Saturday 29 February 2020

*அரசுப்பள்ளியில் அனைத்தும் இலவசம் திரைப்படம் பார்க்க பத்து ரூபாயா - பெற்றோர் அதிருப்தி - வட்டாரக் கல்வி அலுவலரின் பேட்டி*

*அரசுப்பள்ளியில் அனைத்தும் இலவசம் திரைப்படம் பார்க்க பத்து ரூபாயா - பெற்றோர் அதிருப்தி - வட்டாரக் கல்வி அலுவலரின் பேட்டி*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

*🎞️பள்ளிகளில் மாணவர் களுக்கு, திரைப்படம் திரையிட்டுகாட்ட, மாணவர்களிடம் பத்து ரூபாய் வசூல் செய்வது பெற் றோரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.*

*🎞️சிவகங்கை, தேவகோட்டை மற்றும் திருப்புத்துார் கல்வி மாவட்டத்தில் உள்ள மழலையர் பள்ளிகள், தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள், உயர் நிலைமற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு குழந்தைகளின் உலகம்' என்கிற திரைப்படம் காட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சார்பில் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.*

*🎞️பள்ளி வளாகத்திலேயே  'குழந்தைகள் உலகம்' என்ற திரைப்படம் திரையிட மாணவர் ஒருவருக்கு பத்து ரூபாய் வசூல் செய்ய அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.*

*🎞️மாணவர்களுக்கு அரசு சார்பில், பள்ளியில் உணவு, உடை, புத்தகம், லேப்டாப், சைக்கிள் வரை அனைத்தும் இலவசமாக வழங்கி வரும் நிலையில், திரைப்படம் காட்ட பத்து ரூபாய் வசூல் செய்வது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.*

*🎞️மேலும், ஆகஸ்ட் 2019 முதல் மார்ச் 2020 வரை பிறப்பிக்கப்பட்ட ஆணை தற்போது அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட் டுள்ளது.*

*🎞️இதனால்,படம் திரையிடப்பட்ட பள்ளிகளில் மீண்டும் படத்தை திரையிட்டு வசூல் செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.*

_தேவகோட்டை வட்டார கல்வி அலுவலர் பரிமளம் கூறுகையில்;_

*🎞️ஆண்டுதோறும், மாண வர்களுக்கு குழந்தை களுக்கான திரைப்படம் காண்பிக்கப்படும். மாணவர்களிடம் பத்து ரூபாய் வாங்குவது குறித்து தெரி யாது. கலெக்டர் உத்தரவு போட்டிருக்கிறார். நான் பள்ளிகளில் தகவல் அனுப்பியிருக்கிறேன். வேறொன்றும் எனக்கு தெரியாது, என்றார்.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

*பாராளுமன்றத்தை நோக்கி ஆசிரியர் கூட்டமைப்பு பேரணி*

*பாராளுமன்றத்தை நோக்கி ஆசிரியர் கூட்டமைப்பு பேரணி*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

*🚶‍♂️🚶‍♀️டில்லியில் மார்ச் 19ல் பாராளுமன்றத்தை நோக்கி ஊர்வலம் நடைபெற உள்ளதாக இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் _தோழர்.ச.மோசஸ்_ தெரிவித்தார்.*

*🚶‍♂️🚶‍♀️இந்தியாவில் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு, புதிய திட்டம் தற்போது நடைமுறையில் உள்ளது. இதனால் அவர்கள் ஓய்வூதியம் பெறமுடியால் அவதிப்படுகின்ற னர்.*

*🚶‍♂️🚶‍♀️பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடந்தன.*

*🚶‍♂️🚶‍♀️இதன் தொடர்ச்சியாக தலைநகர் டில்லியில் ஆசிரியர்கள் பங்கேற்கும் ஊர்வலம் நடக்க உள்ளது.*

_இது குறித்து இந்திய, பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுக்குழு உறுப்பினர் ச.மோசஸ் கூறியதாவது:_

*🚶‍♂️🚶‍♀️மத்திய அரசு கல்விக்கான நிதியை கூடுதலாக ஒதுக்க வேண்டும். புதிய கல்வி கொள்கையை திரும்பபெற வேண்டும்.*

*🚶‍♂️🚶‍♀️பல்வேறு மாநிலங்களில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம்.*

*🚶‍♂️🚶‍♀️இதற்கு மார்ச் 19 ல் டில்லியில் பாராளுமன்றத்தை நோக்கி ஊர்வலம் நடக்க உள்ளது.*

*🚶‍♂️🚶‍♀️முடிவாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரை சந்தித்து மனு கொடுக்க உள்ளோம்.*

*🚶‍♂️🚶‍♀️தமிழகத்தில் இருந்து ஆயிரம் பேர் பங்கேற்பர், என்றார்.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

Saturday 22 February 2020

*ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்ய கோரி - சென்னையில் பத்தாயிரம் ஆசிரியர்கள் உண்ணாவிரதம் - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முடிவு.*

*ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்ய கோரி - சென்னையில் 26.04.2020 அன்று பத்தாயிரம் ஆசிரியர்கள் தொடர் முழக்கப் போராட்டம் - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முடிவு.*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

*_பேரன்புமிக்க பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!_ வணக்கம்.*

*மாநில அமைப்பின் செய்தியறிக்கை எண் : 02/2020  நாள்: 22.02.2020*

**
*🛡ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்ய கோரி சென்னையில் 26.04.2020 அன்று பத்தாயிரம் ஆசிரியர்கள் தொடர் முழக்கப் போராட்டம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு முடிவின்படி தீர்மானம் இயற்றப்பட்டது.*

**
*🛡போராட்டங்களில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீதான பழிவாங்கும் ஒழுங்கு நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெறக்கோரி சென்னையில் பத்தாயிரம் ஆசிரியர்கள் பங்கேற்கும் தொடர் முழக்கப் போராட்டத்தை நடத்திட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முடிவு செய்துள்ளது.*

**
*🛡தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (22.02.2020) மதுரையில் சங்கத்தின் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.*

*⚡கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் _தோழர்.மூ.மணிமேகலை_ தலைமை வகித்தார்.*

*⚡STFI பொதுக்குழு உறுப்பினர் _தோழர்.ச.மோசஸ்_ முன்னிலை வகித்தார்.*

*⚡மதுரை மாவட்டச் செயலாளர் _தோழர்.க.ஒச்சுக்காளை_ வரவேற்றார்.*

*⚡சங்க வரவு-செலவு அறிக்கையை மாநிலப் பொருளாளர் _தோழர்.க.ஜோதிபாபு_ சமர்ப்பித்தார்.*

*⚡வேலை அறிக்கையைச் சமர்ப்பித்ததும், சங்கத்தின் கடந்த கால செயல்பாடுகள் மற்றும் எதிர்காலச் செயல்பாடுகள் குறித்தும் பொதுச்செயலாளர் _தோழர்.ச.மயில்_ விளக்கி பேசினார்.*

**
*🛡கூட்டத்தில் 5, 8 வகுப்பு பொதுத்தேர்வு அறிவிப்பைத் தமிழக அரசு திரும்பப் பெற்றதற்கு வரவேற்புத் தெரிவிக்கப்பட்டது. அதேபோன்று இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக் கோரி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 26.11.2018 அன்று மாவட்டத் தலைநகரங்களில் நடைபெற்ற அரசாணை எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதாக தமிழ்நாடு முழுவதும் 1,500 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மீது 21 மாவட்டங்களில் காவல்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைகளை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளதாலும், காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையின் பேரில் கல்வித்துறையால் வழங்கப்பட்ட தமிழ்நாடு குடிமைப்பணி (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதி 17(ஆ) ன் கீழான நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்திட வேண்டும்.*

**
*🛡மேலும், கடந்த 22. 01.2019 முதல் 30.01.2019 முடிய நடைபெற்ற ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 6000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான தமிழ்நாடு குடிமைப்பணி (ஒழுங்கு நடவடிக்கை மற்றும் மேல்முறையீடு) விதி 17(ஆ) ன் கீழான நடவடிக்கைகளையும், குற்றவியல் நடவடிக்கைகளையும் தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.*

**
*🛡மேற்படி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நிலுவையில் உள்ளதால் 7500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மிகக் கடுமையான பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளனர். பணி ஓய்வு பெற்றவர்கள் ஓய்வுக்கால பலன்களைப் பெற முடியாமலும், பணியில் இருப்பவர்கள் பதவி உயர்வு, ஊதிய உயர்வு உள்ளிட்ட பலன்களைப் பெற முடியாமலும் பழிவாங்கப்பட்டுள்ளனர்.*

**
*🛡ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளைத் திரும்பப் பெறக்கோரி இயக்கத்தின் சார்பில் ஆட்சியாளர்கள் மற்றும் கல்வித்துறை உயர் அலுவலர்களைச் சந்தித்து பலமுறை கோரிக்கை மனுக்களை அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மேற்கண்ட 7500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளைத் தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெறக்கோரி 26.04.2020 அன்று சென்னையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மாநில அளவில் பத்தாயிரம் ஆசிரியர்கள் பங்கேற்கும் தொடர் முழக்கப் போராட்டத்தை நடத்துவதென மாநிலச் செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டது.*

**
*🛡மேலும், தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்தல், தேசியக் கல்விக் கொள்கை – 2019 ஐ  திரும்பப் பெறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 19.03.2020 அன்று இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு (STFI) உள்ளிட்ட தோழமைச் சங்கங்களின் சார்பில் புதுதில்லியில் நடைபெறும் நாடாளுமன்றம் நோக்கிய பேரணியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 400-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநிலச் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்டன.*

*⚡இறுதியில் துணைப் பொதுச் செயலாளர் _தோழர்.தா.கணேசன்_ நன்றி கூறினார்.*

**
*🛡கூட்டத்தில் மாநிலம் முழுவதுமிருந்து மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.*
         
_🤝தோழமையுடன்;_

*_ச.மயில்_*
*மாநில பொதுச்செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

Friday 21 February 2020

*தொடக்கக் கல்வித்துறையில் இரட்டை அதிகாரம், விடுப்பு எடுக்க முடியாமல் தவிக்கும் ஆசிரியர்கள் - நாளிதழ் செய்தி*

*தொடக்கக் கல்வித்துறையில் இரட்டை அதிகாரம், விடுப்பு எடுக்க முடியாமல் தவிக்கும் ஆசிரியர்கள் - நாளிதழ் செய்தி*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

*🤺வட்டாரக் கல்வி அலுவலர், குறு வள மைய ஒருங்கிணைப்பாளர் அதிகாரம் செலுத்துவதால் தொடக்கக் கல்வித்துறையில் குழப்பம் நீடிக்கிறது. இதனால் தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க முடியாமல் தவிக்கின்றனர்.*

*🤺தமிழகத்தில் மாவட்ட அளவில் தொடக்கக் கல்வி அலுவலகத்தின் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் செயல்பட்டு வந்தன. கடந்த ஆண்டு கல்வித் துறையில் செய்யப்பட்ட சீர்த்திருத்தத்தில் மாவட்டத் தொடக்கக் கல்வி அலு வலகங்கள் கலைக்கப்பட்டன. தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் மாவட்டக் கல்வி அலுவலகங்களுடன் இணைக்கப்பட் டன. இதற்காக மாவட்டக் கல்வி அலுவலகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டன. மேலும் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடங்கள், வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களாக மாற்றப்பட்டன.*

*🤺தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவது, மாணவர்களுக்கான நலத் திட்ட உதவிகளை வழங்குவது போன்ற பணிகள் வட்டாரக் கல்வி அலுவலர்களிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளன. அதேபோல் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பது, ஆசிரியர் களுக்கு விடுப்பு, மாற்றுப்பணி வழங்குவது போன்ற பணிகள் குறுவள மைய ஒருங்கிணைப் பாளர்களாக உள்ள உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்பட் டுள்ளன.*

*🤺இதனால், வட்டாரக் கல்வி அலுவலர்களும், குறுவள மைய ஒருங்கிணைப்பாளர்களும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் அதிகாரம் செலுத்துகின்றனர். இரட்டை அதிகாரத்தால் குழப்பம் நீடிக்கிறது.*

*🤺கடந்த காலங்களில் தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாதநிலை ஏற்பட்டால் வேறு பள்ளியைச் சேர்ந்த ஆசிரியரை மாற்றுப்பணியாக வட்டாரக் கல்வி அலுவலர் நியமிப்பார். தற்போது மாற்றுப் பணி வழங்கும் அதிகாரம் குறுவள மைய ஒருங்கிணைப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவரது கட்டுப்பாட்டில் 10 முதல் 13 பள்ளிகள் உள்ளன. தற்போது 10-க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகளில் ஓராசிரியர் மட்டுமே பணியில் உள்ளார். இதனால் மாற்றுப் பணி வழங்குவதில் சிக்கல் உள்ளது.*

*🤺இதையடுத்து ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.*

_இதுகுறித்து ஆசிரியர்கள் சிலர் கூறுகையில்,_

*🤺ஊதியம் வழங்கும் அதிகாரம் வட்டாரக் கல்வி அலுவலரிடமும், விடுப்பு, மாற்றுப் பணி வழங்கும் அதிகாரம் குறுவள மைய ஒருங்கிணைப்பாளரிடமும் வழங்கியது தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்துகிறது.*

*🤺இதனால் பழையபடி வட்டார கல்வி அலுவலரிடமே அதிகாரத்தை ஒப்படைக்க வேண்டும், என்று கூறினார்.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

Thursday 20 February 2020

*STFI-ன் பாராளுமன்றப் பேரணி! பங்கேற்போர் பட்டியலை இறுதிசெய்து மாநிலச் செயற்குழுவில் அளித்திட TNPTF பொதுச்செயலாளர் சுற்றறிக்கை*

*STFI-ன் பாராளுமன்றப் பேரணி! பங்கேற்போர் பட்டியலை இறுதிசெய்து மாநிலச் செயற்குழுவில் அளித்திட TNPTF பொதுச்செயலாளர் சுற்றறிக்கை*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

*பொதுச்செயலாளரின் சுற்றறிக்கை எண்: 03/2020*
*நாள்: 20.02.2020*

*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!_ வணக்கம்!*

**
*🛡நாளை மறுதினம் (22.02.2020) சனிக்கிழமை காலை 10 மணிக்கு நமது பேரியக்கத்தின் அவசர மாநில செயற்குழுக்கூட்டம் மதுரை  மாநகரில் நமது மாவட்டக்கிளை அலுவலகத்தில் நடைபெற உள்ளது.*

**
*🛡இக்கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்டச்செயலாளர்கள், மாநில செயற்குழு உறுப்பினர்கள், தவறாது பங்கேற்க வேண்டும். தவிர்க்க இயலாத சூழலில் மாவட்டச்செயலாளர்கள் பங்கேற்க இயலாத நிலை ஏற்பட்டால் மாவட்டத்தின் சார்பில் பிரதிநிதியாக மாவட்ட நிர்வாகி ஒருவரைப் பங்கேற்கச் செய்திட வேண்டும்.*

**
*🛡19.03.2020 அன்று புதுதில்லியில் STFI மற்றும் தோழமை அமைப்புக்கள் சார்பில் நடைபெறவுள்ள பாராளுமன்றம் நோக்கிய பேரணியில் கலந்துகொள்ளும் நபர்களின் பெயர்ப்பட்டியலையும், ஒரு நபருக்கு பத்தாயிரம் ரூபாய் வீதம் முன்பணத்தொகையையும் மாநிலச்செயற்குழுவில் மாவட்டச் செயலாளர்கள் கண்டிப்பாக வழங்கிட வேண்டும்.*

**
*🛡அன்றே பயணச்சீட்டுக்கள் முன்பதிவு செய்ய வேண்டியுள்ளது. இனிமேலும் கால அவகாசம் வழங்கிட எவ்விதத்திலும் வாய்ப்பு இல்லை என்பதைத் தோழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். 22.02.2020க்குப் பின்பு வரும் பெயர்களை ஏற்க இயலாது என்பதை மாநில மையம் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறது.*

**
*🛡அரசாணை எரிப்புப் போராட்டம் மற்றும் ஜாக்டோ-ஜியோ போராட்டம் ஆகியவற்றில் தீரத்துடன் பங்கேற்ற நம் இயக்கத்தோழர்கள் 17(ஆ) நடவடிக்கையினால் அடைந்துள்ள பாதிப்புக்களை அகற்றுவதற்கான கள நடவடிக்கைகளைத் திட்டமிடுவதற்காக கூட்டமாகவும் எதிர்வரும் மாநிலச் செயற்குழுக் கூட்டம் நடைபெறவிருக்கிறது.*

**
*🛡 மாவட்டக்கிளைகள் மாநில அமைப்பிற்குச் செலுத்தவேண்டிய நிதி நிலுவைகளைச் செலுத்துதல் மற்றும் உறுப்பினர் பட்டியல்கள் ஒப்படைத்தல் ஆகியவற்றில் தீவிர கவனம் செலுத்தி மாநில செயற்குழுவில் அளித்திடத்தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில மையம் மாவட்டக்கிளைகளை தோழமையுடன் கேட்டுக்கொள்கிறது.*
                                                             
சென்னை.
20.02.2020

_🤝தோழமையுடன்,_

*_ச.மயில்_*
*பொதுச்செயலாளர்*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

Monday 17 February 2020

*பிப்.22 மதுரையில் அவசர மாநில செயற்குழுக் கூட்டம் - TNPTF பொதுச்செயலாளர் அழைப்பு*

*பிப்.22 மதுரையில் அவசர மாநில செயற்குழுக் கூட்டம் - TNPTF பொதுச்செயலாளர் அழைப்பு*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!_*

_வணக்கம்!_

**
*🛡தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் அவசர மாநில செயற்குழுக் கூட்டமானது, மாநிலத் தலைவர் _தோழர்.மூ.மணிமேகலை தலைமையில் 22.02.2020 சனிக் கிழமை_ காலை 10 மணியளவில்   _மதுரையில்_ உள்ள தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் _மாவட்ட அலுவலகத்தில்_ நடைபெற உள்ளது.*

**
*🛡கூட்டப் பொருள்கள் :*

*_⚡வேலை அறிக்கை._*

*_⚡19.03.2020 – STFI மற்றும் தோழமை அமைப்புக்கள் சார்பில் புதுடில்லியில் நாடாளுமன்றம் நோக்கிப் பேரணி – மாவட்டவாரியாக பங்கேற்போர் பட்டியல் மற்றும் முன்பணம் ஒப்படைத்தல் – இறுதிப்படுத்துதல்._*

*_⚡அரசாணை எரிப்புப் போராட்டம் மற்றும் ஜாக்டோஜியோ போராட்டம் – 17 (ஆ) நடவடிக்கைகள் – தொடரும் பாதிப்புகள் – எதிர்கால இயக்க நடவடிக்கைகள்._*

*_⚡மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டங்கள் – ஆய்வு._*

*_⚡உறுப்பினர்பட்டியல் மற்றும் நிதி நிலுவைகள் ஒப்படைத்தல்._*

*_⚡பொதுச்செயலாளர் கொணர்வன._*

*_⚡ஆசிரியர் பிரச்சனைகள் (எழுத்துப் பூர்வமாக)_*

*_⚡இதர விஷயங்கள்._*

**
*🛡அனைத்து மாநிலச் செயற்குழு உறுப்பினர்களும் இதையே அழைப்பாக ஏற்று தவறாது கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம்.*  
                                                            
சென்னை.
17.02.2020

_🤝தோழமையுடன்,_

*_ச.மயில்_*
*பொதுச்செயலாளர்*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

Sunday 16 February 2020

*_அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றமே..._*

*_அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றமே..._*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

**
*🛡அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிகம் எதிர்பார்த்திருந்த நிலையில், பல்வேறு ஏமாற்றங்கள் மட்டுமே மிஞ்சியது.*

**
*🛡புதிய பென்ஷன்திட்டத தை ரத்து செய்து பழைய திட்டத்தை செயல்படுத்தும் அறிவிப்பு வரவில்லை.*

*⚡இதற்கான போராட்டத்தின் போது ஆறாயிரம் பேரின் ஒழுங்கு நடவடிக்கை ரத்து மற்றும் 2 லட்சம் காலிப்பணியிடங களை நிரப்பும் போன்ற அறிவிப்பும் இல்லை.*

*⚡ஜெயலலிதா நியமித்த புதிய பென்ஷன் திட்ட ஆய்வு குழுவின் அறிக்கை சமர்ப்பித்து ஒன்றரை ஆண்டுகளாகியும் அதன்மீதும் எந்த நடவடிக்கையும் இல்லை.*

*⚡அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு மற்றும் பால் வழங்கப்படுவது குறித்தும் முறையாக அறிவிக்கவில்லை.*

**
*🛡ஒன்பது ஆண்டுக்கு முன்பு ஆட்சியின் துவக்கத்தில் இருந்த ரூ.1.54 லட்சம் கோடி கடன், ரூ.4.56 லட்சம் கோடி கடனாக உயர்ந்ததுதான் மிச்சம்.*

*_பி.பிரெடெரிக் ஏங்கெல்ஸ்,_ ஆசிரியர்,*
*குஜிலியம்பாறை.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

*எதிர்பார்த்த அறிவிப்புகள் இல்லாததால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. தமிழக பட்ஜெட் குறித்து, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கருத்து.*

*எதிர்பார்த்த அறிவிப்புகள் இல்லாததால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. தமிழக பட்ஜெட் குறித்து, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கருத்து.*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

**
*🛡தமிழக நிதி அமைச்சரும், துணை முதலமைச்சருமான ஓ.பண்ணீர்செல்வம் பிப்ரவரி 14 அன்று சட்ட பேரவையில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இதில் கல்வித்துறைக்கு ரூ.3,4181.73 கோடியை ஒதுக்கீடு செய்து பல்வேறு திட்டங்களை பட்டியலிட்டுள்ளார்.  இந்த நிதி நிலை அறிக்கையில் ஆசிரியர்கள் எதிர்பார்த்த அறிவிப்புகள் இல்லாததால் அதிருப்தி அடைந்துள்ளனர்.*

_இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,_

*⚡மாநிலத் துணைத்தலைவர் _தோழர்.ஜோசப்ரோஸ்,_*

*⚡மாவட்ட தலைவர் தாமஸ் _தோழர்.அமலநாதன்,_*

*⚡மாவட்ட செயலாளர் _தோழர்.முத்துப்பாண்டியன்,_*

*⚡மாநில செயற்குழு உறுப்பினர் _தோழர்.புரட்சித்தம்பி,_*

*⚡மாவட்ட பொருளார் _தோழர்.குமரேசன்,_*

_ஆகியோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது;_

**
*🛡தமிழக அரசு வெளியிட்டுள்ள கடைசி முழுமையான நிதிநிலை அறிக்கையில் கடந்த ஆண்டை விட இந்தாண்டு அதிக நிதி ஒதுக்கியிருந்தாலும், எங்கள் எதிர்பார்ப்பு அதிகமாகயிருந்த நிலையில் பல்வேறு ஏமாற்றங்களே மிஞ்சியுள்ளது. கடந்த 2019 ஜனவரி ஜாக்டோ ஜியோ முன்னெடுத்த போராட்டத்தில் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்த புதிய ஓய்வூதிய திட்டத்திற்கான தொகை குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தோம்.  இந்த பட்ஜெட்டில் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமுல்படுத்திட அறிவிப்புகள் வரும் என்று எதிர்பார்த்த நிலையில் எவ்வித அறிவிப்பும் வெளியிடாதது ஏமாற்றத்தை தருகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைத்த புதிய பென்சன் திட்ட ஆய்வு கமிட்டியின் அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பித்து ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் அந்த அறிக்கை குறித்த எவ்வித அறிவிப்பையும் அரசு இது வரை வெளியிட வில்லை. இந்த பட்ஜெட்டில் அதற்கான அறிவிப்பு வரும் என்று எதிர்பார்த்த நிலையில் பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.*

**
*🛡மேலும் உரிமைக்கான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் காரணமாக பல ஆயிரம் ஆசிரியர்கள் பதவி உயர்வை இழந்துள்ளார்கள். ஓய்வு பெற்றவர்கள் ஓய்வூதியம் பெற இயலாத நிலையில் உள்ளனர். சிறை சென்ற ஆசிரியர்கள் மீதுள்ள வழக்குகள் ரத்து செய்யப்படாமல் உள்ளது. மேற்கண்ட அனைத்து ஒழுங்கு நடவடிக்கைகளையும் தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பு ஊழியர்களிடமும் உள்ளது. கடந்த இரண்டு ஊதியக்குழுவிலும் வஞ்சிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் குறித்து தமிழக அரசு தனது நிலைப்பாட்டை தெளிவாக எடுத்துரைக்காதது ஆசிரியர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. காலிப்பணியிடங்கள் அதிகரித்துள்ள நிலையில் பெருமபாலான ஆரம்பப்பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாக இயங்கி வருகிறது. இப்பள்ளிகளில் ஆசிரியர் நியமனங்கள் குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. கிராமப்புற மாணவர்களின் மேம்பாட்டிற்கான தொலைநோக்கு திட்டங்கள் எதுவும் வெளியிடப்படாததால் இந்த பட்ஜெட் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யாத பட்ஜெட்டாக அமைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.*

_🤝இப்படிக்கு;_
*_முத்துப்பாண்டியன்_*
*மாவட்டச்செயலாளர்*
*சிவகங்கை மாவட்டம்.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

Thursday 13 February 2020

*💊மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படவில்லை - திட்டத்தை கைவிட்டதா சுகாதாரத் துறை?*

*💊மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படவில்லை - திட்டத்தை கைவிட்டதா சுகாதாரத் துறை?*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

*💊தேசிய குடற்புழு நீக்க நாளான நேற்று (10.02.2020) தமிழகத்தில் மாணவர்களுக்கு மாத்திரை விநியோகம் செய்யப்படவில்லை. இதனால், இத்திட்டத்தை சுகாதாரத்துறை கைவிட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.*

*💊சுகாதாரமற்ற பழக்க வழக்கம், அசுத்தமான உணவுகளை உண்பது, திறந்த வெளியில் மலம் கழிப்பது போன்ற காரணங்களால் குடற்புழுக்கள் உருவாகின்றன. இதனால் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு, பசியின்மை, ரத்தச்சோகை உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அதைத் தடுக்க தேசிய குடற்புழு நீக்க நாள் ஆண்டுதோறும் பிப்ரவரி 10ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது அன்றைய தினம் நாடு முழுவதும் 19 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு _அல்பெண்டசோல்_ எனப்படும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுவது வழக்கம்.*

*💊இதற்காக அங்கன்வாடி மையங்கள், அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றில் சிறப்பு முகாம்கள் நடத்தி மாத்திரைகள் வழங்கப்படும். அன்றைய தினம் விடுபட்டவர்களுக்கு நான்கு நாட்கள் கழித்து குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படும்.*

*💊ஆனால் இந்த ஆண்டு நேற்று (10.02.2020) தேசிய குடற்புழு நீக்க நாளில், பள்ளி மாணவர்களுக்கு மாத்திரைகள் வழங்கப்படவில்லை. இதனால் இந்த திட்டத்தை சுகாதாரத்துறை கைவிடுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.*

*💊சுகாதாரத் துறையினர் கூறுகையில், பள்ளிகளுக்கு குடற்புழு நீக்க நாளில் மாத்திரைகள் வழங்குவது குறித்து எந்த உத்தரவும் வரவில்லை என்று கூறினர்.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

*⚫😢⚫TNPTF மாநிலச் செயலாளர் தோழர்.இ.வின்சென்ட் அவர்கள் மறைவு-ஈடு செய்ய முடியாத பேரிழப்பு - மாநில மையம் இரங்கல் செய்தி*

*⚫😢⚫TNPTF மாநிலச் செயலாளர் தோழர்.இ.வின்சென்ட் அவர்கள் மறைவு-ஈடு செய்ய முடியாத பேரிழப்பு - மாநில மையம் இரங்கல் செய்தி*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

*⚫தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலச் செயலாளர் அன்புத் தோழர்.இ.வின்சென்ட் அவர்கள் நேற்று (12.02.2020) இரவு 11 மணியளவில் உடல்நலக்குறைவால் கோவை மருத்துவமனையில் காலமானார் என்பதைப் பெரும் துயரத்துடன் மாநில மையம் தெரிவித்துக் கொள்கிறது*

*⚫கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நம் இயக்கத்தை உயிர் மூச்சாய் எண்ணி, தமிழ்நாட்டு ஆசிரியர்களின் நலன்களுக்காக ஓய்வின்றி உழைத்த உன்னதத் தோழர்  நிரந்தரமாய்த் துயில் கொண்ட செய்தி இரவு நேரத்தில் இடியெனத் தலையில் இறங்கியது*

*⚫கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வட்டார அளவில், மாவட்ட அளவில் பல்வேறு இயக்கப் பொறுப்புக்களை ஏற்றும், கடந்த மூன்று முறை தொடர்ந்து மாநிலச் செயலாளராகப் பொறுப்பு வகித்தும் இணையற்ற வகையில் இயக்கப் பணியாற்றிய மகத்தான தோழர் இ.வின்சென்ட் அவர்கள்*

*⚫தனக்குக் கொடுக்கப்பட்ட இயக்கப் பணியைப் உணர்வுப் பூர்வமாகவும், பொறுப்புணர்வோடும் செயலாற்றிய தன்னிகரற்ற இயக்கப் போராளி*

*⚫அன்பும், அடக்கமும் கொண்டவராய்,சக தோழர்களிடம் அதிர்ந்து பேசாதவராய், இயக்க நிகழ்வுகளில் சமரசமற்ற களப் போராளியாய், மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனப்பாங்கு கொண்டவராய் விளங்கியவர் நம் தோழர் இ.வின்சென்ட் அவர்கள்*

*⚫கல்விப் பணியையும், இயக்கப் பணியையும் இரு கண்களாகப் பாவித்து இன்றைய இளைய தலைமுறை ஆசிரியர்களுக்கு இலக்கணமாய், எடுத்துக்காட்டாய் விளங்கிய நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர் நம்மை விட்டு நிரந்தரமாய்ப் பிரிந்து விட்டார்*

*⚫மாநில அமைப்பின் அனைத்து நிகழ்வுகளிலும் நம்மோடு இணைந்து இடையறாது பயணித்த நம் அன்புத் தோழரின் நினைவுகள் நெஞ்சை உலுக்குகிறது*

_"சாவே உனக்கோர் சாவு வராதா"என்ற கவிஞனின் வரிகளே நினைவுக்கு வருகிறது_

*⚫தோழர்.வின்சென்ட் அவர்கள் முன்னெடுத்த இயக்கப் பணிகளை, சமூகப் பணிகளை அவரது வழியில் தொடர்ந்து முன்னெடுப்பதே நாம் அவருக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்*

_😢மாநில மையத்தின் சார்பில்-ஆறாத்துயருடன்._

*_ச.மயில்_*
*பொதுச்செயலாளர்*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

Wednesday 12 February 2020

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு கூட்ட அழைப்பிதழ்*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு கூட்ட அழைப்பிதழ்*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

**
*🛡தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அவசர மாநில செயற்குழுக் கூட்டம்*

_நாள் :_

*🌟16.02.2020* *_ஞாயிறு காலை 10 மணி_*

_இடம் :_

*🌟ஹோட்டல் அருண், இரயில் நிலையம் அருகில், திருச்சி*

_தலைமை :_

*🌟திருமதி. மூ.மணிமேகலை, மாநிலத் தலைவர்.*

_கூட்டப் பொருள்:_

*⚡(1) வேலை அறிக்கை.*

*⚡(2) 19.03.2020 – ளுவுகுஐ மற்றும் தோழமை அமைப்புக்கள் சார்பில் புதுடில்லியில் நாடாளுமன்றம் நோக்கிப் பேரணி – மாவட்டவாரியாக பங்கேற்போர் பட்டியல் மற்றும் முன்பணம் ஒப்படைத்தல் – இறுதிப்படுத்துதல்.*

*⚡(3) அரசாணை எரிப்புப் போராட்டம் மற்றும் ஜாக்டோஜியோ போராட்டம் – 17 (ஆ) நடவடிக்கைகள் – தொடரும் பாதிப்புகள் – எதிர்கால இயக்க நடவடிக்கைகள்.*

*⚡(4) முன்னாள் பொதுச்செயலாளர் திரு.செ.பாலசந்தர் அவர்கள் மீதான அரசாணை எரிப்புப் போராட்ட 17 (ஆ) நடவடிக்கை – ஓய்வூதியப் பலன்கள் மறுப்பு – மாநில அமைப்பின் போராட்ட நடவடிக்கைகள் – திட்டமிடல்.*

*⚡(5) மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டங்கள் – ஆய்வு.*

*⚡(6) உறுப்பினர்பட்டியல் மற்றும் நிதி நிலுவைகள் ஒப்படைத்தல்.*

*⚡(7) பொதுச்செயலாளர் கொணர்வன.*

*⚡(8) ஆசிரியர் பிரச்சனைகள் (எழுத்துப் பூர்வமாக)*

*⚡(9) இதர விஷயங்கள்.*

**    
*🛡அனைத்து மாநிலச் செயற்குழு உறுப்பினர்களும் இதையே அழைப்பாக ஏற்று தவறாது கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம்.*                               
       
_🤝தோழமையுடன்;_

*_ச.மயில்,_*
*மாநில பொதுச்செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

Tuesday 4 February 2020

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தொடர் போராட்டங்களும் 5, 8 வகுப்புப் பொதுத்தேர்வு ரத்தும் - பொதுச்செயலாளர் அறிக்கை*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தொடர் போராட்டங்களும் 5, 8 வகுப்புப் பொதுத்தேர்வு ரத்தும் - பொதுச்செயலாளர் அறிக்கை*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

_பொதுச்செயலாளரின் சுற்றறிக்கை எண்: 02/2020 நாள்: 04.02.2020_

*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!_ வணக்கம்.*

**
*🛡5, 8 வகுப்புப் பொதுத்தேர்வை ரத்து செய்து இன்று (04.02.2020) தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளதைத் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வரவேற்கிறது.*

**
*🛡5, 8 வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு என்று தமிழக அரசு அரசாணை (நிலை) எண்: 164 (பள்ளிக்கல்வி (MS)த் துறை) நாள்: 13.09.2019 வெளியிட்ட நாளிலிருந்து அதை எதிர்த்து தொடர் களப் போராட்டங்களை நடத்திய இயக்கம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*

**
*🛡தமிழ்நாட்டின் கல்வி நலனுக்கும், மாணவர் நலனுக்கும் எதிரான இந்த அரசாணையைத் தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் ஆறு முனைகளிலிருந்து 25.09.2019 முதல் 29.09.2019 முடிய 5 நாட்கள் பிரச்சாரப் பயணத்தை நடத்தி அதன் நிறைவாக கரூர் நகரில் 5000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்ற பிரச்சார விளக்கப் பொதுக்கூட்டத்தை நடத்திய இயக்கம்.*

**
*🛡மாநிலம் முழுவதும் 14000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்ற இப்பிரச்சாரப் பயணத்தில் 229 இடங்களில் தெருமுனைப் பிராச்சாரக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. லட்சக்கணக்கான மக்களிடம் நம் கோரிக்கையை எடுத்துச்சென்றோம்.*

**
*🛡தனியொரு ஆசிரியர் இயக்கமாக நாம் நடத்திய இப்பிரச்சார இயக்கம் மகத்தான வெற்றி பெற்றது.*

**
*🛡அதன் தொடர்ச்சியாக கடந்த 03.12.2019 முதல் 05.12.2019 முடிய 3 நாட்கள் ஆசிரியர்கள் மத்தியில் தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரப் பயணத்தை நடத்தினோம். அதன் நிறைவாக 05.12.2019 அன்று அனைத்து வட்டாரக்கல்வி அலுவலகங்கள் முன்பும் பெருந்திரள் முறையீடு நடத்தி ஒவ்வொரு வட்டாரத்தின் சார்பிலும் அரசுக்கு கோரிக்கை மனுவையும் சமர்ப்பித்தோம். மாநிலம் முழுவதும் 313 வட்டாரக்கிளைகளில் நடைபெற்ற இந்த பெருந்திரள் முறையீட்டில் 15000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்று தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.*

**
*🛡அதன் தொடர்ச்சியாக கடந்த 11.01.2020 அன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நடைபெற்ற தர்ணா போராட்டத்தில் மாநிலம் முழுவதும் 10000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டு அரசுக்குத் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.*

**
*🛡அதன் தொடர்ச்சியாக கடந்த 01.02.2020 அன்று மதிப்புமிகு பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அவர்களை மாநில நிர்வாகிகள் நேரில் சந்தித்து 5, 8 வகுப்புப் பொதுத் தேர்வினால் ஏற்படும் எதிர்கால பாதிப்புக்களை விரிவாக எடுத்துரைத்து விண்ணப்பம் அளித்தோம்.*

**
*🛡அதனைத் தொடர்ந்து நேற்று (03.02.2020) பள்ளிக்கல்வி இயக்குநர், தொடக்கக்கல்வி இயக்குநர் உள்ளிட்ட கல்வித்துறையின் உயர் அலுவலர்களை நேரில் சந்தித்து 5, 8 வகுப்புப் பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தோம்.*

**
*🛡மேலும், இது தொடர்பாக அடுத்தகட்ட போராட்ட நடவடிக்கைகளைத் திட்டமிட்டுக் கொண்டிருந்த நிலையில் தமிழக அரசின் அறிவிப்பு வெளிவந்துள்ளது. காலதாமதமான அறிவிப்பாக இருந்தாலும் வரவேற்கத்தக்கது.*

**
*🛡நம்மைப் போன்றே இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புக்களும், பல்வேறு அரசியல் கட்சிகளும், பொது மக்களும், மாணவர்களின் பெற்றோர்களும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.*

**
*🛡5, 8 வகுப்புப் பொதுத்தேர்வைக் கைவிட வலியுறுத்தி நாளை (05.02.2020) அன்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்கள் முன்பும் இந்திய மாணவர் சங்கம் (SFI) சார்பில் முற்றுகை போராட்டமும் அதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்து போராட்டங்களும் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.*

_உறுதியான களப்போராட்டங்களும் நியாயமான கோரிக்கைகளும் நிச்சயம் வெல்லும் என்பதற்கு 5, 8 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து என்ற அறிவிப்பே சான்றாகும்._

_🤝தோழமையுடன்;_

*_ச.மயில்,_*
*மாநில பொதுச்செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

*✍5,8 வகுப்பு பொதுத்தேர்வு ரத்து- தமிழக அரசு அறிவிப்பு - TNPTF வரவேற்பு*

*✍5,8 வகுப்பு பொதுத்தேர்வு ரத்து- தமிழக அரசு அறிவிப்பு - TNPTF வரவேற்பு*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

*✍தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கோரிக்கை வெற்றி - 5,8 வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வரவேற்கிறது*

_🤝தோழமையுடன்;_

*_ச.மயில்,_*
*பொதுச்செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

Saturday 1 February 2020

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக மாநில நிர்வாகிகள், பள்ளிக்கல்வித் துறை ஆணையர் மதிப்புமிகு. சிஜி தாமஸ் வைத்தியன் IAS அவர்களை நேரில் சந்தித்து பேசிய நிகழ்வு*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக மாநில நிர்வாகிகள், பள்ளிக்கல்வித் துறை ஆணையர் மதிப்புமிகு. சிஜி தாமஸ் வைத்தியன் IAS அவர்களை நேரில் சந்தித்து பேசிய நிகழ்வு*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பின் சார்பில் இன்று (01.02.2020) சென்னையில் டி.பி.ஐ வளாகத்தில் பள்ளிக்கல்வித் துறை ஆணையர் மதிப்புமிகு. சிஜி தாமஸ் வைத்தியன் IAS அவர்களை நேரில் சந்தித்து பேசிய நிகழ்வு*

*⚡இந்நிகழ்வில் அரசாணை எரிப்பு, ஜாக்டோ ஜியோ உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீதான 17(ஆ) நடவடிக்கைகளை ரத்து செய்தல்,*

*⚡5,8 வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்தல்,*

*⚡பள்ளி தொடர்பான இணையதள பதிவுகளால் ஆசிரியர்களின் கற்பித்தல் பணியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள்,*

*⚡மாநிலம் முழுவதும் தேர்வு நிலை, சிறப்பு நிலை வழங்குவதில் தாமதம்,

*⚡B.Lit;BEd ஊக்க ஊதிய உயர்வு வழங்குதல்,*

*⚡துப்புரவுப் பணியாளர்களின் ஊதியம் வழங்கப்படாமை,*

*⚡பள்ளிக் கல்வித் துறையில் அதிகாரபூர்வ விடுமுறை பட்டியல் வெளியிடாததால் ஏற்பட்டுள்ள குழப்பங்கள்,*

*⚡CRC மையங்களின் தலைமை ஆசிரியர்களின் கட்டுப்பாட்டில் ஆரம்ப நடுநிலைப் பள்ளிகள் வருவதால் ஏற்பட்டுள்ள குளறுபடிகள்,*

*⚡பொது மாறுதல் கலந்தாய்விற்கு பின்பு ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களுக்கு பதவி உயர்வு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது*

*🌟இந்நிகழ்வில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின்,*

*⚡மாநில தலைவர் _தோழர்.மூ.மணிமேகலை_*

*⚡பொதுச்செயலாளர் _தோழர். ச.மயில்,_*

*⚡மாநில பொருளாளர் _தோழர் க.ஜோதி பாபு,_*

*⚡துணைப் பொதுச்செயலாளர் _தோழர்.தா.கணேசன்,_*

*⚡STFI பொதுக்குழு உறுப்பினர் _தோழர்.ச. மோசஸ்,_*

*⚡மாநில துணைத் தலைவர் _தோழர் பெ.அலோசியஸ் துரைராஜ்,_*

*⚡மாநிலச் செயலாளர் _தோழர்.சி.ஜி. பிரசன்னா_ ஆகியோர் கலந்து கொண்டனர்*

_🤝தோழமையுடன்;_

*ச.மயில்*
*மாநில பொதுச் செயலாளர்*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм