Wednesday 29 May 2019

*அங்கன்வாடிகளில் உபரி இடைநிலை ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவதில் பல்வேறு குழப்பங்களும், விதிமீறல்களும், அநீதிகளும் எழுந்துள்ளன - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் அறிக்கை*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2019/05/blog-post_29.html


*பொதுச்செயலாளரின் சுற்றறிக்கை எண் : 16  நாள் : 29.05.2019*


*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!_* *வணக்கம்!*


*🌟2019 – 2020 ஆம் கல்வியாண்டு தொடங்க இருக்கிறது.  புதிய கல்வியாண்டில் புதிய உத்வேகத்துடன் கல்விப்பணியையும், இயக்கப்பணியையும் முன்னெடுத்துச் செல்ல மாநிலமையத்தின் புரட்சிகரமான வாழ்த்துக்கள்.* 


*🌟தமிழ்நாட்டு ஆசிரியர்கள் பலமுனைத் தாக்குதல்களைச் சந்தித்துக் கொண்டிருக்கும் நேரமிது.  தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளிலும் முன்பருவ வகுப்புகளைத் தொடங்கி அவற்றில் முன்பருவ ஆசிரியர் பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்பது நமது பேரியக்கத்தின் கோரிக்கையாகும்.*


*🌟ஆனால், தமிழக அரசு தமிழகம் முழுவதும் உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர்களை நடுநிலைப்பள்ளிப்பள்ளிகளுடன் இணைந்த 2381 அங்கன்வாடிகளில் நியமனம் செய்து உத்தரவிட்டது.  இடைநிலை ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதியை எதிர்த்து நமது இயக்கத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து தடையாணை பெற்றோம்.* 


*🌟இது தொடர்பாக பல்வேறு சங்கங்கள் மற்றும் தனிநபர்கள் தொகுத்த வழக்கில் 22.05.2019 அன்று தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் இரண்டு நீதிபதிகள் அமர்வு “ அங்கன்வாடிகளில் உபரி இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பது என்பது அரசின் கொள்கை முடிவு. அதில் நீதிமன்றம் தலையிட முடியாது”  என்ற தீர்ப்பை வழங்கியுள்ளது.*


*🌟அரசுப்பணியில் ஒரு குறிப்பிட்ட பதவியில் இருக்கும் ஒருவரை கீழ்நிலைப் பதவிக்கு கொண்டு செல்வது என்பது அரசின் கொள்கை முடிவென்றால் நியாயப்படி அது எப்படி சரியானதாக இருக்கும்.  பல்வேறு துறைகளில் மிக உயர்ந்த பதவிகளில் இருப்பவர்களை அவரவர் பணியாற்றும் துறைகளிலோ அல்லது வேறுதுறைகளிலோ கீழ்நிலைப்பதவிக்கு கொண்டு செல்லும் உத்தரவை அரசாங்கம் பிறப்பித்தால் அதைக் கொள்கை முடிவென்று ஏற்றுக் கொள்ள முடியுமா என்ற வேதனையும், விரக்தியும் கலந்த கேள்வி தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளதைப் பார்க்க முடிகிறது.*



*🌟நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தொடக்கக்கல்வித்துறை 2381 அங்கன்வாடிகளில் உபரி ஆசிரியர்களை நியமிக்கும் பணிகளை மின்னல் வேகத்தில் துவங்கிவிட்டது.  கடந்த ஜனவரி மாதம் அங்கன்வாடிகளுக்கு மாறுதல் பணியாணைகள் வழங்கப்பட்ட  ஆசிரியர்கள் பள்ளிகள் திறக்கும் நாளன்றே அங்கன்வாடிகளில் பணியில் சேர உத்தரவிடப்பட்டுள்ளது. மேற்கண்டவாறு அங்கன்வாடிகளில் உபரி இடைநிலை ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவதில் பல்வேறு குழப்பங்களும், விதிமீறல்களும், அநீதிகளும் எழுந்துள்ளன என்பதே நடைமுறை உண்மையாகும். அதன்படி கீழ்கண்ட கேள்விகள் நம்முள் எழுகிறது.*



*⚡தொடக்கக்கல்வித்துறையின் உத்தரவின்படி 2017-2018 ஆம் கல்வி ஆண்டின் ஆசிரியர் நிர்ணயக் கணக்கீட்டின்படியே உபரி ஆசிரியர்கள் அங்கன்வாடிகளுக்கு பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளனர். அதற்குப் பிந்தைய 2018 – 2019 மற்றும் 2019 – 2020 ஆம் கல்வியாண்டுகளில் அப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாது உபரி ஆசிரியர்களைப் பணிமாறுதல் செய்வது என்பது அவர்கள் பணியாற்றும் பள்ளி மாணவர்களின் கல்வியைப்  பாதிக்காதா?*


*⚡ஒரு பள்ளியில் உபரி ஆசிரியர்களைக் கணக்கிடும்போது அப்பள்ளியில் பணியில் சேர்ந்த தேதியின் அடிப்படையில் அவர்களை இளையவர்களாகக் கணக்கிட்டு அங்கன்வாடிகளுக்கு பணிமாறுதல் வழங்கும்போது 20 ஆண்டுகள், 25 ஆண்டுகள் பணிமுடித்த ஆசிரியர்கள் கூட பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.  இதற்கு தொடக்கக்கல்வித்துறை என்ன பதில் சொல்லப்போகிறது?*


*⚡பணிநிலையில் மூத்த, பதவிஉயர்வு பட்டியலில் உள்ள இடைநிலை ஆசிரியர்கள் கூட தாங்கள் பணியாற்றும் பள்ளியில் இளையவர் என்பதைக் காரணம் காட்டி அங்கன்வாடிகளுக்கு பணிமாறுதல் வழங்கும் நிலை உள்ளது. இது சரியானதா?*


*⚡உபரி ஆசிரியர்கள் என்ற கணக்கில் அங்கன்வாடிகளுக்குப் பணிமாறுதல் அளிக்கப்படும் ஆசிரியர்கள் எதிர்வரும் பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்துகொண்டு பணி மாறுதலில் செல்ல வாய்ப்பளிக்கப்பட வேண்டும் அல்லவா?  அவ்வாறு அளிக்கப்படவில்லை என்றால் அது அவர்களின் அடிப்படை உரிமையைப் பறிக்கும் செயலல்லவா?*


*⚡நீதிமன்ற உத்தரவின்படி உபரி இடைநிலை ஆசிரியர்கள் அங்கன்வாடிகளுக்கு பணிமாறுதல் செய்யப்படவுள்ள நிலையில் உபரி ஆசிரியர்களே இல்லாத ஒன்றியங்களில், காலிப்பணியிடங்கள் அதிகம் உள்ள ஒன்றியங்களில், ஏற்கனவே ஆசிரியர் பற்றாக்குறை உள்ள நிலையில், உபரியாக இல்லாத ஆசிரியர்களுக்கு அங்கன்வாடி ஆசிரியராக வழங்கப்படும் பணிமாறுதல் ஆணைகளால் அவ்வொன்றியங்களின் மாணவர்கள் நலன் வெகுவாகப் பாதிக்கப்படாதா?*


*⚡பல மாவட்டங்களில் உபரி இடைநிலை ஆசிரியர்களே இல்லாத நிலையில் அங்குள்ள அங்கன்வாடிகளில் ஆசிரியர் நியமனம் செய்திட பிற மாவட்டங்களிலிருந்து நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்களுக்கு அப்பாலிருந்து ஆசிரியர்களை நியமனம் செய்வது என்பது மனிதாபிமானமற்ற செயலல்லவா?*


*⚡தனியார் சுயநிதிப் பள்ளிகளின் வளர்ச்சிக்கு காரணம் அங்கு வகுப்பிற்கு ஒரு ஆசிரியர் என்ற நிலையே ஆகும்.*


*🌟எனவே, உபரி ஆசிரியர் என்ற கணக்கில் ஆசிரியர்களை பணியிடமாறுதல் செய்துவிட்டு அரசுப்பள்ளிகளையெல்லாம் ஈராசிரியர் பள்ளிகளாக மாற்றும்போது தனியார் சுயநிதிப்பள்ளிகளோடு எவ்வாறு போட்டி போட முடியும்? மேற்கண்ட கேள்விகளெல்லாம் தமிழ்நாட்டின் ஆசிரியர் நலன், மாணவர் நலன், கல்வி நலன் கருதி நாம் முன்வைக்கும் கேள்விகளாகும். இவற்றை ஆய்வுசெய்து தமிழ்நாட்டின் கல்வித்துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி எதிர்பார்க்கிறது.*



*🌟அங்கன்வாடிகளில் உபரி இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக எழுந்துள்ள குழப்பங்கள், சந்தேகங்கள் பாதிப்புகள் தொடர்பாக கல்வித்துறையின் உயர் அலுவலர்கள் கவனத்திற்கு நமது பேரியக்கம் கொண்டு சென்றுள்ளது.  சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பு இரு நீதிபதிகள் கொண்ட அமர்வின் தீர்ப்பு என்பதால், அத்தீர்ப்பு தொடர்பாக சட்டரீதியான தொடர் நடவடிக்கைகள் தொடர்பாகவும் வழக்கறிஞருடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.*



*_“அரசு, சட்டம், நிர்வாகம் இவைகளையெல்லாம் விட நம் கோரிக்கைகளை வென்றெடுக்கும் நம்பிக்கையான ஆயுதம் களப்போராட்டமே”  என்பதுதான்._* 

*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தாரக மந்திரம்.  எந்தச்சூழலிலும் போராட்ட ஆயுதத்தை கீழே போடாத நம் பேரியக்கம் 06.05.2019 மதுரை மாநிலச் செயற்குழு முடிவின்படி அங்கன்வாடிகளில் இடைநிலை ஆசிரியர் நியமனத்தை கைவிடுதல் உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வட்டாரத்தலைநகரங்களில் 07.06.2019 அன்று கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறது.*


*🌟தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்களைத் திரட்டி ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்துவோம்.*  

 

*_“கோரிக்கைகளை வென்றெடுக்கும் ஆயுதம் போராட்டம் மட்டுமே! நாம் நிராயுதபாணிகளல்ல.... ஏனெனில் போராட்ட ஆயுதத்தை  நம்மிடமிருந்து யாராலும் பறிக்க முடியாது!”_* 


*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தனித்துவம் வாய்ந்த இயக்கம். மற்ற இயக்கங்களிலிருந்து வேறுபட்ட இயக்கம்.*


*_“எல்லாப் பறவைகளும் மழைகாலங்களில் கூடுகளில் அடையும்.......!_*


*_ஆனால் கழுகு மட்டும் மழையைத் தவிர்க்க மேகத்துக்கு மேலாகப் பறக்கும்!_*


*_நீ கழுகாக இரு.........!_*


*- டாக்டர் அப்துல்கலாம்*




🤝தோழமையுடன்;


*_ச.மயில்,_*

*மாநில பொதுச்செயலாளர்,*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*




🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм





Tuesday 7 May 2019

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு கூட்ட தீர்மானங்கள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/05/blog-post_7.html


*_பேரன்புமிக்க பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!_ வணக்கம்.*


🛡⚔

*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு கூட்டம் 06.05.2019  (திங்கட்கிழமை) மதுரை, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட அலுவலகத்தில் மாநில தலைவர் _தோழர். மூ.மணிமேகலை_ அவர்கள் தலைமையில் நடைபெற்றது.*



*_கூட்ட முடிவுகள்:_*


*🛡தீர்மானம் : 1⚔*


*⚡ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டாரம் முன்னாள் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் திரு.த.ரமேஷ், தூத்துக்குடி மாவட்டம் , கருங்குளம் வட்டாரம் முன்னாள் வட்டாரப் பொருளாளர் திரு.பாஸ்கரன், முன்னாள் மாநிலச்செயலாளர் திரு.மாரியப்பன் மற்றும் இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் பலியானவர்கள் ஆகியோரின் மறைவிற்கு மாநிலச் செயற்குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.*



*🛡தீர்மானம் : 2⚔*


*⚡2019 மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு வரவு - செலவு அறிக்கை மாநிலப் பொருளாளரால் சமர்ப்பிக்கப்பட்டு ஏகமனதாக ஏற்பு செய்யப்பட்டது.*



*🛡தீர்மானம் : 3⚔*


*⚡14.05.2019 மற்றும் 15.05.2019 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரியில் நடைபெறும் இயக்கப்பயிற்சி முகாமில் மாநிலப் பொதுக்குழுவில் இடம்பெறும் பொறுப்பாளர்கள் மற்றும் வட்டாரச் செயலாளர்கள் பங்கேற்பது எனவும், வட்டாரச் செயலாளர்கள் பங்கேற்க இயலாத நிலையில் வட்டாரத்தலைவர் பங்கேற்பது எனவும், வட்டாரத்தலைவர் பங்கேற்க இயலாத நிலையில் வட்டாரப்பொருளாளர் பங்கேற்பது எனவும், அதே நேரம் வட்டாரக்கிளையின் சார்பில் ஒருவர் மட்டுமே பங்கேற்பது எனவும், பங்கேற்பவர்கள் உணவு, தங்குமிடம் மற்றும் இதர செலவுகளுக்காக தலா ரூ.1000-(ரூபாய் ஆயிரம் மட்டும்) கட்டணமாகச் செலுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.*



*🛡தீர்மானம் : 4⚔*


*⚡23.08.2010-க்குப் பின்பு ஆசிரியர்களாக நியமனம் பெற்று ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத 1500 ஆசிரியர்களின் ஊதியத்தை அவர்களது  குடும்பத்தின் வாழ்வாதாரம் கருதி நிறுத்தக்கூடாது.  8 ஆண்டுகாலம் ஆசிரியர்களாகப் பணியாற்றிய பின்பு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்பதைக் காரணம் காட்டி அவர்களைப் பணிநீக்கம் செய்யப்போவதாக அச்சுறுத்துவது என்பது எவ்விதத்திலும் நியாயமற்ற செயலாகும்.  மேலும் இவர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு தமிழக அரசு போதுமான அளவில் தகுதித்தேர்வை நடத்தாததும் ஒரு காரணமாகும். எனவே, மேற்படி ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்விலிருந்து விலக்களித்து அவர்களது எதிர்கால வாழ்வைத் பாதுகாத்திட மனிதாபிமான அடிப்படையில் முன்வரவேண்டும் என மாநிலச் செயற்குழு தமிழக அரசை வலியுறுத்திக்கேட்டுக்கொள்கிறது.*



*🛡தீர்மானம்: 5⚔*


*⚡ஜனநாயக ரீதியில் கோரிக்கைகளுக்காகப் போராடிய ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீதான அனைத்துப் பழிவாங்கும் ஒழுங்கு நடவடிக்கைகளையும், போராட்டக்காலங்களில் அவர்கள் மீது போடப்பட்டுள்ள முற்றிலும் உண்மைக்கு மாறான பொய் வழக்குகளையும் தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும் எனவும் தமிழக அரசை மாநிலச்செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.*



*🛡தீர்மானம்: 6⚔*


*⚡தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் அப்பள்ளிகளுடன்  இணைந்த முன்பருவ வகுப்புகளை 2019-2020ஆம் கல்வியாண்டிலேயே துவக்கிடவும், அவ்வாறு துவக்கப்படும் வகுப்புகளில் இடைநிலை ஆசிரியர்களை நியமனம் செய்யாமல் முன்பருவ ஆசிரியர் பயிற்சி முடித்து பல ஆண்டுகளாக வேலைவாய்ப்பிற்காக காத்திருக்கும் தகுதிவாய்ந்த ஆசிரியர்களை நியமனம் செய்திட வேண்டும் எனவும் தமிழக அரசை மாநிலச்செயற்குழு வலியுறுத்திக்கேட்டுக்கொள்கிறது.*



*🛡தீர்மானம்: 7⚔*


*⚡மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வை வழங்கி 2 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், தமிழக அரசு இதுவரை அறிவிக்காதது மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. எனவே, தமிழக அரசு இனியும் காலதாமதம் செய்யாமல் 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வை அறிவித்திட மாநிலச்செயற்குழு தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.*



*🛡தீர்மானம்: 8⚔*


*⚡ஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வு ஆண்டுதோறும் மே மாதம் நடைபெற்றுவந்த நிலையில் இவ்வாண்டு நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக இதுவரை நடைபெறவில்லை. தற்போது நாடாளுமன்றத்தேர்தல் முடிந்து விட்ட நிலையில் தேர்தல் நடத்தைவிதிகள் 23.05.2019 வரை உள்ளதால் அதன் பின்பு காலதாமதமின்றி ஒளிவுமறைவற்ற காலந்தாய்வை தமிழகம் முழுவதும் நடத்திட தமிழக அரசை மாநிலச்செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.*



*🛡தீர்மானம்: 9⚔*


*⚡தொடக்கக்கல்வித்துறையில் பள்ளி மாணவர்கள் தொடர்பான விவரங்களை EMIS-ல் பதிவேற்றம் செய்து, அதிலிருந்து மாற்றுச்சான்றிதழை பதிவிறக்கம் செய்து அதை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என கல்வித்துறை திடீரென அறிவித்துள்ளது.  அவ்வாறு பதிவிறக்கம் செய்யும்போது அதில் எழும் தவறுகள் மற்றும் இடர்பாடுகளைக் கருத்தில் கொண்டு அவசரகோலத்தில் அறிவிக்கப்பட்டுள்ள இம்முடிவை இவ்வாண்டு கல்வித்துறை மறுபரிசீலனை செய்வதோடு அதற்குரிய அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்திட தமிழக அரசை மாநிலச்செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.*



*🛡தீர்மானம்: 10⚔*


*⚡தமிழகம் முழுவதும் தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தேர்வுநிலை, சிறப்புநிலை அனுமதிப்பதில் சமீபகாலமாக மிகப்பெரிய தேக்கநிலை நிலவுகிறது.  பெரும்பாலான மாவட்டக்கல்வி அலுவலர்கள் தேர்வுநிலை, சிறப்புநிலை அனுமதிக்க சான்றிதழ்களின் உண்மைத் தன்மை கோரி காலதாமதம் செய்து வருகின்றனர்.  10 ஆண்டுகள் அல்லது 20 ஆண்டுகள் பணி முடித்தவர்களின் சான்றிதழ்களின் உண்மைத்தன்மை அறிவதாகக் கூறி காலதாமதம் செய்யும் இப்போக்கு எவ்விதத்திலும் நியாயமானதல்ல. எனவே, தமிழகக் கல்வித்துறை மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு இது தொடர்பான தெளிவுரை வழங்கி தேர்வுநிலை/சிறப்புநிலை தாமதமின்றி வழங்கிட மாநிலச் செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.*



*🛡தீர்மானம்: 11⚔*


*⚡தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் உயர்கல்வி பயின்றதற்கான பின்னேற்பு அனுமதி கல்வித்துறையால் பல ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளது.  இதனால் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களின் நியாயமான பதவி உயர்வு, ஊக்க ஊதிய உயர்வு ஆகிய பயன்கள் பறிக்கப்பட்டுள்ளது.  எனவே, தமிழகப் பள்ளிக்கல்வித்துறை இனிமேலும் காலதாமதம் செய்யாமல் ஆசிரியர்களின் உயர்கல்விக்கான பின்னேற்பு அனுமதிகளை வழங்கிட மாநிலச்செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.*



*🛡தீர்மானம்: 12⚔*


*⚡தீர்மானம் எண் : 4 முதல் தீர்மானம் எண் : 11 வரை உள்ள தீர்மானங்களில் கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் 07.06.2019 அன்று தமிழகம் முழுவதும் அனைத்து வட்டாரத் தலைநகரங்களிலும் வட்டாரக்கல்வி அலுவலகங்கள் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை நடத்துவதென இம்மாநிலச் செயற்குழு ஏகமனதாகத் தீர்மானிக்கிறது.*



🤝தோழமையுடன்;


*_ச.மயில்,_*

*மாநில பொதுச்செயலாளர்,*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм






Monday 6 May 2019

*1500 ஆசிரியர்களின் ஊதியத்தை நிறுத்தினால் தமிழகம் முழுவதும் போராட்டம் - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/05/1500.html


🛡⚔

*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழுக்கூட்டம் 06.05.2019 அன்று மதுரையில் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.* 



🛡⚔

*🌟கூட்டத்திற்கு மாநிலத்தலைவர் _தோழர்.மூ.மணிமேகலை_ தலைமை தாங்கினார். மதுரை மாவட்டச் செயலாளர் _தோழர்.க.ஒச்சுக்காளை_ வரவேற்புரை ஆற்றினார்.*



🛡⚔

*🌟கூட்டத்தில் வேலை அறிக்கையைச் சமர்ப்பித்தும் இயக்கத்தின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் மாநிலப் பொதுச்செயலாளர் _தோழர்.ச.மயில்_ விளக்கவுரையாற்றினார்.  ஜாக்டோ ஜியோ நடவடிக்கைகள் குறித்து மாநில ஜாக்டோ ஜியோ நிதிக்காப்பாளர் _தோழர்.ச.மோசஸ்_ உரையாற்றினார். சங்கத்தின் வரவு - செலவு குறித்து மாநிலப்பொருளாளர் _தோழர்.க.ஜோதிபாபு_ விளக்கிப் பேசினார்.* 



*🛡கூட்ட முடிவில் மாநிலப்பொதுச்செயலாளர் _தோழர்.ச.மயில்_ கூறியதாவது;⚔*


🛡⚔

*🌟23.08.2010 க்குப் பிறகு ஆசிரியராக நியமனம் பெற்று ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு அவர்களது குடும்பநலன் கருதி ஊதியத்தை நிறுத்தக்கூடாது. 8 ஆண்டுகாலம் ஆசிரியர்களாகப் பணியாற்றிய பின்பு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்பதைக் காரணம் காட்டி அவர்களைப் பணிநீக்கம் செய்யப்போவதாக அச்சுறுத்துவது என்பது எவ்விதத்திலும் நியாயமற்ற செயலாகும்.* 



🛡⚔

*🌟இவர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாததற்கு தமிழக அரசு போதுமான அளவில் தகுதித்தேர்வை நடத்தாததும் ஒரு காரணமாகும்.  மேலும், இவர்கள் முறையான ஆசிரியர் பயிற்சி பெற்று அரசு நடத்திய தேர்வில் வெற்றி பெற்று, அரசு வழங்கிய ஆசிரியர் பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள்.  எனவே, தகுதித் தேர்விலிருந்து இவர்களுக்கு விலக்களித்து அவர்களது பணிநியமன நாள்முதல் பணிவரன்முறை செய்திட மனிதாபிமான அடிப்படையில் தமிழக அரசு முன்வரவேண்டும்.*



🛡⚔

*🌟ஜனநாயக ரீதியில் கோரிக்கைகளுக்காகப் போராடிய ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீதான அனைத்து பழிவாங்கும் ஒழுங்கு நடவடிக்கைகளையும் தமிழகஅரசு உடனடியாகக் கைவிட வேண்டும்.  ஜாக்டோ ஜியோ போராட்டக்காலத்தில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீது போடப்பட்டுள்ள முற்றிலும் உண்மைக்கு மாறான பொய் வழக்குகளை தமிழக அரசு திரும்பப்பெறவேண்டும்.*



🛡⚔

*🌟தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் பள்ளிகளுடன் இணைந்த முன்பருவ வகுப்புகளைக் 2019 - 20 ஆம் கல்வியாண்டிலேயே துவங்கிட வேண்டும். அவ்வாறு துவங்கப்படும் வகுப்புகளில் இடைநிலை ஆசிரியர்களை நியமனம் செய்யாமல் முன்பருவ ஆசிரியர் பயிற்சி முடித்து பல ஆண்டுகளாக வேலைவாய்ப்பிற்காகக் காத்திருக்கும் தகுதிவாய்ந்த ஆசிரியர்களை நியமனம் செய்திட வேண்டும்.*



🛡⚔

*🌟மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வை வழங்கி 2 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் தமிழக அரசு தனது ஊழியர்களுக்கு இதுவரை அகவிலைப்படி உயர்வை அறிவிக்காதது மிகப்பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறது.  எனவே, உடனடியாக அகவிலைப்படி உயர்வை அறிவிக்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றாவிட்டால் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி கூட்டணி சார்பில்   07.06.2019 அன்று தமிழகம் முழுவதும் அனைத்து வட்டார தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டதாகக் கூறினார்.*



🛡⚔

*🌟இறுதியில் துணைப்பொதுச்செயலாளர் தா.கணேசன் நன்றி கூறினார் கூட்டத்தில் மாநிலம் முழுவதுமிருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.*



🤝தோழமையுடன்;


*_ச.மயில்,_*

*மாநில பொதுச்செயலாளர்,*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


Sunday 5 May 2019

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அளவிலான இயக்கப் பயிற்சி முகாம் அழைப்பிதழ்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/05/blog-post.html


*_பேரன்புமிக்க பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!_ வணக்கம்.*


🛡⚔

*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக மாநில அளவிலான இயக்க பயிற்சி முகாம் வருகின்ற  14,15-05-2019 (செவ்வாய் மற்றும் புதன் கிழமை), CSI கம்யூனிட்டி ஹால் பெரியார் நகர், கன்னியாகுமரியில் நடைபெற உள்ளது.*



*_🛡நிகழ்வுகள்⚔_*


*⚡முற்பகல் 9.00-9.30 :*

*_பதிவு_*



*⚡09.30 - 10.00:*

*_கொடியேற்றம்_*


*🚩இயக்கக் கொடி ஏற்றுதல் :*

*_திருமதி. எ. அக்சீவியா பெர்லின் உஷா._ மாநில துணைத் தலைவர்*


*🚩STFI கொடி ஏற்றல் :*

*_திருமதி சி.வி. பிரசன்னா_ மாநிலச் செயலாளர்*


*⚡முற்பகல் 10.00-11.00 :*

*_தொடக்க நிகழ்வுகள்_*


*⚡தலைமை :*

*_👸திருமதி மூ, மணிமேகலை_ மாநிலத் தலைவர்*


*⚡வரவேற்புரை :*

*_திரு. தா. கணேசன்_ துணைப் பொதுச்செயலாளர்*



*⚡பயிற்சியின் நோக்கம் :*

*_திரு. ச. மோசஸ்_ STFI அ.இ.பொதுக்குழு உறுப்பினர்*


*⚡தொடக்கவுரை :*

*_திரு. C. ஹரிகிருஷ்ணன்_ STFI இணைப்பொதுச்செயலாளர்.*



*☕முற்பகல் 11.00 - 11:30 :*

*_தேனீர் இடைவேளை_*


*⚡முற்பகல் 11.30 - 01.30 :*

*:முதல் அமர்வு_*



*⚡தலைமை :*

*_திருமதி இரா. மலர்விழி_ மாநிலத் துணைத்தலைவர்*



*🛡பண்பாட்டு அரசியல் :*


*⚡கருத்துரை :*

*_திரு. எஸ்.நூர்முகமது_ மாநிலத் தலைவர் தமிழ்நாடு சிறுபான்மையினர் நலக்குழு*


*🙏நன்றியுரை :*

*_திருமதி டி. மல்லிகா_ மாநிலச் செயலாளர்.*


*🍲மதிய உணவு :*

*_பிற்பகல் 1.30 - 03.30_*



*பிற்பகல் 3.00 - 5.30 :*

*_இரண்டாம் அமர்வு_*


*⚡தலைமை :*

*_திரு தே.ஜோசப் ரோஸ்_ மாநில துணைத்தலைவர்*


*🛡வகுப்பறை ஜனநாயகம்*


*⚡கருத்துரை :*

*_திரு. ஜெ.கிருஷ்ணமூர்த்தி_ பொதுச் செயலாளர், தமிழ்நாடு பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கம்*


*🙏நன்றியுரை :*

*_திரு.சோ.முருகேசன்_ மாநிலச் செயலாளர்*


*☕மாலை 05.30 - 06.00 :*

*_தேனீர் இடைவேளை_*


*⚡மாலை 06.00 - 07.30 :*

*_மூன்றாம் அமர்வு_*


*⚡தலைமை :*

*_திருமதி.இரா.தமிழ்ச்செல்வி_ மாநிலத் துணைத்தலைவர்*



*🛡மாற்றத்தை நோக்கி... கோளக்கல்வி*


*⚡கருத்துரை :*

*_திரு.ஜி.சந்தோஷ்குமார்_ கேரள மாநில ஆசிரியர் சங்கம்*


*🙏நன்றியுரை :*

*_திரு தே.முருகன்_ மாநிலச் செயலாளர்*


*⚡இரவு 07.30-9.30 :*

*_கலைநிகழச்சிகள்_*


*📆நாள் :*

*_15.05.2019 (புதன்கிழமை)_*


*⚡முற்பகல் 9.00 - 9.30 :*

*_நான்காம் அமர்வு_*


*⚡தலைமை :*

*_திரு.அ.ரஹும்_ மாநில துணை தலைவர்*


*🛡புதிய ஆசிரியன்*


*⚡கருத்துரை :*

*_பேரா. மூட்டா கே.ராஜு_ ஆசிரியர், புதிய ஆசிரியன்*


*🙏நன்றியுரை :*

*_திருமதி V.ஹேமலதா_ மாநிலச் செயலாளர்*


*⚡முற்பகல் 08.30 - 11.30 :*

*_ஐந்தாம் அமர்வு_*


*⚡தலைமை :*

*_திரு தோ. ஜான் கிறிஸ்துராஜ்_ மாநில துணைத் தலைவர்*


*🛡போராட்டங்களும், படிப்பினைகளும்*


*⚡கருத்துரை :*

*_திரு.ஜி.சுகுமாறன்_ மாநில பொதுச்செயலாளர், CITU*


*☕முற்பகல் 11.30 - 12.00 :*

*_தேனீர் இடைவேளை_*



*⚡நண்பகல் 12.00 - 2.00 :*

*_ஆறாம் அமர்வு_*



*⚡தலைமை :*

*_திரு பெ. அலோசியஸ் துரைராஜ்_ மாநில துணைத் தலைவர்*


*🛡நவீன தாராளமயம்*


*⚡கருத்துரை :*

*_பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா_ பொருளாதார நிபுணர்*


*🙏நன்றியுரை :*

*_திரு க. வின்சென்ட்_ மாநிலச் செயலாளர்*


*⚡நிறைவுரை :*

*_திரு ச.மயில்_ பொதுச்செயலாளரார்*


*🙏🙏நன்றியுரை :*

*_திரு.க.ஜோதிபாபு_ மாநிலப் பொருளாளர்*




🤝தோழமையுடன்;


*_ச.மயில்,_*

*மாநில பொதுச்செயலாளர்,*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм




Wednesday 1 May 2019


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2019/05/t-n-p-t-f-httpstnptfayan.html



https://youtu.be/uPvAtCxAWdA

*_TNPTF AYAN YOUTUBE CHANNEL_*

🎥🎤

*🌟நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக இன்று நடைபெற்ற முப்பெரும் விழாவில் மாநில பொதுச்செயலாளர் தோழர் ச.மயில் அவர்கள் ஊடக பேட்டியின் மூலம் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм





*தோழர்கள் அனைவருக்கும் _TNPTF அயனின்_ மே தின வாழ்த்துக்கள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/05/tnptf.html


🛠⛓🔩

*🌟மே தின வரலாறு உணர்த்தும் உண்மை மே தினம் உலகத் தொழிலாளர்களின் ஒற்றுமையையும், உறுதியையும் குறிக்கும் தினம்.போராடினால் வெற்றியை அடைய முடியும் என்பதை உறுதிபடுத்திய தினம்.*



🛠⛓🔩

*🌟அமெரிக்காவில் 1890ஆம் ஆண்டு 8 மணி நேரம் வேலை, 8 மணி நேரம் ஓய்வு, 8 மணி நேரம் உறக்கம் என்னும் கோரிக்கையை வலியுறுத்தியும், உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கேட்டும் தொழிலாளர்கள் போராடினர். இதை எதிர்த்து அமெரிக்க அரசு, ஈவிரக்கம் அற்ற தாக்குதலை நடத்தியது. ஏராளமான தொழிலாளர்கள் கொல்லப்ப்ட்டனர்.*



🛠⛓🔩

*🌟உலகத் தொழிலாளர்களின் துன்பத்திற்கான காரணத்தைக் கண்டறிந்து, முதலாளிகளை ஒழித்துக்கட்டி தொழிலாளர்கள் ஆட்சியில் அமர்ந்தால்தான் அனைத்துவிதமான துன்பங்களும் தீரும் என்றும், முதலாளிகள் உலக வரலாறின் வளர்ச்சிப் போக்கையே தடுத்து வருகின்றனர் என்றும், இதனை முடிவுக்குக் கொண்டு வரும் வல்லமை தொழிலாளர்களிடம் மட்டும்தான் உள்ளது என்றும் கூறி இதையெல்லாம் செய்வதற்கு, "உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்" என்றும் கூறினார் ஒப்பற்ற பொதுவுடைமைக் கொள்கையை உலகுக்குத் தந்த ஆசான் காரல் மார்க்ஸ். இவ்வாறு அவர் கூறி 42 ஆண்டுகள், உலகெங்கும் உள்ள தொழிலாளர்களின் இடைவிடாத போராட்டத்தால் இந்த வெற்றி நிலைநாட்டப்பட்டது.*



🛠⛓🔩

*🌟தொழிலாளர்களின் உழைப்பினால்தான் உலகமே இயங்குகிறது. தொழிலாளர்களின் உழைப்பு இன்றி எந்தப் பொருளும் உருவாவதில்லை என்பதை உணர்ந்தனர். தாம், விலங்குகளைவிட கீழ்த்தரமாக நடத்தப்படுவதையும், உழைப்பின் பலன்களை எல்லாம் அனுபவிக்கும் முதலாளிகள், தொழிலாளர்களை வறுமையிலும் துன்பத்திலும் இருக்கும்படி செய்கின்றனர் என்பதை உணர்ந்து ஒன்றுபட்டு உரிமைக்காககப் போராடினர்.*



🛠⛓🔩

*🌟1886ஆம் ஆண்டு அமெரிக்க தொழில் நகரங்களான நியூயார்க், சிகாகோ, பிலடெல்பியா, மில்விக்கி, சின்சினாட்டி, பால்டிமோர் என அமெரிக்கா முழுவதும் 3,50,000 தொழிலாளர்கள் பங்கேற்ற மாபெரும் வேலை நிறுத்தம் துவங்கியது. இந்த வேலை நிறுத்தத்தில் 1200க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் பயிபுரிந்த தொழிலாளர்கள் பங்கெடுத்துக் கொண்டனர். தொழிலாளர்களின் எழுச்சிமிக்க வேலை நிறுத்தத்தினால், அமெரிக்க பெரு நிறுவனங்கள் மூடப்பட்டன. இரயில் போக்குவரத்து நடைபெறவில்லை. வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற தொழிலாளர் ஊர்வலங்கள் அமெரிக்காவை உலுக்கியது. மிச்சிகனில் மட்டும் 40,000 தொழிலாளர்களும், சிக்காகோவில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.*



🛠⛓🔩

*🌟அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்களை இணைத்து “அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு” என்ற இயக்கம் உருவாக்கப்பட்டது. இவ்வியக்கம் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து போராட்ட இயக்கங்களை நடத்தியது. அத்தோடு மே 1, 1886 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது. இவ்வியக்கமே மே தினம் பிறப்பதற்கு காரணமாகவும் அமைந்தது.*



🛠⛓🔩

*🌟இவ்வாறு உலகெங்கும் நடந்த போராட்டத்தின் விளைவாக அமெரிக்காவில் இதற்கான வெற்றியை அடைந்தனர். தொழிலாளர்களின் போராட்டத்தால் நிலைகுலைந்த அரசு அவர்களின் கோரிக்கையை 1890ஆம் ஆண்டு ஏற்றது. தொழிலாளர்களின் இந்த வெற்றியை குறிக்கும் விதத்தில் மே முதல் நாள் தொழிலாளர் தினமாக மே தினம் என்று உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.*



🛠⛓🔩

*🌟இந்தியாவில் சென்னையில்தான் முதன் முதலில் மே தினம் கொண்டாடப்பட்டது. பொதுவுடைமைவாதி ம.சிங்காரவேலர் 1923ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் அருகே உள்ள கடற்கரையில் தொழிலாளர் தின விழாவைக் கொண்டாடினர்.*



🛠⛓🔩

*🌟இந்தியாவில் முதலாளிகளின் சுரண்டலை எதிர்த்து, தங்கள் உரிமையை அடைவதற்கான போராட்டம் இன்றுவரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. தொழிலாளர்கள் சாதி, மதம், இனம், மொழி ஆகியவற்றை கடந்து தொழிலாளர்கள் என்னும் உணர்வுடன் ஒன்றுபட்டு போராடினால் வெற்றி கிடைத்தே தீரும் என்பதை மே தின வரலாறு நமக்கு உணர்த்துகின்றது*



💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

*🌟கருத்தாலும் கரத்தாலும் உழைக்கும் உலகத்தொழிலாளர்கள் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் அனைவருக்கும் _TNPTF அயன்_ சார்பாக மே தின நல்வாழ்த்துகளைத்  தெரிவித்துக்கொள்கி்றோம்*

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм