Sunday 18 October 2020

*🛡️50 ஆண்டுகளாகப் பெற்றுவந்த ஊக்க ஊதியம் ரத்து - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி போராட்ட அறிவிப்பு.*

*🛡️50 ஆண்டுகளாகப் பெற்றுவந்த ஊக்க ஊதியம் ரத்து - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி போராட்ட அறிவிப்பு.*

🛡️மாநில அமைப்பின் செய்தியறிக்கை எண்: 16/2020  நாள்: 17.10.2020

⚔️
🛡️50 ஆண்டுகளாகப் பெற்றுவந்த ஊக்க ஊதியம் ரத்து
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி போராட்ட அறிவிப்பு
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் ச.மயில் வெளியிட்டுள்ள அறிக்கை.

⚔️
🛡️தமிழகத்தில் அனைத்து வகை ஆசிரியர்களும் 50 ஆண்டுகளாகப் பெற்று வந்த உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை 10.03.2020 முதல் ரத்து செய்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணைகள்: 116 மற்றும் 37 ஆகியவற்றை உடனடியாகத் திரும்பப் பெறக்கோரி 28.10.2020 அன்று மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடத்திட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முடிவு செய்துள்ளது.

⚔️
🛡️ஆசிரியர்கள் பணியில் இருந்துகொண்டே பயில்வதை ஊக்குவிக்கும் வகையில், 1969 ஆம் ஆண்டில் பேரறிஞர் அண்ணா அவர்களது ஆட்சிக்காலத்தில் ஆசிரியர்களுக்கு உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வுகள் வழங்கிட அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி ஒரு ஆசிரியர் தனது பணிக் காலத்தில் தான் பெற்ற உயர் கல்விக்காக அதிகபட்சமாக இரண்டு ஊக்க ஊதிய உயர்வுகளைக் கடந்த 50 ஆண்டுகாலமாகப் பெற்று வந்தனர்.

⚔️
🛡️"ஆசிரியர்கள் எப்போதும் மாணவர்களாகவே இருக்க வேண்டும்; தங்களது அறிவை விரிவாக்கும் வகையில் தொடர்ந்து தங்களது கல்வித் தகுதியை உயர்த்திக் கொள்ள வேண்டும்; ஆசிரியர்கள் எப்போதும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்;

⚔️
🛡️எரிகின்ற விளக்குத்தான் மற்றொரு விளக்கை ஏற்ற முடியும்" என்ற அடிப்படையில் தான் தமிழகத்தின் கடந்த கால அரசுகள் ஆசிரியர்கள் தங்கள் கல்வித் தகுதியை உயர்த்திக் கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் தொடர்ந்து ஊக்க ஊதிய உயர்வுகளை வழங்கி வந்தன.

⚔️
🛡️இந்நிலையில் தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை வெளியிட்ட அரசாணை எண்: 37, நாள்:10.03.2020 ல் தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் பணியாற்றும் ஊழியர்களுக்கு 10.03.2020 முதல் முன் ஊதிய உயர்வு (Advance increment) கிடையாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

⚔️
🛡️இவ்வாணையில் ஆசிரியர்களுக்கான ஊக்க ஊதிய உயர்வு (Incentive increment) பற்றி எதுவும் கூறப்படவில்லை. எனவே, இவ்வாணை ஆசிரியர்களுக்குப் பொருந்தாது என அனைவராலும் கருதப்பட்டது.
ஆனால், தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை வெளியிட்டுள்ள அரசாணை எண்: 116, நாள்:15.10.2020இல் மேற்கண்ட அரசாணை எண்: 37 ஆசிரியர்களுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழகத்தில் ஆரம்பப்பள்ளிகள் முதல் மேல்நிலைப் பள்ளிகள் வரை பணியில் உள்ள மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் பேரதிர்ச்சியையும், பெரும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

⚔️
🛡️ஆசிரியர்கள் உயர்கல்வித் தகுதி பெறுவது என்பது அவர்களிடம் பயிலும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்குக் பயன்படக்கூடியது. ஆசிரியர்களின் கல்வி சார்ந்த அறிவை நாள்தோறும் மேம்படுத்திக் கொள்வதற்கு உதவக்கூடியது. அதை ஊக்குவிக்கும் வகையில் தமிழகத்தில் 50 ஆண்டு காலமாக ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை தமிழக அரசு ரத்து செய்துள்ளது நியாயமற்றது.

⚔️
🛡️சமீபகாலமாக ஆசிரியர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய பல்வேறு அரசாணைகளைத் தமிழக அரசு தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அதன் உச்சகட்டம் தான் 50 ஆண்டுகளாக ஆசிரியர்கள் பெற்று வந்த உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை ரத்து செய்து வெளியிட்டுள்ள அரசாணை.
எனவே, அரசாணைகள்: 37, 116 ஆகியவற்றை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். ஆசிரியர் பணிக்கான வயது வரம்பை 40 ஆகக் குறைத்துள்ளதை ரத்து செய்திட வேண்டும்.

⚔️
🛡️ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான 17(ஆ) ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முதல் கட்டமாக 28.10.2020 அன்று மாவட்டத் தலைநகரங்களில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடத்திட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அடுத்தகட்ட போராட்ட நடவடிக்கைகள் அடுத்து வரும் மாநில செயற்குழுவில் முடிவு செய்து அறிவிக்கப்படும்.
                                        
சென்னை    
17.10.2020

_🤝தோழமையுடன்;_

*_ச. மயில்_*       _பொதுச்செயலாளர்_
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*


Saturday 10 October 2020

*🛡️தேசிய பெண் ஆசிரியர்கள் ஒருங்கிணைப்புக்குழுவின் (NFWT) தமிழ்நாடு கிளையின் சார்பில் நாளை (11.10.2020) பிற்பகல் 2.30 மணிக்கு பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிராக மாநில அளவிலான இணையவழிக் கருத்தரங்கம் அழைப்பிதழ்*

*🛡️தேசிய பெண் ஆசிரியர்கள் ஒருங்கிணைப்புக்குழுவின் (NFWT) தமிழ்நாடு கிளையின் சார்பில் நாளை (11.10.2020) பிற்பகல் 2.30 மணிக்கு பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிராக மாநில அளவிலான இணையவழிக் கருத்தரங்கம் அழைப்பிதழ்*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*

*மாநில மையம்*

*பொதுச் செயலாளரின் கடிதம்,நாள்:10.10.2020*

*_பேரன்புமிக்க நம்பேரியக்கத் தோழர்களே!_ வணக்கம்.*

*🖥️*
*🛡️தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அங்கம் வகிக்கும் இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் (STFI) தேசிய பெண் ஆசிரியர்கள் ஒருங்கிணைப்புக்குழுவின் (NFWT) தமிழ்நாடு கிளையின் சார்பில் நாளை (11.10.2020) பிற்பகல் 2.30 மணிக்கு பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிராக மாநில அளவிலான இணையவழிக் கருத்தரங்கம் நடைபெற உள்ளது.*

*🖥️*
*🛡️இக்கருத்தரங்கிற்கு நமது பேரியக்கத்தின் மாநிலத் தலைவரும், தேசிய பெண் ஆசிரியர்கள் ஒருங்கிணைப்புக்குழுவின் தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளருமான தோழர் மூ. மணிமேகலை அவர்கள் தலைமை ஏற்கிறார்.*

*🖥️*
*🛡️இக்கருத்தரங்கில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் P.சுகந்தி,சென்னை ஐ.ஐ.டி பேராசிரியர் தோழர்.கல்பனா கருணாகரன் ஆகிய மிகச் சிறந்த சிந்தனையாளர்கள் கருத்தரங்க உரையாற்றுகின்றனர்.*

*🖥️*
*🛡️மேலும்,தமிழ்நாட்டில் இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நம் தோழமைச் சங்கங்களின் தலைவர்களாகிய சகோதரிகள் மிகச்சிறப்பான கருத்துரைகளை வழங்க உள்ளனர்.*

*🖥️*
*🛡️இன்றைய கொரோனா பொதுமுடக்கச் சூழலில், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்திருக்கும் நிலையில் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த தலைப்பில் நடைபெறும் இக்கருத்தரங்கில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் ஆசிரியப் பெருமக்கள் பெருமளவில் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும். நம் இயக்கத்தின் ஆண் ஆசிரியப் பெருமக்களுக்கும்  இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும். மேலும், சங்க வேறுபாடின்றி பெண்ணாசிரியர்களை இதில் பங்கேற்க செய்திட நம் மாநில, மாவட்ட, வட்டார, நகரக் கிளைகளின் பொறுப்பாளர்கள் விரைந்து செயலாற்றிட மாநில மையம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது.*

*🖥️*
*🛡️நம் இயக்கத்தின் சார்பில் அதிக எண்ணிக்கையில் ஆசிரியர்கள் கலந்து கொள்வதை உறுதிப்படுத்தவேண்டும். கருத்தரங்கில் இணையும் நம் இயக்க உறுப்பினர்கள் தங்கள் பெயருடன் TNPTF என்று டைப் செய்ய வேண்டும். மேலும், கருத்தரங்கில் இணைபவர்கள் கீழ்க்கண்ட Link ஐ Click செய்து Zoom app மூலம் கூட்டத்தில் எளிதாக இணைத்துவிடலாம்.*

https://us02web.zoom.us/j/5889881957?pwd=dGo1VENuYk9JbVArNHN6UFBBMXJndz09

*🖥️*
*🛡️மேற்கண்டவாறு Link மூலம் இணைய இயலாதவர்கள் TNPTF TAMILNADU state centre என்ற முகநூல் கணக்கில் நேரடியாக எளிதாக இணைத்துவிடலாம்.*

*🖥️*
*🛡️இச்செய்தியை  மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து TNPTF குழுக்களுக்கும் பகிர்வு செய்து கருத்தரங்கில் TNPTF உறுப்பினர்களின் பெருமளவிலான பங்கேற்பை உறுதி செய்திடவும், அனைத்து மாநில/ மாவட்ட/வட்டார/ நகரப் பொறுப்பாளர்கள் எக்காரணம் கொண்டும் தவறாது இந்நிகழ்வில் பங்கேற்றிடவும் மாநில மையம் தோழமையுடன் கேட்டுக் கொள்கிறது.*

_தோழமையுடன்;_

*_ச.மயில்_*
_பொதுச் செயலாளர்_ *தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*

Thursday 8 October 2020

*🛡️தேசிய பெண் ஆசிரியர்கள் ஒருங்கிணைப்புக் குழு - பெண்கள் குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிராக மாநில அளவிலான இணையவழிக் கருத்தரங்கம்*

*🛡️தேசிய பெண் ஆசிரியர்கள் ஒருங்கிணைப்புக் குழு - பெண்கள் குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிராக மாநில அளவிலான இணையவழிக் கருத்தரங்கம்*

*தேசிய பெண் ஆசிரியர்கள் ஒருங்கிணைப்புக் குழு - NATIONAL FORUM FOR WOMEN TEACHERS (NFWT) தமிழ்நாடு*

*🛡️பெண்கள் குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிராக மாநில அளவிலான இணையவழிக் கருத்தரங்கம்*

**07.10.2020**

*_NFWT இணைப்புச் சங்கங்களின் அருமைத் தோழியரே!_ வணக்கம்.*

*🛡️12.09.2020 அன்று நடைபெற்ற தேசிய பெண்ணாசிரியர்கள் ஒருங்கிணைப்புக் குழு (NFWT) கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி பெண்கள் குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிராக மாநில அளவிலான இணையவழிக் கருத்தரங்கம் 11.10.2020 ஞாயிறு அன்று பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறுகிறது.*

*🛡️இக்கருத்தரங்கில் தமிழகத்தின் சிறந்த ஆளுமைகள் கலந்து கொண்டு கருத்தரங்க உரை வழங்குகின்றனர்.*

*🛡️இக்கருத்தரங்கில் தேசிய பெண்ணாசிரியர்கள் ஒருங்கிணைப்புக் குழுவில் இணைந்துள்ள இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இணைப்புச் சங்கங்களின் ஆசிரிய சகோதரிகள் அனைவரும் தவறாது பங்கேற்க வேண்டும். ஏனென்றால் பெண்கள் குழந்தைகள் மீதான வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்து பெண்கள் வாழத் தகுதியற்ற நாடாக மாறிக் கொண்டிருக்கிறது. இந்த கொரோனா காலத்தில் இந்த வன்முறை பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த வன்முறைகளைத் தடுத்து நிறுத்திட மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற குரலை ஓங்கி ஒலிக்க வேண்டிய அவசியமும் தேவையும் இருக்கிறது. அந்த வகையில் சமூகத்தோடு நேரடியாக தொடர்பு கொண்டிருக்கின்ற சமூக அக்கறையோடு செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற ஆசிரியர்களாகிய நாம் நம்முடைய கடமையும் பொறுப்பும் உணர்ந்து செயலாற்றும் பொருட்டு பல்வேறு கருத்துக்களை எடுந்தியம்ப இருக்கிறார்கள். இந்த பொது முடக்க கால கட்டத்தில் வீட்டில் இருந்த படியே சிறந்த ஆளுமைகளின், சமூக செயற்பாட்டாளர்களின் கருத்துக்களை கேட்பதற்கு ஒரு அரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. எனவே தோழியர் அனைவரும் தவறாது பங்கேற்குமாறு மாநிலக்குழு அன்புடன் கேட்டுக்கொள்கிறது.*

_இந்தக் கருத்தரங்க நிகழ்வில் இணைந்திட மிக எளிதான வழி கீழ்க்கண்டவாறு:_

*🛡️இதுவரை Zoom app ஐ download செய்யாதவர்கள் play store மூலம் அதை முன்கூட்டியே download செய்து கொள்ளவும்.*

*🛡️ஏற்கனவே Zoom app ஐ download செய்துள்ளவர்கள் அதை update மட்டும் செய்து கொள்ளவும்.*

*🛡️மேற்கண்டவற்றை முன்கூட்டியே செய்துவிட்டு கருத்தரங்கம் தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே கீழே கொடுக்கப்பட்டுள்ள link ஐ touch செய்யவும். அவ்வாறு செய்தவுடன் உங்கள் பெயர் கேட்கும். அதில் உங்கள் பெயருடன் சங்கத்தின் பெயர் மற்றும் மாவட்டத்தின் பெயரையும் சேர்த்து type செய்து ok கொடுக்கவும். இப்போது நீங்கள் நேரடியாகக் கருத்தரங்கில் இணைந்து விடலாம். அவ்வாறு இணையும் போது உங்கள் கைப்பேசி திரையின் கீழ்ப் பகுதியில் call over internet என்று வரும். அதை touch செய்தால் ஆடியோ கேட்கத் தொடங்கிவிடும்.*

*🛡️மேற்கண்டவாறு எளிதான வழியில் கருத்தரங்கில் இணைந்திட அருமைத் தோழியர் அனைவரையும் மாநிலக்குழு அன்புடன் அழைக்கிறது.*

*🛡️கீழே கொடுக்கப்பட்டுள்ள ID, Password வழியாகவும் Zoom appல் இணையலாம். Facebook நேரலை வழியாகவும் கருத்தரங்கில் இணையலாம். ஆனால் கருத்தரங்கில் இணைவதற்கு மிக எளிதான வழி கீழ்க்கண்ட link மூலம் இணைவது தான் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறது.*

https://us02web.zoom.us/j/5889881957?pwd=dGo1VENuYk9JbVArNHN6UFBBMXJndz09

*🌟குறிப்பு: ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் குறைந்தது 50 பெண்ணாசிரியர்களை கருத்தரங்கில் கலந்து கொள்ளச் செய்ய வேண்டும். எனவே, இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இணைப்புச் சங்கங்களின் மாநில, மாவட்ட, வட்டாரப் பொறுப்பாளர்களும், தேசிய பெண்ணாசிரியர் ஒருங்கிணைப்புக் குழுவின் தமிழ் மாநில நிர்வாகிகளும் இமைப்பொழுதும் சோராது பணியாற்றி கருத்தரங்கை வெற்றி பெறச் செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.*

_🤝தோழமையுடன்;_

*_மூ.மணிமேகலை,_*
_மாநில ஒருங்கிணைப்பாளர்,_
*தேசிய பெண்ணாசிரியர்கள் ஒருங்கிணைப்புக்குழு, தமிழ்நாடு*

Wednesday 7 October 2020

*_07.10.2020_ JOINT FORUM FOR MOVEMENT ON EDUCATION (JFME) _கல்விக்கான கூட்டியக்கம்_ தமிழ்நாடு - TNPTF பொதுச்செயலாளர் அறிவிக்கை*

*_07.10.2020_ JOINT FORUM FOR MOVEMENT ON EDUCATION (JFME) _கல்விக்கான கூட்டியக்கம்_ தமிழ்நாடு - TNPTF பொதுச்செயலாளர் அறிவிக்கை*

*⚔️*
*🛡️11.09. 2020 அன்று நடைபெற்ற தமிழ்நாடு மாநில JFME ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி தேசிய கல்விக் கொள்கை 2020 தொடர்பாக நமது ஆட்சேபணைகள், கருத்துக்கள், ஆலோசனைகள் உள்ளடக்கிய விரிவான கோரிக்கை மனு, தமிழ்நாடு அரசு தேசிய கல்விக்கொள்கை 2020 ல் பள்ளிக் கல்வி தொடர்பாக அமைத்துள்ள உயர்நிலைக் குழுவின் உறுப்பினர் செயலராகிய பள்ளிக்கல்வித்துறையின் ஆணையர் மதிப்புமிகு.சிஜி தாமஸ் வைத்யன்,IAS அவர்களிடம் JFME சார்பில் சென்னையில் இன்று(07.10.2020) நேரில் வழங்கப்பட்டது.*

*⚔️*
*🛡️அதேபோன்று தமிழக அரசு தேசிய கல்விக் கொள்கை 2020ல் உயர் கல்வி தொடர்பாக அமைத்துள்ள உயர்நிலைக் குழுவின் தலைவராகிய உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மதிப்புமிகு.அபூர்வா,IAS அவர்களுக்கும்  சென்னை தலைமைச் செயலகத்தில் JFME சார்பில் மேற்கண்ட கோரிக்கை மனு இன்று அளிக்கப்பட்டது.*

*⚔️*
*🛡️இந்நிகழ்வில் JFME தமிழ்நாடு மாநில அமைப்பாளரும், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளருமாகிய தோழர் ச.மயில், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் (AUT) தலைவர்கள் பேராசிரியர் காந்திராஜ், பேராசிரியர் ஆனந்த்,AISEC அமைப்பின் சார்பில் தோழர்.செபஸ்டியன், தோழர்.சதாசிவம் ஆகியோர் பங்கேற்றனர்.*

_தோழமையுடன்;_

*_ச.மயில்_*
*மாநில அமைப்பாளர்-JFME*
*தமிழ்நாடு*

Friday 2 October 2020

*🛡️அகில இந்திய அளவில் JFME- (JOINT FORUM FOR MOVEMENT ON EDUCATION- கல்விக்கான இயக்கங்களின் கூட்டமைப்பு) இக்கூட்டமைப்பின் தமிழ்நாடு மாநில அளவிலான இணையவழி கூட்டத்திற்கு TNPTF பொதுச்செயலாளர் அழைப்பு*

*🛡️அகில இந்திய அளவில் JFME- (JOINT FORUM FOR MOVEMENT ON EDUCATION- கல்விக்கான இயக்கங்களின் கூட்டமைப்பு) இக்கூட்டமைப்பின் தமிழ்நாடு மாநில அளவிலான இணையவழி கூட்டத்திற்கு TNPTF பொதுச்செயலாளர் அழைப்பு*

*_பேரன்புமிக்க நம் பேரியக்கத் தோழர்களே!_ வணக்கம்.*

*⚔️*
*🛡️அகில இந்திய அளவில் JFME- (JOINT FORUM FOR MOVEMENT ON EDUCATION- கல்விக்கான இயக்கங்களின் கூட்டமைப்பு) என்ற விரிவடைந்த கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது. இக் கூட்டமைப்பில் அகில இந்திய அளவிலான ஆசிரியர் அமைப்புக்கள், மாணவர் அமைப்புகள், கல்வி நலன் சார்ந்து இயங்கும் அமைப்புகள் உள்ளிட்ட சமூக அக்கறை கொண்ட பல்வேறு அமைப்புகள் இணைந்துள்ளன. அந்த வகையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அங்கம் வகிக்கும் நம் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பும் (STFI) இதில் அங்கம் வகிக்கிறது.*

*⚔️*
*🛡️இக்கூட்டமைப்பின் தமிழ்நாடு மாநில அளவிலான கூட்டம் கடந்த 11.09.2020 அன்று இணைய வழியாக நடைபெற்றது. அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி தேசிய கல்விக்கொள்கை 2020 தொடர்பாக மாநில அளவிலான இணையவழிக் கருத்தரங்கம் 0410.2020 ஞாயிறு முற்பகல் 10.30 மணிக்கு நடைபெறுகிறது.*

*⚔️*
*🛡️இக்கருத்தரங்கில் தேசிய கல்விக் கொள்கை தொடர்பாகத் தனித்தனித் தலைப்புக்களில் தமிழகத்தின் புகழ்பெற்ற கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள், சமூக அக்கறை கொண்ட பல்வேறு இயக்கங்களின் தலைவர்கள் கலந்துகொண்டு கருத்துரை வழங்குகின்றனர்.*

*⚔️*
*🛡️இக்கருத்தரங்கில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் ஆயிரக்கணக்கான நம் இயக்கத் தோழர்கள் பங்கேற்க வேண்டும். இந்தப் பொதுமுடக்கக் காலகட்டத்தில் வீட்டில் இருந்தபடியே சிறந்த கல்வியாளர்களின் கருத்துக்களை கேட்பதற்கு ஒரு அரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த வாய்ப்பை நம் இயக்கத் தோழர்கள் தவறாது பயன்படுத்திக் கொள்ள மாநில மையம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது.*

*⚔️*
*🛡️கூட்டத்தில் கலந்து கொள்வதற்கான YouTube link கீழே கொடுக்கபட்டுள்ளது. Linkஐ click செய்தால் நேரடியாக YouTubeக்குச் சென்று நிகழ்ச்சியில் எளிதாக இணைத்துவிடலாம்.*

*⚔️*
*🛡️எனவே, வட்டார மாவட்ட மாநில நிர்வாகிகள் இச்செய்தியை அனைத்து சமூக வலைதளங்களிலும் பகிர்வு செய்து நம் இயக்கத் தோழர்களின் பங்கேற்பை உறுதி செய்திட மாநில மையம் தோழமையுடன் கேட்டுக் கொள்கிறது.*

_இது நமது அமைப்பின் நிகழ்ச்சி_

*🎥நாம் அனைவரும் அவசியம் பங்கேற்க வேண்டிய நிகழ்ச்சி*
Link:
https://youtu.be/mv_nEUHNGRA

_🤝தோழமையுடன்;_

*_ச.மயில்_*
_பொதுச் செயலாளர்_ *தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*