Wednesday 31 January 2018

*சந்திர கிரகணம் - செய்தி துளிகள்*



🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/01/blog-post_31.html



 

*இன்று நிகழவுள்ள அரிய சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாமா? முக்கிய தகவல்கள்*

🌟 இன்று மாலை மிக முக்கியமான சந்திர கிரகணம் நிகழவுள்ளது. இந்நிலையில் இந்த சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கக்கூடாது என்பது போன்ற தகவல்கள் பரவி வரும் நிலையில் இன்று தோன்றக்கூடிய சந்திரன் சுமார் 151 ஆண்டுகளுக்கு பிறகு வரவுள்ள காரணத்தாலும், மேலும் சில காரணங்களாலும் சிறப்புவாய்ந்த சந்திர கிரகணம் என பிபிசி தமிழிடம் பேசிய தமிழக அரசின் அறிவியல் மற்றும் தொழிலநுட்ப மையத்தின் இணை இயக்குனர் முனைவர் சவுந்திரராஜ பெருமாள் தெரிவித்துள்ளார். மேலும் இந்த கிரகணத்தை வெறும் கண்களால் காணலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

*ஏன் இன்று தோன்றும் சந்திர கிரகணம் சிறப்பு வாய்ந்தது?*

🌟 ''இன்று மாலை தோன்றவுள்ளது முழு சந்திர கிரகணம். இந்தியா உட்பட பல நாடுகளில் இந்த கிரகணம் தெரியும். இந்திய நேரப்படி மாலை 5.18க்கு துவங்கி இரவு 8.41 வரை இந்த கிரகணம் தெரியும். உலகம் முழுவதும் இந்த நேரங்களில் எந்தெந்த நாட்டுக்கு இரவு நேரமோ எந்தெந்த நாடுகளில் எல்லாம் இந்த கிரகணத்தை பார்க்கலாம்.

🌟 வழக்கமான சந்திர கிரகணத்தை விட இன்று தோன்றவுள்ள சந்திர கிரகணத்துக்கு கூடுதல் முக்கியத்துவம் கிடைத்து வருகிறது. ஏனெனில் நீல நிலா தினம் என சொல்லப்படும் தினத்தில் இந்த கிரகணம் தோன்றுகிறது. ஒரு மாதத்தில் இரண்டாவது முறை பௌர்ணமி வருவதை புளூ மூன் என ஆங்கிலத்தில் சொல்கிறார்கள். நீல நிலா என்பதும் வழக்கமானதே வானியல் அடிப்படையில் அதில் மிகச்சிறப்புகள் எதுவும் கிடையாது.

🌟 நீல நிலா என சொல்லப்படுவதால் பொதுமக்கள் சரியான புரிதலின்றி அன்றைய தினம் தோன்றக்கூடிய சந்திரன் நீல நிறத்தில் இருக்கும் என நினைக்கிறார்கள். ஆனால் அன்றைய தினம் சந்திரன் வழக்கமான நிறத்திலேயே தோன்றுவதுதான் யதார்த்தம்.

🌟 நீல நிலா தினம் என சொல்லப்படும் தினத்தில் சந்திர கிரகணம் நிகழ்வது சற்று அரிதானது. இதற்கு முன்னதாக 1866 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31-ஆம் தேதி நீல நிலா தினத்தில் முழு சந்திர கிரகணம் நிகழ்ந்தது. அதற்கு பிறகு 151 ஆண்டுகள் கழித்து இன்றைய தினத்தில்தான் இப்படியொரு நிகழ்வு நடைபெறவுள்ளது. இதற்கு பிறகு 2028 டிசம்பர் 31 ஆம் தேதி இதே போன்ற நிகழ்வு நடைபெறும்'' என்கிறார் சவுந்திரராஜ பெருமாள்.

🌟 சந்திர கிரகணம் குறித்து பேசியபோது, '' சூரியனைச் சுற்றி பூமி வருகிறது. பூமியை சுற்றுகிறது நிலா. இது அடிப்படை தகவல். சூரியன்- பூமி -நிலா ஆகியவை கிட்டத்தட்ட ஒரே கோட்டில் வரும்போது நிலாவை சூரியனிடமிருந்து ஏறத்தாழ மறைக்கும் விதமாக இடையில் புவி இருக்கும் தினத்தை பௌர்ணமி என்கிறோம்.

🌟 சமயங்களில் புவியின் நிழல் 14 லட்சம் கிலோ மீட்டருக்கு கூம்பு வடிவத்தில் நீளும். ஆகவே சூரிய வெளிச்சம் முழுமையாக நிலாவுக்கு கிடைக்காது. பெரும்பான்மையான சமயங்களில் புவியின் நிழலை தொடாமல் சில கோணங்கள் விலகி நிலவு சென்றுவிடும். ஏனெனில் நிலவு புவியைச் சுற்றும் வட்டப்பாதை சுமார் ஐந்து டிகிரி அளவுக்கு சாய்வாக இருப்பதால் நிழலை தொடாமல் நிலவு மேலேயே கீழேயோ சென்றுவிடும்.

🌟 புவியின் நிழலுக்குள் வந்து சூரியனின் நேரடி பார்வையில் இருந்து நிலா முழுமையாக மறைக்கப்படும் சற்று அரிய நிகழ்வை முழு சந்திர கிரகணம் என்கிறோம். இந்த முழு சந்திர கிரகணம் ஒரே ஆண்டில் அதிக முறை நிகழாது. குறிப்பாக சொல்ல வேண்டுமெனில் பௌர்ணமி சீரான இடைவெளிகளில் வரும். ஆனால் எல்லா பௌர்ணமியும் சந்திர கிரகணம் அல்ல'' என சந்திர கிரகணம் குறித்து அடிப்படை விளக்கத்தை விரிவாக எடுத்துரைத்தார் தமிழக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் இணை இயக்குனர்.

🌟 சந்திர கிரகணத்தால் மனிதர்கள் உடல் நலனுக்கு ஏதேனும் பாதிப்புகள் வருமா என கேட்டபோது, '' பௌர்ணமி சமயங்களில் உடலுக்கு எப்படி பாதிப்பு கிடையாதோ அதே போல் சந்திர கிரகணத்தாலும் உடலுக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது. வழக்கமாக பௌர்ணமியின்போது கடல் அலை சற்று அதிகமாக இருப்பது போலவே இன்றைய சந்திர கிரகணத்தின்போதும் கடல் அலை சீற்றம் சற்று அதிகமாக இருக்கும். இதனால் மனிதர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை'' என்றார் சவுந்திரராஜ பெருமாள்.


🌟 இன்றைய சந்திர கிரகணத்தின் இன்னொரு சிறப்பாக கருதப்படுவது சூப்பர் மூன் என சொல்லப்படும் நிலவு பெரிதாக, அதிக பிரகாசத்துடன் தெரியும் தினத்தில் சந்திர கிரகணம் வருவதாகும். இன்றைய தினம் நீல நிலா தினம், சூப்பர் மூன், சந்திர கிரகணம் மூன்றும் ஒரே சமயத்தில் வருகிறதா என்பது குறித்து சவுந்திரராஜ பெருமாள் பிபிசி தமிழிடம் விளக்கியுள்ளார்.

🌟 '' சந்திரன் பூமியை நீள் வட்டப்பாதையில் சுற்றி வருகிறது. சில சமயங்களில் புவிக்கு நெருக்கமாக சந்திரன் வரக்கூடும். அதாவது மூன்று லட்சத்து 56 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திலேயே நிலவு வந்துவிடும் அதன்பிறகு 4 லட்சத்து ஆறாயிரம் கிலோ மீட்டர் வரை விலகி செல்லும். அதாவது சுமார் ஐம்பாதாயிரம் கிலோ மீட்டர் வித்தியாசத்தில் 27 நாட்களுக்கு ஒரு முறை நிலவு பூமிக்கு நெருங்கி வருவதும் விலகிச் செல்வதுமாக இருக்கும்.

🌟 அதன்படி பார்த்தால் நேற்றைய தினம் (30.01.2018) அன்றுதான் நிலவு பூமியிடம் இருந்து மிக அருகில் அதாவது 3 லட்சத்து 58 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது. இன்றைய தினம் 3 லட்சத்து 64 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் நிலவு இருக்கும். லட்சக்கணக்கான கிலோ மீட்டர் தூர அடிப்படையில் பார்க்கும்போது இது மிகப்பெரிய தூர அளவு வித்தியாசம் அல்ல.

🌟 நாளை தினம் புவிக்கு அருகில் நிலவு இருப்பதால் சற்று பெரிதாகவும் சற்று கூடுதல் பிரகாசத்துடன் தெரியும். இப்படிப்பட்ட தினத்தில் முழு சந்திர கிரகணம் நிகழ்வது கூடுதல் சிறப்பு எனச் சொல்லப்படுகிறது. நாளைய தினம் சூப்பர் மூன் தினம் என சொல்லமுடியாது. எனினும் புவிக்கு கிட்டத்தட்ட மிக அருகில் நிலவு வரும் தினத்திலும், நீல நிலா தினத்திலும், முழு சந்திர கிரகணம் நடைபெறுவதாலும் குளிர் காலத்தில் இத்தகைய அரிய நிகழ்வு நடப்பதாலும் அதிக மேக மூட்டங்கள் இன்றி தெளிவாக பார்க்க முடியும். இத்தகைய சிறப்புகள் இன்றைய தினத்தில் நிகழவுள்ளன.'' என்றார்.

🌟 எந்தெந்த இடங்களில் இருந்து பார்த்தால் தெளிவாக பார்க்கலாம் என கேட்டபோது '' சந்திர கிரகணம் மாலை 5.18க்கு துவங்குவதாக இருந்தாலும் சென்னையில் மாலை 6.05-இலும் கோயமுத்தூரில் மாலை 6.18 -இலும்தான் சந்திரன் உதயமாகிறது. அதனால் சந்திரன் உதயமாகும்போதே பகுதி சந்திர கிரகணமாக உதயமாகும். சென்னையில் இருப்பவர்கள் கடற்கரைகளில் இருந்து பார்த்தால் இன்று மாலை சந்திரன் உதயமாகும்போதே பகுதி சந்திரகிரகணமாக இருப்பதை பார்க்கலாம்.

🌟 தொலைநோக்கி கொண்டு மட்டுமே பார்க்க வேண்டுமென்ற அவசியம் இல்லை வெறும் கண்களிலும் பார்க்கலாம். சந்திர கிரகணத்தின் போது நிலவின் சுற்றுவட்டார பகுதிகள் ஆரஞ்சு அல்லது செஞ்சிவப்பு நிறத்தில் மாறுவதை பார்க்கலாம். முழு கிரகணம் நடக்கும்போது இந்த நிறமாற்றம் ஏற்படும். எந்த நேரத்தில் இந்த நிறமாற்றங்கள் தோன்றும் என்பதை அறுதியிட்டு சொல்ல முடியாது. ஆகவே இன்றைய தினம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

🌟 முழு கிரகணம் தோன்றும் போது நிறமாற்றம் ஏற்படுவதென்பது வளிமண்டல மாசு அளவை பொறுத்தது. கிரகணத்தின் போது மாசு காரணமாக வளி மணடலத்தில் அதிக துகள்கள் இருந்தால் சூரிய வெளிச்சத்தை அது சிதறடித்துவிடும். அப்போது சிவப்பு நிற கூறு அதிகமாக இருக்கும் அவை நிலவில் விழுவதால் நிலவு சற்று ஆழமான சிவப்பு நிறத்தில் தோன்றும். மாசு குறைவாக இருந்தால் சற்று இளஞ்சிவப்பு நிறத்தில் நிலவு தெரியும். எனவே வளிமண்டல மாசுபாட்டையும் இதனை வைத்து கண்டறிய முடியும்.

🌟 இந்தியா முழுமையாகவே நாளை சந்திர கிரகணத்தை பார்க்கலாம். இந்தியாவுக்கு கிழக்கில் உள்ள சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேஷியா உள்ளிட்ட நாடுகளிலும் பசுபிக் பெருங்கடல் பகுதியிலும் முழுமையாக பார்க்க முடியும்'' என விரிவாக விளக்கிச் சொன்னார் சவுந்திர ராஜன்.

🌟 இந்தியா, சிங்கப்பூர் , மலேஷியா உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் இந்த சந்திர கிரகணத்தை இன்று நேரில் கண்டு ரசிக்கலாம்.


🌟 இயற்கை செய்யும் மேஜிக்குகள் எப்போதாவதுதான் நடக்கும். மிஸ் பண்ணிடாதிங்க,


🌟 சந்திர கிரகணம் நேரடி காட்சி அனுபவம் மாணவர்களுக்கு கிடைக்க இன்று ஒரு வாய்ப்பு


🌟 நம் மாணவச்செல்வங்களுக்கு இன்று நடக்கும் சந்திர கிரகணம் பற்றிய விளக்கமளித்து, மாணவர்கள் அதனை பார்வையிடுமாறு சொல்ல வேண்டி ஆசிரிய பெருமக்களாகிய உங்களிடம் *_TNPTF அயன்_* சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм






*2017-18 ஆம் கல்வி ஆண்டில் புதிய கற்றல் முறையில் முன்னோட்ட ஆய்வு - மாநில திட்ட இயக்குநர் அவர்களின் கடிதம்*



🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/01/2017-18.html


*🌟 புதிய கல்வி முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ள பள்ளிகளை பார்வையிடவுள்ள குழுக்களின் பட்டியல் மாவட்ட வாரியாக பார்வையிடப்படும் தேதியுடன் வெளியீடு.*


🌟 பார்வையிடவுள்ள குழுக்களின் பட்டியல் pdf மற்றும் jpg வடிவில் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

அவை, கீழே உள்ள link ஐ கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும் 👇👇👇👇👇


https://drive.google.com/file/d/1vuiL_Fmeh281v2BKViHHAognk85n42rQ/view?usp=drivesdk





🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм












Tuesday 30 January 2018

*ஜாக்டோ- ஜியோ உயர்மட்டக்குழுக் கூட்டம் - செய்தி துளிகள்*



🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/01/blog-post_40.html


🌟 ஜாக்டோ- ஜியோ உயர்மட்டக்குழுக்  கூட்டம் 3.2.18 சனிக்கிழமை  பிற்பகல் 2.00 மணிக்கு  நடைபெறும்.         


*பொருள்:*


🌟 1. வழக்கு நிதி.


🌟 2. அடுத்த கட்ட நடவடிக்கை.                   


🌟இடம்: TNPTF சங்க அலுவலகம். எல்லீஸ் சாலை. சென்னை.          


🌟உயர்நிலைக்குழு தலைவர்கள்  அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுகிறோம்.



இவண்.


மாநில ஒருங்கிணைப்பாளர்கள்.


⚡ தோழர்.மோசஸ்,
⚡தோழர்.சுப்பிரமணியன்,
⚡தோழர்.முத்துச்சாமி,
⚡தோழர்.மாயவன்,
⚡தோழர்.மீனாட்சி சுந்தரம்,
⚡தோழர்.தாஸ்,
⚡தோழர்.தியாகராஜன்,
⚡தோழர்.தாமோதரன்,
⚡தோழர்.சுரேஷ் ⚡தோழர்.வெங்கடேசன்,
⚡தோழர்.அன்பரசு.



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



*தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/01/blog-post_6.html


*🌟 அகரம் பவுன்டேஷனின் விதைத் திட்டத்தின் மூலம் தகுதியுடைய 12 ஆம் வகுப்பு மாணவர்களின் மேற்படிப்பிற்கு உதவுதல் மற்றும் செயல்படுத்துதல் சார்பாக  தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்*



🌟 *_அகரம் பவுன்டேசன்_*,
          நெ.15/8 கிருஷ்ணா தெரு,
          தி.நகர்.

என்ற விலாசத்தில் இயங்கி வரும் அரசு பதிவு பெற்ற நிறுவனம் கடந்த 8 ஆண்டுகளாக விதைத் திட்டத்தின் மூலம் பின்தங்கிய மற்றும் கிராமப்புற அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் மேல்நிலைக் கல்வியை முடித்து உயர் கல்வியினை தொடர இயலாத மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


🌟 தற்போது 2017-18 ஆம் கல்வியாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பில் பயிலும் மாணவர்களின் மேல்படிப்பிற்குத் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்ய அகரம் பவுண்டேஷன் முன்வருவதால் கல்வி அறிவு பெறாதபெற்றோர்களின் பிள்ளைகள் மற்றும் நல்ல மதிப்பெண் எடுக்கும் திறன் இருக்கின்ற பொருளாதார சிக்கலால் மட்டுமே மேல் படிப்பு பெற முடியாத மாணவர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 


🌟 அகரம் பவுன்டேஷன் "விதை" திட்டம் மற்றும் "தை" திட்டங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டிய வழிமுறைகள்,

🌟 அகரம் "விதை" திட்டத்தில் பங்கேற்கத் தேவையான விதிமுறைகளும், மாணவர்கள் விண்ணப்பிக்கும் போது இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்களும்

🌟 விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டிய முகவரிகளும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

🌟 அனைத்து ஆசிரியர் பெருமக்களும் இந்த நல்லதொரு வாய்ப்பினைப் பயன்படுத்தி மாணவர்கள் கல்வி நலன் பெற்றிட வழிவகுக்குமாறு *_TNPTF அயன்_* சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 


🗝тnρтfαyn.вℓσgѕρσт.¢σм 





*தமிழக பள்ளிகளில் அட்டெண்டன்ஸ் முறையில் புதுமை*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/01/blog-post_36.html


🌟 பள்ளிகளில், மாணவர்களுக்கான, 'அட்டெண்டன்ஸ்' முறையில், தமிழக அரசு, புதுமையை புகுத்த உள்ளது. 'பேஸ் பயோமெட்ரிக்' முறைப்படி, பள்ளி வாசலில் உள்ள, கேமராவில் பதிவாகும் முகத்தால், 'பிரசென்ட்' பதிவாகி விடும். 'உள்ளேன் அய்யா'வுக்கு பதிலாக, கம்ப்யூட்டரில் பதிவாகும் இந்த வசதி, முதற்கட்டமாக, சென்னை அரசு பள்ளியில் அறிமுகம் செய்யப்படுகிறது.



*🌟 தமிழக பள்ளிகளின், 'அட்டெண்டன்ஸ்' முறையில்..  புதுமை!*



🌟 கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில், ஊழியர்கள் வருகைப் பதிவில் முறைகேடுகளை தடுக்கவும், நிர்வாக வசதிக்காகவும், 'பயோமெட்ரிக்' வருகைப்பதிவு பின்பற்றப்படுகிறது. 'கார்ப்பரேட்' நிறுவனங்களில் மட்டுமின்றி, சிறிய கடைகளிலும், இந்த முறை பயன்பாட்டில் உள்ளது. ஊழியர்களின் விரல் ரேகை அடிப்படையில், வருகை விபரம் பதிவு செய்யப்படுகிறது.இந்த பயோமெட்ரிக் வருகைப்பதிவு திட்டம், விழுப்புரம் மாவட்டத்திலும், மற்ற மாவட்டங்களில் சில பள்ளிகளிலும் நடைமுறையில் உள்ளது. 



🌟 இந்த திட்டம் அமலானதால், அரசின் நலத் திட்டங்களை தவறாகக் கணக்கிடுவது, மாணவர்களின் எண்ணிக்கையில் போலிகளை சேர்த்து, ஆசிரியர்கள் நியமனத்தை தக்க வைப்பது, ஆசிரியர்களின்காலதாமதமான வருகை போன்ற பிரச்னைகளுக்கு, முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.


*சோதனை முறையில்*


🌟 இந்நிலையில், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால், சமீபகாலமாக, முகத்தை படம் பிடித்து, வருகையை பதிவு செய்யும் முறை அறிமுகம் ஆகியுள்ளது.பேஸ் பயோமெட்ரிக் என்ற, இந்த நவீன முறையில், விரல் ரேகைக்கு பதில், முகத்தை படம் பிடித்து, வருகைப் பதிவு செய்யப்படும். 



🌟 பல நவீன மொபைல் போன்களிலும், வெளிநாட்டு, 'சாப்ட்வேர்' நிறுவனங்களிலும், இந்த தொழில்நுட்பம், தற்போது அறிமுகமாகிஉள்ளது.இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவன உதவியுடன், பேஸ் பயோமெட்ரிக் தொழில்நுட்பம், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளிலும் சோதனை முறையில் அறிமுகமாகிறது. முதற்கட்டமாக, சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், இந்த திட்டம் சோதனை முறையில் அமலாகிறது; 600 மாணவியருக்கு, பேஸ் பயோமெட்ரிக் முறை பயன்படுத்தப்படும்.



🌟 திட்டத்தின் செயல்பாடுகளுக்கு ஏற்ப, மற்ற பள்ளிகளுக்கும், பேஸ் பயோமெட்ரிக் வருகைப் பதிவை விரிவுபடுத்த, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தனியார் பள்ளிகளில் இன்னும் அறிமுகமாகாத, நவீன தொழில்நுட்ப திட்டம், தமிழக அரசு பள்ளிகளில் அமலாவது, 



🌟 மாணவர்களையும், பெற்றோரையும் மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.



*வருகைப்பதிவு எப்படி?*



🌟 புதிய வருகைப்பதிவு திட்டத்தின்படி, ஒவ்வொரு மாணவியின் புகைப்படமும், கணினியில் ஏற்றப்படும். பள்ளியின் நுழைவாயில் அருகே, மாணவியர் வரும் வழியில், மின்னணு நுழைவாயில் வைக்கப்படும். அதை படம் பிடிக்கும் வகையில், உயர்தர கேமரா வைக்கப்படும்.இந்த கேமரா, நுழைவாயிலில் வரும், அனைத்து மாணவியரின் முகங்களையும் படம் பிடிக்கும். அந்த முகங்கள், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட மாணவியரின் முகத்துடன், 


🌟 ஒரே வினாடியில் கணினியில் தானாக சரிபார்க்கப்பட்டு, வருகைப்பதிவாக மாறும்.எனவே, எந்த மாணவி எப்போது வந்தார்; அவருடன் வந்த மற்ற மாணவியர் யார் என்பது போன்ற விபரங்கள், கணினியில் பதிவாகும். இந்த விபரங்களை, பள்ளி தலைமை ஆசிரியை, தன் கணினியில் நேரடியாக பார்த்து தெரிந்து கொள்ளலாம்.



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


*IT NEWS*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/01/it-news.html


🌟 ஆசிரியர்கள் கவனத்திற்கு  நிதி ஆண்டிற்கு Quarter 1,2,3&4 என வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் அதை தாங்கள் தான் தாக்கல் செய்ய வேண்டும்.



🌟 Income Tax Act -1961 ல் Section 203 ன் படி சம்பளம் பெற்று தரும் அலுவலர் தான் நாம் வாங்கும் ஊதியத்தில் வருமான வரி பிடித்தம் செய்து மத்திய அரசு கணக்கில் செலுத்த வேண்டும்.



🌟 சம்பளம் வழங்கும் அலுவலர் Section 203 ன் படி Quarter 1,2,3&4 ல் நமது வங்கி கணக்கில் வழங்கப்பட்ட  ஊதியம் (credited pay) மற்றும் ஊதியத்தில் பிடித்தம் செய்த வருமான வரி தொகை (Amount of Tax Deducted) , ஆசிரியரின் வருமான வரி தொகையை மத்திய அரசின் கணக்கில் BIN (Book Identification Number) அல்லது CIN (Challan Identification Number) வழியாக செலுத்தியதை Rule 31(1)(a) ன் Form -16 Part A உறுதிமொழி படிவம் , Part B நிதி ஆண்டில் வழங்கிய ஊதியம் மற்றும் வருமான வரி பிடித்தம் செய்த தொகை Annexure நமக்கு வழங்க வேண்டும். இதனுடன் Income Tax Return Form அதாவது ITR-V தர வேண்டும்....



🌟 நாம் எவ்வித பணமும் யாரிடமும் கொடுக்க தேவையில்லை...



🌟 பணம் கொடுக்காமல் இருந்தால் நமக்கு அலுவலர் கட்டாயம் Income Tax Return Form (ITR-V) வழங்கிவிடுவார்..... 



🌟 பின் சதுரங்க வேட்டை படம் மாதிரி நம் மனதை வசியப்படுத்தும் வார்தையாக ஆசிரியர்களே தாங்கள் ஏதேனும் வங்கியில் Loan பெற சென்றால் Form-16 கட்டாயம் தேவைப்படும். ஆகையால், Form-16 தேவைப்படுபவர்கள் ரூ.200 கொடுத்து வாங்கி கொள்ளுங்கள் என கூறும் நிலை தொடரும்.....



🌟 வருமான வரி தாக்கல் செய்யும் போதே Automatically generate Form -16                               


🌟 வருமான வரி பிடித்தம் செய்வது சம்பளம் வழங்கும் அலுவலரின் கடமை. Form-16 வழங்குவதும் Drawing Offer கடமை.



🌟 தமிழ்நாடு  நிதி விதி தொகுப்பு 86(a) -ன்படி வருமான வரி பிடித்தம் IT சம்மந்தப்பட்ட அலுவலர் மற்றும் பணம் பெற்று வழங்கும் அலுவலரே பொறுப்பாளர்.



🌟 தங்களது ஊதியத்தில் வருமான வரி பிடித்தம் செய்து Form-16 ஐ சம்பளம் வழங்கும் அலுவலர் தர மறுத்தால் புகார் அளிக்கும் முகவரி


👇👇👇👇👇👇

The Commissioner ,
Income Tax (TDS) ,
7th Floor , New Block ,
Aayakar Bhawan ,
121, M.G.Road ,
Chennai-34.


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм 


*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் (TNPTF) தேனி மாவட்டம் போடி நாயகனூர் நகரக்கிளை தேர்தல் - செய்தி துளிகள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/01/tnptf_29.html


 https://tnptfayan.blogspot.com/2018/01/tnptf_28.html



*🌟 பேரண்புக்குரிய பேரியக்கத்தின் தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்*




*🌟 தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் (TNPTF) தேனி மாவட்டம் போடிநாயகனூர் நகரகிளைத் தேர்தல் இன்று சிறப்பாக (28.01.18)  நடைபெற்றது.*







🌟 தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மற்றும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பாளர்களின் பெயர் பட்டியல் பின்வருமாறு,





*🌟 வட்டாரத் தலைவர் :*

தோழர்.R.செந்தில்குமார்





*🌟 வட்டாரச் செயலாளர் :*

தோழர்.M.சிவனேஷ்வரமணிச்செல்வன்.





*🌟 வட்டாரப் பொருளாளர் :*

தோழர்.T.செந்தில்குமார்.




*🌟 மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் :*


*🌟 வட்டாரத் துணைத் தலைவர்கள் :*


*🌟 வட்டாரத் துணைச் செயலாளர்கள் :*


அனைத்துப் பொருப்பாளர்களுக்கும்.....,


💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐


தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய பொறுப்பாளர்கள் அனைவருக்கும் *_TNPTF அயன்_* சார்பாக மனமார்ந்த வாழ்த்துகள்



💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

Monday 29 January 2018

*மாநில செயற்குழு கூட்ட முடிவு - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி காத்திருப்பு போராட்டம் - செய்தி துளிகள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/01/blog-post_55.html


*🌟 பேரண்புக்குரிய பேரியக்கத்தின் தோழர்கள் அனைவருக்கும் வீர வணக்கம்*


*🌟 தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு கூட்டம் 28-01-2018 (ஞாயிற்றுக்கிழமை) சென்னையிலுள்ள கூட்டணி அலுவலகத்தில் நடைபெற்றது.*


🌟 மாநில தலைவர் *_தோழர் மோசஸ்_* தலைமையில் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.


🌟 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 09.02.2018 அன்று நம் பேரியக்கத்தின் சார்பாக காத்திருப்பு போராட்டத்தினை மிக வலிமையாக நடத்திட அனைத்து தோழர்களும் களப்பணியாற்றி போராட்டம் வெற்றியடையச் செய்ய வேண்டும் என்றும்,


🌟 மாநில பொறுப்பாளர்கள் 18 பேர் இயக்குநர் அலுவலகத்திலும், மாவட்ட, வட்டார பொறுப்பாளர்கள் மற்றும் இயக்கத்தின் தூண்களாக விளங்கும் உறுப்பினர்கள் அனைவரும் திரண்டு அந்தந்த மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகத்தில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்களுடன் இந்த காத்திருப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு போராட்டத்தினை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.


*🌟 கடந்த இரண்டு ஊதியக்குழுவிலும் மிகக் கடுமையான ஊதிய இழப்பை சந்தித்துள்ள இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய மீட்புக்காக 25.03.2018 அன்று சென்னையில் "இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்பு மாநாடு" நடத்திட இம்மாநில செயற்குழுவில் ஏகமனதாக தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.*

🌟 நமது பேரியக்கத்தின் 12 வது மாநில தேர்தல் புதுக்கோட்டையில் 04.03.2018 அன்று சிறப்பாக நடத்தி முடிக்க வேண்டும் என்றும் தீர்மானம் இயற்றப்பட்டது.

*⚡ தேர்தல் ஆணையாளராக *_தோழர்.செ.போத்திலிங்கம்_* முன்னாள் பொதுச்செயலாளர்,*  


*⚡ துணை ஆணையாளர்களாக *_தோழர் எஸ்.ஜோசப் ராஜ்_* முன்னாள் மாநிலச்செயலாளர்,*

*_தோழர் ந.குருசாமி_* முன்னாள் மாநிலச்செயலாளர், நியமனம் செய்யப்பட்டு தீர்மானம் இயற்றப்பட்டது.


💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪


"இடைநிலை
ஆசிரியர்களின்
ஊதிய மீட்பு மாநாடு"
ஒரே ஒரு ஒற்றைக்
கோரிக்கையை மட்டும் வலியுறுத்தி 25.3.18-ல் சென்னையில் மாநாடு.
கோரிக்கை:
தமிழ்நாட்டில் உள்ள
இடைநிலை ஆசிரியர்கள்
கடந்த 40 ஆண்டு காலமாகப்
பெற்று வந்த மத்திய அரசின்
ஆசிரியர்களுக்கு இணையான
ஊதியத்தை மீட்டெடுத்தல்.

இத்தகைய வீரமிகு, எழுச்சிமிக்க போராட்டங்களை அறிவிக்கும் ஒரே இயக்கம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மட்டுமே.

💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪


தோழமையுடன்;

*தோழர்.மோசஸ்,*மாநில தலைவர்,தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.


*தோழர்.பாலசந்தர்,*பொதுச்செயலாளர்,தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.


*தோழர்.ஜுவானந்தம்,*மாநில பொருளாளர்,தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.



💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

தமிழ் நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு  எடுத்துள்ள "இடைநிலை  ஆசிரியர்களின்  ஊதிய மீட்பு  மாநாடு" மற்றும்  "காத்திருப்பு போராட்டம்" வெற்றியடைய  *_TNPTF அயன்_*  சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

      

*இலட்சியம்  அடையும் வரை.,*

*ஓய்வென்பது இல்லை...,*


*வெல்லட்டும் வெல்லட்டும்* 

*கோரிக்கைகள் வெல்லட்டும்*


*வாழ்க! வாழ்க!! வாழியவே *_TNPTF_* வாழியவே!!! 


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм 









*அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் யார் யார் படங்களை வைக்கலாம் - அரசாணை*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/01/blog-post_67.html



*🌟அரசு அலுவலகம் மற்றும் பள்ளிகளில் உள்ள கட்டிடங்களில் தலைவர்கள் மற்றும் பெரியோர்களின் திருவுருவப் படங்களை வைப்பது குறித்து அறிவுரைகள் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.


🌟 கீழ்குறிப்பிடப்பட்டுள்ள திருவுருவப் படங்களை வைக்கலாம்,

⚡ தற்போதைய குடியரசுத்தலைவர்

⚡ தற்போதைய பிரதமர்

⚡ அண்ணல் காந்தியடிகள்

⚡ பண்டித ஜவஹர்லால் நேரு

⚡ திருவள்ளுவர்

⚡ பேரறிஞர் அண்ணா

⚡ பெருந்தலைவர் காமராஜர்

⚡ மூதறிஞர் இராஜாஜி

⚡ தந்தை பெரியார்

⚡ டாக்டர் பி.ஆர். அம்பேத்கார்

⚡ பசும்பொன் முத்துராமலிங்க தேவர்

⚡ வ.உ.சிதம்பரனார்

⚡ திரு.காய்தேமில்லத்

⚡ திருமதி. இந்திராகாந்தி

⚡ முன்னாள் முதலமைச்சர்கள்

⚡ தற்போதைய முதலமைச்சர்

⚡ தமிழன்னையின் திருவுருவப்படம்




🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


*திருத்திய வீட்டு வாடகைப்படி மற்றும் நகர ஈட்டுப்படி வழங்குதல் - கரூவூல முதன்மை செயலர் கடிதம்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟


  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/01/blog-post_33.html

 


*🌟 திருத்திய வீட்டு வாடகைப்படி மற்றும் நகர ஈட்டுப்படி வழங்குதல்- கிராம எல்லைகள் மற்றும் நகர எல்லைகள் குறித்து அறிக்கை வெளியிடுதல் குறித்து கரூவூல முதன்மை செயலர் கடிதம்*




🌟 1(b) ல் மாநகரங்கள் கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சி, திருப்பூர், ஈரோடு மற்றும் மேற்படி நகரங்களை மாநகர எல்லையிலிருந்து சுற்றி 16 கி.மீ க்கு மிகையாகாமல் நகர எல்லையிலும், 16 கி.மீ முடியக்கூடிய இடத்தில் பஞ்சாயத்து யூனியன் ஒரு பகுதி இருந்தாலும் மேற்படி பஞ்சாயத்து யூனியன் முழுமைக்கும் வீட்டு வாடகைப்படியை அனுமதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



🌟 Grade II - Grade-C 2004 ன் படி வீட்டு வாடகைப்படி மாநகராட்சி , சிறப்பு நிலை நகராட்சி மற்றும் இதர இடங்கள் 8 கி.மீ நகர எல்லைக்குள் வந்தால் தரம் 2 வீட்டு வாடகைப்படி வழங்கவும், மேலும் எல்லையிலிருந்து 8 கி.மீ சுற்றளவில் ஒரு பகுதி இருந்தாலும் மேற்படி பஞ்சாயத்து யூனியன் முழுமைக்கும் Grade II வீட்டு வாடகைப்படியை அனுமதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




🌟 Grade III - சிறப்புநிலை நகராட்சி தவிர பிற நகராட்சிகள் மற்றும் தாலுகா தலைமையிடமாக கொண்டுள்ள பகுதிகளுக்கு மேற்படி வீட்டுவாடகைப்படி அனுமதிக்கலாம்.



🌟 Grade IV - பகுத்தறியப்படாத இடங்களுக்கு மேற்படி வீட்டுவாடகைப்படி அனுமதிக்கலாம்.



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



*மாநில அரசு ஊழியர்களின் கடித எண்கள் - தெரிந்து கொள்வோம்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/01/blog-post_29.html


*🌟 ந.க.எண், மூ.மு.எண் என்றால் என்ன?*


🌟 ந.க.எண் - நடப்புக் கணக்கு எண்,


🌟 ஓ.மு.எண் - ஓராண்டு முடிவு எண்,


🌟 மூ.மு.எண் - மூன்றான்டு முடிவு எண்,


🌟 நி.மு.எண் - நிரந்தர முடிவு எண்,


🌟 ப.மு.எண் - பத்தாண்டு முடிவு எண்,


🌟 தொ.மு.எண் - தொகுப்பு முடிவு எண்,


🌟 ப.வெ.எண் - பருவ வெளியீடு எண்,


🌟 நே.மு.க.எண் - நேர்முகக் கடித எண்.


⚡ இதில் நடப்புக் கணக்கு எண் மட்டுமே அதிக பயன்பாட்டில் இருக்கும்.


⚡ நேர்முகக் கடிதம் என்பது கீழ்மட்ட ஊழியருக்கு, மேல்மட்ட ஊழியர் எழுதும் கடிதம். அதாவது நேரடியாக பேசியதற்குச் சமம் என்பதால் அதற்கான பதிலை விரைந்து சொல்ல வேண்டும்.


⚡ இவ்வெண்களில் எதுவொன்றும் இல்லாமல் எந்தவொரு கடிதம் யாருக்கு வந்தாலும் தனிப்பட்ட முறையில் தங்களை பாதிக்கும் என்பதால் சட்டத்திற்கு புறம்பாகத் தங்களின் ஊதியப் பதிவேட்டில் பதியாமல் அரசு ஊழியர்கள் அனுப்பிய கடிதம் என்றே பொருள்.


⚡ அவ்வாறு அனுப்பினால் அரசு ஊழியர் தனது ஊழியத்தில் கடமை தவறியுள்ளார் என்று நிரூபணமாகிறது.



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм 


*🎥வரலாற்றில் இன்று📡* *📆29.01.2018📅*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/01/29012018.html


🌟 1595 - ஷேக்ஸ்பியரின் ரோமியோவும், ஜூலியட்டும் நாடகம் முதன்முதலாக அரங்கேறியது.



🌟 1676- மூன்றாம் பியோதர் ரஷ்யாவின் மன்னனாக முடிசூடினார்.



🌟 1916 - முதலாம் உலகப்போர்: பாரிஸ் ஜெர்மனியின் குண்டுதாக்குதாக்குதலுக்கு இலக்கானது.





🌟 1996 - இத்தாலியில் வெனிஸ் நகரில் உள்ள ஓப்ரா மாளிகையான லா ஃபெனிஸ் தீயினால் அழிந்தது. 



🌟 2005 - சீனாவின் பெருநிலப்பரப்பிலிருந்து 1949 ஆம் ஆண்டிற்குப் பின்னர் முதற்தடவையாக வர்த்தக விமானம் ஒன்று தாய்வானுக்கு வந்து சேர்ந்தது.



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм 


Sunday 28 January 2018

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் (TNPTF) தஞ்சாவூர் மாவட்டத் தேர்தல் - செய்தி துளிகள்*



🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



 https://tnptfayan.blogspot.com/2018/01/tnptf_28.html


*🌟 பேரண்புக்குரிய பேரியக்கத்தின் தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்*



*🌟 தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் (TNPTF) தஞ்சாவூர் மாவட்டத் தேர்தல் இன்று சிறப்பாக (28.01.18)  நடைபெற்றது.*






🌟 தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மற்றும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பாளர்களின் பெயர் பட்டியல் பின்வருமாறு,




*🌟 மாவட்டத் தலைவர் :*

தோழர்.மா.கலைச்செல்வன்




*🌟 மாவட்டச் செயலாளர் :*

தோழர்.இரா.அழகர்




*🌟 மாவட்டப் பொருளாளர் :*

தோழர்.க.மதியழகன்




*🌟 மாநில செயற்குழு  உறுப்பினர் :*

தோழர்.ஜா.சார்லி தேவப்பிரியன்



*🌟 மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் :*

1.தோழர்.இ.கார்த்திகேயன்
2.தோழர்.ப.தேன்மொழி
3.தோழர்.கோதேசிகன்



*🌟 மாவட்டத் துணைத் தலைவர்கள் :*

1. தோழர்.தி.திலகம்.
2. தோழர்.இரா.கண்ணன்.
3. தோழர்.வீ.ராஜசேகர்.

   

*🌟 மாவட்டத் துணைத் செயலாளர்கள் :*

1. தோழர்.தே.இன்பராஜ்.
2. தோழர்.தி.சரவணன்.
3. தோழர்.ச.இராணி


💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பாளர்கள் அனைவருக்கும் *_TNPTF அயன்_* சார்பாக மனமார்ந்த வாழ்த்துகள்


💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டார தேர்தல் - செய்தி துளிகள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/01/blog-post_28.html



🌟 பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களுக்கு வீர வணக்கம்.





🌟 தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டார தேர்தல் சிறப்பாக நடைபெற்றது.





🌟 தேர்தலில் புதியதாக  தேர்ந்தெடுக்கப்பட்ட  பொறுப்பாளர்கள்,





*🌟 தலைவர் :*


தோழர்.குணசேகரன்.





*🌟 செயலாளர் :* 


தோழர்.நமச்சிவாயம்.





*🌟 பொருளாளர்:* 


 தோழர்.முரளி




மற்றும்,


*🌟 துனைத் தலைவர்கள்:


*🌟 துனைச் செயலாளர்:*


*🌟 மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்:*


*🌟 செயற்குழு உறுப்பினர்கள்:*

ஆகிய பொறுப்புகளில் உள்ள  அனைத்து தோழர்களுக்கும்.


💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐


புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பாளர்கள் அனைவருக்கும் *_TNPTF அயன்_* சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.


💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐




🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм




Thursday 25 January 2018

*பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கம்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/01/blog-post_25.html


🌟 06. 01. 17 பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கத்தின் இரண்டாவது கூட்ட செயல்பாடுகளின் பதிவு


🌟 இடம் : சென்னை யுரேகா சென்டர் , AID India 


🌟 வசந்திதேவி அம்மா ,J.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ,லலிதா நடராஜன் வழக்கறிஞர் , பாரதி புத்தகாலயம் நடராஜன் ,எழுத்தாளர் முருகேசன் ,ஆசிரியர் காளீஸ்வரன்,அன்வர் - ஹிந்து காலம் பதிவு , யாதும் ஆவணப்படம் தயாரிப்பாளர் , ஆசிரியர் மீனா ராஜன் ,ஏழுமலை - நாகராஜன்ஆசிரியர்கள் விழுப்புரம்  PUMS செங்கமேடு,குழந்தை நேயப் பள்ளி ஷ்யாம் - மோனிகா ,முனைவர் வித்யாசாகர் - UNICEF ,தோத்தாத்ரி AID India , கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு தோழர் மூர்த்தி , சுடர் அமைப்பின் தோழர் நடராஜர் , அறிவியல் இயக்கம் Acs மணி ,A3 அமைப்பாளர்கள் கோபாலகிருஷ்ணன் , உமாமகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர் .

******************************************************************************************


🌟 தலைவர் வசந்தி தேவி அவர்கள் புத்தாண்டு வாழ்த்துகளோடு கூட்டத்தை ஆரம்பிக்க , சென்ற கூட்டத்திற்கான அறிக்கை பகிர்வு செயலர்  JK அவர்களால் விளக்கப்பட்டது. நமது தலையாய நோக்கம் கல்வி உரிமைக்கான சட்டத்தைப் பற்றி மக்களிடம் பரவலாக எடுத்துச் செல்வதே .( right- to education  act) 50% பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர்கள் பள்ளி மேலாண்மைக் குழுவில் இடம் பெற்றிருத்தலும் 75 % பெண்களாக இருத்தலும் அவசியம் என்பதும் குறிப்பிட்டு ,


🌟 சென்ற கூட்டமுடிவு : 1000 பள்ளி SMC செயல்பாடு பற்றிய ஆய்வு , பள்ளித் தேவைகள் பெரும்பாலும் பூர்த்தியடையவில்லை , திட்டங்கள் ( SSA, RMSA )   பள்ளிகளைச் சென்றடைந்ததா என ஆய்வு செய்தல் முதலிய கருப்பொருள்களோடு  முதல் கூட்ட முடிவு எடுக்கப்பட்டது. ஜனவரி 26 கிராம சபைகள் கூட்டத்தில் தமிழகமெங்கும் நடைபெறுவதில் துண்டறிக்கை , poster வழி செய்வதென்பதும் கலந்துரையாடலில் இடம் பெற்றன என முதல் கூட்டம் பற்றிப் பகிர்ந்தார் .

##################################################################


🌟 இன்றைய விவாதம் (6. 01-18)

****************************

🌟 வசந்தி தேவி தலைவர் : கல்விக்காக நிதி ஒதுக்கீடு GD இல்   60%   இருக்க வேண்டும் என 1960 களிலிருந்து  இருந்தாலும் 3.4 சதவீதமாகவே இருக்கின்றது . கொள்கை அளவில் மாற்றம் கொண்டு வருவது இயலாததாகிவிட , சட்டம் வழியே அரசை வற்புறுத்த வேண்டும் .கல்வி உரிமைச் சட்டம், பல போராட்டங்களுக்குப் பிறகு 2009 இல்  வந்தது , அதில் பல வகைப் பள்ளிகளும்  இருக்கலாம் , கல்வி  ஓரளவு வியாபாரமாக்கலாம் என வந்து விட்டது 


🌟 அதன் கடைசி 2 பக்கங்களில் உள்ள பிரிவில் , பள்ளிகட்டமைப்பு , பள்ளியை யார் நிர்வகிப்பது ,கழிவறை, பள்ளி மேலாண்மைக் குழுவின் (SMC) முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு நம் ஆசிரியர்களிடமே இல்லை . ....SMC இல் உறுப்பினராக இருப்பவர்தான் சட்டப் பிரகாரம் அதிகாரம் பெற்றவராகவும் பள்ளிகளைக்  கேள்வி கேட்பவராகவும் இருக்க முடியும் . (75 %) பெண்கள் அதில் இடம் பெற வேண்டும் , பெற்றோர் தான் இருக்க வேண்டும் , கல்விச் சட்டத்தைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு இல்லாததால் எந்தக் கேள்வியும் கேட்கப்படுவதில்லை ..மக்கள் இயக்கங்களை உருவாக்குவதே நமது தலையாய நோக்கம், 1000 பள்ளிகள் ஆய்வு செய்து சட்டத்தில் குறிப்பிடப்பட்டவை இப்பள்ளியில் இது இல்லை என ஆதாரங்களோடு  நீதிமன்றங்களை அணுக வேண்டும். தனியார் பள்ளிகளைப் பற்றியும் ஆய்வு செய்ய வேண்டும் என தனது கருத்துகளை முன்வைத்தார். தொடர்ந்து அனைவருக்கும்  Agenda பற்றி பகிரப்பட்டது .


🌟 AID India வின் அலுவலர் தோத்தாத்ரி அவர்களால்  , தங்கள் நிறுவனம் சில வருடங்களுக்கு முன் குழந்தைகள் கற்றல் திறனுக்காக , கிராமங்களில் செய்த  ஆய்வு பற்றிய ஆவணம் பகிரப்பட்டது.


🌟 வருமானம் ஆண்டுக்கு ₹ 12500க்கு குறைவாக இருக்கும் பெற்றோர் அரசுப் பள்ளிக்கும் ,₹ 37500 வருமானம் பெறும் பெற்றோர்கள் தனியார் பள்ளிகளுக்கும் அனுப்புகின்றனர் , மக்களிடம் இது பற்றி எடுத்த ஆய்வின் அடிப்படையில்  , அவர்களின் இந்த எதிர்பார்ப்பிற்கு தங்கள் பிள்ளைகள் படிப்பில் ,ஆங்கில மோகம் , ஒழுக்க நெறிகள் ,கல்வியின் தரம் இவற்றையே அடிப்படைக் காரணங்களாக வரையறுக்கப்பட்டது.... என தோத்தாத்ரி தங்கள் ஆய்வு கருத்துருகளைப் பகிர்ந்தார் .


🌟 Unicef - Dr வித்யாசாகர்  - அரசுப் பள்ளிகளிலும்  பிரச்சனைகள் உண்டு , அதை சரி செய்ய வேண்டும் எனக் கூறி ஆசிரியர்களின் சக்ஸஸ் ஸ்டோரியை பரவலாக்க வேண்டும். அப்போது நேர்மறையான மாற்றங்கள் வரும் என்றார் , பெரும்பாலான உறுப்பினர்கள்  அதை ஆமோதித்தனர்.


🌟 குழந்தை நேயப் பள்ளிகள் அமைப்பின் தோழர்  ஷ்யாம் சுந்தர் ...600 பள்ளிகளுக்கான ஆய்வுகளைக் கீழ் வரும் ஆய்வுத் தலைப்புகளில் சமர்ப்பித்தார்.கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த ஆசிரியர்களை ஒருங்கிணைக்க இயலவில்லை எனவும் பதிவு செய்தார் .


🌟 சுத்தமான குடிநீர் , கழிப்பறை வசதி - சுத்தம்  செய்வது யார் , கழிப்பறைக்கு நீர் போதுமானதாக வசதி உள்ளதா ?, ஆசிரியர்களுக்கான கழிப்பறை வசதிகள் . மதிய உணவுத் திட்டத்தின் தரம் , விளையாட்டு மைதானம் உள்ளதா , நேரம் ஒதுக்கப்படுகிறதா , பாதுகாப்பான சுற்றுச்சுவர் உள்ளதா , வகுப்பறைகள் போதுமானதாக உள்ளதா , பள்ளி வளாகத்திற்குள் உள்ளூர் மக்களின் ஆக்கிரமிப்புகள் உள்ளனவா , சுகாதாரமான சமையல் கூடம்  , நூலகத்திற்கு தனி அறை . செய்தித்தாள்கள்  , பருவ இதழ்கள் மற்றும் புத்தகங்கள் கொண்ட .நூலக வசதி , மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு சாய்தள அமைப்பு உள்ளதா , பள்ளி வளாகத்தில் காய்கறித்  தோட்டம் , மரங்கள் உள்ளதா , குழந்தைகளுக்கு உடல் ரீதியான தண்டனைகள் மனரீதியான துன்புறுத்தல்கள் உள்ளதா , குழந்தைகள் மீது  எவ்விதப் பாகுபாடும் காட்டப்படவில்லையா என பள்ளி உறுதி செய்தல் ,SMC இன் ஒத்துழைப்பு , ஆசிரியர் பள்ளி மேலாண்மைக் குழு உள்ளூர் கல்வித் துறைக்கும் இணக்கமான சூழல் எனத் தலைப்புகள் விரிந்தன.


🌟 இதன் முடிவாக , இன்றளவில் நேர்மறையான மாற்றங்களே பள்ளிகளில் நிகழ்ந்து ஒரு நம்பிக்கையைத் தந்துள்ளது. இந்த அனுபவங்களை மற்ற ஆசிரியர்களிடம்  பகிர்ந்து பரப்பச் செய்வது சிறந்த பயனளிக்கும் எனக் கருதுவதாகக் கூறினார். ஆய்வின் முடிவில் SMC ஏன் பரவலாகத் தோல்வியைத் தழுவியது எனக் காஞ்சிபுர மாவட்டப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் 200 பேரிடம் எழுத்துப் பூர்வமாக காரணங்களை சேகரித்து அவற்றையும் சமர்ப்பித்தார்.


🌟 தொடர்ந்து ,நம் பள்ளி  அரசுப் பள்ளி ( Our School our Pride) என்ற தலைப்பில் பெருமைக்குரிய - மாநிலம் தழுவிய  ஒரு சுற்றுப்பயணம் கலைக்குழுவோடு ஆசிரியர்கள் துணை கொண்டு செயல்படப் போவதாகவும்  அறிவித்தார் .


🌟 மேலும் இவரது அமைப்பைச் சேர்ந்த நண்பர்கள் ஆங்காங்கே அரசு பள்ளிகளில் பல்வேறு விதமான தலைப்புகளில் நேரிடையாகச் சென்று ஆய்வு செய்து வருவதாகவும் கூறினார் , கூடுவாஞ்சேரி அருகே ஒரு பள்ளி மாணவர்கள் மாணவிகளிடம் பாலின வன்முறை செயல்பாடுகளில் எல்லை மீறுவதாகவும் , அங்குள்ள ஆசிரியர்கள் இதை கண்டிக்கத் தவறிவிட்டதாகவும் கூட அறியப்பட்டதாகத் தகவல் அளித்தார். இப்பிரச்சனையை  சட்ட ரீதியாக எவ்வாறு அணுகலாம் என நமது குழுவின் சட்ட ஆலோசகர் லலிதா நடராஜன் தொடர்ந்து உதவுவதாகக் கூறினார் , அனைவருக்கும் சமத்துவக் கல்வி நவம்பர் மாத இதழ் வழங்கினார்கள்  மோகனாவும் ஷ்யாமும்.

🌟 மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு ,


🌟 தலைவர் வசந்தி தேவி அவர்கள்  ... ஷ்யாமின் ஆய்வைத் தொடர்ந்து நாம் செய்ய வேண்டியது என்ன என்பதை முன்வைக்கக் கருத்துகளை வரவேற்றார்,


🌟 SMC ஐ மையமாக வைத்து ஆசிரியர் , மாணவர் , பள்ளி வளங்களை எவ்வாறு நிறைவு செய்வது .. கல்வி வரி (education cess) வழியாக இதற்கான தகவல்களைப் பெறலாம் என வலிதா நடராஜன் வலியுறுத்தினார்  ...


🌟 தொடர்ந்து , பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கம் பணி சார்ந்த குழுக்கள் பிரிக்கப்பட்டு செயல்பாடுகள் வரையறுக்கப்பட்டன .


🌟 அடுத்து ,சின்னக் கண்ணன் மாணவன் தேசிய அறிவியல் மாநாட்டில் இளம் விஞ்ஞானி விருது பெற்றது பற்றிய ஒரு அனுபவப் பகிர்வு சுடர் நடராஜன் செய்தார் , இதற்கு முன் 2012 இல் கணேசன் மாணவன்  பனாராஸ் தேசிய மாநாட்டில் எவ்வாறு பங்கு பெற்றான் என்பதைப் பதிவு செய்தார் , 2013 இல் கவின் மாணவன்  பெண் குழந்தைகள் திருமணம் 80% என்பதை ஆய்வாக்கி தேசிய அறிவியல் விஞ்ஞானியானான் என முன்னுரைத்து , இந்த முறை தேசிய விஞ்ஞானியான சின்னக் கண்ணன் பற்றிக் கூற , மாணவனே  பேசுகிறார் .


🌟 மலை கிராமங்களில் சக்தி எவ்வாறு விரயமாகிறது என்ற அவரது ஆய்வு பற்றியப் பகிர்வு புதுப் பரிமாணத்தை நமக்குத்  தந்துள்ளது, காலம் பொன் போன்றது என்பதை மாற்றி காலம் - ஆற்றல் என்பதை உணர்த்தியுள்ளது என்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மதிப்பீட்டாளராக இருந்த பேரா .மணி குறிப்பிட்டதாகக் கூறினார் சுடர் நடராசன் .இந்த ஆய்வால் மாணவர்கள் சமூகத்தை எவ்வாறு தங்கள் வாழ்வின் அங்கமாக உணர்ந்து செயல்படவும் , சமூகப் பொறுப்பையும் பெற்று விட்டதாகக் கூறியது சிறப்பு. அதோடு தனது பள்ளியில் SMC எவ்வாறு மாற்றம் பெற்றது என்பதையும் பகிர்ந்து கொண்டார் , கிராமசபைக் கூட்டங்களில் எவ்வாறு நாம் இயங்க வேண்டும் , உடனடியாக அதை ஊடகங்களில் அச்சில் கொணர வேண்டும் எனவும் பகிர்ந்தார். 


🌟 கிராமசபைக் கூட்டம் 


🌟 ஜனவரி 26 நடக்கும் கிராமசபைக் கூட்டங்களில்  அமைப்பு சார்ந்து செயல்பட வேண்டிய நடைமுறை பற்றியும், பொதுவாக தமிழகத்திற்குரிய பொதுத் தீர்மானங்களாக ,

1. மழலையர்  வகுப்பறை

2. ஆசிரியர்  பற்றாக்குறை 

3. கட்டமைப்பு இவற்றையும் தனித்தனியாக வெவ்வேறு பள்ளிகளில் தேவைக்கேற்ப தீர்மானங்களை உடன் சேர்த்துக் கொள்ளவும் வழி காட்டப்பட்டது.


🌟 கிராமசபைக் கூட்டத்தை மையப்படுத்தி, இக்கூட்டத்திற்கு வந்திருக்கும் அமைப்புகள் ஆங்காங்கே தங்களால் இயன்ற அளவு கிராமசபைக் கூட்டங்களில் கிராமப் பஞ்சாயத்து சார்பாக பள்ளிகளுக்கான தீர்மானங்கள் பள்ளி மேலாண்மைக் குழுக்களின் வழியாக    ஒட்டு மொத்தமாக , தமிழகம் முழுக்க செயல்படுத்தப்பட வேண்டும்  எனவும் , இந்த செயல்பாடுகள்  செய்தித்தாள்கள் , பத்திரிக்கைகளில்  உடனடியாக அறிக்கையாகத் தர வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது .


🌟 வருங்கால செயல் திட்டம்  பற்றி விளக்கமான முறையில் கலந்துரையாடல் நடைபெற்றது .


🌟 அஜெண்டாவில் உள்ள படி வருங்கால செயல்பாடுகள் ஒவ்வொரு குழுவிற்கும் பகிர்ந்து தரப்பட்டது. சென்ற கூட்டத்திற்கும் இக்கூட்டத்திற்கும் வருகை தந்த அமைப்புகளைக் கணக்கில் கொண்டு , கல்வி தளத்தில் தமிழகம் முழுக்கப் பரவலாகத் தொடர்பில் இருக்கும் அமைப்புகளான தமிழ்நாடு அறிவியல் இயக்கம்  (TNSF), அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் (A3) குழு , கல்வி மேம்பாட்டுக் குழு  , குழந்தை நேயப் பள்ளிகள் குழு மற்றும் சுடர் அமைப்பு இந்த 5 குழுக்களில் இருந்து கணிசமான எண்ணிக்கை உடைய 5 (அ) 6 நபர் கொண்ட மாவட்டக் குழுக்கள் உருவாக்கு நமது அடுத்து வரும் செயல்பாடுகளை முன்னெடுக்க முடிவு செய்யப்பட்டது.


🌟 மேலும் , குழுவின் வளர்ச்சிக்குத் தேவையான  நிதி திரட்ட வேண்டிய சூழலும் இருப்பதால் அடுத்த மாதக் கூட்டத்திற்கு வரும் பொழுது உறுப்பினர் ஒவ்வொருவரும் ₹ 1000 குறைந்த பட்சம் செலுத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.


🌟 இது போல பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கம் நடத்திய  செயற் கூட்டங்களை பத்திரிக்கை செய்திகளாக வரும் வாரத்தில் தருவதாகவும் , ஜனவரி 26 கிராமசபைக் கூட்டத்தின் வழியாக நமது பள்ளி மேலாண்மைக் கூட்ட விழிப்புணர்வைப்  பற்றி செய்தியாகத் தருவது எனவும் முடிவு செய்யப்பட்டு , விழிப்புணர்வை விரிவுபடுத்த , மக்களிடம் பரவலாக்க  ஏராளமான இளைஞர்கள் , மற்ற அமைப்புகள் இவர்களையும் இணைக்கவும் , முகநூல் வழியாகவும் சமூக ஊடகங்கள் வழியாகவும் எதிர்கால செயல்பாடுகளை முன்னெடுக்கவும் முடிவு செய்யப்பட்டது.


🌟 நமது அடுத்த கூட்டம் பிப்ரவரி 10 ஆம் தேதி நடத்த ஏகமானதாக முடிவு செய்யப்பட்டது.

அன்பும் நன்றியும்

உமாமகேஸ்வரி


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


*🎥வரலாற்றில் இன்று📡* *📆25.01.2018📅*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/01/25012018.html




🌟 1327 - 14 வயது மூன்றாம் எட்வர்ட் இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடப்பட்டான்.


🌟 1494 - இரண்டாம் அல்பொன்சோ நேப்பில்ஸ் மன்னனாக முடிசூடினான்.


🌟 1955 - சோவியத் ஒன்றியம் ஜென்மனி மீது அதிகாரப்பூர்வமாக போரை நிறுத்தியது.


🌟 2006 - சூரிய குடும்பத்திற்கு வெளியே பால்வழியின் நடுவிற்குக் கிட்டவாக பூமியில் இருந்து 21500, 3,300 ஒளி ஆண்டுகள் தூரத்தில் OGLE-2005-BLG-390LB என்ற கோள் கண்டுபிடிக்கப்பட்டது. 

 


🌟 2009 - முல்லைத் தீவில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கல்மடு குளத்தின் அணை விடுதலைப் புலிகளால் உடைக்கப்பட்டது.



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


Wednesday 24 January 2018

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் வட்டார தேர்தல் - செய்தி துளிகள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/01/blog-post_27.html


🌟 பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களுக்கு வீர வணக்கம்.




🌟 தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் வட்டார தேர்தல் சிறப்பாக நடைபெற்றது.




🌟 தேர்தலில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட  பொறுப்பாளர்கள்,




*🌟 தலைவர் :*

தோழர்.இரவிச்சந்திரன்.




*🌟 செயலாளர் :* 

தோழர்.பிரகாஷ்




*🌟 பொருளாளர்:* 

 தோழர்.ராஜ்குமார்.





*🌟 துனைத் தலைவர்கள்:*

தோழர்.சுமதி,

தோழர்.பிரிட்டோ,

தோழர்.முனியசாமி.




*🌟 துனைச் செயலாளர்:*

தோழர்.திலகவதி,

தோழர்.முருகன்,

தோழர்.ஜோசப் அக்னல்லோ.




*🌟 மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்:*

தோழர்.ஆனந்தராஜ்.





*🌟 செயற்குழு உறுப்பினர்கள்:*

தோழர்.சேகர்,

தோழர்.தாமஸ் ஆல்வின்,

தோழர்.சரவணன்,

தோழர்.ஆறுமுகசாமி,

தோழர்.இளையராஜா,

தோழர்.ராஜசேகர்,

தோழர்.மகாராஜான்,

தோழர்.செல்வராஜா,

தோழர்.கார்த்திகேயன்.




💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பாளர்கள் அனைவருக்கும் *_TNPTF அயன்_* சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐




🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм