Saturday 31 March 2018

*பான்கார்டு-ஆதார் இணைப்புக்கு காலக்கெடு 4-வது முறையாக நீட்டிப்பு-மத்திய அரசு அறிவிப்பு*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/03/4.html


🌟பான்கார்டுடன், ஆதார் எண்ணை இணைக்கும் காலக்கெடுவை ஜூன் மாதம் 30-ம் தேதி வரை நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் இன்று அறிவித்துள்ளது.


🌟இம்மாதம் 31-ம் தேதியுடன் பான்கார்டு, ஆதார் எண் இணைப்புக்கு இறுதிக் கெடு விதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் காலக்கெடு நீட்டிப்பு என்பது 4-வது முறையாக வழங்கப்பட்டுள்ளது.


🌟நடப்பு நிதியாண்டு பட்ஜெட் தாக்கலின் போது மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பேசுகையில், கருப்புபணம், ஊழல் ஆகியவற்றை தடுக்கும் நோக்கில் வருமானவரி செலுத்துவோர் அனைவரும் வரிமானவரி ரிட்டன் தாக்கலின் போது, பான்கார்டுடன், ஆதார் எண்ணையும்இணைத்து தாக்கல்செய்வது கட்டாயம் என்று அறிவித்தார். இது கடந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. அதன்பின் 4 கட்டங்களாக ஆதார் எண், பான்கார்டு இணைப்பு காலக்கெடு நீட்டக்கப்பட்டது.


🌟இந்நிலையில், இறுதியாக இம்மாதம் மார்ச் 31-ம் தேதிக்குள் வருமானவரி செலுத்துபவர்கள், பான்கார்டு வைத்திருப்பவர்கள் ஆதாரோடு இணைக்க வேண்டும் என்று காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.


🌟இதற்கிடையே இம்மாதம் ஆதார் எண்ணை, செல்போன் எண்ணோடு இணைப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், தீர்ப்பு வரும் வரை காலக்கெடுநீட்டிப்பு தொடரும் என்று அறிவித்தது.


🌟இதனால், வேறு வழியின்றி, மத்திய அரசும், பான்கார்டுடன், ஆதார் எண்ணை இணைக்கும் காலக்கெடுவை நீட்டிக்கும் முடிவுக்கு வந்துள்ளது.


🌟இது குறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் விடுத்துள்ள அறிவிப்பில், வருமானவரி செலுத்துபவர்கள் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கும் காலக்கெடு ஜூன் 30-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், ஆதார் எண் வைத்திருப்பவர்கள், ஆதார் எண்ணுக்கு விண்ணப்பித்து இருப்பவர்கள் வருமானவரி ரிட்டனில் குறிப்பிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


🌟ஒட்டுமொத்தமாக 65 கோடி பான்கார்டுகள் இருக்கும் நிலையில்,அதில் 33 கோடி பான்கார்டுகள், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளன.


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

*புதிய பாடத்திட்டத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி ஜூன் முதல் வாரத்தில் அளிக்கப்படும்.*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/03/blog-post_10.html


🌟தமிழகத்தில் பள்ளிக்கூடங்களில் 5 ஆண்டுக்கு ஒரு முறை பாடத்திட்டம் மாற்றப்படவேண்டும். ஆனால் பல ஆண்டு களாக மாற்றப்படாமல் இருந்தது.


🌟இதன் காரணமாக தமிழக அரசு புதிய பாடத்திட்டத்தை தயாரித்தது. அதன்படி 1-வது வகுப்பு, 6-வது வகுப்பு, 9-வது வகுப்பு, 11-வது வகுப்பு ஆகியவற்றுக்கு 2018-2019 கல்வி ஆண்டில் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படும்.


🌟அவ்வாறு அமல்படுத்தும்போது அந்த பாடத்தை எவ்வாறு கற்பிக்கவேண்டும். அதில் உள்ள கதைகளை எப்படி சொல்லவேண்டும். புதிய தொழில் நுட்பத்தில் எவ்வாறு மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்பது குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சி குறித்து சென்னை டி.பி.ஐ. வளாக பள்ளிக்கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-


🌟புதிய பாடத்திட்டம் குறித்து மாணவர்-மாணவிகளுக்கு கற்பிக்க பயிற்சி அளிக்கப்படுவது உறுதி. பயிற்சி இல்லாமல் மாணவர்களுக்கு கற்பிக்க முடியாது. ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் கோடைவிடுறை விரைவில் விட உள்ளது. கோடை விடுமுறையின்போது ஆசிரியர்களை தொந்தரவு செய்யாமல் பள்ளிகள் திறந்த பின்பு ஜூன் மாதம் முதல் வாரத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி ஒரு வாரம் அல்லது 2 வாரம் நடைபெறும்.


🌟மாணவர்கள் மனப்பாடம் செய்வதை முடிந்த அளவுக்கு குறைத்து அவர்களுக்கு புரிந்து கொள்ளும்படி கற்பிக்கவேண்டும். ஏன் என்றால் மனப்பாடம் இல்லாமல் படித்தால் போட்டித்தேர்வு உள்ளிட்ட எந்த தேர்வையும் மாணவர்கள் எதிர்கொள்ளலாம். அதன் காரணமாக புதிய பாடத்திட்டத்தின்படி முடிந்த அளவுக்கு ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கம்ப்யூட்டரை பயன்படுத்தி பாடம் கற்பிக்க வேண்டி இருக்கும்


*சர்வசிக்‌ஷா அபியான் உள்பட பள்ளிக்கல்வி திட்டங்கள் ஒன்றாக இணைப்பு : மத்திய அரசு*



🌟மத்திய அரசு கடந்த 2000ம் ஆண்டில் அனைவருக்கும் கல்வி இயக்கம் என்ற திட்டத்தை கொண்டு வந்தது. இது 10 ஆண்டுகள் நடைமுறையில் இருக்கும் என்று தெரிவித்தது. 10 ஆண்டுகளுக்கு பிறகு அந்த திட்டம் மேலும் நீட்டிக்கப்பட்டது.


 🌟அதைத் தொடந்து 2010ம் ஆண்டு மத்திய இடைநிலைக் கல்வி திட்டத்தையும் மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த இரண்டு திட்டங்கள் தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் நடைமுறையில் உள்ளன. இந்நிலையில் இந்த இரண்டு திட்டங்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் தனித்தனியாக நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது.


🌟இப்போது, மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை மேற்கண்ட இரண்டு திட்டங்களையும் ஒன்றாக இணைப்பது, அத்துடன் ஆசிரியர் கல்வி திட்டத்தையும் ஒன்றாக இணைப்பது  குறித்து ஆலோசித்து வந்தது. இதற்கான ஆய்வுக் கூட்டம் புதுடெல்லியில் நேற்று முன்தினம் நடந்தது. அதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.


🌟கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் பேரில் மேற்கண்ட 3 திட்டங்களையும் ஒரே திட்டமாக செயல்படுத்த முடிவு செய்துள்ளனர். ஒருங்கிணைந்த இந்த திட்டம் ஏப்ரல் 1ம் தேதி முதல் மார்ச் 2020 வரை ஒரே திட்டமாக செயல்படும். இதற்காக ரூ.75 ஆயிரம் கோடி நிதி ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஒருங்கிணைந்த திட்டத்திற்கு ஏற்ப பள்ளிக் கல்வித்துறை வடிவமைக்கப்படும். கல்விக்கான தற்போதைய நிதி ஒதுக்கீட்டில் 20 சதவீதம் அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм 

*ஜேக்டோ ஜியோ முடிவுகள் மற்றும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் அறிவிக்கை*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/03/blog-post_31.html


*🌟பேரன்புமிக்க பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்*


*சென்னையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில அலுவலகத்தில் ஜேக்டோஜியோ உயர்மட்டக்குழுக் கூட்டம் இன்று  சனிக்கிழமை (31.03.2018) மாலை 3.00 மணியளவில் நடைபெற்றது.*


*⚡ஜேக்டோ ஜியோ முடிவுகள்:*


*⚡இன்றைய(31.03.2018) ஜேக்டோ ஜியோ  மாநில உயர்மட்டக்குழு முடிவுகள்*


*🌟4 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 08.05.2018 ல் சென்னையில் கோட்டை நோக்கிப் பேரணி 5 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்களைத் திரட்ட முடிவு*


*🌟முற்றுகைப் போராட்டத்தை வெற்றிகரமாக்க தமிழகம் முழுவதும் 11 மண்டலங்களில் 11 மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் 23.04.2018 முதல் 27.04.2018 முடிய போராட்ட விளக்கப் பிரச்சார இயக்கம்*


*🌟ஜேக்டோ ஜியோ உயர்மட்டக்குழு கூட்டத்தில் ஜேக்டோ ஜியோ மாநில நிதிக் காப்பாளர் தோழர். மோசஸ் அவர்களும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் தோழர். ச.மயில் அவர்களும் எழுச்சி உரையாற்றினார்கள்.*


*🌟நமது இயக்கத் தோழர்கள் அனைவரும் மே 8 கோட்டை நோக்கி பேரணியில் கலந்து கொண்டு போராட்டத்தினை வெற்றிபெறச் செய்யுமாறு மாநில அமைப்பின் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.*


*⚡தோழமையுடன்;*

*ச.மயில்*
*பொதுச்செயலாளர்*
*தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм 





Friday 30 March 2018

*ஏழை மாணவர்களுக்கான LKG வகுப்பு சேர்க்கைக்கான 25% இடஒதுக்கீட்டை நிரப்ப மெட்ரிக் பள்ளிகளுக்கு தமிழக அரசு ஆணை*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/03/lkg-25.html


🌟ஏழை மாணவர்களுக்கான 25% இடஒதுக்கீட்டை நிரப்ப மெட்ரிக் பள்ளிகளுக்கு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. எல்.கே.ஜி., முதலாம் வகுப்புகளில் 1.40 லட்சம் இடங்களை இடஒதுக்கீடுப்படி நிரப்ப வேண்டும். 


🌟ஏப்ரல் 20 முதல் மே 18 வரை www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ், பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான வேலைகளில் தமிழக அரசு ஈடுப்பட்டது.


🌟மத்திய அரசு கொண்டு வந்த கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009-ன்படி, பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு சுயநிதி பள்ளிகளில் 25 சதவீத இடம் ஒதுக்கப்பட வேண்டும். இதனால் தனியார் பள்ளிகளுக்கு ஏற்படும் இழப்பை, மாநில அரசே ஏற்றுக் கொண்டது. ஆனால், தமிழக பள்ளிக் கல்வித்துறையில் இந்தச் சட்டம் பெயரளவுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டை நிரப்ப மெட்ரிக் பள்ளிகளுக்கு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.


🌟தமிழகத்தில் ஏறத்தாழ 9 ஆயிரம் தனியார் சுயநிதி பள்ளிகள் உள்ளன. இதில் சிறுபான்மையினர் சுயநிதி பள்ளிகளும் அடங்கும். ஏப்ரல் 20 முதல் மே 18 வரை www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். 25 சதவீத இடஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடமிருந்து தனியார் பள்ளிகள் எந்தவிதமான கல்விக் கட்டணமும் வசூலிக்கக் கூடாது. இதற்கான கல்விக்கட்டணத்தை அரசு வழங்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм 






Wednesday 28 March 2018

*தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளரின் செய்தி அறிக்கை*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/03/blog-post_28.html



*பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!வணக்கம்.*


*🌟தொடக்கக் கல்வித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு இரண்டாம் கட்ட பதவி உயர்வுக் கலந்தாய்வை 31.03.2018 க்குள் நடத்தக்கோரி 27.03.2018 அன்று அனைத்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்கள் முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்திட மாநில மையம் விடுத்த அழைப்பை ஏற்று மிகக் குறுகிய கால அவகாசத்தில் தமிழகம் முழுவதும் அனைத்து உதவித் தொடக்கக்கல்வி அலுவலகங்கள் முன்பும் பேரெழுச்சியுடன் போராட்டத்தில் ஈடுபட்ட நமது பேரியக்கத்தின் அனைத்துத் தோழர்களுக்கும் மாநில மையத்தின்  புரட்சிகரமான வாழ்த்துக்கள்*


*🌟ஆசிரியர்களுக்கு எங்கெல்லாம் அநீதி இழைக்கப்படுகிறதோ அங்கெல்லாம் ஈட்டிமுனையாக இருந்து போராடக்கூடிய நம் பேரியக்கம் கள்ளர் பள்ளிக்கிளையின் மாவட்டச்செயலாளர் திரு.வாஞ்சிநாதன் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து நாளை (29.03.2018) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மதுரை  காளவாசலில் மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டத்தை நடத்துகிறது*


*🌟போராட்ட ஏற்பாடுகளிலும் களப்பணிகளிலும் நம் இயக்கத் தோழர்கள் நம் இயக்கத்திற்கேயுரிய இலக்கணத்தோடு இமைப்பொழுதும் சோராமல் களப்பணி ஆற்றி வருகிறார்கள்*


*🌟தென்மத்திய மண்டல அளவில் நடைபெறும் இப்போராட்டத்தில் பங்கேற்க அம்மண்டலத்தில் உள்ள மதுரை,தேனி,திண்டுக்கல்,சிவகங்கை,இரா மநாதபுரம்,கள்ளர்பள்ளி மாவட்டக்கிளைகளின் நம் பேரியக்கத் தோழர்கள் போராட்டக்களம் நோக்கி புறப்பட ஆயத்தமாகி விட்டனர்*


*🌟சக தோழனுக்கு ஏற்பட்ட அநீதியை தனக்கு ஏற்பட்ட அநீதியாகக் கருதும் நம் பேரியக்கத் தோழர்களே !தென்மத்திய மண்டலம் தாண்டி பிற மாவட்டத் தோழர்களும் வாய்ப்பிருப்பின் இந்த அறப்போரில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள மாநில மையம் அழைக்கிறது*


*"பொறுமை ஒருநாள் புலியாகும்; அதற்குப் பொய்யும் புரட்டும் பலியாகும்"*


*நாளை காளவாசல் நிறையட்டும்; அதிகார வர்க்கம் உறையட்டும்; அநீதி மறையட்டும்*


*⚡தோழமையுடன்*

*ச.மயில்*
*பொதுச்செயலாளர்*
*தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм 


Friday 23 March 2018

*பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கம்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/03/blog-post_23.html


*பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கம் - 17.03.2018, சனிக்கிழமை – சென்னை.*



🌟 தலைவர் வசந்தி தேவி,

செயலர் J கிருஷ்ணமூர்த்தி, 

 ஜெயராமன்,  

ச. மாடசாமி  

கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு சு.மூர்த்தி சுடர், 

நடராஜன், 

யூனிசெப் அருணா ரத்தினம், 

CE கருணாகரன், 

AID India தோத்தாத்ரி, 

AAA உமாமகேஸ்வரி கோபால்

ஆகிய 10 பேரும் காலை 10.30 க்குள் அடையாறு சாஸ்த்ரி நகரில் உதயம் அப்பார்ட்மென்ட்டில் தலைவரின் வீட்டில் ஒன்று  கூட இன்றைய ப.க.பா. இயக்க சந்திப்பு ஆரம்பமானது. 



*தரத்தை மேம்படுத்த பயிற்சிகள்* 



🌟 தலைவர் வசந்திதேவி அவர்கள் தம் இயக்க முன்மொழிவுகளின் படி அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த என்ன செய்யலாம் என்ற அடிப்படையில் , எய்டு இந்தியா நிறுவன சார்பாக சில கருத்துகளை தோத்தாத்ரி பகிரப் போவதாகக் கூறினார். புதிய ஆன்ட்ராய்டு செயலி வழியாக, தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி கற்பித்தல் யுக்திகளை, காணொலி செயல்பாடுகளின் பாடப் பொருள்களைப் பயிற்சிகளாக பெருவாரியாக எடுத்துச் சென்றால் மக்களை சென்றடையும். இது சம்மந்தமாக பாலாஜி சம்பத் அவர்கள் தன்னிடமுள்ள அறிவியல் சார்ந்த செய்திகளை செயலி வழியாகத் தருவது பற்றியும் பேசியுள்ளார் என்றார்.



🌟 அது வரவேற்கத் தக்கதாக இருந்தாலும் , பாடப்பொருள் ஒரு பிரச்சினை அல்ல; ஆசிரியர் மாணவர் நல்லுறவை அடிப்படையாகக் கொண்டே தரமான கல்வி அமையும் என ஆணித்தரமாக, தனது கருத்தாக சில உதாரணங்களை முன் வைத்தார் அருணா ரத்தினம் அவர்கள் . அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கம் வழியாகவும் (RMSA) அனைவருக்கும் கல்வி இயக்ககம் (SSA) வழியாகவும் பல நாட்களுக்கான ஏராளமான பயிற்சிகள் வழங்குவதைக் குறிப்பிட்டு, ஆசிரியர்கள் பயிற்சிகள் என்றாலே வெறுப்பாக இருக்கின்றனர் எனவும் கூறினார்!



🌟 அதையே மற்றவரும் ஆமோதிக்க, 3 வருடங்களுக்கு  முன்பே, எஸ்.சி.இ.ஆர்.டி(SCERT) வழியாக ICT பயிற்சி மாநிலம் முழுக்க 1500க்கும் மேல் கொடுக்கப்பட்டுள்ளது.  இன்றுள்ள இளம் ஆசிரியர்கள், ஆர்வமுள்ள ஆசிரியர்கள் எவரும் தங்கள் கைகளில் உள்ள ஆன்ட்ராய்டு அலைபேசியையும் , கணினிகளையும் பயன்படுத்தி மிக அதிக அளவில் மாணவரிடம் கற்பித்தலைக் கொண்டு சேர்க்கின்றனர். அதுவல்ல பிரச்சனை-இது மட்டும் தரமாகாது என்றார் உமா மகேஸ்வரி அவர்கள் .



🌟 ஒரு சில ஆசிரியர் சங்கங்கள் தங்களது கோரிக்கைகளில் தரமான கல்வியைப் பற்றியோ குழந்தைகளின் பிரச்சனைகளைப் பற்றியோ, பள்ளி வசதிகளைப் பற்றியோ துளியும் கவனம் செலுத்துவதில்லை; மாறாக தங்களது வரி குறைப்பு, வருமானம் இவற்றையே முதன்மைப்படுத்தப்படுகின்றனர் என்று கூறி சில கருத்துகள் பேசப்பட, அதற்கான சாட்சியாக தீக்கதிர் பத்திரிக்கையில் ஒரு செய்தியை எடுத்துக் காட்டி வருத்தப்பட்டார் தலைவர் வசந்தி தேவி.



🌟 தாங்கள் ஏற்கனவே செய்து வரும் பல செயல்களில் ஆர்வமுள்ள ஆசிரியர்களே திரும்பத் திரும்ப பயிற்சிகளை பள்ளிக்கு எடுத்துச் செல்வதும், மற்ற இடங்களில் அது ஒரு பெரும் சவாலாகவே இருக்கின்றது எனவும் பேசப்பட்டு, தலைமை ஆசிரியர்கள் வலிய மனதுடன் அனைத்து நல்லனவற்றையும்  பள்ளிக்காக  முன்னெடுக்க, எங்கெல்லாம் தயாராக இருக்கிறார்களோ அங்கெல்லாம் தரமான கல்வி சாத்தியம் என செயலர்  J krishnamoorthy அவர்கள்  கூற  விவாதம் நிறைவுற்றது.



*துண்டறிக்கை / சுவரொட்டி :*



🌟 அடுத்ததாக  நாம் தயாரிக்கப் போகும் துண்டு பிரசுரங்கள் (Hand Bills) பற்றிய ஒரு விரிவானப் பகிர்தல் ஆரம்பமானது. தலைவர் வசந்தி தேவி, கல்வி சட்டம் சார்ந்து நாம் மேற்கொள்ளப் போகும் செயல்களில் முதன்மையானது துண்டு பிரசுரங்கள், இதற்கு 100000 வரை துண்டு பிரசுரங்கள் (Hand Bills) அச்சடிக்கப்பட வேண்டும் என்றார்.



🌟 பாரதி புத்தகாலயம், நக்கீரன், அகரம், புதிய தலைமுறை கல்வி இதழ், மேன்மை இதழ், AID India, இது போல் நமக்குத் தெரிந்த 10 நிறுவனங்களிடம் உதவி கேட்கலாம் என்றார் ச.மாடசாமி. இதை வடிவமைக்கும் பொறுப்பு கருணாகரன், ச.மாடசாமி, மூர்த்தி, உமா மகேஸ்வரி ஆகியோர்களுக்கு வழங்கப்பட்டது.



🌟 மேலும் CE கருணாகரன் அவர்கள்  பேசுகையில் இரு விதங்களில் இதைப் பரவலாக்கலாம். முறையான குறும் படங்களாகவும், காணொலி ஆவணங்களாகவும், முகநூல், டிவிட்டர் என அனைத்து சமூக ஊடகங்களிலும் இந்த பிரசுரங்களை பரவலாக்கலாம் என்றார் .



*அச்சு / காட்சி ஊடக உதவி* 



🌟 நீலகண்டன், ஞானவேல், முருகேஷ், மகேஷ், சமஸ் போன்ற பத்திரிக்கைத் துறைகளில் உள்ளவர்களையும், திரைப்படத் துறைகளில் கல்வியின் மீதும், சமூகத்தின் மீதும் அக்கறை கொண்ட சிலர் - சமுத்திரக்கனி, ரோஹிணி போன்றோரையும் ப.க.பா.இயக்க செயல்பாடுகளுடன் இணைக்கலாம். இவர்களுடனான சந்திப்புகள் ப.க.பா .இயக்கம் சார்ந்த மிகப் பெரிய பணிகளை மக்களிடம் பரவலாகக் கொண்டு செல்ல ஏதுவானதாக இருக்கும் எனவும் கூறினார் ச.மாடசாமி.



🌟 தமிழகத்தில் ஆங்காங்கே தொடர்ந்து செய்து வரும் சிறு சிறு குழுக்களுக்கான செயல்பாடுகள் தான் வெற்றி பெற்றுள்ளன, ஆனாலும் அவை பரவலாகவில்லை என்ற கருத்துடன் குழுக்களின் பெயர்களைப் பதிவு செய்தார் நடராஜன். அதை ஆமோதித்து சிறு சிறு சந்திப்புகள் தான் பெரிய மாற்றங்களைக் கொண்டு வருகின்றன என்றார் ச.மாடசாமி, அதற்கு பல உதாரணங்களைத் தந்தார். திறமையானவர்களைத்  தேட வேண்டாம் என பவ்லோ ப்ரேயர் கூறியதாகக் குறிப்பிட்ட இவர், திறமையானவர்கள் தம் மீது விழும் புகழ் மாலைகளைத் தேடுபவர்களாக இருப்பர், நம்மோடு இணைந்து செயல்படுவர் எனக் கூற முடியாது என்றார்.



🌟 நம்மோடு இறுதி வரை இணைந்து செயல்படுவர்கள் மிகச் சாமானிய மனிதராகத்தான் இருப்பர். அவர்களை ஊக்கப்படுத்தி நம்மோடு வைத்துக் கொள்ள வேண்டும். எவர் ஒருவரைப் பற்றியும் நாம் எளிதாக எண்ணக் கூடாது; யாரிடமிருந்து எப்போது பெரிய மாற்றங்கள் உருவாகும் என கணிக்க முடியாது என்றார் ச.மாடசாமி. நடைமுறை வாழ்வில் சிலரை உதாரணங்களுடன் அவர் பகிர, தலைவர், செயலரும் அவரோடு இணைந்து  அவரவர் வாழ்வின் அனுபவங்களிலிருந்து புகழ் மாலையை நோக்கிச் சென்றவர்களைப் பற்றியும் பகிர்ந்தனர்.



🌟 அறிவொளியில் - வளர்மதியை என்னால் மறக்கவே முடியாது. - 2ஆவது பாடமே சமாதானம் என வைத்தோம். வெகு இயல்பாக ஆட்சியர் அலுவலகத்தில் வளர்மதி கூறியது இது... “சமாதானத்தை ஆரம்பித்த உடனேயே சண்டை, பிறகு drop out எனறார்”. இப்படித்தான் சிறு குழந்தைகளே நமக்கு நிறைய பாடங்களைக் கற்றுத் தருகின்றனர் என்றார் ச.மாடசாமி. 



🌟 தொடர்ந்து செயலர் J கிருஷ்ணமூர்த்தி தனக்கு அறிமுகமுள்ள ராணி கார்த்திக் என்ற நிருபர் News 7 இல் இருந்து கல்வி சார்ந்து பணிபுரிவதாகவும், அவர் ப.க.பா. இயக்கம் பற்றி கதையை செய்தியாகத் தனது பிரிவில் தருவதாகக் கூறியுள்ளார் எனவும்,  ஸ்ரீகுமார், சரவண தாஸ், வள்ளிதாசன், காளிதாசன், கவின் மலர் போன்றவர்களையும் அழைத்து ப.க.பா. இயக்கத்தைப் பரவலாக்கி சாமான்ய மக்களின் கல்வியை, மக்கள் மனதில் கொண்டு செல்லலாம் என JK மற்றும் ச.மாடசாமி இருவரும் கூறினர்.



🌟 வகுப்பறையை உயிரோட்டமாகவும், அரசுப் பள்ளிகளின் பாதுகாப்புக்காக செயல்படுவது ஆகியவற்றை அடிப்படை நோக்கமாகக் கொண்டது நாம் இணைந்திருக்கும் ப.க.பா. இயக்கம். பத்திரிக்கை ஊடகம், காட்சி ஊடகம் இரண்டிலும் நம் ப.க.பா. இயக்கம் எடுத்துச் செல்லும் முயற்சிகள் வெளிவர வேண்டும். ஏப்ரல் முதல் வாரத்தில் அதற்கான கூட்டத்தை நடத்துவது சரியாக இருக்கும் என்றார் ச.மாடசாமி.



🌟 வீடு, வகுப்பறை, மாணவர்களுக்கு மூன்றாம் இடம் என ஜான் ஹோல்ட் சொன்னார், ஆனால் பல ஆசிரியர்கள் தங்களுக்கு மூன்றாம் இடம் கேட்கிறார்கள் என்றார், ஆம்.. தாங்கள் செய்யும் பணிகளைப் பகிர்ந்து கொள்ள, தங்களது பள்ளி செயல்பாடுகளை மற்றவருக்குச் சொல்ல, தாங்கள் செய்த முனைவர் ஆய்வு பற்றி பேச ஒரு தளம் வேண்டும் என்கின்றனர். ஆகவே ஊடக நண்பர்களை அழைத்து நாம் கலந்துரையாடலைத் தொடர்ந்து ஆசிரியர் சந்திப்பும் உரையாடலும் தொடங்க வேண்டும், எங்கெல்லாம்  வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம் பேச வேண்டும், ஒரு 20 ஆசிரியர்கள் இணைந்தாலும் பேசலாம், இங்குள்ள மூர்த்தி, நடராஜன், உமா யாவரும் ஆங்காங்கே பேச வேண்டும், அப்போதுதான் மாற்றங்கள் உருவாகும் என்றார் ச.மாடசாமி.



*கல்வி கலைப் பயணம் :*



🌟 மீம்ஸ், பத்திரிக்கை, டிவி, மீடியா முக்கியம் எனவும் அதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து எடுக்க வேண்டும் எனவும் திரும்பத் திரும்ப வலியுறுத்தப்பட்டது. அதோடு கடந்த மார்ச் 10 ஆம் தேதி AAA வழியாக நடத்தப்பட்ட கலைப்பயண அனுபவத்தை சற்று விளக்கமாகப் பகிர்ந்தார். 13 மாவட்டங்களிலிருந்து 65 ஆசிரியர்கள் வந்திருந்தனர் என உமா மகேஸ்வரி அவர்கள் பகிர, மிகவும் ஆச்சர்யம் அனைவருக்கும்...இது சார்ந்து நம் இயக்கப் பிரச்சாரத்தைத் திட்டமிடவும் முடிவு செய்யப்படது.



🌟 வேலு சரவணன் நாடகத் துறையில் புதுச்சேரி/தமிழக பகுதியில் பல செயல்பாடுகளைப் புரிபவர். அவர் கூறுவது என்னவெனில், “மிகச் சிறந்த ஆசிரியர்கள் என்பவர் மிகச் சிறந்த கோமாளிகள்” என J பகிர்ந்ததோடு, கோமாளிகள் என ஏன் கூறுகிறோம் என்ற விளக்கத்தையும் தந்தார். ஆம், சர்க்கஸில் சிங்கத்துடன் கூண்டுக்குள் வீரச் செயல் புரிபவர் வரவில்லை என்றாலும் அந்த வேலையைக் கோமாளிகளே செய்வர், வேறு என்னவானாலும் அப்பணிகளுக்கு மாற்று கோமாளிகளே, பல கலைகளைத் தெரிந்தவர்களே கோமாளிகளாகிப் பெயர் பெற்றனர். உதாரணமாக கலைவாணர் N.S.கிருஷ்ணன் மட்டுமே கோமாளியாக அடையாளம் காணப்பட்டார், மற்ற அனைவரும் நகைச்சுவை நடிகராகவே பெயர் பெற்றனர் என்றார் JK, மேலும் அதே போல் சார்லி சாப்ளினும் என்றார் ச.மாடசாமி. 



🌟 தனது பயிற்சிகளில் கலகலவகுப்பறை   சிவா பற்றியும், அவரது மாணவர் முன் அவர் தனக்கான வேடமாக கோமாளி முகமூடியைத் தேர்வு செய்தது பற்றியும் பகிரப்பட்டது.  மதுரையில் ஒரு முறை சிவா நடத்திய பயிற்சியில் கூட ஆசிரியர்கள் தன் கை காசுகளைப் போட்டு தன்னார்வமாக வருவது ஆச்சர்யமாக உள்ளது என்றார்.



🌟 அதே போல 2016 மே மாதம் திருச்சியில் நடத்திய AAA ஆசிரியர் கூடல் விழாவிலும் கூட 3 நாட்கள் ஆசிரியர் தமது பொருட்செலவில் விடுமுறையில் கூட  வந்து கலந்து கொண்டதை உமா நினைவு கூர்ந்தார். 



🌟 மேலும் சிவா கல்வி சார்ந்த திரைப்படங்களின் தொகுப்பை வைத்து ஆசிரியர்களிடம் கொண்டு சேர்ப்பதாகவும் அருணா பகிர்ந்தார்.



🌟 கலைகளை ஆசிரியர்கள் மத்தியில் கொண்டு செல்வது மிக இன்றியமையாத விஷயம் தான், நம் நாட்டில் தான் உடல் பற்றிய பெரிய பிரக்ஞையில் வாழ்கிறோம். அசைவே இல்லை, வெளி நாடுகளில் அது போல இல்லை. நம் ஆசிரியர்களுக்கு உடல் அசைவுகள் மிகவும் தேவையான ஒன்று. ஆனால்  ஆசிரியர்கள் வகுப்பறைக்குள் இந்தக் கலை ஆர்வத்தை கற்பித்தல் உத்தியாக மட்டுமெ எடுத்துச் செல்லக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்றார் ச.மாடசாமி. இது மிகவும் குறிப்பிடத்தக்கது.



🌟 கலைப்பயணம் வழியாக ப.க.பா இயக்கம் பற்றி எடுத்துச் செல்ல வேண்டியவற்றை முனைவர் காளீஸ்வரன் மற்றும் முருகேஷ் ஐ முதன்மையாகக் கொண்டு ஆலோசித்து தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைவர், செயலர், ச.மாடசாமி ஆகியோர் வலியுறுத்திய பிறகு அடுத்த தலைப்பிற்குள் சென்றோம்.



*SC / ST / கள்ளர் பள்ளிகள் :* 



🌟 தாய்த் தமிழ்ப் பள்ளி  கல்யாணி, ஆசிரியர் மஹாலட்சுமி, சுடர் நடராஜன், ஆசிரியர்கள் எழமலை, நாகராஜன், ஈரோடு V.P.குணசெகரன், கருப்பசாமி, தேனி சுந்தர் கள்ளர் பள்ளிகள் பற்றிய ஆய்வு செய்வதால், அவரும் இவர்களோடு இணைந்து தொடர் கலந்துரையாடலில்  இது சார்ந்த முயற்சிகள் நடக்கின்றன என JK பகிர்ந்ததைத் தொடர்ந்து, அதற்கான குழுவில் உரையாடல் பகிர்வு நடக்கின்றது என்றார் நடராஜன்.



🌟 நாமக்கல் விமலா வித்யா அனைத்து விதமான தீர்ப்பானைகள் பலவற்றையும் தருகிறார். முன்மொழிவுகள் என்ன வைக்க வேண்டும், தலித் அமைப்புகள் கல்விக்காக என்ன செய்கின்றன? என்ற வினாக்களை தலைவர் முன்வைத்தார்.



🌟 நாம் அரசுப் பள்ளிகளுக்காக பல வித முயற்சிகளையும் செய்வது ஒரு புறம் இருக்கட்டும், பழங்குடியினப் பள்ளிகள் மொத்தம் 312  உள்ள  நிலையில், சேலத்தில் மட்டும் அதிக பள்ளிகள் (55) உள்ளன. இவர்களுக்கு மட்டுமல்ல, இது போன்ற தமிழகத்தின் எந்தப் பள்ளிக்கும் ஆண்டாய்வு முதலான கல்வித் துறையின் எந்த கட்டுப்பாடுகளும் கிடையாது; ஆசிரியர்கள் சரியாகப் பள்ளிக்குச் செல்வதேயில்லை; கற்பித்தல் நடைபெறுவதேயில்லை, வருமான வரித் துறையைச் சேர்ந்தவர் பள்ளியைப்  பார்வையிட வருகிறார் என்றும் சுடர் நடராஜன் கூறினார்.



🌟 இப்பள்ளிகள் கல்வித்துறையுடன் இணைக்கப்பட வேண்டும். இதற்கான பல முயற்சிகள் செய்தும் மாற்றங்கள் இதுவரை எதுவும் நிகழவில்லையே! பல போராட்டங்கள் நடத்தியாயிற்று, ஊடகங்களுக்கும் எடுத்துச் சென்று ஆட்சியாளர்கள் கவனத்திற்குப் பல முறை கொண்டு சென்றும் எவருமே அதற்கான முயற்சிகளை எடுக்கவில்லை என்றும் கூறினார்.



🌟 கிருஸ்துதாஸ் காந்தி ஈரோடு வந்த போது ஈரோடு முழுக்க பழங்குடியினப் பள்ளிகளை சுற்றிக் காட்டிய பிறகும், இது சில காரணங்களுக்காக தனித் துறையாகக் கொண்டு வரப்பட்டது, அது நடக்கவில்லை, அதற்காக இரு துறைகளையும் இணைக்க முடியுமா என்றும் கேட்கிறார். மேலும் பொறுமையோடு இருக்கக் கூறினார், தலித் மாணவருக்கு பணத்தைக் கையில் தாருங்கள், அரசுப் பள்ளிகளே வேண்டாம் என்கிறார், இது போன்ற கருத்துகள் தான் உள்ளன என்றும் பதிவு செய்தார் நடராஜன் .



🌟 அடுக்கி வைக்கப்பட்டுள்ள மூட்டைகளில் அடி மூட்டைதான் ST பள்ளிகள். இந்திய அளவில் SC - 72 %  ST 54% எழுத்தறிவு உள்ளவர்  எனக் கூறுகிறது அரசு விபரம்.. ஆனால் உண்மை நிலை பாதி மட்டுமே. முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்து தனிக்கவனம் செலுத்த வேண்டிய துறை, காவல்துறையைப் போல மிக முக்கியமாகப் பார்க்க வேண்டும் அரசு என்று கூறிய பிறகு, தனக்கு மிக நெருக்கமான மாவட்டத்தில் பழங்குடியினரின் பள்ளிகள் பற்றிய நிலைகளைப் பகிர்ந்தார். 



🌟 ஈரோடு மாவட்டத்தில் 20 பள்ளிகள் உள்ளன, அங்கு ஆசிரியர்களின் பணியிடங்கள் 75 ஆனால் 32 பேர் மட்டுமே இருக்கின்றனர். பர்கூர் மலையில் உள்ள பள்ளியில் ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே இருக்கிறார். அங்கு மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பொதுத் தேர்வு எழுதுகின்றனர். ஆனாலும் அரசு கவனிக்க மறுக்கிறது. ஆசிரியர்களை நியமிக்கக் கூறி  போராட்டம் நடத்தினோம், ஒப்பந்த முறையில் போடலாம் என்கின்றனர். அரசு உறைவிடப் பழங்குடியினர் பள்ளியில் (GTR) ஆசிரியர் போடுங்கள் என்றால், எனக்கும் அதற்கும் சம்மந்தமில்லை என்கின்றனர் கல்வித்துறை அரசியல் தலைவர்கள். 



🌟 ஆசனூரின் மேல்நிலைப் பள்ளியில் 25 வருடங்களாக ஆங்கில ஆசிரியர் நியமனம் செய்யப்படவே இல்லை. பழங்குடியின மக்கள் பள்ளியில் 20 கி.மீட்டர் நடந்து வரும் பெண் குழந்தைகள் உண்டு. முன்பெல்லாம்  சிறு வயதில் திருமணம் நடப்பது, பள்ளி இருப்பதால் தள்ளிப்போனது எனக் கூறி மகிழ்கின்றனர் அப்பகுதி வாழ் பெண் குழந்தைகள், முதலில் 10ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இருந்ததால் அந்த வயது வரை எங்களுக்குத் திருமண பயம் இல்லாதிருந்தது. இப்போது மேல்நிலைப் பள்ளியாகியதால் திருமண வயது இன்னும் தள்ளிப் போனது, ஆனால் பள்ளியின் கூரைகள் எங்களுக்குப் பாடம் சொல்லித் தருமா எனக் கேட்டனர் . இந்த பிரச்சனைகள் அரசியல் தலைவர்கள் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும், தலைவர்கள் தெளிந்த அறிவு பெற வேண்டும். தனித் தீவாக இருக்கிறது ST பள்ளிகள் என்றார் நடராஜன்.



🌟 மேலும் இது சார்ந்த மாணவிகளுடனான சந்திப்பைப் பற்றியும் அங்குள்ள உண்மை நிலைகளைப் பற்றியும் தலைவர் வசந்திதேவி அவர்கள் வருத்தப்பட்ட நிலையில, எதற்காக SC / ST பள்ளிகள் பிரிவு என்ற கேள்வியை முன் வைத்தார் CEK, நானும் இதையேக் கேட்கிறேன் என்றார் வசந்திதேவி, அதை இணைப்பதற்கு சிவகாமி செயலராக இருந்த போது முயற்சி செய்தார். ஆனால் கட்சி பிரச்சனைகள் காரணமாக இயலவில்லை என்றார் அருணா ரத்தினம்.



🌟 அருணா ரத்தினம் தனது யூனிசெப் பணி அனுபவத்தில் பழங்குடியினப் பள்ளிகளுடன் நெருக்கமான அறிமுகங்கள் நிகழ்வுகள் இருந்ததைப் பல உதாரணங்களுடன் பகிர்ந்தார். சேலம் மாவட்டத்தில் உள்ள கருமந்துறை ஒன்று தான் GTR பள்ளி, சுற்றியுள்ள 15 கி.மீட்டருக்கு, நடராஜன் தோழர் சொல்லிய அதே கதை, அங்குள்ள மேல்நிலைப் பள்ளி தங்கும் விடுதி இருப்பதால் 12 ஆம் வகுப்பு வரை படிக்க முடிந்தது பெண் குழந்தைகளால் அவர்களின் திருமணம் தள்ளிப்போனது, ஒரே ஒரு கழிப்பறை தான் இருக்கும் இது போன்று பல செய்திகள் கூறினார்.



🌟 தமிழக மக்கள் தொகையில் 21% ST இருக்கின்றனர் , SC ஆசிரியர்கள் நியமிக்காதீர்கள் என்று மாணவரே கூறுகின்றனர்.- ஒவ்வொரு மாவட்டத்திலும் அப்பள்ளிகளில், ஆசிரியர்களுக்கு பயிற்சி வேண்டாம்; சமையல்காரருக்குத் தர வேண்டும் என்கிறார்கள் மாணவர்கள், என்றார் தலைவர் .



🌟கல்வித்துறையுடன் இப்பள்ளிகளை இணைப்பதை நீதிமன்றங்களின் வழியே கொண்டு செல்லலாம், இல்லை என்றால் எதையும் ஏற்க மாட்டார்கள் என்றும், நிர்வாகம் மட்டுமாவது கல்வித் துறையுடன் கொண்டு வர கோரிக்கை வையுங்கள் என்றும் முன்னால் கல்விச் செயலர் உதயச்சந்திரன் கூறியதாகவும் நடராஜன் பகிர்ந்தார். ஏப்ரல் மாதம் முழுக்க 3 நாள் பயணமாக பள்ளிகளுக்குச் சென்று ஒரு முடிவுக்கு வந்து SC / ST அமைப்புகளோடு ஒரு கலந்துரையாடலை மே மாதம் நடத்தவும் ஒரு யோசனையை முன் வைத்தார்.



🌟 மதுரை, தேனி மாவட்டங்களில் கள்ளர் பள்ளிகள் அமைந்து இருப்பதும் , அதற்காக இணை இயக்குநர் கல்வித் துறையில் நியமிக்கப்பட்டு இருப்பதும் என சில மேலோட்டமான தகவல்கள் மட்டுமே பேசப்பட்டன.



*தகவல் பெறும் உரிமைச் சட்டம் / கல்வி உரிமைச் சட்டம் :



🌟 அடுத்து கல்வி உரிமைச் சட்டத்தின்படி (RTI) தகவல்கள் என்னவெல்லாம் வாங்கலாம் என வசந்தி தேவி அவர்கள் கேட்க, கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு மூர்த்தி அவர்கள் இது சார்ந்து பேச ஆரம்பித்தார். எவற்றை எல்லாம் விவரங்களாகப் பெறுவது என முன் வைத்தார். உடனடி கவனத்திற்கு உள்ளது ஆசிரியர் நியமனம் பற்றி RTI ACT படி கேட்கலாம். மிக முக்கியமான அரசின் பணியாகப் பார்க்கப்படுவது ஆசிரியர் நியமனம் மட்டுமே, 2010 இல் சட்டம் வந்திருந்தாலும் இன்னும் ஆசிரியர் நியமனம் RTE முறைப்படி நியமனம் செய்யப்படவில்லை, 



🌟 உதாரணம்: காங்கேயம் ஒன்றியத்தில் 3 நடுநிலைப் பள்ளிகளில் ஒரே பாட (தமிழ்) ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனில் எவ்வாறு இன்றுள்ள மேம்பட்ட கணக்கு அறிவியல் கோட்பாடுகளை கற்பிக்க முடியும்? என்ற செய்திகள் பகிரப்பட்டன ,



🌟 இடையில் மேன்மை இதழ் மணி வர அறிவியல் இயக்க துளிர் இல்லம் பற்றி சிறிது நேரம் பேசப்பட்டது. கழிப்பறைகளும் மிக முக்கியமானப் பிரச்சனையாகப் பார்க்கப்படுகிறது, அது பற்றிய பிரச்சனைகள் பேசப்பட்டது. கழிப்பறைப் பற்றிய விபரங்களை, அப்பள்ளி மாணவரது பெற்றோர் (அ) பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவரிடம் இருந்து தகவல் சேகரிக்கலாம் என முடிவு செய்யப்பட்டது.



🌟 இந்த விவரங்கள் சேகரிப்பதால் எல்லாப் பள்ளிகளும் மாற்றம் வந்து விடும் என சொல்ல முடியாது, ஆனால் அரசின் கவனத்திற்கு இதை எடுத்துச் செல்ல, விழிப்புணர்வு தர ஒரு வழியாகக் கொள்ளலாம் என்றார் தலைவர் வசந்திதேவி.



🌟 மாவட்டக் கல்வி அலுவலர், முதன்மைக் கல்வி அலுவலர் போன்றோருக்கே RTE ACT பற்றிய விழிப்புணர்வு இல்லை என்கிறார் மூர்த்தி. கோப்புகளில் இல்லாத தகவலை நாம் கேட்க முடியாது, ஏற்கனவே உள்ள தகவல்களை மட்டுமே தருவார்கள் என CEK கூறினார். இறுதியாக மாவட்டங்களில் தலா 10 பள்ளிகளில் தகவல்களை சேகரிக்க, தோழர் மூர்த்தி மற்றும் உமா இருவரும் பொறுப்பேற்றனர்,



🌟 தொடர்ந்து கலைப் பயணத்தை குறைந்த அளவு சில மாவட்டங்களிலாவது நடத்துவது என முடிவு செய்யப்பட்டது - தருமபுரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திருவண்ணாமலை, விருதுநகர் மாவட்டங்களில் முயற்சி மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. ஏற்கனவே அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு தங்கள் மாவட்டத்தில் செய்த கலைப் பயண அனுபவத்தைப் பற்றி மூர்த்தி பகிர்ந்தார்.



*சிறப்பு பகிர்வு – CEK :*



🌟 CEK சில கருத்துகளை முன் வைத்தார். இந்த சமுதாயத்தில் பல ஏற்றத் தாழ்வுகள் இருக்கின்றன, அவை கல்வித் துறையில் அதிகமாக பிரதிபலிக்கின்றது. ஆகவே அதனை நல்விதமாக இச்சமுதாயத்துக்கு மாற்றம் பெற நாம் அனைவரும் அவ்வப்போது கூடுகிறோம். அறிவியல் ஆய்வுப்படி 90% மூளை வளர்ச்சி 5 வயதிற்குள் வளர்ந்து விடுகிறது, எனவே அந்த வயதிற்குள் மூளை எதை உள்வாங்குகிறதோ பிற்காலத்தில் அதையே பிரதிபலிக்கிறது. ஆகவே ஆய்வுகள் சொல்வது மூளை வளர்ச்சியினால் 5 வயதிற்குள் தர வேண்டியவற்றைத் தர வேண்டும். அமெரிக்காவில் ஒபாமா அவர்கள் இதை மனதில் கொண்டு முன்பருவக் கல்விக்கு முக்கியத்துவம் தந்தார்.



🌟 யூனிசெப் நிறுவனம் ASER நிறுவனத்துடன் இணைந்து செய்த ஆய்விலிருந்து இதே போல் 5 வயதிற்குள் மூளை செல்கள் வளர்ந்து விடுவதை உறுதி செய்துள்ளது. நம் நாட்டில் ஆய்வு முடிவுப்படி இல்லாமல் பொது புத்தியால் நிறைய முன்பருவக் கல்வி முறை முதன்மைப்படுத்தப்படுகிறது. க்ரஷ் முறையும் உண்டு, அங்கன் வாடி முறையும் உண்டு, இரு முறைகளிலும் அரசு பட்ஜெட் போட்டு முன்பருவக் கல்வி முறை பின்பற்றப்படுகிறது.. விளையாட்டுகளின் வழியே மாணவர்களுக்கு தன்னம்பிக்கை மட்டுமே உருவாக்க வேண்டும், கற்பித்தலே கூடாது.



🌟 பின்லாந்து நாட்டின் கல்வி முறை பற்றியும்  குழந்தை முன்பருவக் கல்வி முறை பற்றியும் பல கருத்துகளைப் பகிர்ந்தார்.  அங்கு 1 ஆசிரியருக்கு 5 குழந்தைகள் என்று பள்ளிகளில் பின்பற்றப்படுகின்றன எனவும்  கல்வி குறித்த ஆய்வுகள் பற்றி சில செய்திகளையும் பகிர்ந்தார்.



*அலுவலகம் / லெட்டர் பேட் / மற்றவை :*



🌟 பிரசுரங்கள், இயக்கத்திற்கான லெட்டர் பேட் போன்றவை தயாரிக்க மேன்மை மணி அவர்களிடம் பேசி திட்டமிடப்பட்டது. இந்த  அமைப்பை முறைப்படுத்தப்பட சில முயற்சிகள் பற்றி கலந்து பேசப்பட்டது. பள்ளி புதிதாக ஆரம்பித்தால் என்ன விளைவுகள் ஏற்படும் என சில கருத்துகள் பேச ஆரம்பித்து, அதில் உள்ள சிக்கல்களும் பேசப்பட்டு, மாற்றுக் கல்வி வேண்டுமெனில் அந்தந்த ஊரில், கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளைத் தத்தெடுத்துக் கொள்வதை செய்யலாம் எனவும் பேசப்பட்டது.மேலும் தோழர் மூர்த்தி அவர்கள் தனது சொந்த மகனை அரசுப் பள்ளியில் சேர்த்து ஒரு பெற்றோராக அனுபவம் பற்றியும் பகிர்ந்தார்.



🌟 ச.மாடசாமி தனது பேரக் குழந்தைகள் படிக்கும் பள்ளியில், முதலில் சொல்லிக் கொடுக்கும் பாடலே... வித்யாசமாக இருக்க விரும்பினால் இரு என்ற பொருள் தரும் ஆங்கிலப் பாடலைக் கூறி... சில உதாரணம் கூறினார், தலைவரும் தனது பேத்திகள் படிக்கும் பள்ளியில் தேடலுக்கான அத்துணை வழிமுறைகள் கையாளப்படுகின்றன, இங்கு மட்டும் ஏன் இந்த நிலை என சில உதாரணங்களைக் கூறி வருத்தப்பட்டார். 



🌟 ப.க.பா.இயக்க, தகவல் பரிமாற்றத்திற்கு CFS ஷ்யாம் அவர்கள் தனது அலுவலகத்தைக் கொடுப்பதாகக் கூறியிருந்தாலும் தற்சமயம் அவருக்கு சூழல் சரிவர இல்லாததால் குரோம்பேட்டில் உமா அவர்களின் இல்ல முகவரி தர முன்வந்ததால் அதையே அனைவரும் ஆமோதிக்க, மேன்மை மணியிடம் முகவரி தரப்பட்டது. தலைவர் தனது வீட்டில் ப.க.பா. இயக்கப்  பணிகளை மேற்கொள்ள எப்போது வேண்டுமானாலும் வரலாம் எனக் கூறினார். 



🌟 கூட்டம் தலைவர் வசந்திதேவி அவர்களின் வீட்டிலேயே நடைபெற்றதால்  அவருக்கு உதவியாக இருந்த நாகம்மா எங்கள் அனைவருக்கும் காலை, மாலை தண்ணீர், டீ, காபி, கடுங் காப்பி, பலகாரங்கள் என அனைத்தும் தந்து உதவினார், அவருக்கு நன்றி கூறி அனுப்பினோம், அனைவரும் அடுத்த செயல்பாடுகளுக்குத் தயாராகி புகைப்படம் எடுத்துக் கொண்டு 4.30க்கு கிளம்பினோம்.



🌟 வசந்தி தேவி அம்மாவின் வீடு கலைக்கூடமாக இருந்தது. அவரது பேத்திகளின் கைவண்ணத்தில்  வீடு நிறைய கலைப் பொருட்கள் பார்க்க ஆனந்தமாக இருந்தது. ரசனை மிகுந்த முதிய இளையவர்.



*முக்கிய முடிவுகள் :*



*🌟 RTI க்கான வினாக்கள் தயாரித்து அனுப்ப மூர்த்தியிடம் பணி ஒப்படைப்பு*


*🌟 Hand Bills தயாரிப்புப் பணி, மாடசாமி, மூர்த்தி, CEK, உமா இவர்களிடம் வடிவமைக்கப் பொறுப்பு ஒப்படைப்பு*


*🌟 ஆசிரியர்கள் குறைந்தது மாவட்டத்திற்கு பத்துப் பள்ளிகளில் கருத்துக் கேட்புக்கு உமா மற்றும் மூர்த்தி பொறுப்பு*


*🌟 கலைப்பயணம் சார்ந்து காளீஸ்வரன், முருகேஷ் இருவரிடமும் பேசுதல்*


*🌟 சமுத்திரக்கனி, ரோஹினி ஆகியோரிடம் தேதி வாங்குதல்* 


*🌟 ஆசிரியர் கலந்துரையாடலுக்கு ஏற்பாடுகள் செய்தல்* 


*🌟 தற்காலிகமாக ப.க.பா. இயக்கத்திற்காக கடிதத்தாள்கள் குறைந்த அளவு அச்சடிக்க ஏற்பாடு மேன்மை மணி வழியாக செய்யப்பட்டது.*


*🌟 தொடர்ந்து, ஆர்வம் உள்ள யாரை வேண்டுமானாலும் ப.க.பா இயக்கத்தில் இணைத்தல்* 



🌟 முனைவர் வே. வசந்தி தேவி, தலைவர் அவர்களது அனுமதியுடன்


ஜெ. கிருஷ்ணமூர்த்தி, செயலாளர்  தந்த திருத்தங்களுடன் பகிர்வது 



*_உமா_*



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм 

Thursday 22 March 2018

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் அவர்களின் சுற்றறிக்கை*



🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/03/blog-post_63.html


*பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே! வணக்கம்.*


*🌟தொடக்கக்கல்வித்துறையில் கடந்த 2017 மே மாதம் நடைபெற்ற பொதுமாறுதல் கலந்தாய்வுக்குப் பின்பு ஏற்பட்டுள்ள ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு 01.01.2017 தேர்ந்தோர் பட்டியலின் படி இரண்டாம் கட்ட பதவி உயர்வுக் கலந்தாய்வு 19.03.2018 அன்று நடைபெறும் என்று தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்  ந.க.எண்.009464/ டி1/ 2017 நாள்: 15.03.2018 ன் படி அறிவிக்கப்பட்டது.*


*🌟ஆனால் செயல்முறை ஆணை வெளியான மறுநாளே எவ்விதக் காரணமுமின்றி மேற்படி கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்படுவதாக தகவல் வெளியானது, இது தொடக்கக்கல்வித் துறையில் பணிபுரியும் ஆசிரியர்கள் மத்தியில் மிகப் பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 01.01.2017 தேர்ந்தோர் பட்டியலின்படி பதவி உயர்வு வழக்கிட வேண்டுமெனில் 31.03.2018 க்குள் இரண்டாம் கட்ட கலந்தாய்வை நடத்திட வேண்டும். பதவி உயர்வு கலந்தாய்வு தாமதமானதற்கு தொடக்கக்கல்வித்துறையே முழுக்க முழுக்க பொறுப்பாகும். இதனால் தகுதியுள்ள ஆசிரியர்களின் பதவி உயர்வு பாதிக்கப்படுவது என்பது எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல.*


*🌟இது தொடர்பாக தொடக்கக்கல்வி இயக்குநரிடம் நமது இயக்கத்தின் சார்பில் இன்று (22.03.2018) தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வலியுறுத்தப்பட்டுள்ளது.*


*🌟எனவே, தொடக்கக்கல்வித்துறையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இரண்டாம் கட்ட பதவி உயர்வு கலந்தாய்வை உடனடியாக நடத்தக்கோரி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 27.03.2018 செவ்வாய்கிழமை மாலை 5 மணிக்கு தமிழகம் முழுவதும் அனைத்து உதவித் தொடக்கக்கல்வி அலுவலகங்கள் முன்பு வட்டார அளவில் ஆர்பாட்டம் நடத்திட மாநில மையம் முடிவெடுத்துள்ளது.*


*🌟நீதியை நிலைநாட்டிட, நியாயத்தைப் பெற்றிட நடைபெறும் இப்போராட்டத்தைப் பேரெழுச்சியுடனும், நமது இயக்கத்திற்கேயுரிய இலக்கணத்தோடும் நடத்திட அனைத்து வட்டார, நகரக்கிளைகளையும் மாநில மையம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது.*



*🌟24.03.2018 சனிக்கிழமை ஜாக்டோ ஜியோ பேரமைப்பின் சார்பாக நடைபெற இருக்கும் மாவட்ட பேரணியில் நமது இயக்கத் தோழர்கள் அனைவரும் மிகுந்த எழுச்சியோடு கலந்துகொள்ளுமாறு மாநில அமைப்பு கேட்டுக்கொகிறது.

                                                                                                                        *⚡தோழமையுடன்;*                       

*_ச.மயில்,_*                                                       

*பொதுச்செயலாளர்,*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм





*பள்ளி மேலாண்மை குழு கூட்டம் - செய்தி துளிகள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/03/t-n-p-t-f-httpstnptfayan_22.html


*🌟தலைமை ஆசிரியர் அனைவருக்கும் வணக்கம் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் இம்மாதம் இருமுறை நடத்த  வேண்டும் 23,28 இரு நாட்களில் 23 ம் தேதி பள்ளி வளர்ச்சி திட்டம் எனும் தலைப்பில் நடத்த வேண்டும் மாணவர் சேர்க்கை பள்ளியின் அடிப்படை தேவைகளை நிறைவு செய்தல் கல்வி முன்னேற்றம் முக்கியமாக இடம் பெற வேண்டும் 28 ஆம் தேதி சமுக தனிக்கை பள்ளி, பராமரிப்பு மானிய செலவு விவரங்களை அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும் இ்ரு நாள் சிறப்பு மேலாண்மை குழு கூட்டம் அனைத்து பள்ளிகளும் தவறாமல் நடத்த வேண்டும் இதற்காக உங்கள் கணக்கில் ரூ 1080 ஒவ்வொரு பள்ளிக்கும் வழங்கப்பட்டுள்ளது என்று முன்பு கூறியிருந்தார்கள் ஆனால் தற்பொழுது செய்தி


 இரு நாள் கூட்டம் ஒரு நாளாக மாற்றப்பட்டுள்ளது எனவே செலவினமாக பயன்படுத்த கொடுக்கப்பட்ட ரூ.1080 தொகையில் ஒரு நாள் தொகை ரூ.540 மட்டும் பயன்படுத்திக்கொண்டு மீதமுள்ள ஒரு நாள் தொகையினை ரூ.540  திருப்பி செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм 


*நீங்கள் பேசும் வார்த்தையை வேறு மொழிக்கு மாற்றம் செய்ய ஒரு ஆப்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/03/blog-post_11.html



மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அதன் டிரான்ஸ்லேட்டர் அப்ளிகேஷன் ஒன்றினை 2000ஆம் ஆண்டு வெளியிட்டது.



 கணினிகளில் இணையம் மூலம் இதனைப் பயன்படுத்தி ஒரு மொழியில் இருந்து மற்ற மொழிகளுக்கு மாற்றம் செய்துகொள்ளும் வசதிஇது.

மைக்ரோசாஃப்ட் டிரான்ஸ்லேட்டர் அப்ளிகேஷனில் தற்போது தமிழ் மொழி சேர்க்கப்பட்டுள்ளது.


 புதிய அப்டேட் மூலம் தமிழ் மொழியிலிருந்து பல்வேறு இதர மொழிகளுக்கு மொழிமாற்றம் செய்ய முடியும். மைக்ரோசாஃப்ட் டிரான்ஸ்லேட்டர் மற்றும் ஆஃபீஸ் 365 செயலியின் மூலம் தற்போது தமிழ் உள்பட உலகின் 60 மொழிகளை மொழிபெயர்க்க முடியும் என்ற தகவலை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.



 இணையத்தில் மட்டும் பயன்படுத்தப்பட்டுவந்த இந்த அப்ளிகேஷன் தற்போது ஆன்ட்ராய்டு மொபைல்களிலும் பயன்படுத்தப்படுகிறது.




உலகின் மூத்த மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியை உலகின் பல்வேறு இடங்களில் வாழும் கோடிக்கணக்கானோர் பேசிவருகின்றனர்.



 புதிய அப்டேட் மூலம் பயனர்கள் டிரான்ஸ்லேட்டர் அப்ளிகேஷன் கொண்டு தமிழ் மொழியிலிருந்து மற்ற மொழிகளுக்கும் மற்ற மொழிகளிலிருந்து தமிழ் மொழிக்கும் மொழிமாற்றம் செய்துகொள்ள முடியும்.




ஸ்மார்ட்போனில் இப்போது வரும் புதிய தொழில்நுட்பம் பல்வேறு மக்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளது, குறிப்பாக கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் சில ஆப் வசதிகள் நமது தினசரி வேலையை மிகவும் எளிமையாக்குகிறது.



 இதுவரை நாம் ஒரு வார்த்தையை வேறு மொழிக்கு மாற்றம் செய்ய கூகுள் டிரான்ஸ்லேட்டர் பயன்பாட்டை தான் அதிமாக பயன்படுத்தி இருக்கிறோம். 



மேலும் கூகுள் டிரான்ஸ்லேட்டர்-ல் பொதுவாக டெக்ஸ்ட் மட்டுமே வேறு மொழிக்கு மாற்றம் செய்யும் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




ஆனால் இப்போது வந்துள்ள ஒரு ஆப் வசதியில் நீங்கள் பேசும் வார்த்தையை வேறு மொழிக்கு மாற்ற முடியும். மேலும் வருங்காலத்தில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் வரும் அவை கண்டிப்பாக மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.




முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும் கூகுள் பிளே ஸ்டோரில் வாய்ஸ் டிரான்ஸ்லேட்டர்-என்ற ஆப் வசதியை பதிவிறக்கம் செய்து

இன்ஸ்டால் செய்ய வேண்டும். இந்த ஆப் வசதியை பல மில்லியன் மக்கள் பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.




அடுத்து வாய்ஸ் டிரான்ஸ்லேட்டர்-ஆப் பயன்பாட்டில் உங்களுக்கு தகுந்த மொழியை தேர்வு செய்து கொள்ள வேண்டும், அதன்பின்பு மிக எளிமையாக நீங்கள் பேசும் வார்த்தையை வேறு மொழிக்கு மாற்றம் செய்ய முடியும்.


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм 


*மார்ச் 31 தேதிக்குப் பின் காசோலைகள் செல்லாது : பாரத ஸ்டேட் வங்கி அதிரடி எச்சரிக்கை*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/03/31.html



🌟புதிய காசோலைகளைப் பெற வங்கிக் கிளையை நேரிலோ, ஏடிஎம் இயந்திரம் மூலமோ, இணையம் மூலம் onlineSBI.com என்ற முகவரியில் தொடர் கொண்டோ பெற்றுக் கொள்ளலாம்.



🌟பாரத ஸ்டேட் வங்கியுடன் இணந்த 5 துணை நிறுவனங்களில் காசோலைகளை மார்ச் 31க்குப் பின் பயன்படுத்த வேண்டாம் என வங்கி உத்தரவிட்டுள்ளது.


🌟பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைந்த அதன் 5 துணை நிறுவனங்கள் மற்றும் பாரத மகிளா வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு இந்த எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.



 🌟இதன்படி, பழைய வங்கியில் அவர்கள் பெற்றிருந்த காசோலையை பயன்படுத்த வரும் மார்ச் 31ம் தேதிதான் கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு இந்த காசோலைகள் செல்லத்தக்கவை அல்ல என்பதால், அவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு பாரத ஸ்டேட் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது.



🌟வங்கித்துறையில் சர்வதேச அளவில் ஏற்பட்டு வரும் மாற்றங்களுக்கு ஏற்ப, சிறு வங்கிகளை இணைத்து பெரிய வங்கிகளை உருவாக்க நினைத்து காரியத்தில் இறங்கியுள்ள மத்திய அரசு, ஸ்டேட் பேங்க் ஆப் பிக்கானூர் & ஜெய்ப்பூர், ஸ்டேட் பேங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர், ஸ்டேட் பேங்க் ஆப் பாட்டியாலா, ஸ்டேட் பேங்க் ஆப் ஹைதராபாத் போன்ற அதன் துணை நிறுவனங்களாக இயங்கி வந்த தனி வங்கிகளை தன்னுடன் இணைத்துக் கொண்டது. 



🌟இதேபோல, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு காலத்தில் பெண்களுக்கென தனியாகத் தொடங்கப்பட்ட பாரத மகிளா வங்கியையும் பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைத்துவிட்டனர்.


🌟எனினும் அந்த 6 வங்கி வாடிக்கையாளர்கள் தாங்கள் முன்னர் பெற்ற காசோலை போன்றவற்றை பயன்படுத்த சிறிது காலத்தக்கு அனுமதிக்கப்பட்டனர்.



 🌟அதன்பிறகு செப்டம்பர் 2017 வரை என கால வரம்பு அறிவிக்கப்பட்டது. அது பின்னர் டிசம்பர் 31ம் தேதி என தளர்த்தப்பட்டது.



 🌟எனினும் பல வாடிக்கையாளர்கள் முழுமையாக மாறாமல் தொடர்ந்தது தெரிய வந்தது. அதனால், தற்போது பாரத ஸ்டேட் வங்கி இறுதி எச்சரிக்கையாக, புதிய நிதியாண்டில் இருந்து புதிய காசோலைகளை மட்டும்தான் பயன்படுத்தலாம்.



 🌟பழைய காசோலைகளை மார்ச் 31ம் தேதிக்கு முன்பு காசாக்கும் விதமாக பயன்படுத்தி விடும்படி கேட்டக கொண்டுள்ளது. எந்த காரணத்திற்காகவும் பழைய காசோலைகளை புதிய ஆண்டில் பயன்படுத்த இயலாது என தெரிவித்துள்ளது.




🌟மேலும், புதிய காசோலைகளைப் பெற வங்கிக் கிளையை நேரிலோ, ஏடிஎம் இயந்திரம் மூலமோ, இணையம் மூலம் onlineSBI.com என்ற முகவரியில் தொடர் கொண்டோ பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.



 🌟அதேபோல, முந்தைய வங்கி பெயரில் ஆன்லைன் பேங்கிங் வசதி பெற்றிருநதால், அதே பெயரில் இ மெயில் முகவரியில், மொபைல் எண்ணில் தொடர்ந்து சேவை பெறலாம் எனவும், நெட் பேங்கிங் எனப்படும் இணையதள வசதிக்கு மட்டும் onlinesbi.com என்ற முகவரியில் அணுகும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.



 🌟அதேபோல, வங்கிக் கிளைகளின் IFSC எண்களை மாற்றியுள்ளதாகவும் சுமார் 1300 கிளைகளுக்கு இந்த மாற்றம் நடந்துள்ளதாகவும் பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм 

*பள்ளிக்கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கமான TNSchoolEducation பக்கத்தில் அனைத்து ஆசிரியர்களும் பங்கேற்க பள்ளிக்கல்வித்துறை செயலர் அறிவுரை.*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/03/tnschooleducation.html


வணக்கம் ,

🌟 பள்ளிக்கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கமான TNSchoolEducation பக்கத்தில் அனைத்து ஆசிரியர்களும்  பங்கேற்க  பள்ளிக்கல்வித்துறை செயலர் அறிவுரை.


🌟 பள்ளிக்கல்வித்துறை செயலர் அவர்களின் தலைமையில் 17.03.2017 அன்று நடைபெற்ற கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கம் "TNSchoolEducation" எனவும், பேஸ்புக் பக்கத்தை பயன்படுத்தும் அனைத்து ஆசிரியர்களையும் இதில் பங்கேற்கவும்  அறிவுரை கூறியுள்ளார்.பேஸ்புக் பக்கம் இல்லாதவர்கள் புதிய பேஸ்புக் பக்கத்தை உருவாக்கி அதில் இணையவும் அறிவுரை கூறியுள்ளார்.


🌟 பள்ளிக்கல்வி துறையின் முக்கிய நிகழ்வுகள்,அறிவிப்புகள் மற்றும் மாணவர்களுக்கான பாட சம்மந்தமான வீடியோக்கள்,புகைப்படங்கள்,இந்த பக்கத்தில் பகிரலாம்.ஆசிரியர்களின் புதிய முயற்சிகள், பள்ளி மற்றும் மாணவர்களின் ,புகைப்படங்கள் , விடியோக்கள் பதிவேற்றம் செய்யலாம்.தொழில்நுட்ப உதவிகளுக்கு  தொடர்பு எண்கள் மகேஷ்-9444322538, ரவிக்குமார்-9788268911, தாமரைச்செல்வன்-9444414417


https://www.facebook.com/ tnschools


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм 



*கடவூரில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி (TNPTF) உதயம்...*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/03/tnptf_22.html


*🌟பேரண்புக்குரிய பேரியக்கத்தின் தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்*


*🌟கடவூர் ஒன்றியம், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியில் இருந்து 120 க்கும் மேற்பட்ட தோழர்கள் நமது தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியுடன் இன்று (22.03.18) தங்களை இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் முன்னாள் மாநிலத்தலைவரும் STFI பொதுக்குழு உறுப்பினருமாகிய தோழர் மோசஸ் அவர்கள் முன்னிலை வகித்தார். கடவூர் வட்டார கிளையின் புதிய  வட்டார தலைவராக இரா.சிவசாமி அவர்களும், வட்டார செயலாளராக க.ஜான்சன் அவர்களும், வட்டார பொருளாளராக க.ம.முனியப்பன் அவர்களும், மாவட்ட பொதுக்குழு உறுப்பினராக ஐயப்பன் அவர்களும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் கரூர் மாவட்ட கிளையின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.*


தகவல் பகிர்வு:

தோழமையுடன்,

ஜ.ஜெயராஜ்,
மாவட்ட செயலாளர்,
TNPTF கரூர் மாவட்டம்.


💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

புதிய கிளைக்கு *_TNPTF அயன்_* சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм 











*தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/03/blog-post_22.html


*🌟தொடக்கக்கல்வி துறையின் கீழுள்ள அரசு/ ஊராட்சி ஒன்றிய/ நகராட்சி/ மாநகராட்சி/ நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் மற்றும் மழலையர் பள்ளிகளில் ஆண்டு விழா நடத்துதல் மற்றும் மாணவர்கள் பாதுகாப்பு குறித்து அறிவுரை வழங்குதல் சார்ந்த தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்*


🌟திருநெல்வேலி மாவட்டம் களக்காடு ஒன்றியம் ஏர்வாடி, உதவி பெறும் எஸ்.வி.இந்து துவக்கப்பள்ளியில் 16.03.2018 அன்று நடைபெற்ற ஆண்டு விழாவில் கலந்து கொண்ட மாணவ மாணவியர்களுக்கு அதிக ஒளி கொண்ட சோடியம் விளக்கு பயன்படுத்தப்பட்டதால், விழாவில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு கண்பார்வை பாதிக்கப்பட்டதாக 17.03.2018 அன்று தனியார் தொலைக்காட்சிகளில் செய்திகள் வெளியிடப்பட்டது.


🌟 எனவே இது தொடர்பாக தொடக்கக்கல்வி துறையின் கீழுள்ள அரசு/ ஊராட்சி ஒன்றிய/ நகராட்சி/ மாநகராட்சி/ நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் மற்றும் மழலையர் பள்ளிகளில் இனிவரும் காலங்களில் ஆண்டு விழா நடத்தப்படும் போது கீழ்க்கண்ட மாணவர்கள் பாதுகாப்பு குறித்து அறிவுரைகளைத் தவறாது பின்பற்றிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


 ⚡ஆண்டு விழா மாலை 6.00 மணிக்குள் முடிக்கப்பட வேண்டும்,


⚡விழாவின்போது அதிக ஒலி கொண்ட ஒலிப்பெருக்கி மற்றும் அதிக ஒளி கொண்ட மின்விளக்கு சாதனங்கள் பயன்படுத்தக் கூடாது.


⚡விழா நடைபெறும் இடமானது மாணவர்களுக்கு பாதுகாப்பானதாகவும், எளிதில் மாணவர்கள் வெளியே சென்றுவர ஏதுவாகவும் இருத்தல் வேண்டும்,


⚡விழா நடைபெறும் முன்னர் விழா மேடை, மாணவர்கள் இருக்கை, விழாவிற்காக பயன்படுத்தப்படும் ஒலி/ ஒளி சாதனங்கள் ஆகியன அமைத்தல் குறித்து முன்கூட்டியே திட்டமிட்டு செயல்பட வேண்டும்.


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм 


*SABL முறையில் வகுப்பு 1 முதல் 4 வரை பாடத்திட்டம் எழுத தேவையில்லை-RTI*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/03/sabl-1-4-rti.html


🌟 1 முதல் 4 வகுப்பு வரை எளிய செயல்வழி கற்றல் (SABL) முறையில் கற்பிக்கும் ஆசிரியர்கள் பாடத்திட்டம் எழுத தேவையில்லை என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்கப்பட்தற்கு தொடக்கக்கல்வி துறையின் துணை இயக்குநர் (நிர்வாகம்) மற்றும் பொது தகவல் தகவல் அளிக்கும் அலுவலர் அவர்கள் தெரிவித்துள்ளார்.



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



Wednesday 21 March 2018

*இறுதி கட்டத்தை எட்டியுள்ள பின்னேற்பு*



🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/03/blog-post_35.html


🌟 தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி இயக்குநர் அவர்களிடம்  நேரிலும் தொலைபேசி வாயிலாகவும்  பின்னேற்பு தொடர்பாக பல முறை கோரிக்கை வைக்கப்பட்டதன் விளைவாக தற்பொழுது ஆசிரியர்களிடம் 17a விளக்கம் கேட்டு அதற்கான சரியான விளக்கத்தினைப் பெற்றுக் கொண்டு முறையான அரசாணை வெளியிட்டதும் பின்னேற்பு வழங்கலாம் என வாய்மொழியான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது,

🌟 அதன் அடிப்படையில் தற்பொழுது பல இடங்களில் ஆசிரியர்களுக்கு 17a வழங்கப்பட்டு வருகிறது.


*வட்டார,மாவட்ட, மாநில நிர்வாகிகளே!*

🌟 முன்அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்றமைக்கு பின்னேற்பு வழங்க தற்போது தொடக்க கல்வி அலுவலர்களால் 17 a வழங்கப்பட்டு வருகிறது.

🌟 மாநிலம் முழுவதும் உள்ள பிரச்சனை என்பதால் ஆசிரியர்கள் ஒரே மாதிரியான விளக்கம் தர பொறுப்பாளர்கள் வழிகாட்டுதல் செய்ய வேண்டும்.

🌟அதற்குரிய விளக்கம் எவ்வாறு எழுதுவது என்பதற்கான மாதிரி விளக்கங்களை அனுப்பி ஆசிரியர் தோழர்களுக்கு உதவிடுமாறு *_TNPTF அயன்_* சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



*பொதுமக்களே உஷார்: ஆதார் ஆணையம் திடீர் எச்சரிக்கை!*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/03/blog-post_45.html


🌟ஆ தார் குறித்த தகவல்களை இணையதளங்களில் பதியும் போது எச்சரிக்கையுடன் இருங்கள் என பொது மக்களுக்கு ஆதார் ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

🌟எந்த ஒரு சேவையைளம் பெற ஆதார் தகவல்கள் பதிய கோரியிருந்தால், அதை பதியும்போதோ, அல்லது பகிரும்போதோ முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று பொதுமக்களை ஆதார் ஆணையம் உஷார்படுத்தி உள்ளது.

🌟நாடு முழுவதும் 90 சதவிகிதம் மக்களுக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், ஆதார் வழக்குகளில் இறுதி தீர்ப்பு வரும் வரையில், வங்கி கணக்குகளுடனும், செல்போன் உள்ளிட்ட பல்வேறு சேவைகள், சலுகைகளைப் பெறுவதற்கும் ஆதார் எண்ணை இணைக்க கூறி கட்டாயப்படுத்தக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது.

🌟இதற்கிடையில் பொதுமக்களின் ஆதார் தகவல்கள் தனியார்கள் மூலம் வெளியே கசிந்து வந்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

🌟இந்த நிலையில் ஆதார் தகவல்களை இணையதளத்தில் பகிர்ந்து கொள்வோருக்கு எச்சரிக்கை விடுத்து, ஆதார் ஆணையம் (இந்திய தனிப்பட்ட அடையாள ஆணையம்) ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளது.

அதில் கூறி இருப்பதாவது:-

🌟பொதுமக்கள் எந்த ஒரு சேவையையும் பெறுவதற்காக இணையதளத்தில் ஆதார் எண் போன்ற தகவல்களை பகிர்ந்துகொள்கிறபோது முன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.இணையதளத்தில் ஆதார் அடையாள அட்டைகளை வெளியிடுவதற்கு அல்லது பதிவிடுவதற்கு ஆதார் ஆணையம் பொறுப்பு ஆகாது. இது ஆதார் ஆணையம் மீது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. மற்ற அடையாள ஆவணங்களைப் போல ஆதாரும்கூட ரகசிய ஆவணம் அல்ல.

🌟ஒருவருடைய ஆதார் தகவல்கள் மட்டுமே அவரை ஏமாற்றுவதற்கு போதுமானவை அல்ல. ஒருவரது அடையாளத்தை அங்கீகரிப்பதற்கு ‘பயோமெட்ரிக்’ அங்கீகாரம் தேவைப்படுகிறது.

🌟ஒருவருடைய தனிப்பட்ட தகவல்களை வெளியிடுவது, ஆதாரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்காது. தாக்கத்தையும் ஏற்படுத்தாது. ஆதார் தரவு தளமானது (டேட்டா பேஸ்) மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது.

🌟இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм