Saturday 30 November 2019

*6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 3 நாள்கள் பிரச்சார இயக்கம் அடங்கய துண்டு பிரசுரம் மற்றும் பெருந்திரள் முறையீடு குறித்த கோரிக்கைகள் அங்கிய மாதிரி துண்டு பிரச்சுரம் மற்றும் வட்டார/ நகரக் கிளைகளின் லெட்டர் பேடில் தட்டச்சு செய்து அதை வட்டாரக்கல்வி அலுவலரிடம் அளித்திட வேண்டிய மாதிரி கடிதம் - பொதுச்செயலாளர் அறிக்கை (பெரிய பதிவு, பொறுமையாக அனைத்தையும் படிக்கவும்)*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://tnptfayan.blogspot.com/2019/11/6-3.html


*பொதுச்செயலாளரின் சுற்றறிக்கை எண்  : 31/2019  நாள்  : 30.11.2019*

*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!_ வணக்கம்.*

**
*🛡17.11.2019 அன்று இராமேஸ்வரத்தில் நடைபெற்ற நம் பேரியக்கத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க மாநிலப் பொதுக்குழு 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 03.12.2019 முதல் 05.12.2019 வரை கோரிக்கைகளை விளக்கி 'ஆசிரியர் சந்திப்புப் பிரச்சார இயக்கம்" நடத்துவதெனவும், அதன் தொடர்ச்சியாக பிரச்சார இயக்கத்தின் நிறைவு நாளான 05.12.2019 அன்று மாலை வட்டாரக்கல்வி அலுவலகங்களில் 'பெருந்திரள் முறையீடு" போராட்டத்தின் மூலம் நம் கோரிக்கைகளை தமிழக அரசுக்கு அனுப்புவது எனவும், அதன் தொடர்ச்சியாக 04.01.2020 அன்று மாவட்டத் தலைநகரங்களில் 'தர்ணா போராட்டம்" நடத்துவதெனவும் முடிவாற்றப்பட்டது.*

**
*🛡அதன்படி தமிழகம் முழுவதும் களப்பணிகளை நம் பேரியக்கத்தின் மாவட்ட, வட்டார, நகரக்கிளைகளின் நிர்வாகிகள் பாய்ச்சல் வேகத்தில் செய்து கொண்டிருக்கிறார்கள்.*

**
*🛡'பெருந்திரள் முறையீடு" என்பது ஒவ்வொரு வட்டாரத்திலும் எவ்வளவு அதிகமாக ஆசிரியர்களைத் திரட்ட முடியுமோ அவ்வளவு ஆசிரியர்களைத் திரட்டி வட்டாரக்கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தி அதன் நிறைவாக பெருந்திரளாகச் சென்று வட்டாரக் கல்வி அலுவலரிடம் கோரிக்கை மனுவை அளிப்பதாகும். எனவே, வட்டார, நகரக் கிளைகளின் நிர்வாகிகள் போராட்டம் நடைபெறும் விவரத்தை வழக்கம் போல் காவல்துறைக்குத் தெரிவிப்பதோடு, போராட்ட விவரத்தை வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கும் எழுத்து மூலமாக துண்டுபிரசுரங்களை இணைத்து தெரிவிக்க வேண்டும். அப்போது தான் வட்டாரக்கல்வி அலுவலர்கள் போராட்ட தினத்தன்று அலுவலகத்தில் இருந்து மனுக்களைப் பெறுவதற்கு ஏதுவாக இருக்கும்.*

**
*🛡தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார, நகரக் கிளைகளிலும் 'பெருந்திரள் முறையீடு" போராட்டம் நடைபெறுவதை மாவட்ட நிர்வாகிகள் உறுதிப்படுத்த வேண்டும். இதில் எவ்வித தவிர்ப்பும், விதிவிலக்கும் எந்தக்கிளைக்கும் வழங்கக்கூடாது. வட்டார, நகரக் கிளைகளின் செயலாளர்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள கோரிக்கை மனுவுடன் இணைந்த கடிதத்தை வட்டார/ நகரக் கிளைகளின் லெட்டர் பேடில் தட்டச்சு செய்து அதை வட்டாரக்கல்வி அலுவலரிடம் அளித்திட வேண்டும்.*

**
*🛡அதனைத் தொடர்ந்து கடிதத்தில் பெறுநர் பகுதியில் இடம்பெற்றுள்ள முகவரிகளுக்கு அக்கோரிக்கை விண்ணப்பங்களை அஞ்சல் வழியே தனித்தனியே அனுப்பிட வேண்டும்.*

**
*🛡மேலும் அனைத்து வட்டார, நகரக் கிளைகளும் வட்டாரக்கல்வி அலுவலரிடம் அளித்த விண்ணப்பத்தின் நகல் ஒன்றை,*

*_பொதுச்செயலாளர்,_*
*_தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,_*
*41,முக்தாருன்னிசாபேகம் தெரு,_*
*_எல்லிஸ் ரோடு,_*
*சென்னை-2._*

*என்ற முகவரிக்கு அஞ்சல் வழியே கண்டிப்பாக அனுப்பி வைத்திட வேண்டும்.*

**
*🛡காலத்தின் அருமைகருதி இருக்கின்ற குறைந்த அளவு நாட்களைப் பயன்படுத்தி 'பிரச்சார இயக்கம்", 'பெருந்திரள் முறையீடு" ஆகிய நிகழ்வுகளை வெற்றிகரமாக முடித்திட மாநில மையம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது.*

**
*🛡வட்டார, நகரக் கிளைகளில் நடைபெறும் 'பெருந்திரள் முறையீடு" தொடர்பான புகைப்படங்களை இயக்க இதழில் வெளியிடுவதற்கு ஏதுவாக tnptfithal@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.*

**
*🛡வட்டார, நகரக் கிளைகளில் நடைபெறும் 'பெருந்திரள் முறையீடு" போராட்ட நிகழ்வில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் துணை நிர்வாகிகளை சிறப்புரையாளர்களாகப் பயன்படுத்திக் கொள்ளவும் மாநில மையம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது.*

*********************
*_வட்டார/ நகரக் கிளைகளின் லெட்டர் பேடில் தட்டச்சு செய்து அதை வட்டாரக்கல்வி அலுவலரிடம் அளித்திட வேண்டிய  மாதிரி கடிதம்:_*
*********************

*_பெறுநர்_*

*⚡(1) மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்*
*புனித ஜார்ஜ் கோட்டை*
*சென்னை - 9*

*⚡(2)மாண்புமிகு. தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள்*
*புனித ஜார்ஜ் கோட்டை*
*சென்னை - 9*

*⚡(3)மாண்புமிகு. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள்*
*புனித ஜார்ஜ் கோட்டை*
*சென்னை - 9*

*⚡(4)மதிப்புமிகு முதன்மைச் செயலாளர் அவர்கள்*
*பள்ளிக் கல்வித்துறை*
*தலைமைச் செயலகம்*
*சென்னை - 9*

*⚡(5)மதிப்புமிகு ஆணையாளர் அவர்கள்*
*பள்ளிக் கல்வித்துறை*
*டி.பி.ஐ வளாகம்*
*கல்லூரிச்சாலை*
*சென்னை - 6*

*⚡(6)மதிப்புமிகு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்கள்*
*பள்ளிக்கல்வி இயக்ககம்*
*கல்லூரிச்சாலை*
*சென்னை - 6*

*⚡(7)மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்கள்*
*தொடக்கக்கல்வி இயக்ககம்*
*கல்லூரிச்சாலை*
*சென்னை - 6*

*⚡(8)மதிப்புமிகு முதன்மைக்கல்வி அலுவலர் அவர்கள்*
*முதன்மைக்கல்வி அலுவலகம்*
*__________மாவட்டம்.*

*⚡(9)மதிப்புமிகு மாவட்டக்கல்வி அலுவலர் அவர்கள்*
*மாவட்டக்கல்வி அலுவலகம்*
*__________கல்வி மாவட்டம்.*

*⚡(10)மதிப்புமிகு வட்டாரக்கல்வி அலுவலர் அவர்கள்*
*வட்டாரக்கல்வி அலுவலகம்*
*_________வட்டாரம்.*
*_மதிப்புமிகு ஐயா,_*

*பொருள்:*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி - 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 05.12.2019 அன்று மாநிலந்தழுவிய அளவில் வட்டாரக்கல்வி அலுவலகங்களில் பெருந்திரள் முறையீடு - ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நலன் சார்ந்த கோரிக்கைகள் - நிறைவேற்ற வேண்டுதல் சார்பு.*

*✍தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் 17.11.2019 அன்று இராமேஸ்வரத்தில நடைபெற்றது. அப்பொதுக்குழுவில் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள 6 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மாநிலம் முழுவதும் கோரிக்கைகளை விளக்கி 03.12.2019 முதல் 05.12.2019 முடிய ஆசிரியர் சந்திப்பு பிரச்சார இயக்கம் நடத்துவதெனவும், 05.12.2019 அன்று மாலை மாநிலம் முழுவதும் அனைத்து வட்டாரக்கல்வி அலுவலகங்கள் முன்பும் ~பெருந்திரள் முறையீடு செய்து தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அளிப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டது.*

*✍அதன்படி               மாவட்டம்              வட்டாரக்கல்வி அலுவலகத்தில் 05.12.2019 அன்று நடைபெற்ற பெருந்திரள் முறையீட்டின் போது இத்துடன் இணைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் அடங்கிய விண்ணப்பத்தைத் தங்களுக்கு அளித்துள்ளோம்.*

*✍மேற்படி கோரிக்கைகளை நிறைவேற்றித்தர தாங்கள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு உதவிட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின்             வட்டாரக்கிளையின் சார்பில் தங்களைக் கனிவுடன் வேண்டுகிறோம்.*
                                           
*_இப்படிக்கு_*

*வட்டாரத்தலைவர்*      
*வட்டாரச்செயலாளர்*
*வட்டாரப்பொருளாளர்*
 
*_இணைப்பு:_*
*⚡1) 6 அம்சக் கோரிக்கைகள்.

*********************
*_6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 3 நாள்கள் பிரச்சார இயக்கம்  அடங்கய துண்டு பிரசுரம் மற்றும் பெருந்திரள் முறையீடு குறித்த கோரிக்கைகள் அங்கிய மாதிரி துண்டு பிரச்சுரம்:_*
*********************

**
*🛡தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலந்தழுவிய அளவில் 03.12.2019 முதல் 05.12.2019 முடிய 3 நாட்கள் “ஆசிரியர் சந்திப்புப் பிரச்சார இயக்கம்” அதன் தொடர்ச்சியாக 05.12.2019 மாலை வட்டாரக்கல்வி அலுவலகங்களில் பெருந்திரள் முறையீடு*

*_கோரிக்கைகள்:_*

*⚡1) தமிழக அரசு 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு அறிவித்துள்ள பொதுத்தேர்வு என்பது உளவியல் ரீதியாக மாணவர்களின் கல்வி நலனைப் பாதிப்பதோடு, ஏழை எளிய கிராமப்புறக் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு எதிரானதாகும். மேலும், பிஞ்சுக் குழந்தைகளின் உள்ளத்தில் தேர்வு பயத்தை ஏற்படுத்துவதோடு, மாணவர்களின் இடைநிற்றலை அதிகரிக்கும் என்பதால் தமிழ்நாட்டின் எதிர்காலக்கல்வி வளர்ச்சி கருதி தமிழக அரசு இத்திட்டத்தைக் கைவிட வேண்டும்.*

*⚡2) தேசிய கல்விக்கொள்கை – 2019, தேசத்தின் எதிர்காலக்கல்வி வளர்ச்சிக்கு ஊறு விளைவிக்கக்கூடிய பல்வேறு கூறுகளைக் கொண்டுள்ளதாலும், தேசத்தின் ஏழை எளிய, சமூகத்தில் பினதங்கிய குழந்தைகளின் எதிர்காலக் கல்விக்கு பாதகம் ஏற்படுத்துவதோடு, கல்வியை முற்றிலும் வணிகமயமாக்கக்கூடிய நடவடிக்கை என்பதாலும் மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கை – 2019ஐ தேசநலன் கருதி திரும்பப்பெற வேண்டும்.*

*⚡3) கடந்த காலங்களில் தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக ஜாக்டோ ஜியோ போராட்டம், தனிச்சங்கப் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு தங்கள் உரிமைக்காகப் போராடிய பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீது தமிழக அரசு மேற்கொண்டுள்ள அனைத்து ஒழுங்கு நடவடிக்கைகளையும் நல்லெண்ண அடிப்படையில் உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்.*

*⚡4) பள்ளி தொடர்பான அனைத்துப் புள்ளி விவரங்களையும் கல்வியியல் மேலாண்மைத் தகவல் மையம் (EMIS) உள்ளிட்ட இணையதளங்களில் பதிவேற்றம் செய்வதற்குரிய எவ்விதமான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளும் பெரும்பாலான ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் இல்லாத சூழலிலும், கிராமப்புறங்களில் அமைந்துள்ள பள்ளிகளில் இணையதள தொடர்புகள் கிடைக்கப்பெறாத நிலையிலும் அப்பணிகளைச் செய்திட தலைமை ஆசிரியர்களைக் கட்டாயப்படுத்துவது என்பது அவர்களது கற்பித்தல் பணியையும், அன்றாட நடைமுறை அலுவல்களையும் பாதிப்பதோடு, மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும் உள்ளது.  எனவே, மேற்கண்ட EMIS உள்ளிட்ட இணையதளப் பணிகளை மேற்கொள்வதற்கு வட்டார அளவில் ஊழியர் ஒருவரை தமிழக அரசு நியமித்து ஆசிரியர்களை முழுமையாக, நிம்மதியாக கற்பித்தல் பணியை ஆற்றிட வழிவகை செய்திடவேண்டும்.*

*⚡5) தொடக்கக் கல்வித்துறையில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலும், குறுவள மையங்களாகச் செயல்படும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களது அன்றாட அலுவல்களைப் பாதிக்கும் வகையிலும் ஆரம்ப, நடுநிலைப்பள்ளிகளைக் கண்காணிக்கும் பணியை உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கி வெளியிடப்பட்டுள்ள அரசாணை எண்கள்: 145, 202 ஆகியவற்றைத் தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும்.*

*⚡6) 03.02.2017 அன்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் நடத்திய தொடக்கக்கல்வி இயக்குநரக முற்றுகைப் போராட்டத்தின்போது, தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முன்வைக்கப்பட்ட மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோரிக்கைகளில் நிறைவேற்றப்படாமல் உள்ள கீழ்க்கண்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.*

*😡(1) தன் பங்கேற்பு ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள வல்லுநர் குழு அறிக்கையை விரைவாகப் பெற்று பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.*

*😡(2) இடைநிலை ஆசிரியர்களுக்கு கடந்த ஊதியக்குழுவில் ஏற்பட்டுள்ள ஊதிய இழப்பைச் சரிசெய்து எட்டாவது ஊதியக்குழுவில் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டும்.*

*😡(3) எட்டாம் வகுப்பு வரை நடைமுறையில் உள்ள கட்டாயத் தேர்ச்சி தொடரவேண்டும்.*

*😡(4) பி.லிட் கல்வித்தகுதி கொண்ட நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு பி.எட் கல்வித் தகுதிக்கு, முன்பு வழங்கப்பட்டதுபோல் ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும்.*

*😡(5) மூத்தோர் - இளையோர் ஊதிய முரண்பாடு களையப்பட வேண்டும்.*

*😡(6) ஆசிரியர்கள் உயர்கல்வி பயின்றதற்கான பின்னேற்பு ஆணைகள் விரைவில் வழங்கப்பட வேண்டும்.*

*😡(7) பி.காம், பி.ஏ (பொருளாதாரம்) ஆகிய பாடப்பிரிவுகளில் பட்டம் பெற்று பி.எட் கல்வித்தகுதி பெற்ற ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும்.*

*😡(8) அனைத்து தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கும் கணினி வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.*

_🤝தோழமையுடன்;_

*_ச.மயில்,_*
*மாநில பொதுச்செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм







Thursday 28 November 2019

*5,8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://tnptfayan.blogspot.com/2019/11/58.html


*⚡5ஆம் வகுப்பு தேர்வு ஏப்ரல் 15ஆம் தேதி துவங்கி, ஏப்ரல் 20ஆம் தேதி வரை நடைபெறும்*


*⚡8 ஆம் வகுப்பு தேர்வு மார்ச் 30ஆம் தேதி துவங்கி, ஏப்ரல் 17ஆம் வரை நடைபெறும்*



*_5 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை:_*

 *ஏப்ரல் 15 - தமிழ்*

*ஏப்ரல் 17 - ஆங்கிலம்*

*ஏப்ரல் 20 - கணிதம்*


 

*_8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை:_*


*மார்ச் 30 - தமிழ்*

*ஏப்ரல் 2 - ஆங்கிலம்*

*ஏப்ரல் 8 - கணிதம்*

*ஏப்ரல் 15 - அறிவியல்*


*ஏப்ரல் 17 - சமூக அறிவியல்*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм




*ஆதிக்கம் செய்யும் ஆசிரியர் சங்கங்கள்!*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://tnptfayan.blogspot.com/2019/11/blog-post_28.html


*✍தமிழக அரசுப் பள்ளிகளில் கல்வியின் தரம், கற்றல்-கற்பித்தல் குறித்த பிரச்சினைகளைப் பற்றி பேசும் போது, ஆசிரியர் சங்கங்களின் செயல்பாடுகள் குறித்துப் பேசாமல் தவிர்க்க முடியாது. ஆசிரியர்களின் பொருளாதார நிலை உயர்வு, கல்வித் தரத்தில் ஏற்பட்ட வளர்ச்சி - வீழ்ச்சி என்று எல்லாவற்றிலும் ஆசிரியர் சங்கங்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. கல்வித்துறை அதிகாரிகளின் செயல்பாடுகளில் கூட தலையீடு செய்யும் அளவுக்கு  ஆசிரியர் சங்கங்கள் அத்துனை சக்தி வாய்ந்தவையாக  இருக்கின்றன.*

*✍ஆரம்பகால ஆசிரியர் சங்கங்கள்,*
*✍மாறிப்போன காட்சிகள்,*
*✍ஆதரவு இழப்பதன் பின்னணி,*
*✍விவாதிக்கப்பட வேண்டியவை,*
*✍என்ன செய்ய வேண்டும்?*

*_கட்டுரையினை விரிவாக காண கீழே உள்ள link ஐ கிளிக் செய்யவும்:_*
👇👇👇👇👇👇👇👇

https://tnptfayan.blogspot.com/2019/11/blog-post_28.html


_✍கட்டுரையாளர்:_

*_திருமதி.உமா,_*
*மாநில ஒருங்கிணைப்பாளர்,*
*பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம்.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


*பள்ளி விடுமுறை நாட்களில் பயிற்சி இருந்து பயிற்சி பெற்று இருந்தால் அதற்கு ஈடுசெய் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் - CM Cell Reply*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://tnptfayan.blogspot.com/2019/11/cm-cell-reply.html


*_கேள்வி:_*

*⚡தூத்துக்குடி மாவட்டம் வானரமுட்டி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் கடந்த அக்டோபர்-2019 ம் மாதத்தில் ஐந்து நாள் பயிற்சியாக NISHTHA பயிற்சி தொடக்கக்கல்வி பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது. அன்றைய காலத்தில் 15.10.2019 அன்று மழை காரணமாக மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவு படி பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்ட நிலையில் பயிற்சியானது விடுமுறையின்றி தொடர்ந்து நடைபெற்றது. அரசாணை நிலை எண்:62, நாள்:13.03.2015 ன் படி விடுமுறை நாளன்று 15.10.2019 ல் நடைபெற்ற பயிற்சிக்கு ஈடுசெய் விடுப்பு எடுத்துக்கொள்ளலாமா?*

*_பதில்:_*

*⚡நிலை எண்:62, பள்ளிக்கல்வித் (அகஇ)துறை நாள்:13.03.2015 ன் படி, பயிற்சி நாட்கள் விடுமுறை நாட்களாக இருப்பின் 10 நாட்களுக்கு மிகாமல் ஈடுசெய் விடுப்பாக அனுமதிக்கலாம் என்ற விபரம் மனுதாரருக்கு தூத்துக்குடி முதன்மைக்கல்வி அலுவலக ஒ.மு.எண்:5574/அ5/2019, நாள்:09.11.2019 ன் படி தெரிவிக்கப்படுகிறது.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

Tuesday 26 November 2019

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் (17.11.2019) இராமேஸ்வரம் மாநிலப் பொதுக்குழு முடிவின்படி நடைபெற உள்ள ஆசிரியர் சந்திப்புப் பிரச்சார இயக்கம் (3.12.2019 முதல் 5.12.2019 முடிய) மற்றும் 5.12.2019 பெருந்திரள் முறையீடு ஆகியவற்றுக்கான மாதிரி துண்டுப்பிரசுரம். வட்டார, நகரக் கிளைகள் பயன்படுத்திக் கொள்ளவும்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://tnptfayan.blogspot.com/2019/11/17112019-3122019-5122019-5122019.html


*_தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக அனைத்து வட்டாரங்களிலும் 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலந்தழுவிய அளவில் 03.12.2019 முதல் 05.12.2019 முடிய 3 நாட்கள் “ஆசிரியர் சந்திப்புப் பிரச்சார இயக்கம்" அதன் தொடர்ச்சியாக வட்டாரத் தலைநகரங்களில் பெருந்திரள் முறையீடு*

_கோரிக்கைகள்:_

**
*🛡1) தமிழக அரசு 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு அறிவித்துள்ள பொதுத்தேர்வு என்பது உளவியல் ரீதியாக மாணவர்களின் கல்வி நலனைப் பாதிப்பதோடு, ஏழை எளிய கிராமப்புறக் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு எதிரானதாகும்.மேலும், பிஞ்சுக் குழந்தையின் உள்ளத்தில் தீய பயத்தை ஏற்படுத்துவதோடு இடைநிற்றலை தமிழ்நாட்டின் எதிர்காலக் கல்வி வளர்ச்சி கருதி தமிழக அரசு இத்திட்டத்தை கைவிட வேண்டும்.*

**
*🛡2) தேசிய கல்விக் கொள்கை - 2019, தேசத்தின் எதிர்கால கல்வி வளர்ச்சிக்கு ஊறு விளைவிக்கக்கூடிய பல்வேறு கூறுகளைக் கொண்டுள்ளதாலும் தேசத்தின் ஏழை எளிய, சமூகத்தில் பின்தங்கிய குழந்தைகளின் எதிர்காலக் கல்விக்கு பாதகம் ஏற்படுத்துவதோடு, காவியை முற்றிலும் வணிகாயமாக்க கூடிய நடவடிக்கை என்பதாலும்  மத்திய அரசு தேசியக்கல்விக் கொள்கை - 2019 ஐ தேசநலன் கருதி திரும்பப்பெற வேண்டும்.*

**
*🛡3)கடந்த காலங்களில் தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக ஜாக்டோ ஜியோ போராட்டம், தனிச்சங்க போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு தங்கள் உரிமைக்காகப் போராடிய பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீது தமிழக அரசு மேற்கொண்டுள்ள அனைத்து ஒழுங்குநடவடிக்கைகளையும் நல்லென்ன அடிப்படையில் உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.*

*⚔*
*🛡EMIS புள்ளி விவரங்கள் உள்ளிட்ட இணையதளப் பயன்பாடுகளை கையாளுவதற்குரிய எவ்விதமான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளும் பள்ளிகளில் இல்லாத சூழலில் தலைமை ஆசிரியர்களைக் கட்டாயப்படுத்துவது என்பது அவர்களது கற்பித்தல் பணியைப் பாதிப்பதாகவும், மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும் உள்ளது. எனவே மேற்கண்ட EMIS உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்கு வட்டார அளவில் ஊழியர் ஒருவரை தமிழக அரசு உடனடியாக நியமித்திட வேண்டும்.*

**
*🛡தொடக்கக்கல்வி துறையில் குழப்பத்தை ஏற்படுத்துகின்ற வகையிலும், குறுவள மையமாக செயல்படும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களது அன்றாட அலுவல்களை பாதிக்கும் வகையிலும், ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளை கண்காணிக்கும் பணியை உயர்நிலை, மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கி வெளியிடப்பட்டுள்ள அரசாணை எண்கள்: 145, 202, ஆகியவற்றைத் திரும்பப்பெற வேண்டும்.*

**
*🛡(5) 03.02.2017 அன்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் நடத்திய தொடக்கக்கல்வி இயக்குநரக முற்றுகைப் போராட்டத்தின் போது, தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முன்வைக்கப்பட்ட மற்றும் பெற்றுக்கொள்ளப்பட்ட கோரிக்கைகளில் நிறைவேற்றப்படாமல் உள்ள கீழ்க்கண்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.*

*⚡(1) தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள வல்லுநர் குழு அறிக்கையை விரைவாகப் பெற்று பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.*

*⚡(2)இடைநிலை ஆசிரியர்களுக்கு கடந்த ஊதியக்குழுவில்ஏற்பட்டுள்ள ஊதிய இழப்பை சரி செய்து எட்டாவது ஊதியக்குழுவில் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க பட வேண்டும்,*

*⚡(3) எட்டாம் வகுப்பு வரை நடைமுறையில் உள்ள கட்டாயத் தேர்ச்சி தொடரவேண்டும்.*

*⚡(4)பி.லிட் கல்வித்தகுதி கொண்ட நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பி.எட் கல்வித் தகுதிக்கு வழங்கப்பட்டது போல் ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும்.*

*⚡(5)மூத்தோர் இளையோர் ஊதிய முரண்பாடு களையப்பட வேண்டும்.*

*⚡(6)ஆசிரியர்கள் உயர்கல்வி பயின்றதற்கான பின்னேற்பு ஆணைகள் விரைவில் வழங்கப்பட வேண்டும்.*

*⚡(7)பி.காம், பி.ஏ (பொருளாதாரம்) ஆகிய பாடப்பிரிவுகளில் பட்டம் பெற்று பி.எட் கல்வித்தகுதி பெற்ற ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும்.*

*⚡(8)அனைத்து தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கும் கணினி வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.*

**
*🛡04.01.2020 அன்று மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி மாவட்டத் தலைநகரங்களில் _"தர்ணா போராட்டம்_” நடைபெறும்.*

*_ஆசிரியப் பேரினமே!_*
*_அணிதிரள்வோம்!!_*
*_வெற்றி பெறுவோம்!!!_*

_🤝தோழமையுடன்;_

*_ச.மயில்,_*
*மாநில பொதுச்செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



*EMIS ONE செயலியை தற்பொழுது பயன்படுத்த வேண்டாம் அறிவிப்பு வரும்வரை பழைய TNSCHOOLS ATTENDANCE APP ஐ பயன்படுத்துமாறு அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிது*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://tnptfayan.blogspot.com/2019/11/emis-one-tnschools-attendance-app.html


*அனைவருக்கும் வணக்கம்*
                   
*⚡EMIS ONE என்ற புதிய  ஆசிரியர்கள் & மாணவர்கள்  வருகைப்பதிவு  மற்றும்  TNTP பயன்பாட்டிற்கு செயலி உருவாக்கப்பட்டு அது சார்ந்த பல்வேறு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உரிய அறிவிப்பு வரும் வரை பழைய EMIS -TN SCHOOLS செயலியை தொடர்ந்து பயன்படுத்தவும்.புதிய செயலியைப் பயன்படுத்த வேண்டாம் என அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் தெரிவிக்கப்படுகிறது.*

*_By_*

*EMIS STATE TEAM*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

Monday 25 November 2019

*பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம் சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில அளவிலான கல்வி ஆர்வலர்கள் சந்திப்புக் கூட்டம் - நாளிதழ் செய்தி தொகுப்பு*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://tnptfayan.blogspot.com/2019/11/blog-post_25.html


*🗞பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம் சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில அளவிலான கல்வி ஆர்வலர்கள் சந்திப்புக் கூட்டம் திருச்சியில் உள்ள ஜோசப் கல்லூரியில் நேற்று (24.11.2019) நடைபெற்றது.*

*🗞கூட்டத்திற்கு பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்க தலைவர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் _தோழர். வசந்திதேவி_ அவர்கள் தலைமை தாங்கினார்.*

*🗞பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்க செயலாளர் _தோழர்.கிருஷ்ணமூர்த்தி_ அவர்கள் சிறப்புரையாற்றினார்.*

*🗞பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் _தோழர்.உமாமகேஸ்வரி_ அவர்கள்,*

*🗞பேராசிரியர் _தோழர்.மாடசாமி_ ஐயா அவர்கள்,*

*🗞பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்க திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் _தோழர்.ஜெ.மனோகரன்_ அவர்கள்,*

*🗞பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்க சென்னை ஒருங்கிணைப்பாளர் _தோழர்.தென்கலை இசைமொழி_ அவர்கள்,*

*🗞பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்க அனைத்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரி கல்வி ஆர்வலர்கள் கலந்துகொண்டு கலந்துரையாடல் நிகழ்த்தி விழாவினை சிறப்பித்தார்கள்.*

_பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம் சார்பாக தமிழகம் மற்றும் புதுச்சேரி கல்வி ஆர்வலர்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்ட செய்தி துளிகள்:_

*⚡5, 8 ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வினை ரத்து செய்ய வேண்டும்,*

*⚡புதிய கல்விக்கொள்கையால் பழங்குடி மக்களுக்கு கல்வி இழப்பு ஏற்படும் சூழ்நிலை,*

*⚡இலவச கல்வி ஒன்றே வளர்ச்சிக்கான ஒரே தீர்வு,*

*⚡Appoint Teachers instead of Shutting down schools; Activist appeals to government.*

*🙏Thanks🙏*

_🗞தினத்தந்தி_
_🗞தினகரன்_
_🗞தினமணி_
_🗞The New Indian Express_

_🤝தோழமையுடன்;_

*_உமாமகேஸ்வரி_*
*மாநில ஒருங்கிணைப்பாளர்,*
*பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம்.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм




*CPS - கால நீட்டிப்பிலேயே காலம் தள்ளி போகும் வல்லுநர் குழு அறிக்கை*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://tnptfayan.blogspot.com/2019/11/cps.html


*CPS NEWS:*
*25.11.2019*

*முதலாம் ஆண்டு நிறைவு.*

*CPS வல்லுநர் குழு அரசிடம் அறிக்கை அளித்து.....*

*இன்று  இரண்டாம் ஆண்டு துவக்க விழா.....*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

Sunday 24 November 2019

*அதிமுக பொதுக்குழு 2019*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://tnptfayan.blogspot.com/2019/11/2019_24.html


*கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 5 புதிய மாவட்டங்களை உருகாக்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம்*

_அதிமுக உட்கட்சி விதிகளில் திருத்தம்_

*✍உட்கட்சி தேர்தலில் போட்டியிடுவோர் 5 ஆண்டுகள் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும்*

*⚡ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியிடுவோர் 5 ஆண்டுகள் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும்*

*✍நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும்*

*🌟உள்ளிட்ட முக்கிய தீர்மானங்களை அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

*TAMILNADU TEXT BOOK AND EDUCATIONAL SERVICE CORPORATION - PRICE LIST OF TEXT BOOKS*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://tnptfayan.blogspot.com/2019/11/tamilnadu-text-book-and-educational.html


*⚡தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையின் 1 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள அனைத்துப் பாடப் புத்தகங்களும் இ-சேவை மையத்தில் அதற்குரிய தொகையை கட்டினால் அனைத்து பாடப் புத்தகங்களும் வீட்டுக்கே கொரியர் மூலம் வந்து விடும் போட்டி தேர்வுகளுக்கு படிப்பவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும் விலைப்பட்டியலும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.*
👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼

https://tnptfayan.blogspot.com/2019/11/tamilnadu-text-book-and-educational.html


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм





*NMMS EXAM HALL TICKET DOWNLOAD - செய்தி துளிகள் மற்றும் Download செய்யும் வழிமுறைகள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://tnptfayan.blogspot.com/2019/11/nmms-exam-hall-ticket-download-download.html


*⚡தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகைத் திட்டத் தேர்வு டிசம்பர் 2019 (NMMS Exam) 01.12.2019 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது.*

*⚡தேர்வர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக 22.11.2019 முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.* 

*⚡அரசுத் தேர்வுகள் இயக்குநரின் 22.1.2019 நாளிட்ட செய்தி குறிப்பு அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து அரசு நகராட்சி அரசு உதவிபெறும் நடுநிலை உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தகவலுக்காகவும், தக்க நடவடிக்கைக்காகவும் அனுப்பப்பட்டுள்ளது.*

*_Hall Ticket Download செய்யும் வழிமுறை_*
👇👇👇👇👇👇👇👇

*NMMS Hall Ticket Download*

https://apply1.tndge.org/

User login

Emis...User name
Password

Sign in

Report Section

Multiple report

Filled All

Get Hall Ticke

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

*பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அவர்கள் தலைமையில் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத சங்கங்களின் பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடல் 26.11.2019 அன்று நடைபெற உள்ளது - பள்ளிக்கல்வி இயக்குநர்.*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://tnptfayan.blogspot.com/2019/11/26112019.html


*⚡சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள அறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா நூலக கூட்டரங்கில் 26.11.2019 செவ்வாய் கிழமை முற்பகல் 9.30 மணியளவில் கலந்துரையாடல் நடைபெற உள்ளது.*

*⚡மதிப்புமிகு பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அவர்கள் தலைமையில் ஆசிரியர் சங்கங்கள் மற்றும் ஆசியரல்லாத அமைச்சுப் பணியாளர் சங்கங்கள் பொறுப்பாளர்களுடன் பணியாளர் நலன் மற்றும் பள்ளிக்கல்வித்துறையின் வளர்ச்சி சார்ந்து கலந்துரையாடல் ஒன்றை நடத்திட ஆணையர் அவர்கள் விழைந்துள்ளார்.*

*⚡இக்கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் மூன்று பொறுப்பாளர்கள், பதிவு செய்யப்பட்ட அங்கீகாரம் பெறாத சங்கங்களின் சார்பாக இரண்டு பொறுப்பாளர்களும் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. தங்கள் கருத்துகளை எழுத்து பூர்வமாக கூட்டம் தொடங்கும் முன்னர் சமர்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

*_தமிழ்நாடு பள்ளிக் கல்வி புதிய நிர்வாக அமைப்பு_*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://tnptfayan.blogspot.com/2019/11/blog-post_24.html


*⚡தமிழ்நாடு பள்ளிக்கல்வி நிர்வாக அமைப்பு முறைக்கான வரைபடம் (Flow Chart) & Promotion Level.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


Friday 22 November 2019

*இரண்டாம் பருவ நிறைவு தேர்வு மற்றும் அரையாண்டு தேர்வு கால அட்டவணை வெளியீடு*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://tnptfayan.blogspot.com/2019/11/blog-post_55.html


*✍அனைத்து வகை தொடக்க/ நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு இரண்டாம் பருவ நிறைவு தேர்வு மற்றும் அரையாண்டு தேர்வுக்கான (டிசம்பர் 2019) கால அட்டவணையினை புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலர் அவர்கள் வெளியிட்டுள்ளார்.* 

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

*Do_you_know❓உங்களுக்குத் தெரியுமா❓*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://tnptfayan.blogspot.com/2019/11/doyouknow.html


*⚡Scan!*
*⚡Explore!*
*⚡Have_Fun_learning!*
*⚡TN_DIKSHA*

*_யானையின் தந்தம் ஒரு முறை உடைந்தால் மீண்டும் வளராது !!_*

*Per_Day_One_QR_Code*

https://diksha.gov.in/play/content/do_312796377220587520116442 

*Dear Friends,*

*_Let's spread the Happy learning!!_*

*📲Please share this flyer with your friends and family over Workplace, Facebook, and WhatsApp.*

*📲Hope this will enlighten the knowledge of our children.*

*_For daily updates please like our page “TN DIKSHA” on Facebook!!_*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுநிலை, சிறப்புநிலைக்கு ஊதியத்தினை நிர்ணயம் செய்தது சரி என இயக்குனர் தெளிவுரை வழங்கியும், தணிக்கைத் தடையினை நீக்கிடவும் அறிவுறுத்தி தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைக் கடிதம் வெளியீடு


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://tnptfayan.blogspot.com/2019/11/blog-post_9.html


*🎙31.05.2009 க்கு முன்னர் ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவியில் தேர்வுநிலை தகுதிக்கு 15600 - 36800 + 5400 GP தர ஊதியம் என்ற விகிதத்திலும், சிறப்பு நிலை ஊதியக்கட்டு 15600 - 36800 + 5700 தர ஊதியம் என்ற விகிதத்திலும் நிர்ணயம் செய்ய வேண்டும். என நிர்ணயம் செய்தது சரி என இயக்குனர் தெளிவுரை..*

*🎙மேற்கண்ட ஊதிய விகிதத்தில் ஊதிய நிர்ணயம் செய்வது சரியானது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.*

*🎙மேலும் இது சார்ந்த தணிக்கைத் தடையினை நீக்கிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


*மைக்ரோசாப்ட் கல்வி மேளாவில் அசத்திய தமிழக அரசுப்பள்ளி ஆசிரியர்கள்!*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://tnptfayan.blogspot.com/2019/11/blog-post_22.html


*📲ஆண்டுதோறும் மைக்ரோசாப்ட் நிறுவனம் பள்ளி ஆசிரியர்களுக்காக நடத்தப்பெறும் இணையவழியிலான பாடப் பயிற்சியில் தேர்ச்சி பெற்று பதக்கங்கள், சான்றிதழ்கள் மற்றும் மதிப்பெண் புள்ளிகள் ஆகியவற்றை தேர்வர்களுக்கு வழங்கி வருகிறது.*

*📲அவற்றுள் குறிப்பிடத்தக்க மைக்ரோசாப்ட் கல்விப் புத்தாக்கக் கல்விப் பயிற்றுநர்  (Microsoft Innovative Education's Educator) சான்று பெற்றவர்களின் கல்வி மற்றும் பயிற்சி சார்ந்த அனுபவங்களை நேரிடையாக ஏனையோருக்குக் கிடைக்கச் செய்யும் பொருட்டு தேசிய அளவில் புதுடெல்லியில் காரகோன் பகுதியில் நாடு முழுவதிலும் இதுபோன்று தேர்வு செய்யப்பட்டவர்களைத் தம் சொந்த செலவில் விமானப் பயணம் மேற்கொள்ள செய்தும் ஐந்து நட்சத்திர சொகுசு விடுதியில் தங்க வைத்தும் விருந்தளித்தும்  '21 ஆம் நூற்றாண்டின் புதுமைக் கற்றலில் மைக்ரோசாப்ட்டின் பங்கு' என்னும் தலைப்பில்  கடந்த நவம்பர் 19, 20 ஆகிய இரண்டு நாள்கள் கல்வி மேளா (Edu Days) திருவிழாவினைச் சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தது.*

*📲தேசிய அளவில் நடக்கும் இந்தக் கல்விக் கருத்தரங்கு மற்றும் திருவிழாவில் கற்றல் மற்றும் கற்பித்தலில் பல்வேறு புதுமைகள் படைத்து வரும் சற்றேறக்குறைய 120 ஆசிரியர் பெருமக்களிடமிருந்து உலக அளவிலான பல்வேறு கற்றல் செயல்திட்ட ஆய்வுகள் குழுவாக ஆறுவகையான தலைப்புகளில் 18 குழுவினரால் பெறப்பட்டு அவற்றை உலகளவிலான தேர்வுக்குழுவினர் மற்றும் பார்வையாளர்கள் மூலம் தலைசிறந்த குழு ஆய்வு செயல்திட்டத்திற்கு பரிசுகள் வழங்கிப் பாராட்டு தெரிவிக்கப்பட்டன.*

_இதற்கு தமிழ்நாட்டிலிருந்து தேர்வு செய்யப்பட்ட  எட்டு அரசுப்பள்ளி ஆசிரியர்களான,_

*⚡1) முனைவர் மணி கணேசன் பட்டதாரி ஆசிரியர் மேலகண்டமங்கலம் திருவாரூர் மாவட்டம்.*

*⚡2) முனைவர் ப.இரமேஷ் இடைநிலை ஆசிரியர் கருநிலம் காஞ்சிபுரம் மாவட்டம்.*

*⚡3) தேசிய விருதாளர் S.திலீப் பட்டதாரி ஆசிரியர் அரசினர் மேனிலைப்பள்ளி சத்தியமங்கலம் விழுப்புரம் மாவட்டம்.*

*⚡4) தேசிய விருதாளர் P.கருணைதாஸ் பட்டதாரி ஆசிரியர் அரசினர் மேனிலைப்பள்ளி நாரணபுரம் விருதுநகர் மாவட்டம்.*

*⚡5) மாநில விருதாளர் சு.மனோகர் இடைநிலை ஆசிரியர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வெள்ளியணை தாந்தோணி ஒன்றியம் கரூர் மாவட்டம்.*

*⚡6) ஒளிரும் ஆசிரியர் விருதாளர் K.சரவணன் பட்டதாரி ஆசிரியர் நகராட்சி நடுநிலைப்பள்ளி பெத்லேகம் ஆம்பூர் நகராட்சி வேலூர் மாவட்டம்.*

*⚡7) ஆசிரியர் பயிற்றுநர் கி.ஐயப்பன் காடையாம்பட்டி சேலம் மாவட்டம்.*

*⚡8) கனவு ஆசிரியர் விருதாளர் இரா. இளவரசன் பட்டதாரி ஆசிரியர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வேடப்பட்டி அயோத்தியாபட்டணம் ஒன்றியம் சேலம் மாவட்டம்.*

*📲ஆகியோர் தங்களது குழுவில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுச் செயல்திட்டங்களுக்காகப் பாராட்டுப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இவற்றுள் முனைவர் மணி கணேசன் மற்றும் இரா.இளவரசன் ஆகியோரின் இருவேறு படைப்புகளுக்கு முதலிடம் கிடைத்தது.*

*📲நிகழ்ச்சியில் மனித வள மேம்பாட்டுத்துறையின் கீழ் செயல்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் கல்வியியல் பணிகள் நிறுவன இணை இயக்குநர் மற்றும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு இராஜீவ் கௌடா ஆகியோர் சான்றிதழ் வழங்கிச் சிறப்பித்தனர்.*

*📲தேசிய விருதாளர் P.கருணைதாஸ் அவர்களின் மினிபைட் ராக்கெட் குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனம் சிறப்புப் பாராட்டு தெரிவித்தது.*

*📲அதேபோல் மற்றுமொரு தேசிய விருதாளர் ஶ்ரீ.திலீப் அவர்கள் தம் செயல்திட்டம் குறித்து அளித்த விளக்கம் அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டது.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



Thursday 21 November 2019

*5, 8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு முறை❓- தமிழகத்தில் கல்வியின் நிலை❓*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://tnptfayan.blogspot.com/2019/11/5-8.html


*✍தேசியக் கல்விக் கொள்கை, பெண்களுக்குக் கல்வி மறுக்கப்படுவதையும், கல்வி பெறாத சமூகத்தை உருவாக்குவதையுமே நமக்கு அளிக்க இருக்கிறது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன் பெண்கள் கல்வி கற்க பள்ளி செல்ல முடியாத நிலையை மாற்ற போராடி பெற்றது பெண் கல்வி; இப்போது மீண்டும் பெண்கள் கல்வி கற்காத சூழலை உருவாக்கும் வகையில் தேசியக் கல்விக்கொள்கை வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.*

*✍ஏற்கனவே 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கே மாணவர்கள், பெற்றோர்கள் உளவியல் ரீதியாக பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர். எப்போதும் படிப்பு, மனப்பாடம், தேர்வு, டியூஷன் இப்படி அவர்களை வருத்தும்போது 3 ஆம் வகுப்பு பயிலும் குழந்தைக்குப் பொதுத்தேர்வு என்பதே பெரும் வன்முறை. பாடத்தைக் கடந்த பல திறன் கற்கும் வயதில் பரீட்சைக்கு மட்டுமே படி என அச்சுறுத்துவதை எப்படி நாம் ஏற்றுக்கொள்வது ?*

*✍மத்திய அரசு தனது கல்விக் கொள்கையில் மட்டும் தான் கூறியிருக்கிறது. ஆனால் தமிழக அரசு 5, 8 வகுப்புகளுக்குக் கல்வித்துறையின் மூலம் அரசாணையையே (Go -164) அறிவித்துவிட்டது. சரி, அப்படியே பொதுத்தேர்வை வைக்கட்டும். ஆனால் தொடக்கப் பள்ளிகளில் எத்தனை ஆசிரியர்கள் இருக்கிறார்கள்?*

*✍1- 5 வகுப்புகளுக்கும் சேர்த்து 2 ஆசிரியர்கள் மட்டுமே பணிபுரியும் நிலை, பல பள்ளிகளில் ஓராசிரியர் மட்டுமே. இவை முறையே ஓராசிரியர் பள்ளி, ஈராசிரியர் பள்ளி என நடந்து வருகிறது. குழந்தைகளுக்கு இவர்கள் நடத்த வேண்டிய பாடங்களின் எண்ணிக்கை 23. இதுவே பெரிய சவாலாக இருக்கும் பட்சத்தில், அரசும் துறையும் கற்பித்தல் அல்லாத பணிகளையும் ஏராளமாக இவர்களுக்குத் தருகின்ற சூழலில், 5 ஆம் வகுப்புக்குப் பொதுத்தேர்வு என்றால் எப்படி சாத்தியம்?*

*✍இந்த ஒரு மாதத்தில் 4 கல்விக் கொள்கை முடிவுகளைத் தமிழக அரசு நடைமுறைப் படுத்தியிருக்கிறது. பள்ளி இணைப்பு (Merging ), ஒருங்கிணைந்த பள்ளி வளாகம் (School complex), தன்னார்வலர்கள் வகுப்பெடுத்தல் (Volunteers), பொதுத்தேர்வு (Public Exam). விரைவில் கல்லூரிக்குள் காலடி எடுத்து வைக்கவும் பொதுத்தேர்வு வரவிருக்கிறது.*

*✍ஒரு 'நீட்' தீர்வுக்கே அனிதா போல பலரையும் இழந்திருக்கிறோம். இன்னும் உயர் கல்விக்கும் பொது நுழைவுத்தேர்வு என்றால் எத்தனை பேரை நாம் இழப்பது?*

*✍அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவதால் ஆசிரியர் குறைப்பு, பள்ளிகளை மூடுதல் போன்றவை நிகழ்வதாக செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன. கல்வி வரலாற்றில் முன்னாள் முதல்வர் காமராசர் முயற்சியில் கட்டப்பட்ட பள்ளிகள் இன்று மூடப்படுகின்றன. எங்காவது ஒரு புதிய அரசுப்பள்ளி திறக்கப்பட்டது என சமீப காலங்களில் செய்தி வந்துள்ளதா? அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைய என்ன காரணம்? ஆண்டுதோறும் புதிய தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கும் அரசு தானே?*

*✍சைக்கிள் புக முடியாத சந்துகளில் கூட தனியார் பள்ளிகளின் மஞ்சள் பேருந்துகள் நுழைந்துவிடும் சூழல், எல்லாக் குழந்தைகளும் தனியார் பள்ளிகளுக்கு அள்ளிக் கொண்டு போய் விடுகின்றனர். அதையெல்லாம் நாம் நிறுத்த வேண்டாமா?*

*✍உலகின் வளர்ந்த நாடுகளில் எல்லாம் தாய்மொழி வழிக் கல்வியில் தான் குழந்தைகள் பயில்கின்றனர். ஆனால் நம் நாட்டில், அதுவும் தமிழகத்தில் தான் கல்வி ஆங்கில வழி சிறந்தது என்ற ஒரு கற்பனை மக்களின் பொதுப்புத்தியில் ஏற்றப்பட்டுள்ளது. இங்குதான் ஏற்றத்தாழ்வு மிக்க கல்வி, மாதம் ரூபாய் I0000 கட்டணம் செலுத்தும் ஒருவர் ஒரு பள்ளியில் ரூபாய் 50000 செலுத்த முடிந்த ஒருவர் வேறொரு பள்ளியில் ஒரு லட்சம் பணம் கட்டும் ஒருவர் இன்டர்நேஷனல் பள்ளியில் தங்கள் குழந்தைகளை படிக்க வைக்கின்றனர்.*

*✍ஜனநாயக நாட்டில் கல்வி இலவசமாகத் தரப்பட வேண்டும். ஆனால் இங்கு கல்வி காசுக்கு விற்கப்படுகிறது. இங்கு ஆங்கில வழிப் பள்ளிகள், தமிழ் வழிப் பள்ளிகள் இரண்டிலுமே லண்டனிலிருந்து யாரும் வந்து பாடம் நடத்தவில்லை,*

*✍தமிழகத்தில் பிறந்து வளர்ந்தவர்கள் தான் தமிழ் வழியிலும் ஆங்கில வழியிலும் பாடம் நடத்துகின்றனர். இவை எல்லாம் புரியாத அடித்தட்டு மக்கள், தங்கள் குழந்தைகள் ஏதோ ஆங்கில வழியில் படித்தால் வாழ்வில் மிகச் சிறந்த நிலைக்கு உயர்ந்து விடுவார்கள் என தாலியைக் கூட அடமானம் வைத்துத் தங்கள் பிள்ளைகளைத் தனியார் பள்ளியில் படிக்க வைக்கும் பெற்றோர்களிடம் உண்மையை நாம் புரிய வைக்க வேண்டும் 1963 ஆம் ஆண்டு கோத்தாரி கமிஷன் நாட்டின் மொத்த வருமானத்தில் GDP என்பதில் கல்விக்காக ஒதுக்க வேண்டிய நிதி 6 சதவீதம் என்று சொன்னது. ஆனால், இன்று வரை கல்விக்கென முழுமையாக நிதி ஒதுக்கப்படவில்லை.*

*✍கல்விக்கு செலவு செய்ய அரசு தயாராகவும் இல்லை, பள்ளிகளில் செயல்படும் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் தான் வலிமை வாய்ந்தவை. அக்குழுக்களில் (SMC-School Management committee) 50% பெண்களாக இருக்க வேண்டும். பெண்கள் தான் தலைமைப் பொறுப்பில் இருக்க வேண்டும். அதன் வழியே பள்ளிப் பிரச்சனைகளைக் கேள்விக்குட்படுத்தல். உங்கள் ஊர் பள்ளிகளில் பெண்களை SMC உறுப்பினராக்க முயற்சி செய்ய வேண்டும்.*

*✍ஒரு ஆசிரியராக, என் குழந்தைக்கு தேசியக் கல்விக் கொள்கையே தேவையில்லை என்கிறேன். இந்த கோவை பகுதி மாணவர்க்கு ஒரு விதமான பாடத்திட்டம் தேவைப்படும். அதேபோல சென்னை பகுதிகளில் வசிக்கும் மாணவர்களுக்கு வேறு விதமான தேவை இருக்கும். இவர்கள் புரிந்து கொள்ளும்படியான ஒரு பாடத் திட்டம் தான் நடைமுறையில் வேண்டும். அதை விடுத்துப் பன்முகத்தன்மை கொண்ட பலவித இனம், பண்பாடு கொண்ட, பல மொழிகள் பேசும் மக்கள் வாழும் இந்தப் பரந்துபட்ட இந்தியா முழுமைக்கும் ஒரே பாடத்திட்டம் எவ்வாறு பொருந்தும்? -மரணத்திற்கு தமிழகத்தை வட பீகார் மாநிலம் கல்வியில் பல நிலைகளில் பின் தங்கியிருக்கிறது. அங்கு கல்வி பயிலும் குழந்தைகளுக்கு பல படி நிலைகள் முன்னணியிலிருக்கும் தமிழகப் பள்ளி குழந்தைகளுக்கும் ஒரே விதமான பாட நூல், பாடத்திட்டம் என்பது எவ்வாறு சமமான கல்வியை தரும்*

*✍தொடர்ந்து நம் எதிர்வினையாற்ற வேண்டும் இது குறித்து பேச வேண்டும். கல்வியை நல்ல முறையில் அரசு தந்திருந்தால் பள்ளிக் கல்வியைப் பாதுகாக்க என ஒரு அமைப்பு தேவைப்பட்டிருக்குமா? தாய்மொழி வழிக் கல்வி, அருகமைப் பள்ளி, பொதுப் பள்ளி முறை, அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை பெண்கள் மற்றும் மாணவர் அமைப்புகள் தீர்மானங்களாக நிறைவேற்றி செயலாற்ற. வேண்டும்.*

*_நவம்பர் 2 மாணவர் பெருமன்றத்தின் சார்பில் கோவையில் நடைபெற்ற மாணவிகள் மாநாட்டில் ஆற்றிய உரையின் சுருக்கம்_*

🤝தோழமையுடன்;

*_திருமதி.உமா,_*
*ஒருங்கிணைப்பாளர்,*
*பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம்.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм