Sunday 31 May 2020

*மதிப்புமிகு பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை கடிதம்*

*பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை கடிதம்*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

*✉️*
*🛡️பள்ளிக்கல்வி – கோவிட் 19 நோய்த்தொற்றால் பள்ளிக்கல்வியில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் - பாதிப்புக்களைச் சீர் செய்யத்தக்க ஆலோசனைகள் அளித்திட நிபுணர் குழு அமைப்பு - நிபுணர் குழுவில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களை இணைத்திட வேண்டுதல் சார்பு.*

*✉️*
*🛡️கொரோனா நோய்த்தொற்று காரணமாக தமிழகத்தில் அனைத்துவகைப் பள்ளிகளும் 16.03.2020 முதல் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. இதனால் 2019 - 2020 ஆம் கல்வியாண்டில் வழக்கமான பள்ளி வேலை நாட்களில் 30 நாட்களுக்கு மேல் பள்ளிகள் இயங்காத நிலை ஏற்பட்டது. மேலும், 2020 - 2021 ஆம் கல்வியாண்டிலும் குறித்த காலத்தில் பள்ளிகளைத் திறக்க இயலாத சூழல் தற்போது நிலவிக் கொண்டிருக்கிறது.*

*✉️*
*🛡️இந்நிலையில் 2019 - 20 ஆம் கல்வியாண்டில் பள்ளிகள் முன்கூட்டியே மூடப்பட்டதாலும், 2020 - 21 ஆம் கல்வியாண்டில் பள்ளிகள் தாமதமாகத் திறக்கப்படுவதாலும் பள்ளிக்கல்வியில் செய்ய வேண்டிய மாற்றங்கள், வேலைநாட்கள் குறைப்பால் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளில் மேற்கொள்ள வேண்டிய யுக்திகள், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான வழிவகைகள், அதற்காகப் பயன்படுத்த வேண்டிய தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட கூறுகளைப் பற்றி ஆய்வு செய்து தமிழக அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக பார்வை 1 ல் கண்ட அரசாணையின் மூலம் தங்கள் தலைமையில் 12 பேர் கொண்ட நிபுணர் குழுவைத் தமிழக அரசு அமைத்தது. அக்குழுவில் அலுவல் ரீதியாக கல்வித்துறையில் இயக்குநர்கள் மட்டத்திலான உயர் அலுவலர்களும், UNICEF, TNeGA சென்னை ஐ.ஐ.டி ஆகியவற்றின் பிரதிநிதிகளும் இடம்பெற்றுள்ளனர்.*

*✉️*
*🛡️இந்நிலையில் பார்வை 2 ல் கண்ட அரசாணையில் நிபுணர் குழுவில் CBSE பள்ளிகள் மற்றும் தனியார் சுயநிதிப் பள்ளிகளின் தலைவர்கள் உள்ளிட்ட மேலும் நான்கு பேரைத் தங்கள் பரிந்துரையின் பேரில் தமிழக அரசு சேர்த்துள்ளது.*

*✉️*
*🛡️கொரோனா நோய்த்தொற்றால் தமிழகம் முழுவதும் அனைத்து வகையான பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. இதில் தனியார் சுயநிதிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தக் கூடிய அளவிற்கு வாய்ப்புள்ளவர்களாகவும், தாங்கள் பயிலும் பள்ளிகளிலும், தங்கள் வீடுகளிலும் பல்வேறு கற்றல் வாய்ப்புக்களைக் கொண்டவர்களாகவும் உள்ளனர். தற்போதைய கல்விச் சூழலை எதிர்கொள்ளக் கூடிய வாய்ப்பு அவர்களுக்கு உள்ளது.*

*✉️*
*🛡️ஆனால், குக்கிராமங்களிலெல்லாம் செயல்பாட்டுக் கொண்டிருப்பவை அரசுப்பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் தான். அங்கு பயிலும் மாணவர்கள் கிராமப்புற, ஏழை எளிய, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய, நவீன தகவல் தொழில்நுட்ப வசதிகள் எதுவுமில்லாதவர்கள். கல்வியறிவு அதிகம் பெறாத பெற்றோர்களின் குழந்தைகள். தற்போதைய கல்விச் சூழலை எதிர் கொள்வதற்குரிய வாய்ப்பு வசதி இல்லாதவர்கள்.*

*✉️*
*🛡️எனவே, கோவிட்-19 ஆல் தமிழகத்தின் கல்வி மற்றும் கற்றல், கற்பித்தல் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளைத் தீர்க்கும் ஆலோசனைகள் என்பது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களின் கல்வி சார்ந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதாக அமைய வேண்டும். எனவே, அதற்கேற்றவாறு தமிழகத்தில் அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் இன்றைய கல்விச் சூழலை, களச்சூழலை, இடர்பாடுகளை நன்கு உணர்ந்த தகுதி வாய்ந்த, சிறந்த ஆசிரியர்களையும் நிபுணர் குழுவில் இணைப்பது அவசியமாகும்.*

*✉️*
*🛡️மேலும், தமிழகத்தில் இன்றைய கல்விச்சூழலை, கல்வியில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை நன்கு ஆய்ந்து தெளிந்த தலைசிறந்த கல்வியாளர்கள் பலர் உள்ளனர். அவர்களில் பொருத்தமான சிலரையும் நிபுணர் குழுவில் இணைக்க வேண்டும். அவ்வாறு இணைப்பது நிபுணர் குழுவின் பணிகளுக்கு மேலும் வலிமை சேர்ப்பதாகவும், நிபுணர் குழுவின் ஆலோசனைகள் முழுமை பெறுவதற்கும் உதவியாக அமையும். எனவே, எங்களது அமைப்பின் வேண்டுகோளை தாங்கள் அரசுக்கு பரிந்துரை செய்து நிறைவேற்றிட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பின் சார்பில் வேண்டுகிறோம்.*
                                             
_🤝இப்படிக்கு,_

*_ச.மயில்,_*
_மாநில பொதுச்செயலாளர்,_
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

No comments: