Monday 6 May 2019

*1500 ஆசிரியர்களின் ஊதியத்தை நிறுத்தினால் தமிழகம் முழுவதும் போராட்டம் - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/05/1500.html


🛡⚔

*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழுக்கூட்டம் 06.05.2019 அன்று மதுரையில் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.* 



🛡⚔

*🌟கூட்டத்திற்கு மாநிலத்தலைவர் _தோழர்.மூ.மணிமேகலை_ தலைமை தாங்கினார். மதுரை மாவட்டச் செயலாளர் _தோழர்.க.ஒச்சுக்காளை_ வரவேற்புரை ஆற்றினார்.*



🛡⚔

*🌟கூட்டத்தில் வேலை அறிக்கையைச் சமர்ப்பித்தும் இயக்கத்தின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் மாநிலப் பொதுச்செயலாளர் _தோழர்.ச.மயில்_ விளக்கவுரையாற்றினார்.  ஜாக்டோ ஜியோ நடவடிக்கைகள் குறித்து மாநில ஜாக்டோ ஜியோ நிதிக்காப்பாளர் _தோழர்.ச.மோசஸ்_ உரையாற்றினார். சங்கத்தின் வரவு - செலவு குறித்து மாநிலப்பொருளாளர் _தோழர்.க.ஜோதிபாபு_ விளக்கிப் பேசினார்.* 



*🛡கூட்ட முடிவில் மாநிலப்பொதுச்செயலாளர் _தோழர்.ச.மயில்_ கூறியதாவது;⚔*


🛡⚔

*🌟23.08.2010 க்குப் பிறகு ஆசிரியராக நியமனம் பெற்று ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு அவர்களது குடும்பநலன் கருதி ஊதியத்தை நிறுத்தக்கூடாது. 8 ஆண்டுகாலம் ஆசிரியர்களாகப் பணியாற்றிய பின்பு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்பதைக் காரணம் காட்டி அவர்களைப் பணிநீக்கம் செய்யப்போவதாக அச்சுறுத்துவது என்பது எவ்விதத்திலும் நியாயமற்ற செயலாகும்.* 



🛡⚔

*🌟இவர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாததற்கு தமிழக அரசு போதுமான அளவில் தகுதித்தேர்வை நடத்தாததும் ஒரு காரணமாகும்.  மேலும், இவர்கள் முறையான ஆசிரியர் பயிற்சி பெற்று அரசு நடத்திய தேர்வில் வெற்றி பெற்று, அரசு வழங்கிய ஆசிரியர் பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள்.  எனவே, தகுதித் தேர்விலிருந்து இவர்களுக்கு விலக்களித்து அவர்களது பணிநியமன நாள்முதல் பணிவரன்முறை செய்திட மனிதாபிமான அடிப்படையில் தமிழக அரசு முன்வரவேண்டும்.*



🛡⚔

*🌟ஜனநாயக ரீதியில் கோரிக்கைகளுக்காகப் போராடிய ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீதான அனைத்து பழிவாங்கும் ஒழுங்கு நடவடிக்கைகளையும் தமிழகஅரசு உடனடியாகக் கைவிட வேண்டும்.  ஜாக்டோ ஜியோ போராட்டக்காலத்தில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீது போடப்பட்டுள்ள முற்றிலும் உண்மைக்கு மாறான பொய் வழக்குகளை தமிழக அரசு திரும்பப்பெறவேண்டும்.*



🛡⚔

*🌟தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் பள்ளிகளுடன் இணைந்த முன்பருவ வகுப்புகளைக் 2019 - 20 ஆம் கல்வியாண்டிலேயே துவங்கிட வேண்டும். அவ்வாறு துவங்கப்படும் வகுப்புகளில் இடைநிலை ஆசிரியர்களை நியமனம் செய்யாமல் முன்பருவ ஆசிரியர் பயிற்சி முடித்து பல ஆண்டுகளாக வேலைவாய்ப்பிற்காகக் காத்திருக்கும் தகுதிவாய்ந்த ஆசிரியர்களை நியமனம் செய்திட வேண்டும்.*



🛡⚔

*🌟மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வை வழங்கி 2 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் தமிழக அரசு தனது ஊழியர்களுக்கு இதுவரை அகவிலைப்படி உயர்வை அறிவிக்காதது மிகப்பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறது.  எனவே, உடனடியாக அகவிலைப்படி உயர்வை அறிவிக்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றாவிட்டால் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி கூட்டணி சார்பில்   07.06.2019 அன்று தமிழகம் முழுவதும் அனைத்து வட்டார தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டதாகக் கூறினார்.*



🛡⚔

*🌟இறுதியில் துணைப்பொதுச்செயலாளர் தா.கணேசன் நன்றி கூறினார் கூட்டத்தில் மாநிலம் முழுவதுமிருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.*



🤝தோழமையுடன்;


*_ச.மயில்,_*

*மாநில பொதுச்செயலாளர்,*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: