*🎥மே.4-ல் காணொளிக் காட்சி வழி நடைபெற்ற TNPTF-ன் மாநிலச் செயற்குழுக் கூட்டத் தீர்மானங்கள்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!_ வணக்கம்.*
*⚔*
*🛡தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் திங்கள் கிழமை (04.05.2020) சரியாக முற்பகல் 11:00 மணிக்கு மாநிலத் தலைவர் தோழர்.மூ.மணிமேகலை தலைமையில் காணொளிக் காட்சி வழியாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.*
*⚔*
*🛡தீர்மானம் எண் 1 :*
*2020 பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெற்ற இயக்கத்தின் மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டங்களை நடத்துவதற்கு கூட்ட ஏற்பாடுகளை மிகச்சிறப்பாக செய்திருந்த திருநெல்வேலி (தெற்கு மண்டலம்), மதுரை (தென் மத்திய மண்டலம்), கரூர் (வட மத்திய மண்டலம்), ஈரோடு (மேற்கு மண்டலம்), வேலூர் (வடக்கு மண்டலம்), தஞ்சாவூர் (கிழக்கு மண்டலம்) ஆகிய மாவட்டக்கிளைகளுக்கு இம்மாநிலச் செயற்குழு பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.*
*⚔*
*🛡தீர்மானம் எண் 2 :*
*19.03.2020 அன்று புதுதில்லியில் நடைபெறுவதாக இருந்த இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் நாடாளுமன்றம் நோக்கிய பேரணி, கொரோனா பேரிடரால் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நமது இயக்கத்தின் சார்பில் பேரணிக்குச் செல்வதற்கு ரயில் மற்றும் விமானப் பயணச்சீட்டுக்கள் முன்பதிவு செய்திருந்த இயக்க உறுப்பினர்களுக்கு அதில் ஏற்பட்ட செலவு தொகை போக மீதிப் பணத்தை திருப்பி அளிப்பதென இம்மாநிலச் செயற்குழு ஏகமனதாகத் தீர்மானிக்கிறது.*
*⚔*
*🛡தீர்மானம் எண் 3 :*
*கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக கடந்த 25.03.2020 முதல் நடைமுறையில் உள்ள ஊரடங்கால் தங்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் வறிய நிலையிலுள்ள மக்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற முதியோர்கள் ஆகியோருக்கு மாநில மைய வழிகாட்டுதலின் பேரில் மாநிலம் முழுவதும் இன்று வரை 1 கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான உதவிப் பொருட்களை வழங்கியுள்ள மாவட்ட, வட்டார, நகரக் கிளைகளையும், தனி நபர்களாக உதவிப்பணிகளில் ஈடுபட்டுள்ள நம் இயக்க உறுப்பினர்களையும், கொரோனா நோய்த்தடுப்புப் பணிகளில் தன்னார்வலர்களாகச் செயல்படும் நம் இயக்க உறுப்பினர்களையும் இம்மாநிலச் செயற்குழு மனதாரப் பாராட்டுகிறது; வாழ்த்துகிறது. மேலும் கிளை அமைப்புகள் தொடர்ந்து உதவிப்பணிகளில் ஈடுபட்டு ஏழை, எளிய மக்களுக்கு உதவிட இம்மாநிலச் செயற்குழு ஏகமனதாகக் கேட்டுக் கொள்கிறது.*
*⚔*
*🛡தீர்மானம் எண் 4 :*
*கொரோனா நோய்த் தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலையைக் காரணம் காட்டி தமிழக அரசு தனது ஊழியர்களுக்கு 18 மாதங்களுக்கான அகவிலைப்படி ரத்து, ஈட்டிய விடுப்பு ஊதியம் ரத்து, வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதற்கு இம்மாநிலச் செயற்குழு தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறது. மேலும், போராடிப் பெற்ற உரிமைகளைப் பறிக்கும் மேற்கண்ட நடவடிக்கைகளை தமிழக அரசு கைவிடக்கோரி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட, வட்டார, நகரக் கிளை அமைப்புகள் தமிழக அரசுக்கு 15.05.2020-க்குள் கோரிக்கை மனுக்களை அனுப்புவதெனவும், இன்றைக்கு தமிழகத்தில் நிலவும் பேரிடர் சூழல் மாறிய பின்பு இது தொடர்பாக அடுத்தகட்ட வலிமையான இயக்க நடவடிக்கைகளைத் திட்டமிடுவதெனவும் இம்மாநிலச் செயற்குழு ஏகமனதாகத் தீர்மானிக்கிறது.*
*⚔*
*🛡தீர்மானம் எண் 5 :*
*தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக்கல்வித் துறையில் ஏற்பட்டுள்ள நிர்வாக ரீதியிலான மாற்றம், கல்வி மாவட்ட அளவிலான நிர்வாக அமைப்பு, புதிய வருவாய் மாவட்டங்கள் தோற்றம் உள்ளிட்ட நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு இயக்கத்தின் கிளை அமைப்புகளில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் தொடர்பாகவும், எதிர்கால இயக்கச் செயல்பாடுகளைச் செம்மைபடுத்தும் வகையிலும் இயக்கத்தின் அமைப்பு விதிகளில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் தொடர்பாக மாநில அமைப்பிற்குப் பரிந்துரை செய்வதற்காக கீழ்கண்ட ஏழு இயக்கப் பொறுப்பாளர்களைக் கொண்ட 'இயக்க அமைப்பு விதி திருத்தக் குழு" வை இம்மாநிலச் செயற்குழு நியமிக்கிறது.*
*குழுத் தலைவர் :*
*_திரு. தோ.ஜான் கிறிஸ்துராஜ், மாநில துணைத்தலைவர்_*
*உறுப்பினர்கள் :*
*_திரு.தே.முருகன், மாநிலச்செயலாளர்_*
*_திரு.ஆ.முத்துப்பாண்டியன், சிவகங்கை மாவட்டச்செயலாளர்_*
*_திரு.சு.செல்வராஜ், தூத்துக்குடி மாவட்டச்செயலாளர்_*
*_திரு.இரா.சண்முகசாமி, விழுப்புரம் மாவட்டச்செயலாளர்_*
*_திரு.பெ.சீனிவாசன், மாநிலச் செயற்குழு உறுப்பினர்_*
*_திரு.எஸ்.ரஞ்சன்தயாளதாஸ்,மாநிலச் செயற்குழு உறுப்பினர்._*
*மேற்கண்ட குழுவிற்கு இயக்கத்தின் கிளை அமைப்புகள் மற்றும் இயக்க உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களை 31.05.2020-க்குள் எழுத்து மூலமாகத் தெரிவிக்கலாம் எனவும், குழுவானது தனது பரிந்துரைகளை 15.06.2020-க்குள் மாநில அமைப்பிற்கு அளிக்க வேண்டுமெனவும் இம்மாநிலச் செயற்குழு தீர்மானிக்கிறது.*
*⚔*
*🛡தீர்மானம் எண் 6 :*
*26.11.2018 அன்று இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் கோரி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டத் தலைநகரங்களில் நடத்திய அரசாணை நகல் எரிப்பு போராட்டம், 22.01.2019 முதல் 30.01.2019 முடிய நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ போராட்டம் ஆகியவற்றில் கலந்து கொண்டதற்காக ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது தமிழக அரசு மேற்கொண்ட தமிழ்நாடு குடிமைப்பணி (ஒழுங்கு நடவடிக்கைகளும், மேல்முறையீடுகளும்) விதி 17 (ஆ) நடவடிக்கைகளையும், குற்றவியல் நடவடிக்கைகளையும் தமிழக அரசு உடனடியாக ரத்து செய்திட வேண்டுமென இம்மாநிலச் செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. அரசாணை நகல் எரிப்புப் போராட்டத்தில் காவல்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைகளை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளதால் அதன் அடிப்படையில் வழங்கப்பட்ட 17(ஆ) நடவடிக்கையை சம்பந்தப்பட்ட கல்வித் துறை அலுவலர்கள் சட்டப்படி ரத்து செய்திட வேண்டும் என இம்மாநிலச் செயற்குழு கேட்டுக் கொள்வதோடு இது தொடர்பாக மாவட்டக்கிளைகள் விரைந்து செயல்படவும் தீர்மானிக்கப்பட்டது.*
*⚔*
*🛡தீர்மானம் எண் 7 :*
*கொரோனா பேரிடரால் நாடு பேரபாயத்தில் இருக்கும் சூழலில் மத்திய அரசு தமிழக அரசுக்கு தர வேண்டிய நிதிகளைத் தாமதமின்றி வழங்கி நிவாரணப் பணிகளுக்கு உதவிட வேண்டுமாய் மத்திய அரசை இம்மாநிலச் செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.*
*⚔*
*🛡தீர்மானம் எண் 8 :*
*கொரோனா பேரிடரால் நடைமுறையில் உள்ள ஊரடங்கால் மக்கள் வருவாய் இழந்துள்ள சூழலில் தமிழக மக்களின் வாழ்வாதாரம் காத்திட குடும்ப அட்டைக்கு ஐந்தாயிரம் ரூபாய் வீதம் நிதி வழங்கி பாதிக்கப்பட்ட மக்கள் துயர் துடைத்திட வேண்டுமாய் தமிழக அரசை இம்மாநிலச் செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.*
_🤝தோழமையுடன்_
*_ச.மயில்,_*
_பொதுச்செயலாளர்,_
*தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм