்கிடையே மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் ஊதியக்குழுவின் ஊதிய நிர்ணயம் செய்வதை மறுத்து கடிதம் அளிக்குமாறு தவறாக வழிகாட்டியதையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் இடைநிலை ஆசிரியர்கள் சற்று சிந்தித்து பார்க்க வேண்டும்.*



*🌟“சமவேலைக்குச் சம ஊதியம்” பெறுகின்ற அரசாணையைப்; பெறுகின்றவரை உண்ணாநிலைப் போராட்டம் தொடரும் என்று அறிவித்தவர்கள் நான்கு முறை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அரசு இம்மியளவும் இறங்கிவராத நிலையில் கல்வியமைச்சர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து எப்படி போராட்டக்களத்திலிருந்து வெளியேறினார்கள் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது.*



*🌟06.09.2017அன்று ஈரோட்டில் முதலமைச்சர் மீது நம்பிக்கை வைத்து போராட்டக்களத்திலிருந்து வெளியேறிவர்களுக்கும் இவர்களுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை. அத்தலைமையின் பின்னால் அணிவகுத்துச் சென்ற ஆசிரிய சகோதர, சகோதரிகள் இவற்றையெல்லாம் எப்படி எடுத்துக் கொண்டார்கள் என்பதும், அவர்கள் எந்த மனநிலையோடு போராட்டக்களத்திலிருந்து வெளியேறினார்கள் என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.*



*🌟பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களையும், அரசு ஊழியர்களையும் தன்னகத்தே கொண்ட மாபெரும் கூட்டமைப்பான ஜேக்டோ ஜியோவில் இருந்து கொண்டே, அதன் போராட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், அதன் மிக முக்கியக் கோரிக்கையாக இடைநிலை ஆசிரியர்களின் ஊதியப் பிரச்சனை முன் வைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் உறுதியான நிலைப்பாட்டிற்கு மாறானநிலை எடுத்து கூட்டமைப்பின் வலிமைக்கு குந்தகம் ஏற்படுத்துவதும், மே-8 முற்றுகைப் போரட்ட நிகழ்வை திசை திருப்பும் நோக்கில் செயல்படுவதும் தமிழ்நாட்டு ஆசிரியர்களின் எதிர்கால நலன்களுக்கு உதவுமா? என்பதையும் தமிழ்நாட்டு ஆசிரியர்கள் சிந்தித்து, சீர்தூக்கிப் பார்க்கவேண்டிய தருணமிது.*



*🌟மத்திய அரசுக்கு இணையான ஊதியம் என்பது சாதாரணமாகக் கிடைத்ததல்ல.  44 ஆண்டுகாலமாக பல்வேறு களப்போராட்டங்களின் பின்னணியில் அடிபட்டு, மிதிபட்டு, பல இன்னுயிர்களை இழந்து பெற்றதாகும். அவ்வாறு பெற்ற மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை தமிழக இடைநிலை ஆசிரியர்கள் 1.6.1988 முதல் 31.12.2005 வரை மட்டுமே பெற முடிந்தது.  எனவே, இழந்த மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தைத் பெறுவது என்பதே சரியானதாக இருக்கும். ஆனால், மத்திய அரசுக்கு இணையான ஊதியம் என்பதை விட்டுவிட்டு “சம வேலைக்குச் சம ஊதியம்” என்ற கோரிக்கையை முன் வைப்பது இடைநிலை ஆசிரியர்களின் ஊதியப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வாகாது என்பதையும், இதுபோன்ற நிலை எதிர்கால ஊதியக்குழுக்களில் மீண்டும் மீண்டும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயலாகவே அமையும் என்பதையும் தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்கள் நுணுகி ஆராய்ந்து புரிந்துகொள்ள வேண்டும்.*



*🌟மேலும், தொழிற்சங்க இலக்கணம் என்பது கூட்டுப்பேர சக்தியை அதிகரித்து அதன்மூலம் அதிகார வர்க்கத்திடமிருந்து நம் உரிமைகளை மீட்டெடுப்பது என்பதுதான்.  ஆனால், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களையும், அரசு ஊழியர்களையும் கொண்ட ஜேக்டோ ஜியோவிலிருந்து விலகி நின்று ஜேக்டோ ஜியோவின் போராட்டம் உச்சநிலையில் சென்று கொண்டிருக்கும் நிலையில், அதன் மிக முக்கியத் கோரிக்கையாக உள்ள இடைநிலை ஆசிரியர் ஊதியத்திற்காக தனியே ஒரு போராட்டத்தை அறிவித்து அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி “ ஒரு நபர் குழுவின் அறிக்கையின்படியே ஊதியம் வழங்கப்படும்” என்ற அரசின் அறிவிப்பை ஏற்று போராட்டத்தை திரும்பப் பெற்றது என்பது கூட ஜேக்டோ ஜியோவின் மே-8 முற்றுகைப் போராட்ட நிகழ்வில் இடைநிலை ஆசிரியர் ஊதியக் கோரிக்கைக்கு முன்கூட்டியே முடிவெழுதுகின்ற செயலாகவே கருதப்படும் என்பதையும் தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.*



*🌟மேலும், போராட்டத்திற்குத் தலைமையேற்றவர்கள் தோழமை உணர்வோடு சகோதரச் சங்கங்களைக் கூட அழைக்காமல் போராட்டக்களத்தை தனிமனித பாராக்கிரமச் செயலாக நினைத்துக்கொண்டு செயல்படுவது என்பது விளம்பரத்திற்கும், தங்களை முன்னிலைப்படுத்துவதற்கும் வேண்டுமானால் பயன்படலாமேயொழிய கோரிக்கையை வென்றெடுக்க உதவுமா? என்பதையும் தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.*



*🌟இடைநிலை ஆசிரியர் ஊதியப் பிரச்சனைக்காக உண்ணாநிலைப் போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் அக்கோரிக்கை வெற்றிபெறாத நிலையில், அதே கோரிக்கையைப் பிரதானமாகக் கொண்டு நடைபெற உள்ள ஜேக்டோ ஜியோவின் உச்சகட்டப் போராட்டமான மே-8 முற்றுகைப் போராட்டத்திற்கு இதுவரை ஆதரவு தெரிவிக்காததும், 5,6 மாதங்களில் தங்கள் கோரிக்கை நிறைவேறும் என்று நம்பிக்கை தெரிவிப்பதும் அரசுக்கு அவகாசம் கொடுக்கின்ற செயலாகவே அமையும் என்பதையும் தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்கள் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.*



*🌟இச்சூழலில் போர்க்குணமும், பொதுநலச்சிந்தனையும் கொண்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கடந்தகாலச் செயல்பாடுகளை, தன்னிகரற்ற போராட்ட நிகழ்வுகளை இன்றைய இளைய தலைமுறை ஆசிரியர்களுக்கு எடுத்துச் சொல்வது என்பது காலத்தின் தேவையாக உள்ளது.*



*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்  கூட்டணி 02.08.1984ல் உருவான இயக்கம். உருவான மறுநாளே சென்னையில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் பங்கேற்ற உண்ணாவிரதப் போராட்டத்தையும், அதற்கு மறுநாள் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் பங்கேற்ற பேரணியையும் நடத்திய இயக்கம். எனவேதான் “உதித்தபோதே போராட்டத்தில் குதித்த இயக்கம்” என்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணிக்கு பெயர் உண்டு.*



*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தொழிற்சங்க இலக்கணம் பொருந்திய இயக்கம்.  தனிமனித துதி இல்லாத இயக்கம்.  எந்தக்கட்சி ஆட்சியில் இருந்தாலும் எதற்கும் அஞ்சாமல் போராடுகிற நெஞ்சுறுதியும், நேர்மைத்திறனும் கொண்ட இயக்கம்.  தமிழக ஆசிரியர் இயக்க வரலாற்றிலே இதுவரை எந்த இயக்கமும் நடத்தியிராத களப்போராட்டங்களை நடத்திய, நடத்திக்கொண்டிருக்கிற பேரியக்கம்.*



*🌟அதிகாரிகளிடமோ, ஆட்சியாளர்களிடமோ போராட்டக்களத்தில் அணுவளவும் சமரசம் செய்துகொள்ளாத பேரியக்கம். ஆசிரியர் நலனும், கல்வி நலனும் சமூக நலனுடன் இரண்டறக் கலந்தது என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட இயக்கம், வர்க்க சிந்தனையும், தர்க்க சிந்தனையும் கொண்ட சொர்க்க சிந்தனையற்ற தலைமையையும், உறுப்பினர்களையும் கொண்ட பேரியக்கம்.*



*🌟1985 நவம்பர் 3 ஜேக்டீ ஆணை எரிப்புப் போராட்டத்தில் முதலில் பங்கேற்று இறுதிவரை உறுதியுடன் களத்தில் நின்று போராடிய அமைப்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.* 



*🌟1988 வேலை நிறுத்தப் போராட்டத்தில் பல அமைப்புகள் இடையில் சேர்ந்து இடையில் காணமல் போன நிலையிலும், அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் திருத்தி தெரிவித்து போராட்டத்தில் இருந்து விலகியதோடு அரசியல் ஆதாயத்திற்காக தொடர்ந்து போராடுகிறார்கள் என்று நம்மை விமர்ச்சித்த நிலையிலும் வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கிய 22.06.1988 முதல் இறுதி நாளான 22.07.1988 வரை களத்தில் நின்று சென்னை முற்றுகையின் முடிவில் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் என்ற ஆணை பெறும் வரை களத்தில் முன்னணிப் படையாய் நின்ற பேரியக்கம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*



*🌟தமிழகத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தோன்றியபிறகுதான் தமிழ்நாட்டு ஆசிரியர்களுக்கு பல்வேறு உரிமைகளும், சலுகைகளும் கிடைத்தன.*


*⚡மத்திய அரசுக்கு இணையான ஊதியம்*


*⚡மத்திய அரசுக்கு இணையான அகவிலைப்படி*


*⚡தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம்*


*⚡பாதிக்கப்பட்ட பயிற்சிப்பள்ளி மாணவர்களுக்கு நிவாரணம்*


*⚡வேலைவாய்ப்பக பதிவுமூப்பின்படி ஆசிரியர் நியமனம்*


*⚡ஒளிவு மறைவற்ற பொதுமாறுதல் கலந்தாய்வு*


*⚡தொடக்கக்கல்விக்கென தனி இயக்குநரகம்*


*போன்றவை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கோரிக்கைகளாய் முன்னெடுக்கப்பட்டு கணக்கற்ற களப்போராட்டங்களின் இறுதியில் உறுதியுடன் பெறப்பட்டவை என்பதுதான் வரலாறு.*



*🌟நீதிக்கான போராட்டங்களுக்கு வீதிக்கு வந்தே விடைகாண முடியும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட இயக்கம். களப்போராட்டங்களில் தனிச்சங்க நடவடிக்கைகளில் தன்னிகரற்ற தனிப்பெரும் இயக்கம். தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற, நடைபெற்றுக் கொண்டிருக்கிற கூட்டுப்போராட்டங்களை வடிவமைத்ததில் பெரும்பங்கு வகித்த பேரியக்கம்.*



*🌟44 ஆண்டுகாலம் போராடிப் பெற்ற மத்திய அரசுக்கு இணையான ஊதியம் தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்களிடமிருந்து பறிக்கப்பட்டபோது, அதை எதிர்த்து கிளர்ந்தெழுந்து அன்றுமுதல் இன்றுவரை தொய்வின்றித் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிற இயக்கம்.*



*🌟25.03.2018-ல் “இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்பு மாநாடு” என்ற ஒற்றைக் கோரிக்கை மாநாடு நடத்திட மாநிலச் செயற்குழு முடிவெடுத்து முன்னெடுத்த நிலையில் ஜேக்டோ ஜியோவின் வேண்டுகோளை ஏற்றும், கூட்டுப் போராட்டத்தின் ஒற்றுமை கருதியும், அதன் வலிமை கருதியும் அம்முடிவைத் தற்காலிகமாக தள்ளி வைத்திருக்கிற இயக்கம்.*



*🌟தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டம் ரத்து, இடைநிலை ஆசிரியர்களுக்கான மத்திய ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை ஜேக்டோ ஜியோ நிச்சயம் வென்றெடுக்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணிக்கு உண்டு.*



*🌟அதை நோக்கிய களப்பயணம்தான் மே-8 முற்றுகைப் போராட்டம், அப்போராட்டத்தில் தமிழ்நாட்டின்  அனைத்து அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் பங்கேற்றுச் சரித்திரம் படைக்கப் போகிறார்கள்.*



*🌟கடந்த காலங்களில் கூட்டுப் போராட்டங்களே நம் கோரிக்கைகளின் வெற்றியைத் தீர்மானித்தன என்பது வரலாறு.  தமிழ்நாட்டின் ஆசிரியர் - அரசு ஊழியர் இயக்க வரலாற்றில் எந்த ஒரு கூட்டுப் போராட்டமும் தோற்றதாகச் சரித்திரம் இல்லை.  அதை நோக்கிய பயணம் தான் மே-8.*



*🌟இன்று தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்களின் மிக முக்கியக் கோரிக்கைகளாக உள்ள*


*⚡மத்திய அரசுக்கு இணையான ஊதியம்,*


*⚡தன்பங்கேற்பு ஓய்வூதியத்திட்டம் ரத்து*


*ஆகிய கோரிக்கைகளுக்காக வேறு எந்த இயக்கமும் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு களப்போராட்டங்களை நடத்திய இயக்கம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*



*🌟தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய விவகாரத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியை காழப்புணர்ச்சியின் காரணமாகவோ அல்லது திட்டமிட்டோ அல்லது உள்நோக்கத்தோடோ அல்லது கடந்தகால போராட்ட நிகழ்வுகளை அறியாமலோ அல்லது ஞாபக மறதியிலோ விமர்சிக்கும் ஒரு சில நண்பர்களுக்கு*


*⚡01.06.2009-க்குப் பிறகு தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்களின் ஊதியப் பிரச்சனைக்காக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தனிச்சங்க நடவடிக்கையாகவோ அல்லது கூட்டு நடவடிக்கையாகவோ நடத்திய களப்போராட்டங்களை கீழக்கண்டவாறு பட்டியலிடுகிறோம்.*


*தெரிந்து கொள்க! தெளிந்து கொள்க!தேவையேற்படின் இதே பிரச்சனைக்காக பிற இயக்கங்கள் நடத்திய போராட்டங்களை ஒப்பிட்டு உணர்ந்து கொள்க!*



*🌟இடைநிலை ஆசிரியர் ஊதியப் பிரச்சனைக்காக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தனிச்சங்கப் போராட்டங்கள்:*


*⚡02.07.2009 - வட்டாரத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்*


*⚡07.07.2009 - பள்ளிக்கல்வித்துறை முதன்மைச்செயலாளருடன் கோரிக்கை மனு அளித்துப் பேச்சுவார்த்தை*


*⚡30.08.2009 - மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம்*


*⚡29.09.2009 - ஒரு நபர் குழுவுடன் மனு அளித்துப் பேச்சுவார்த்தை*


*⚡18.02.2010 - வட்டாரத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்*


*⚡03.03.2010 - மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்*


*⚡02.08.2010 - உதவித் தொடக்கக்கல்வி அலுவலகங்களில் பெருந்திரள் முறையீடு*


*⚡07.01.2011 - வட்டாரத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்*


*⚡29.01.2011 - மாவட்டத் தலைநகரங்களில் குடும்பத்துடன் தர்ணா*


*⚡10.02.2011 - தற்செயல் விடுப்புப் போராட்டம்*


*⚡27.07.2011 - வட்டாரத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்*


*⚡18.08.2011 - சட்டமன்றக் கட்சித்தலைவர்களைச் சந்தித்து கோரிக்கை மனு அளிப்பு*


*⚡28.01.2012 - மாவட்டத் தலைநகரங்களில் தர்ணா*


*⚡10.04.2012 - வட்டாரத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்*


*⚡11.07.2012 - மூவர் குழுவிடம் விண்ணப்பம் அளித்துப் பேச்சுவார்த்தை*


*⚡07.11.2012 - வட்டாரத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்*


*⚡15.03.2013 - மாவட்டத்தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்*


*⚡10.04.2013 - இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்பு மாநாடு - சென்னை*


*⚡13.07.2013 - மாவட்டத் தலைநகரங்களில் தர்ணா*


*⚡30.08.2013 - மாவட்டத் தலைநகரங்களில் மறியல்*


*⚡12.06.2014 - மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்*


*⚡04.11.2016 - வட்டாரத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்*


*⚡20.11.2016 - மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரதம்*


*⚡03.02.2017 - தொடக்கக்கல்வி இயக்குநரக முற்றுகைப் போர் - சென்னை*


*⚡31.03.2017 - 8வது ஊதிய மாற்றக் குழுவிடம் கோரிக்கை மனு அளித்துப் பேச்சுவார்த்தை*


*⚡இடைநிலை ஆசிரியர் ஊதியப் பிரச்சனைக்காக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பங்கு கொண்ட கூட்டுப் போராட்டங்கள் 12.10.2009முதல் 15.10.2009 முடிய-டிட்டோ ஜேக் சார்பில் அஞ்சல் அட்டை இயக்கம்*


*⚡19.09.2010 - டிட்டோ ஜேக் சார்பில் மாவட்டத்தலைநகரங்களில் பேரணி*


*⚡24.10.2010 - டிட்டோ ஜேக் சார்பில் கோட்டை நோக்கிப் பேரணி சென்னை*


*⚡20.11.2010 - டிட்டோ ஜேக் சார்பில் மாவட்டத்தலைநகரங்களில் உண்ணாவிரதம்*


*⚡27.12.2010 முதல் 30.12.2010 முடிய- டிட்டோ ஜேக் சார்பில் மாவட்டத்தலைநகரங்களில் மறியல்*


*⚡02.02.2014 - டிட்டோ ஜேக் சார்பில் மாவட்டத்தலைநகரங்களில் பேரணி*


*⚡06.03.2014 - டிட்டோ ஜேக் சார்பில் ஒரு நாள் வேலைநிறுத்தம்*


*⚡08.03.2015 - ஜேக்டோ சார்பில் மாவட்டத் தலைநகர் பேரணி*


*⚡19.04.2015 - ஜேக்டோ சார்பில் மாவட்டத் தலைநகர்  உண்ணாவிரதம்*


*⚡01.08.2015 - ஜேக்டோ சார்பில் தொடர்முழக்கப் போராட்டம் சென்னை*


*⚡08.10.2015 - ஜேக்டோ சார்பில் ஒருநாள் வேலைநிறுத்தம்*


*⚡30.01.2016 முதல் 01.02.2016 முடிய- ஜேக்டோ சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் தொடர் மறியல்*


*⚡15.02.2016 முதல் 17.02.2016 முடிய-அரசு ஊழியர் சங்கத்துடன் இணைந்து தமிழகம் முழுவதும் மறியல் போராட்டம்*


*⚡18.02.2016 முதல் 19.02.2016 முடிய- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்துடன் இணைந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகங்களில் காத்திருப்புப் போராட்டம்*


*⚡18.07.2017 - ஜேக்டோ ஜியோ சார்பில் மாவட்டத் தலைநகர் ஆர்ப்பாட்டம்*


*⚡05.08.2017 - ஜேக்டோ ஜியோ சார்பில் சென்னையில் பெருந்திரள் முறையீடு*


*⚡22.08.2017 - ஜேக்டோ ஜியோ சார்பில் ஒரு நாள் வேலை நிறுத்தம்*


*⚡07.09.2017 முதல் 15.09.2017 முடிய-ஜேக்டோ ஜியோ தொடர் வேலைநிறுத்தம்*


*⚡24.11.2017 - ஜேக்டோ ஜியோ சார்பில் வட்டத்தலைநகர் ஆர்ப்பாட்டம்*


*⚡21.02.2018 முதல் 24.02.2018 முடிய-ஜேக்டோ ஜியோ சார்பில் சென்னையில் தொடர்மறியல்*



*🌟ஜேக்டோ ஜியோவின் உருவாக்கத்தில் பெரும்பங்கு வகித்த நம் பேரியக்கம் மிகுந்த பொறுப்புணர்வுடன் களத்தில் செயலாற்றி வருகிறது.*



*🌟இடைநிலை ஆசிரியர்களுக்கான மத்திய ஊதியத்தைப் பெறும் முனைப்போடு செயலாற்றி வருகிறது.*



*வில்லிலே இருந்து புறப்பட்ட கனையைப் போல இலக்கை நோக்கி மிகச்சரியாகப் பயணித்துக் கொண்டிருக்கிறது. இலக்கை அடையும்வரை அதன் பயணம் நில்லாது. விமர்சன வெளிச்சத்தில் பயணிப்போம். வெல்லும் வரை பயணிப்போம்.இறுதி வெற்றி நமதே!*



*“களப்போராட்டங்களில் பத்துமுறை தோற்றுவிட்டோம் என்று துவண்டுவிடாதே! பத்துமுறை தோற்றாலும் பதினோறாவது முறையும் போராட எழுந்து நிற்கிறோம் என்று எழுச்சிகொள்!”*

*- மாமேதை லெனின்.*


 

⚡தோமையுடன்

                                           

*தோழர்.ச.மயில்,*    

*மாநில பொதுச்செயலாளர்,*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм












Sunday 29 April 2018

*தொடக்கப்பள்ளிகளை மூடினால் போராட்டம் - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/04/blog-post_29.html


*🌟தொடக்கப்பள்ளிகளை மூடும் எண்ணத்தை அரசு கைவிடாவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் தோழர்.ச.மயில் கூறியுள்ளார்.*


*🌟நெல்லையில், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் தோழர் மணிமேகலை தலைமை வகித்தார், மாநில பொதுச்செயலாளர் தோழர் ச.மயில் சிறப்புரை ஆற்றினார், மாநில செயலாளர் தோழர் முருகேசன் மற்றும் நெல்லை மாவட்டச்செயலாளர் தோழர் பால்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.*


*பின்னர் மாநில பொதுச்செயலாளர் தோழர்.மயில் கூறியதாவது:*


*🌟பள்ளிக்கல்வித்துறை தினமும் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிடுகிறது. தொடக்கப்பள்ளிகளில் 10 மாணவர்களுக்கு கீழ் உள்ள பள்ளிகளை அருகில் உள்ள வேறு பள்ளிகளுடன் இணைக்கப் போவதாகவும், மூடப்படும் பள்ளிகளை நூலகமாக மாற்றப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் நடப்புக் கல்வியாண்டில் 3450 பள்ளிகள் மூடப்படும் அபாயம் உள்ளது. இதனால் கிராமப்புற மாணவர்களின் கல்விச் சூழல் பாதிக்கப்படும்.*


*🌟பள்ளிகளை தொடர்ந்து மூடினால் எதிர்காலத்தில் அரசு பள்ளிகளே இல்லாத நிலை ஏற்படும். கேரளாவில் ஒரு வகுப்பிற்கு ஒரு ஆசிரியர் என்ற கொள்கையால் அரசு பள்ளிகள் தரம் உயர்ந்து மாணவர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. தமிழக அரசின் முடிவால் தொடக்கப்பள்ளிகள் மூடப்பட்டால் மாணவர்கள் மட்டுமின்றி ஏழாயிரம் ஆசிரியர்களும் பாதிக்கப்படுவர்.*


*🌟இதே போல் மேல்நிலை வகுப்புகளில், நகர்புறங்களில் 30 மாணவர்களுக்கு கீழும், கிராமப்புறங்களில் 15 மாணவர்களுக்கு கீழும் உள்ள பள்ளிகளை பிற பள்ளிகளுடன் இணைக்கும் முயற்சி நடந்து வருகிறது.* 


*🌟அரசு இந்த திட்டங்களை உடனே கைவிட வேண்டும், இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் அவர்களை சந்தித்து பேச உள்ளோம்.அதன் பிறகும் இந்த முயற்சியை கைவிடாவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும்.*


*🌟மெட்ரிக், சி.பி.எஸ்.சி பள்ளிகளில் கட்டாயக்கல்வி சட்டத்தின் கீழ் தொடக்கநிலை மாணவர்களைச் சேர்ப்பதாலும் தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைகிறது. இதை கைவிட்டு தனியார் பள்ளிகளில் உள்ள உள்கட்டமைப்பு மற்றும் பிற வசதிகளை அரசு தொடக்கப்பள்ளிகளிலும் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.* 


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢om



Thursday 26 April 2018

*தொடக்கல்வி ஆசிரியர்களுக்கு மட்டும் மே மாதம் கவுன்சிலிங்*



🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/04/blog-post_26.html


🌟தள்ளிப்போகிறது ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங்.தொடக்கல்வி ஆசிரியர்களுக்கு மட்டும் மே மாதம் கவுன்சிலிங்


🌟அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் கவுன்சிலிங்கை, மே மாதம் கடைசியில் நடத்த, பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.தமிழக பள்ளிக்கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆண்டு தோறும், பொது இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும்.


🌟முழுமையாக ஒரு கல்வி ஆண்டில், ஒரே இடத்தில் பணியாற்றியோர், இந்த கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியும். ஆண்டுதோறும், மே மாத துவக்கத்தில் கவுன்சிலிங் துவங்கி, மாத இறுதியில் முடிக்கப்படும். புதிய கல்வி ஆண்டில், வகுப்புகள் துவங்கும்போது, புதிய இடத்தில் ஆசிரியர்கள் பணிக்கு செல்வர்.இந்த ஆண்டு, தொடக்கப் பள்ளிகள் உட்பட, அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும், ஆன்லைன் முறையில் வெளிப்படையான கவுன்சிலிங்கை நடத்த, பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.


🌟இதற்காக, பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலியிடங்களின் எண்ணிக்கை விபரங்கள், மாவட்ட வாரியாக சேகரிக்கப்பட்டு, ஆன்லைன் முறையில், தகவல்கள் தொகுப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.இந்நிலையில், இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங்கை, மே மாத இறுதிக்கு தள்ளி வைக்க, கல்வித்துறை முடிவு செய்துள்ளது. பிளஸ் 1 வகுப்புக்கு, பொது தேர்வு அறிமுகம் செய்யப்பட்டதால், மே, 16 வரை விடைத்தாள் திருத்தம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள், கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியாது.


🌟எனவே, விடைத்தாள் திருத்தம் முடிந்த பின், ஜூனில் கவுன்சிலிங்கை நடத்தலாம் என, பள்ளிக்கல்வித்துறை ஆலோசித்துள்ளது.விடைத்தாள் திருத்த பணிகள் இல்லாத தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டும், மே மாதம் கவுன்சிலிங்கை நடத்தலாம் என, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்கான அறிவிப்பு, விரைவில் வெளியாக உள்ளது.


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

Tuesday 24 April 2018

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளரின் சுற்றறிக்கை*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/04/blog-post_24.html


*கள்ளர் பள்ளிக் கிளைக்கான போராட்டம் மாபெரும் வெற்றி*

*சுற்றறிக்கை எண் - 4, நாள் - 24.04.2018.*


*🌟பேரன்புமிக்க பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே! வணக்கம்.*


*🌟 தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கள்ளர் பள்ளிக்கிளை மாவட்ட செயலாளர் திரு.வாஞ்சிநாதன் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியான இடமாறுதல் உத்தரவை ரத்துசெய்துவிட்டு மீண்டும் முன்பு பணியாற்றிய இடத்திலேயே பணிநியமனம் வழங்கக்கோரி நமது பேரியக்கத்தின் மாநில அமைப்பு அறிவித்திருந்த காத்திருப்பு போராட்டம் மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது.*


*🌟நாளை (25.04.2018) பல்லாயிரக்கணக்கான ஆசிரியர் தோழர்களுடன் சென்னை ஏழிலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தவிருந்த நிலையில் நேற்று (23.04.2018) மாலை சென்னை மாநகர கூடுதல் காவல் ஆணையர் திரு.சாரங்கன் ஐ.பி.எஸ், துணை ஆணையர் திரு. திருநாவுக்கரசு ஐ.பி.எஸ், உதவி ஆணையர் திரு.ஆரோக்கிய பிரகாசம் ஆகியோர் நம்மை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.*


*🌟நமது கோரிக்கையின் நியாயம் குறித்து அவர்களிடம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. நம்முடைய கோரிக்கைத் தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையர் திரு.விஸ்வநாதன் ஐ.பி.எஸ் அவர்கள் நேற்று (23.04.2018) காலை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அரசு செயலாளர் திரு.கார்த்திக் ஐ.ஏ.எஸ் அவர்களுடன் தொலைபேசியில் பேசிய விவரம் நமக்குத் தெரிவிக்கப்பட்டது.*


*🌟அரசு தொடர்ச்சியாக இன்று (24.04.2018) காலை  மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை இயக்குநர் (பொறுப்பு) திரு.வள்ளலார் ஐ.ஏ.எஸ் அவர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நம்முடைய நியாயமான கோரிக்கை ஏற்கப்பட்டு திரு.வாஞ்சிநாதன் அவர்களுக்கு முன்பு பணியாற்றிய போடி-கிழக்கு அரசு கள்ளர் நடுநிலைப் பள்ளிக்கே பணிநியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது என்பதை மாநில மையத்தின் சார்பில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். மேற்கண்ட பேச்சுவார்த்தை நிகழ்வுகளில் நமது பேரியக்கத்தின் மாநில தலைவர் திருமதி. மூ.மணிமேகலை, பொதுச்செயலாளர் திரு.ச.மயில், மாநிலப் பொருளாளர் திரு.க.ஜோதிபாபு, துணைப் பொதுச்செயலாளர் திரு.தா.கணேசன் ஆகியோர் பங்கேற்றனர்.*


*🌟எனவே நம் பேரியக்கத் தோழர்கள் காத்திருப்புப் போராட்டத்திற்கான சென்னை பயணத்திட்டத்தைக் கைவிட்டு மே 8 ஜேக்டோ ஜியோ முற்றுகைப் போராட்ட நிகழ்வுக்கு முன்னுரிமை கொடுத்து ஜேக்டோ ஜியோவின் பிரச்சாரப் பயணத்தில் இரண்டறக் கலந்து மே 8 சென்னை முற்றுகைக்கு செயல்வடிவம் கொடுத்து நமது பேரியக்கத்தின் தனித்தன்மையை வெளிப்படுத்தி இமைப்பொழுதும் சோராமல் சுற்றிச்சுழன்று பணியாற்றிட மாநிலமையம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது.*


⚡தோழமையுடன்;

*தோழர்.ச.மயில்,*

*மாநில பொதுச்செயலாளர்,*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


Monday 23 April 2018

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளரின் சுற்றறிக்கை*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/04/blog-post_23.html


*சுற்றறிக்கை எண் - 3, நாள் - 23.04.2018*


*🌟பேரன்புமிக்க பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே! வணக்கம்.*


*🌟"தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் செகத்தினை அழித்திடுவோம்" என்றான் மகாகவி பாரதி.*


*🌟தனியொரு உறுப்பினருக்கு அநீதி இழைக்கப்பட்டாலும் அதை எதிர்த்து மாநிலம் முழுவதும் பேரியக்கத்தோழர்களைத் திரட்டி நீதியை நிலைநாட்டிட போராடுகிற மகத்தான பேரியக்கம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*


*🌟அவ்வகையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கள்ளர் பள்ளிக் கிளையின் மாவட்டச்செயலாளர் என்ற ஒரே காரணத்திற்காக, நம் இயக்கத்தின் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாக பழிவாங்கப்பட்ட தோழர்.ப.வாஞ்சிநாதன் அவர்களை மீண்டும் பணியாற்றிய பள்ளியிலேயே நியமிக்கக்கோரி  25.04 2018 புதன்கிழமை காலை 10.00 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் அமைந்துள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை இயக்குநர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் நடைபெறும் காத்திருப்பு போராட்டம் நம் பேரியக்க நிகழ்வில் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நம் பேரியக்கத் தோழர்கள் உணர்ந்து களப்பணிகளில் கடுகளவும் தொய்வின்றி இமைப்பொழுதும் சோராமல் களப்பணியாற்றிட வேண்டுகிறேன்.*


*🌟வங்கக்கடலின் எதிரில் அமைந்துள்ள எழிலகத்தில் 20.04.2018 தூத்துக்குடியில் நடைபெற்ற மாநில செயற்குழுவின் முடிவின்படி 25.04.2018 புதன்கிழமை காலை 10.00 மணிக்கு எத்தனையெத்தனை தடைகள் ஏற்படினும் அவற்றைத் தகர்த்தெரிந்து பல்லாயிரக்கணக்கில் அணிதிரள்வோம். நீதி கிடைக்கும் வரை அங்கேயே காத்திருப்போம்.*


*"சீற்றத்தில் வங்கக்கடலைத் தோற்கடிப்போம், தோற்றத்தில் அலைகடலை அச்சுறுத்துவோம், அலைகள் எண்ணிக்கையை நம் தலைகளின் எண்ணிக்கை வெல்லட்டும், நீதியை நிலைநாட்ட நெஞ்சம் நிமிர்த்திடுவோம், நேர்மையற்ற வஞ்சத்தை முறியடிப்போம்"*


⚡தோழமையுடன்;

*தோழர்.ச.மயில்,*

*மாநில பொதுச்செயலாளர்,*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.* 

  

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


Sunday 22 April 2018

*மே 8 ல் ஜாக்டோ-ஜியோ கோட்டை முற்றுகைப் போராட்டம்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/04/8.html


*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் தூத்துக்குடியில் நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்தில் செய்தியாளருக்கு அளித்த பேட்டி*


*🌟சென்னையில் மே 8 ம் தேதி ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் கோட்டை முற்றுகைப் போராட்டத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் பங்கேற்க மாநில செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டது.*


*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது. மாநில தலைவர் தோழர், மணிமேகலை தலைமை வகித்தார், தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் தோழர்.செல்வராஜ் வரவேற்றார், மாநில பொதுச்செயலாளர் தோழர்.மயில் விளக்கவுரையாற்றினார்.*


*🌟கூட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த ஆணையிட வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ கூட்டமைபு சார்பில் மே 8 ம் தேதி சென்னையில் கோட்டை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற உள்ளது.*


*🌟தமிழகம் முழுவதும் தொடக்கக்கல்வி துறையில் பணியாற்றும் 1 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் 3 லட்சம் அரசு ஊழியர்கள் உள்பட 5 லட்சம் பேர் பங்கேற்கும் வகையில் போராட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.*


*🌟மாநில பொருளாளர் ஜோதிபாபு நன்றி கூறினார். இந்த கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட தலைவர் தோழர்.பவுல் ஆபிரகாம் அந்தோணிராஜ், பொருளாளர் தோழர்.பாப்ஹையஸ், மாநில செயற்குழு உறுப்பினர் தோழர்.ரவீந்திர ராஜன் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட தலைவர், செயலாளர்கள் கலந்துகொண்டார்கள்.*



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


*அரசு நிர்ணயம் செய்த பள்ளிக் கட்டண விபரங்கள்*



🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/04/blog-post_2.html




LKG கட்டணம்                    -  3750


UKG கட்டணம்                    -  3750


1-ம் வகுப்பு கட்டணம்       -  4550


2-ம் வகுப்பு கட்டணம்       -  4550


3-ம் வகுப்பு கட்டணம்       -  4550


4-ம் வகுப்பு கட்டணம்       -  4550


5-ம் வகுப்பு கட்டணம்       -  4550


6-ம் வகுப்பு கட்டணம்       -  5050


7-ம் வகுப்பு கட்டணம்       -  5050


8-ம் வகுப்பு கட்டணம்       -  5050


9-ம் வகுப்பு கட்டணம்       -  6300


10-ம் வகுப்பு கட்டணம்      -  6300




🌟10-ம் வகுப்பு வரை மேற்படி கல்வி கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்துள்ளது. மேற்படி கல்வி கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் கேட்கும் பள்ளி நிர்வாகத்தின் மீது கீழ்க்கண்ட அதிகாரிகளிடம் புகார் அளியுங்கள்:-


மாவட்ட ஆட்சியர்,


பள்ளிகல்வி இயக்குனர்,


மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர்,


மெட்ரிகுலேசன் பள்ளிகள் இணை இயக்குனர்,


மெட்ரிகுலேசன் பள்ளிகள் ஆய்வாளர்,


முதன்மை கல்வி அலுவலர்,


மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்,


மாவட்ட கல்வி அலுவலர்,


உதவி தொடக்கக் கல்வி அலுவலர்


🌟மேற்படி அதிகாரிகளுக்கு புகார் அனுப்புங்கள். புகார் அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யுங்கள்.

🌟மேலும் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009, சட்டப் பிரிவு 12(1)(சி) -ன் கீழ் 2017-2018 ம் கல்வியாண்டில் 25% இட ஒதுக்கீடடின் கீழ் மேற்படி பள்ளியில் 30 மாணவர்களை LKG  யில் சேர்த்துகொள்ள மேற்படி பள்ளியில் அரசு இடம் ஒதுக்கியுள்ளது.



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


*மகப்பேறு விடுப்புக் காலம் பணிக்காலம்தான்! உயர்நீதிமன்றம் உத்தரவு*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/04/blog-post_22.html


🌟மகப்பேறு விடுப்புகாலத்தை பணிக்காலமாகதான் கருத வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


🌟அரசு மருத்துவர்களாக இரண்டு ஆண்டு பணியாற்றியவர்களுக்கு முதுகலை மருத்துவ மேற்படிப்பில் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. மேலும் அவர்கள் பணியாற்றிய பகுதிகளை பொறுத்து சலுகை மதிப்பெண்ணும் வழங்கப்படுகிறது.


🌟இந்நிலையில் வரும் கல்வியாண்டில் சேர்க்கை தொடர்பான அறிவிப்பாணையை தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்டது.


🌟இதில் தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகள் அரசுமருத்துவர்களாகப் பணி யாற்றி இருக்க வேண்டும் எனவும், மகப்பேறு விடுப்பு எடுத்திருந்தால் அது பணிக்காலமாக எடுத்துக் கொள்ளப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டது.


🌟இதை எதிர்த்து அருணா என்பவர் உள்ளிட்ட பல மருத்துவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.


🌟இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி தனி நீதி பதி, இது தொடர்பாக முடிவு எடுக்க இரு நீதிபதிகள் அமர்விற்கு வழக்கை மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்தார்.


🌟இதன்படி இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் குலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி தண்டபாணி ஆகியோர் அடங்கிய அமர்வு, பெண்ஊழியர்களையும், அவர்களின் சிசுக்களையும் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வழங்கப்படும் மகப்பேறு விடுப்பு காலத்தைபணிக்காலமாக கருதி, சலுகை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


Friday 20 April 2018

*TANGEDCO-Mobile Number updation*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/04/tangedco-mobile-number-updation.html


*🌟Mobile Number Register & Mobile Number Updation*


*🌟உங்கள் மிண்சார கணக்கு எண்ணுடன் மொபைல் நெம்பரை பதிவு செய்வதற்கான எளிய வழி மற்றும் தங்கள் மிண்சார கணக்கு எண்ணில் மொபைல் நெம்பர் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதையும் அறிந்து கொள்ள முடியும்.*

🌟கீழே உள்ள Link ஐ கிளிக் செய்து அறிந்து கொள்க.

http://tneb.tnebnet.org:8087/mobileno/entrysuccess.xhtml


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

*கருணை அடிப்படையில் பணி நியமனம்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/04/blog-post_44.html


*🌟பணியிடையே மரணமடைந்த அரசு ஊழியர்களின் திருமணமான பெண் வாரிசுதாரர்களுக்கும் கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்குவது குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.*



*🌟தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (கியூ 1)த் துறை அரசாணை (நிலை) எண்- 78, நாள்- 21.04.2017.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм




*நாட்டுப்புற கலைகள் - கலைப்பயணம்*



🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/04/blog-post_20.html


🌟ஆர்வமுள்ள அனைவருக்கும் வணக்கம்..


🌟கலைப் பயணம் ..

பயிற்சி விழா ...


🌟சென்னை லயோலா கல்லூரியில் கலை மற்றும் இலக்கியத் துறைத் தலைவராக இருக்கும் திரு காளீஸ்வரன் ஐயா அவர்கள் நம் நாட்டுப்புறக் கலைகள் சமுதாயத்தின் நவீனத்தில் அழிந்து விடாமல் இருக்கவும் பாதுகாக்கவும்   பல்வேறு முயற்சிகள் எடுத்து வருபவர்.


🌟Camp starting from - April 21st to May 31st, You can select preferred camp days 3 days, 5days, 10days, 20 days, 30days or 40days.


🌟FEES:

Residential  - Rs 200

Non- Residential - Rs 100


🌟Time 10.am to 5pm.


🌟Venue : 

BOYS HIGH SCHOOL, (Block 6) JJ Nagar, Mogaper East, Chennai - 37

&

KODAMBAKKAM PARK, No:78, Park Avenue, Chennai Middle School, Kamarajar Colony, Kodambakkam, Chennai - 600 024


🌟Details Contact : 9884136764 & 44-42826143


🌟Please register on the below link.

https://goo.gl/forms/O8wYOBTbRS0Mdgy62


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


*கேந்திரிய வித்யாலயா சங்கத்தன் 5193 பணிகள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/04/5193.html


🌟Kendriya Vidyalaya Sangathan பள்ளிகளில் நிரப்பப்பட உள்ள 5193 பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


🌟பணி மற்றும் காலியிடங்கள்:

1. Vice-Principal - 146 Posts

2. Post Graduate Teacher (PGT) Hindi - 218

3. Post Graduate Teacher (PGT) English - 226

4. Post Graduate Teacher (PGT) Physics - 257

5. Post Graduate Teacher (PGT) Chemistry - 267

6. Post Graduate Teacher (PGT) Mathematics - 218

7. Post Graduate Teacher (PGT) Biology - 208

8. Post Graduate Teacher (PGT) History - 76

9. Post Graduate Teacher (PGT) Geography - 72

10. Post Graduate Teacher (PGT) Economics - 489

11. Trained Graduate Teacher (TGT) Hindi - 584

12. Trained Graduate Teacher (TGT) English - 594

13. Trained Graduate Teacher (TGT) Sanskrit - 347

14. Trained Graduate Teacher (TGT) Science/ Biology - 487

15. Trained Graduate Teacher (TGT) Mathematics - 566

16. Trained Graduate Teacher (TGT) Social Science - 575

17. Head Master (HM) - 163


🌟தேர்ந்தெடுக்கப்படும் முறை:

எழுத்துத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.


🌟விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.kvsangathan.nic.in  என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.


🌟அனுப்பும் தபால் கவரின் மீது “APPLICATION FOR THE POST OF..........” என்று குறிப்பிடவும்.


🌟விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.04.2018


🌟கல்வித்தகுதி உள்ளிட்ட கூடுதல் தகவல்களுக்கு கீழே உள்ள Link ஐ கிளிக் செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

https://drive.google.com/file/d/1VGcFLRNlBcf0XBoM0ztvbdYu6i7uy-I3/view?usp=drivesdk



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


Thursday 19 April 2018

*தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் இல்ல திருமண விழா*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/04/blog-post_60.html


*🌟தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் இல்ல திருமண விழாவில் நமது தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி எனும் பேரமைப்பின்,* 


*⚡பொதுச்செயலாளர் தோழர்.ச.மயில்,* 

*⚡மாநில தலைவர் தோழர்.மணிமேகலை,*

*⚡மாநில செயலாளர் தோழர்.சோ.முருகேசன் மற்றும்* 

*⚡நெல்லை மாவட்ட செயலாளர் தோழர். பால்ராஜ்.* *ஆகியோர்*


*விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.*


💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

மணமக்கள் பல்லாண்டு காலம் நலமும், வளமும் பெற்று வாழ *_TNPTF அயன்_* சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம், 

மேலும் விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய மாநில மாவட்ட பொறுப்பாளர்களுக்கும் *_TNPTF அயன்_* சார்பாக வாழ்த்துகளையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


*STAFF FIXATION CALCULATION*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/04/staff-fixation-calculation.html


*🌟1 முதல் 12 ஆம் வகுப்பு வரை ஆசிரியர் மாணவர் விகிதாசார மதிப்பீடு பட்டியல்*


*🌟STAFF FIXATION CALCULATION 1 to 12 STD.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


*தொலைநிலைக் கல்வி: 3 பல்கலைக்கழகங்கள் மட்டுமே நடத்த முடியும்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/04/3.html


🌟பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) புதிய விதிகளின்படி, தமிழகத்தில் உள்ள மூன்று பல்கலைக்கழகங்கள் மட்டுமே 2018-ஆம் ஆண்டில் தொலைநிலைக் கல்வியை நடத்த முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. அதாவது, சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் ஆகிய மூன்று பல்கலைக்கழகங்கள் மட்டுமே 2018-ஆம் ஆண்டில் தொலைநிலைப் படிப்புகளில் மாணவர் சேர்க்கையை நடத்த முடியும்.


🌟இதனால், தமிழகத்தில் உள்ள பிற பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் தொலைநிலைப் படிப்புகளில் சேரும் மாணவர்களின் பட்டம் செல்லாது என யுஜிசியால் அறிவிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. தொலைநிலை படிப்புகளைக் கட்டுப்படுத்தி வரும் யுஜிசி, உயர் கல்வித் தரத்தை மேம்படுத்தும்வகையில் அண்மையில் புதிய வழிகாட்டுதல் ஒன்றை வெளியிட்டது. அதில், தேசிய ஆய்வு மற்றும் அங்கீகார கவுன்சிலின் ('நாக்') அங்கீகாரம் பெற்று குறைந்தபட்சம் 3.26 புள்ளிகளைப் பெற்றிருக்கும் பல்கலைக்கழகங்கள் மட்டுமே தொலைநிலைக் கல்வியை நடத்த முடியும் எனத் தெரிவித்திருந்தது.


🌟'நாக்' அங்கீகாரம்: 'நாக்' கவுன்சில் அதிகபட்சமாக 4 புள்ளிகளைக் கொண்ட அளவீடு மூலம் நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களை பல்வேறு காரணிகளின் கீழ் ஆய்வு செய்து அங்கீகாரம் வழங்கும். இதில் 3.51 முதல் 4 புள்ளிகள் பெறும் கல்வி நிறுவனத்துக்கு ஏ (பிளஸ், பிளஸ்) கிரேடு, 3.26 முதல் 3.50 புள்ளிகள் பெறும் நிறுவனங்களுக்கு ஏ (பிளஸ்) கிரேடு, 3.01 முதல் 3.25 வரை பெறும் கல்வி நிறுவனத்துக்கு ஏ கிரேடு வழங்கும். மேலும் 2.76 முதல் 3 புள்ளிகள் வரை வாங்கும் கல்வி நிறுவனத்துக்கு பி (பிளஸ், பிளஸ்) கிரேடு, 2.51 முதல் 2.75 வரை பெறும் கல்வி நிறுவனத்துக்கு பி (பிளஸ்) கிரேடு, 2.01 முதல் 2.50 புள்ளிகள் வரை பெறும் நிறுவனங்களுக்கு பி கிரேடும், 1.51 முதல் 2 புள்ளிகள் வரை பெறும் கல்வி நிறுவனத்துக்கு சி கிரேடும் வழங்கும்.


🌟இதில் 1.50 புள்ளிகளும் அதற்குக் கீழ் பெறும் கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படாது. இந்த நிலையில், யுஜிசி-யின் புதிய வழிகாட்டுதலின் படி பார்க்கும்போது தமிழகத்தில் உள்ள மூன்று பல்கலைக்கழகங்கள் மட்டுமே 3.26-க்கும் மேற்பட்ட நாக் புள்ளிகளைப் பெற்றுள்ளன. காரைக்குடிஅழகப்பா பல்கலைக்கழகம் 3.64 புள்ளிகளும், அண்ணா பல்கலைக்கழகம் 3.46 புள்ளிகளும், சென்னைப் பல்கலைக்கழகம் 3.32 புள்ளிகளும் பெற்றுள்ளன. மற்ற பல்கலைக்கழகங்கள் அனைத்தும் 3.26 புள்ளிகளுக்குக் குறைவான புள்ளிகளையே பெற்றுள்ளன.


🌟'நாக்' புள்ளிகள் காரணமாக...கோவை பாரதியார் பல்கலைக்கழகம் 3.11 'நாக்' புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 3.09 புள்ளிகளையும், சேலம் பெரியார் பல்கலைக்கழகம் 3.15 புள்ளிகளையும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் 3.08 புள்ளிகளையும் பெற்றுள்ளன. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் குறைவான புள்ளிகளைப் பெற்றுள்ளன.


🌟இவற்றில் திருநெல்வேலி மனோண்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம், கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம், தமிழ்நாடு உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் ஆகியவை மிகக் குறைவாக பி கிரேடு புள்ளிகளையே பெற்றுள்ளன. இந்த பல்கலைக்கழகங்கள் அனைத்தும் 2018-ஆம் ஆண்டில் தொலைநிலைக் கல்வியில் மாணவர் சேர்க்கையை நடத்த இயலாது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து உயர் கல்வித் துறை செயலர் சுனில் பாலிவால் கூறியது: யுஜிசி-யின் இந்தக் கட்டுப்பாடு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.


🌟தமிழகம் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தும். யுஜிசி-யின் இந்த புதிய வழிகாட்டுதலால் இந்தியா முழுவதும் 40 கல்வி நிறுவனங்கள் மட்டுமே தொலைநிலைக் கல்வி நடத்தக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. கோரிக்கை: எனவே, தொலைநிலைப் படிப்புகளை வழங்க இப்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள 3.26 நாக் புள்ளிகள் என்பதை, 3 புள்ளிகளாகக் குறைக்க வேண்டும் என யுஜிசியிடம் தமிழக உயர் கல்வித் துறை சார்பிலும், பல்கலைக்கழகங்கள் சார்பிலும் தனித்தனியாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதை யுஜிசி ஏற்றுக் கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

*பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கட்டாயம்! தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/04/blog-post_77.html


🌟தொடக்க கல்வித்துறையில், அனைத்து பள்ளிகளிலும் புதிய மாணவர் சேர்க்கை நடத்த, விழிப்புணர்வு பணிகள் துரிதப்படுத்த வேண்டுமென, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.தொடக்க கல்வித்துறையில் மாணவர் சேர்க்கை, ஆண்டுதோறும் சரிந்து கொண்டே வருகிறது.


🌟மாணவர் சேர்க்கை நடத்தாத பள்ளிகள், தற்காலிகமாக மூடப்படுகிறது. சேர்க்கை குறையும் பள்ளிகளை ஒருங்கிணைப்பதன் மூலம், செலவினங்கள் குறைக்க கல்வித்துறை திட்டமிட்டு வருகிறது.வரும் கல்வியாண்டில், மாணவர் சேர்க்கை குறைந்த பள்ளிகள், இணைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இச்சூழல் ஏற்படாமல் இருக்க, மாணவர் சேர்க்கை பணிகளில் தீவிரம் காட்ட வேண்டுமென தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.குறிப்பாக, 'ஜூரோ என்ரொல்மெண்ட்' எனப்படும் புதிய சேர்க்கையேஇல்லாத நிலையை,உருவாக்க கூடாது என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.


🌟குறைந்தபட்சம் ஒன்றாம் வகுப்பில், 20 மாணவர்களாவது சேர்க்க வேண்டும். அரசின் திட்டங்கள், பாடத்திட்ட மாற்றம், கல்வித்துறையில் ஏற்படவுள்ள மாற்றங்களை விளக்கி, மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும். பொதுமக்கள், பெற்றோர் ஆசிரியர் கழகங்களுடன் இணைந்து, அரசுப்பள்ளியை மக்களின்பள்ளியாக மாற்ற, ஆசிரியர்கள் முன்வர வேண்டுமென, இயக்குனர் கருப்பசாமி உத்தரவிட்டுள்ளார்.அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சிலர் கூறுகையில்,


🌟'வரும் கல்வியாண்டில், ஒன்று, ஆறு, ஒன்பது, பிளஸ்1 வகுப்புகளுக்கு, பாடத்திட்டம் மாறுகிறது. துவக்க வகுப்புகளுக்கு பாடத்திட்டம் மாறுவதால், அரசுப்பள்ளிகளில் சேர்க்கை அதிகமாகலாம். வரும்மே 2ம் தேதி முதல், சேர்க்கை பணிகள் துவங்க உத்தரவிடப்பட்டுள்ளது. 'புதிய சேர்க்கை இல்லாத பட்சத்தில், உரிய காரணம் விளக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, புதுமையான வழிமுறைகளில் பெற்றோரை அணுக திட்டமிட்டுள்ளோம்' என்றனர்.



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

*விழுப்புரம் மாவட்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் செய்தி துளிகள்*



🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/04/blog-post_19.html



*🌟விழுப்புரம் மாவட்டக்கிளையில் புதிய பொறுப்பாளர்கள் பொறுப்பேற்று 65 வது நாளுக்குள்..... (13.2.18 - 18.4.18)*


*🌟மாவட்ட மையத்தின் தொடர் முயற்சியினால்....*


*🌟மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலத்தில் இரண்டு ஆண்டாக முடக்கி வைக்கப்பட்டிருந்த மாவட்ட முன்னாள் பொருளாளரும், ஒலக்கூர் வட்டார முன்னாள் செயலாளருமான தோழர்.கலைவாணனை பழிவாங்கும் பணியிட மாற்ற ஆணை ரத்தை, இன்று இறுதி செய்து மீண்டும் ஆணை  பெறப்பட்டது.*

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி விழுப்புரம் மாவட்ட மைய பொறுப்பாளர்கள் அனைவருக்கும் *_TNPTF அயன்_* சார்பாக  வாழ்த்துகளையும், நன்றியினையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



Wednesday 18 April 2018

*வரும் கல்வியாண்டுக்கான புத்தகங்களை இணையதளம் மூலம் பெறலாம்*



🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/04/blog-post_18.html


🌟வரும் கல்வியாண்டுக்கான (2018-19) பாடநூல்களை இணையதளம் மூலம் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம் என தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியது:-


🌟தமிழகத்தில் வரும் கல்வியாண்டுக்கான பாடநூல்களை பள்ளிகள் மொத்தமாக, தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழகத்திடமிருந்து கொள்முதல் செய்து விநியோகிக்கின்றன. நிகழாண்டு புதிய பாடத்திட்டத்தின்படி அச்சிடப்படவுள்ள 1,6,9,11 ஆகிய வகுப்புகளுக்குத் தேவையான நூல்கள் ஜூன் மாதத்தில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவை தவிர 2,3,4,5,7,8,10, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கான பாடநூல்கள், சென்னை நுங்கம்பாக்கம் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


🌟இதேபோன்று, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மையத்திலும் பாடநூல் விற்பனை தொடங்கியுள்ளது. மேலும் வெளி மாவட்டங்களில் உள்ள மாணவர்கள், பெற்றோர் வசதிக்காக www.textbookcorp.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்து பணம் செலுத்தி பாட புத்தகங்களை பெற்றுக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. இணையதளத்தில் பதிவு செய்த அடுத்த மூன்று நாள்களுக்குள் பாடநூல்கள் நேரடியாக வீடுகளுக்கே கூரியர் சேவை மூலம் அனுப்பி வைக்கப்படும்.


🌟பாடநூல்கள் விலை விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் நிறுவனத்தில் ஏற்கெனவே பதிவு செய்த பள்ளிகள், பாடநூல்களை மொத்தமாகப் பெறுவதற்கு இணையதளத்தைத் தொடர்பு கொள்ளலாம் என அவர்கள் தெரிவித்தனர்.


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

Tuesday 17 April 2018

*ஜாக்டோ ஜியோ மே 8 முற்றுகை போராட்ட பிரச்சாரத்திற்கு 11 மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் பட்டியல்.*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/04/8-11.html



*🌟ஜாக்டோ ஜியோ மே 8 கோட்டை முற்றுகைப் போராட்டம்.*


*🌟23.04.2018 முதல் 27.04.2018 வரை தமிழகம் முழுவதும் போராட்டப் பிரச்சாரம் செய்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.*


*🌟தமிழகத்தினை 11 மண்டலங்களாகப் பிரித்து பிரச்சாரம் செய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.*


*🌟11 மண்டலங்களில் ஒரு மண்டலத்திற்கு எந்தெந்த மாவட்டங்கள் அடங்கும் என்பது குறித்தும், மண்டலங்களில் ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெறும் இடம் பற்றியும், மண்டல அளவில் ஒருங்கிணைப்பாளர்கள் பட்டியலும் அறிவிக்கப்பட்டுள்ளது.*


*கீழ்க்கண்ட Link ஐ கிளிக் செய்து மேற்கண்ட செய்திகளையும், பட்டியலையும் தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள் தோழர்களே...*


https://drive.google.com/file/d/15e3sOanxeUVtlonCyuwc1ctwpd3_at95/view?usp=drivesdk


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

*01.01.2018 தகுதிவாய்ந்த ஆசிரியர்களின் தேர்ந்தோர் பட்டியல் தயார்படுத்துதல் விதிகள் வெளியீடு...*



🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/04/01012018.html


*விரைவில் TRANSFER COUNSELLING*


*🌟அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் 01-01-2018 நிலவரப்படி பதவி உயர்வுக்கு தகுதியான தேர்ந்தோர் பட்டியல் தயாரித்தல் தொடர்பாக அறிவுரைகள் குறித்து தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்.*


*🌟இறுதி தேர்ந்தோர் பட்டியல், காலிப்பணியிடங்களுக்கு 1:2 என்ற விகிதத்தில் பட்டியல் தயாரிக்க உத்தரவு - பட்டியல் தயாரிக்க விதிமுறைகள் வெளியீடு - இயக்குனர் செயல்முறைகள்.*



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм







*தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/04/blog-post_31.html


*🌟தொடக்கக்கல்வி துறையில் 2017-18 ஆம் கல்வியாண்டில் பொது மாறுதலில் மாறுதல் பெற்று பணியிலிருந்து விடுவிக்கப்படாமல் தொடர்ந்து அதே பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவித்தல் தொடர்பான அறிவுரை வழங்குதல் சார்ந்த தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்*


🌟தொடக்கக்கல்வி இயக்குநரின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய/ நகராட்சி/ மாநகராட்சி/ அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் 2017-18 ஆம் கல்வியாண்டில் பொது மாறுதலில் மாறுதல் பெற்று பணியிலிருந்து விடுவிக்கப்படாமல் உள்ளவர்கள் அரசு கடித எண்.275 பள்ளிக்கல்வி 5(1) துறை நாள்.16.04.2018 ன் படி கீழ்காண் நடைமுறையினை பின்பற்றுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


🌟2017-18 ஆம் கல்வியாண்டில் பொது மாறுதலில் மாறுதல் ஆணை பெற்று ஈராசிரியர் பணிபுரியும் பள்ளிகளில் விடுவிக்கப்படாமல் உள்ள ஆசிரியர்களை 15.04.2018 க்கு பின்னர் பணியிலிருந்து விடுவிக்குமாறும் 19.04.2018 க்குள் புதிய பணியிடத்தில் சேர நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм 


*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி வட்டாரத்தின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்பாட்டம்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/04/blog-post_17.html


*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி வட்டாரத்தின் சார்பாக (18.04.2018) புதன்கிழமை மாலை 5.00 மணிக்கு உதவித் தொடக்கக்கல்வி அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற உள்ளது.*


*🌟தலைமை:*

தோழர். இரா.கிருஷ்ணமூர்த்தி, வட்டாரத் தலைவர்.


*🌟முன்னிலை:*

தோழர். க.கலாநிதி, மாவட்ட துணைச்செயலாளர்.


*🌟வரவேற்பு:*

தோழர். இரா.ரவிக்குமார், வட்டாரச் செயலாளர்.


*🌟ஆர்ப்பாட்ட எழுச்சி உரை:*

*⚡தோழர்.அ.ரஹும், மாநில துணைத்தலைவர்.*

⚡தோழர். கு.குணசேகரன், மாவட்டத் தலைவர்.

⚡தோழர். இரா.சண்முகசாமி, மாவட்டச் செயலாளர்.

⚡தோழர்.பா.ஷேக்ஜாகீர் உசேன், மாவட்ட துணைத்தலைவர்.

⚡தோழர். கு.சுதா, மாவட்ட துணைச் செயலாளர்.

⚡தோழர்.கு.மகாலிங்கம், மாவட்டச் செயலாளர் TNGEA.

⚡தோழர்.க.வேலாயுதம், கோட்டத் துணைத்தலைவர் LIC ஊழியர் சங்கம்.

⚡தோழர். தி.வீரபத்திரன், வட்டச் செயலாளர் TNGEA.

⚡தோழர். இரா.பழனிவேல், மாவட்டச் செயலாளர் TAMS.

⚡தோழர். ஜெ.சர்ச்சில் கார்ல்மார்க்ஸ், வட்டச் செயலாளர், த.உ.மே.ப.ப.ஆ.சங்கம்.



*🌟நன்றியுரை:*

தோழர். மு.துளசிராமன், வட்டாரப் பொருளாளர்.



*🌟கண்டன ஆர்ப்பாட்ட கோரிக்கைகள்:*

⚡மாதக்கணக்கில் நிலுவையில் உள்ள ஆசிரியர்களின் பணப்பலன், பணிப்பலன் சார்ந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளாமல் ஆசிரியர்களை அலைக்கழிப்பது,


⚡7 வது ஊதியக்குழுவின் ஊதிய நிர்ணயத்தில் சில ஆசிரியர்களுக்கு ஊதிய நிர்ணயம் இதுநாள் வரை சரிசெய்யப் படவில்லை மேலும் ஊதிய நிர்ணய உத்தரவு நகல் அனைத்து ஆசிரியர்களுக்கு வழங்கப்படவில்லை,


⚡கடந்த சில மாதங்களாக மாத ஊதியத்தினை மாத இறுதி நாளில் வழங்காமல் காலம் தாழ்த்தி வழங்குவது, இதுபோன்ற 


🌟ஆசிரியர் விரோதப் போக்கில் செயல்பட்டு வரும் கள்ளக்குறிச்சி உதவித் தொடக்கக்கல்வி அலுவலகத்தின் நிர்வாக சீர்கேடைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.


*ஆசிரியர் பேரினமே ஆர்த்தெழுவீர்!  அணி திரள்வீர்!!*



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм