Friday 29 September 2023

30 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்திசென்னையில் கோட்டை நோக்கிப் பேரணிதமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நடத்தியதுஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பங்கேற்பு! ஊடகச் செய்திமாநில அமைப்பின் செய்தியறிக்கை எண்: 13/2023 நாள்: 29.09.2023


🛡️30 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் இன்று (29.09.2023) சென்னையில் கோட்டை நோக்கிப் பேரணி நடைபெற்றதுஇதில் மாநிலம் முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பங்கேற்றனர்பேரணியின் முடிவில் முதலமைச்சருக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

 

🛡️சென்னையில் எழும்பூர் லாங்ஸ் கார்டன் ரோடு ரவுண்டனாவிலிருந்து தொடங்கிய பேரணிக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத்தலைவர் மூ.மணிமேகலை தலைமை வகித்தார்மாநிலப் பொருளாளர் ஜீ.மத்தேயு முன்னிலை வகித்தார்துணைப் பொதுச்செயலாளர் தா.கணேசன் வரவேற்புரையாற்றினார்பேரணியை சிஐடியு மாநிலத்தலைவரும்முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமாகிய அ.சவுந்தரராசன் தொடக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

 

🛡️பேரணி எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் சென்றடைந்ததுஅங்கு நடைபெற்ற கோரிக்கை விளக்கக் கூட்டத்தின் போது மாநில பொதுச்செயலாளர் ச.மயில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவதுதமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்தல் வாக்குறுதியில் 99 சதவீதத்தை நிறைவேற்றி விட்டதாகத் தெரிவித்துள்ளார்ஆனால்தமிழ்நாட்டில் ஆசிரியர்கள்அரசு ஊழியர்களுக்கு கொடுத்த எந்த வாக்குறுதியையும் தி.மு.க அரசு நிறைவேற்றவில்லைஎனவேதி.மு.க அரசு தனது தேர்தல் அறிக்கையில் எழுத்து மூலமாகக் கொடுத்த வாக்குறுதிகளின்படி அரசு ஊழியர்கள்ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். 01.06.2009க்குப் பின்பு நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு களைய அமைக்கப்பட்டுள்ள மூவர் குழுவின் அறிக்கையை விரைவாகப் பெற்று ஊதிய முரண்பாடு களைந்திட வேண்டும். 01.06.2009க்கு முன்பு சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்துநிர்வாகக் காரணங்களால் 01.06.2009க்குப் பின்பு நியமன ஆணை வழங்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய இழப்பு உடனடியாகச் சரி செய்யப்பட வேண்டும்மத்திய அரசின் இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை தமிழ்நாட்டின் அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் வழங்கிட வேண்டும்அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும்அரசுப் பள்ளிகளில் பயிலும் 6, 7, 8 வகுப்பு மாணவர்களுக்கும் காலைச் சிற்றுண்டித் திட்டம் விரிவுபடுத்தப்பட வேண்டும்அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து நலத்திட்ட உதவிகளும்சலுகைகளும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்

 

🛡️தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு உடனடியாக மேல்முறையீடு செய்வதோடுபதவி உயர்வுக்குத் தகுதித் தேர்வு தேவையில்லை என்பதைக் கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும்தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத காலிப்பணியிடங்களை மாணவர்களின் கல்வி நலன் கருதி காலமுறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும்மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்க அமைக்கப்பட்டுள்ள குழுவின் அறிக்கையை விரைந்து பெற்று புதிய மாநிலக் கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு அமல்படுத்த வேண்டும்.

 

🛡️1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கல்வி நலன் கருதி எண்ணும் எழுத்தும் திட்டத்தை முற்றிலுமாகக் கைவிட வேண்டும்ஆசிரியர்களின் கற்பித்தல் பணியைப் பெருமளவில் பாதிக்கும் எமிஸ் பணிகளிலிருந்து ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும்ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு உரிமைஉயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஆசிரியர் நலன்மாணவர் நலன்கல்வி நலன்சமூக நலன் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் இன்று (29.09.2023) சென்னையில் நடைபெற்ற கோட்டை நோக்கிப் பேரணியின் முடிவில் முதலமைச்சர் அவர்களுக்கு எங்களின் கோரிக்கை மனுவைச் சமர்ப்பித்துள்ளோம்.

 

🛡️எங்களின் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு தேர்தல் அறிக்கையில் கூறியவாறு நிறைவேற்ற வேண்டும்அவ்வாறு நிறைவேற்றாவிட்டால் எங்களது அமைப்பு தொடர் போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபடும்இவ்வாறு அவர் கூறினார்.

 

🛡️இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஆ.செல்வம், STFI அகில இந்தியச் செயலாளரும்தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளருமான அ.சங்கர்தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் பொதுச்செயலாளர் சே.பிரபாகரன்தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் நிறுவனத் தலைவர் அ.மாயவன், Ex.MLC, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் P.பேட்ரிக்ரெய்மாண்ட்தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகத்தின் மாநிலத் தலைவர் மா.ரவிச்சந்திரன்தமிழ்நாடு அரசு உதவிபெறும் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பின் மாநில கௌரவத் தலைவர் மா.கணபதிபதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகத்தின் மாநிலத்தலைவர் த.உதயசூரியன்தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் செ.நா.ஜனார்த்தனன் ஆகியோர் பங்கேற்று வாழ்த்திப் பேசினார்கள்இறுதியில் STFI அகில இந்தியப் பொதுக்குழு உறுப்பினர் தோ.ஜாண்கிறிஸ்துராஜ் நன்றி கூறினார்.


இப்படிக்கு,

.மயில்

பொதுச்செயலாளர்

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி