Saturday 29 August 2020

*29.08.2020 இன்று மாலை 5:00 மணிக்கு : TNSF-ன் இணையவழிக் கருத்தரங்கில் NEP'20-ல் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றி TNPTF பொதுச்செயலாளர் கருத்துரை*

*29.08.2020 இன்று மாலை 5:00 மணிக்கு : TNSF-ன் இணையவழிக் கருத்தரங்கில் NEP'20-ல் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றி TNPTF பொதுச்செயலாளர் கருத்துரை*

*⚔️*
*🛡தமிழ்நாடு அறிவியல் இயக்க சேலம் மற்றும் திருப்பூர் மாவட்ட கல்வி உபகுழுக்கள் இணைந்து இணையவழிக் கருத்தரங்குகளைத் தொடர் கல்விக் கருத்தரங்காக நடத்தி வருகிறது.*

*⚔️*
*🛡இத்தொடர் கருத்தரங்கின் 15-வது நிகழ்வாக, _இன்று_ (29.08.2020), _மாலை 5.00_ மணிக்கு நடைபெறும் இணையவழிக் கருத்தரங்கில்,*

*⚔️*
*🛡 _தேசிய கல்விக் கொள்கை 2020 - ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்_ எனும் தலைப்பில்,*

*⚔️*
*🛡 _தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி  ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் தோழர்.ச.மயில்_ கருத்துரையாற்ற உள்ளார்.*

*⚔️*
*🛡Zoom செயலி வழியாக நடைபெறும் இணையக் கருத்தரங்கில் இணைய,*

https://us02web.zoom.us/j/4361905097?pwd=eXhFUDF4Zkp3S2JnemIxV09JaUtaQT09

*⚡Meeting ID :* ```436 190 5097```

*⚡Passcode :* ```665544```

*⚔️*
*🛡Zoom செயலியில் இணைய இயலாதவர்கள்,*

http://www.facebook.com/tnsf.salem

https://www.facebook.com/TNSFTIRUPURDISTRICT/

*⚡ஆகிய முகநூல் பக்கங்களின் வழியாகவும் நேரலையில் காணலாம்.*

Friday 28 August 2020

*⚡தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி* is inviting you to a scheduled Zoom meeting.

*⚡தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி* is inviting you to a scheduled Zoom meeting.

Topic: *"பொதுத் துறை தனியார் மயம்: பலியாவதோ பொருளியல் நீதியும் சமுக நீதியும்"*
Time: Aug 28, 2020 06:30 PM

தலைமை: தோழர் *டி.செந்தில்குமார்* AIIEA -

வரவேற்புரை: *இராஜகோபால்* BEFI

பொருளியல் நீதி: தோழர் *எஸ். செல்லப்பா*, BSNLEU ,

சமுக நீதி:
தோழர் *கே.சாமுவேல்ராஜ்* த.தீ.ஒ.மு

நன்றியுரை: *ராஜேந்திரன்,* (மின்சாரம்- COTEEE)

*⚡தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி- மத்திய தர ஊழியர் அமைப்புகள்.*

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/83342329764?pwd=L1cvaEp6RXBkVTVNS0twaUFNSFdpZz09

Meeting ID: 833 4232 9764
Passcode: tnuef

*⚡கீழ்க்கண்ட  இணையவழிக் கருத்தரங்க நிகழ்வில் இணைந்து பயன்பெற TNPTF தோழர்களை மாநில மையம் அன்புடன் கேட்டுக் கொள்கிறது*

*நாடாளுமன்ற விவாதமற்ற NEP-2020-ன் பாதகமான அம்சங்களை எவ்வாறு செயல்படுத்துவது என ஆசிரியர்களிடம் கருத்து கேட்பது பயனற்ற செயல் - TNPTF*

*நாடாளுமன்ற விவாதமற்ற NEP-2020-ன் பாதகமான அம்சங்களை எவ்வாறு செயல்படுத்துவது என ஆசிரியர்களிடம் கருத்து கேட்பது பயனற்ற செயல் - TNPTF*

_மாநில அமைப்பின் செய்தியறிக்கை எண் : 14/2020_
_நாள்: 28.08.2020_

*⚔️*
*🛡தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில மைய நிர்வாகிகள் கூட்டம் 27.08.2020 அன்று காணொளி வழியே நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலத்தலைவர் மூ.மணிமேகலை தலைமை வகித்தார். கூட்டத்தில் தேசியக்கல்விக் கொள்கை 2020 தொடர்பான விவாதத்தை மாநில பொதுச்செயலாளர் ச.மயில் துவக்கி வைத்தார். இவ்விவாதத்தில் மாநிலப் பொருளாளர் க.ஜோதி பாபு, துணைப் பொதுச்செயலாளர் தா.கணேசன், இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்தியப் பொதுக்குழு உறுப்பினர் ச.மோசஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் கீழ்க்கண்டவாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.*

*⚔️*
*🛡 தேசியக்கல்விக் கொள்கை 2020-ஐ நடைமுறைப்படுத்துவது தொடர்பாக மத்திய பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையின் செயலாளர் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் கல்வித்துறைச் செயலாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி முதல்வர்களிடம் 31.08.2020-க்குள் இணையதளம் வாயிலாகக் கருத்துக் கேட்கப்பட்டுள்ளது.*

*⚔️*
*🛡 தேசியக்கல்விக் கொள்கை 2020 என்பது அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேசியப் பிரச்சினை ஆகும். அத்தகு கல்விக் கொள்கையை பாராளுமன்றத்தில் எவ்வித விவாதத்திற்கும் உட்படுத்தாமல் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலோடு நடைமுறைக்குக் கொண்டு வந்திருப்பது என்பது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானதாகும்.*

*⚔️*
*🛡அது மட்டுமல்ல, இந்தியா என்பது பல்வேறு மொழிவாரி மாநிலங்களின் கூட்டமைப்பாகும். தேசியக்கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் மாநிலங்களின் பங்கு மிக முக்கியமானதாகும்.*

*⚔️*
*🛡கல்வி மத்திய மாநில அரசுகளின் பொதுப்பட்டியலில் உள்ளது. இத்தகைய சூழலில் மாநில அரசுகளின் கருத்துக்களைக் கூட எதிர்பார்க்காமல் மாநில அரசுகளின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்களிடம் நேரடியாக மத்திய அரசு கருத்துக் கேட்பது என்பது கூட்டாட்சி முறைக்கு எதிரானதாகும். எனவே, இதுதொடர்பாக தமிழக அரசும் தனது நிலையைத் தெரிவிக்க வேண்டும்.*

*⚔️*
*🛡 தேசியக்கல்விக் கொள்கை 2020-ஐ நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஆசிரியர்களிடம் கருத்துக் கோரி இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள விவரங்கள் 11 கருப்பொருள்கள் (Themes) கொண்டதாகவும், அதன் கீழ் 102 வினாக்கள் கொண்டதாகவும் அமைந்துள்ளது. மேற்கண்ட விவரங்கள் அனைத்தும் ஆங்கிலம், இந்தி ஆகிய இரு மொழிகளில் மட்டுமே உள்ளது.*

*⚔️*
*🛡இந்தியா பல்வேறு மொழிகளைப் பேசக்கூடிய, படிக்கக்கூடிய 130 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வாழும் பன்முகத்தன்மை கொண்ட நாடு. இங்கு வாழும் மக்களில் 50% பேருக்கு மட்டுமே இந்தி தெரியும். 15% பேருக்கு மட்டுமே ஆங்கிலம் தெரியும்.*

*⚔️*
*🛡 ஆசிரியர்களாக இருப்பினும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினை தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போது தெளிவாகப் புரிந்து கொண்டு, தாய்மொழியில் கருத்துக்களைத் தெரிவிப்பது போன்று பிற மொழிகளில் கருத்துக்களைத் தெரிவிக்க இயலாது என்பதுதான் நடைமுறை உண்மை. இவ்வாறிருக்க இந்தியா முழுவதும் ஆசிரியர்களிடம் ஆங்கிலம், இந்தி ஆகிய இரு மொழிகளில் மட்டும் கருத்துக் கேட்பது என்பது எவ்விதப் பயனையும் தராது.*

*⚔️*
*🛡கடந்த ஆண்டு தேசியக்கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் உள்ள பாதகமான அம்சங்கள், திருத்தப்பட வேண்டிய விவரங்கள் தொடர்பாக நாடு முழுவதும் கல்வியாளர்கள் ஆசிரியர் அமைப்புகள் தெரிவித்த அத்தனை கருத்துக்களையும் புறந்தள்ளி வரைவு அறிக்கையை அப்படியே மத்திய அமைச்சரவை ஏற்று ஒப்புதல் அளித்து, அதன் அடிப்படையில் தேசியக்கல்விக் கொள்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.*

*⚔️*
*🛡பல்வேறு பாதகமான அம்சங்களைக் கொண்டுள்ள தேசியக்கல்விக் கொள்கை தொடர்பாகக் கருத்துக் கூறுவதற்கு ஆசிரியர்களுக்கு வாய்ப்பளிக்காமல், அதில் உள்ள பாதகமான அம்சங்களை எவ்வாறு செயல்படுத்துவது என ஆசிரியர்களிடம் கருத்து கேட்பது தான் வேடிக்கையாக உள்ளது.*

*⚔️*
*🛡அதிலும் கருத்துக் கேட்புப் படிவத்தில் ஆசிரியர்களின் பெயர், முகவரி, பணியாற்றும் பள்ளி, பள்ளியின் U-DISE எண், மின்னஞ்சல் முகவரி, அலைபேசி எண் உள்ளிட்ட அனைத்தையும் கேட்பது என்பது ஆசிரியர்கள் சுதந்திரமாகக் கருத்து தெரிவிப்பதைத் தடுக்கும் செயலாகவும் உள்ளது. எனவே, இக்கருத்துக் கேட்பு ஒரு பயனையும் தராது என்பதே உண்மையாகும்.*

*⚔️*
*🛡எனவே, தேசத்தின் எதிர்கால வளர்ச்சிக்கும், ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களின் நலனுக்கும் எதிரான பல்வேறு கூறுகளைக் கொண்ட தேசியக்கல்விக் கொள்கை – 2020 ஐ மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.*

*⚔️*
*🛡அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள் உட்பட பல்வேறு அமைப்புகள் தெரிவித்த ஆக்கபூர்வமான பல்வேறு கருத்துக்களை உள்ளடக்கிய தேசியக்கல்விக் கொள்கையைப் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து விரிவாக விவாதித்து நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.*

_தோழமையுடன்_

*ச.மயில்*
_பொதுச்செயலாளர்_
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*

Thursday 13 August 2020

*கப்பல் ஊழியரான தலைமை ஆசிரியரின் மகன் நைஜீரியா நாட்டில் மரணம் / உடலைச் சொந்த ஊருக்குக் கொண்டு வர / மத்திய மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள / தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள்.*

*😢கப்பல் ஊழியரான தலைமை ஆசிரியரின் மகன் நைஜீரியா நாட்டில் மரணம் / உடலைச் சொந்த ஊருக்குக் கொண்டு வர / மத்திய மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள / தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள்.*

*மாநில அமைப்பின் செய்தியறிக்கை எண்: 13/2020  நாள்: 13.08.2020*

*_கப்பல் ஊழியரான தலைமை ஆசிரியரின் மகன் நைஜீரியா நாட்டில் மரணம் உடலைச் சொந்த ஊருக்குக் கொண்டு வர மத்திய மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள்_*

*😢நைஜீரியா நாட்டில் இறந்து போன கப்பல் ஊழியரான தலைமை ஆசிரியரின் மகன் உடலை அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம், புன்னக்காயல் கொண்டுவர மத்திய மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள் விடுத்துள்ளது.*

_இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் ச.மயில் வெளியிட்டுள்ள அறிக்கை._

*😢தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார் திருநகரி ஒன்றியம், புன்னக்காயல் என்ற ஊரில் வசிக்கும் வில்ஜியூஸ் லோபோ அருகில் உள்ள சேர்ந்தபூமங்கலம் என்ற ஊரில் உள்ள நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவரது மகன் வி.வில்பன் லோபோ (வயது-21) கடந்த 15.11.2019ல் மும்பையைச் சேர்ந்த ஒரு நிறுவனம் மூலம் ஹல்விட்டா என்ற வெளிநாட்டுச் சரக்குக் கப்பலில் இயந்திரப் பணியாளராக ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர்ந்து கடந்த எட்டு மாத காலமாகப் பணியாற்றி வந்துள்ளார்.*

*😢இந்நிலையில் கடந்த 26.7.2020 அன்று இரவு 10.30 மணிக்கு வி.வில்பன் லோபோ நைஜீரியா நாட்டில் கேமரூன் துறைமுகத்தில் கப்பலில் இருந்து தவறி கடலுக்குள் விழுந்து விட்டதாக மும்பையில் உள்ள அலுவலகம் மூலம் தந்தை வில்ஜியூஸ் லோபோவுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைக் கேட்டு குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.*

*😢இது தொடர்பாகப் புன்னக்காயலில் உள்ள கப்பல் மாலுமிகள் சங்கத்தினர் மும்பையில் உள்ள அகில இந்தியக் கப்பல் மாலுமிகள் சங்கத்தைத் தொடர்பு கொண்டு, கடலில் தவறி விழுந்ததாகக் கூறப்படும் வி.வில்பன் லோபோவைத் தேடும் பணியைத் துரிதப்படுத்தினர்.*

*😢இந்நிலையில் கடந்த 28.07.2020 அன்று இறந்து போன வி.வில்பன் லோபோவின் உடல் கடலில் கரை ஒதுங்கியதாகக் கூறப்படுகிறது.*

*😢தற்போது இறந்தவரின் உடல் நைஜீரியா நாட்டில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு அங்குள்ள இந்தியத் தூதரகத்தில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.*

*😢தனது மகனின் உடலைச் சொந்த ஊருக்குக் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி இறந்துபோன வி.வில்பன் லோபோவின் தந்தையும், பள்ளித் தலைமை ஆசிரியருமான று.வில்ஜியூஸ் லோபோ தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் மூலமாக மத்திய, மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விண்ணப்பம் அளித்துள்ளார்.*

*😢அதேபோன்று புன்னக்காயல் கிராம மக்களும், மீனவர் அமைப்புக்களும் இறந்தவரின் உடலைச் சொந்த ஊருக்குக் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டி தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு மனு அளித்துள்ளனர்.*

*😢இறந்து 17 நாட்கள் ஆகியும் தலைமை ஆசிரியரின் மகன் உடல் சொந்த ஊருக்கு இதுவரை கொண்டு வரப்படாததால் பெற்றோரும், உறவினர்களும், கிராம மக்களும் தொடர்ந்து பெரும் துயரத்தில் இருந்து வருகின்றனர்.*

*😢எனவே, இவ்விஷயத்தில் தமிழக அரசு மனிதாபிமான அடிப்படையில் உடனடியாகத் துரித நடவடிக்கை மேற்கொண்டு மத்திய அரசின் மூலமாக இறந்தவரின் உடலைச் சொந்த ஊருக்குக் கொண்டு வந்து உதவிட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு தமிழக அரசை வேண்டிக் கேட்டுக்கொள்கிறது.*
                                                                                     
சென்னை    
13.08.2020

_இப்படிக்கு,_

*_ச. மயில்_*       _பொதுச்செயலாளர்_
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*

Sunday 9 August 2020

*🛡️தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தமிழக அரசுக்கு கோரிக்கை மனு-கொரோனா நோய்த் தொற்றுக்கு அரசாணைப்படி கட்டணமில்லா சிகிச்சையை உறுதிப்படுத்தக் கோரியும், கொரோனா சிகிச்சையில் முறைகேடுகள் செய்யும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.*

*🛡️தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தமிழக அரசுக்கு கோரிக்கை மனு-கொரோனா நோய்த் தொற்றுக்கு அரசாணைப்படி கட்டணமில்லா சிகிச்சையை உறுதிப்படுத்தக் கோரியும், கொரோனா சிகிச்சையில் முறைகேடுகள் செய்யும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.*

*_தஆஆகூ/மா அ/கடித எண்: 35/2020, நாள்: 07.08.2020_*

*_பெறுநர்_*

⚡1. மாண்புமிகு, தமிழக முதலமைச்சர் அவர்கள்,
தலைமைச் செயலகம்,
சென்னை-600 009.

⚡2. மாண்புமிகு, நிதியமைச்சர் அவர்கள்,
தலைமைச் செயலகம்,
சென்னை-600 009.

⚡3. மதிப்புமிகு, தலைமைச் செயலாளர்,
தலைமைச் செயலகம்,
சென்னை-600 009.

⚡4. மதிப்புமிகு. முதன்மைச்செயலாளர்,
நிதித்துறை,
தலைமைச் செயலகம்,
சென்னை-600 009.

⚡5. மதிப்புமிகு. ஆணையாளர்,
கருவூலம் மற்றும் கணக்குத்துறை,
3-வது மாடி, கால்நடை மருத்துவமனை வளாகம்,
அண்ணாசாலை, நந்தனம்,
சென்னை-600 635.

*மாண்புமிகு ஐயா,*

*_பொருள் :_*

*🛡️கல்வி - பள்ளிக்கல்வி - அரசு ஊழியர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் - கொரானா சிகிச்சைக்கு அரசாணை எண் : 279 நிதித்துறை நாள்: 24.06.2020ன் படி கட்டணமில்லா சிகிச்சை கோருதல் - சார்பு.*

*_பார்வை :_*

*🛡️1. அரசாணை எண்: 279 நிதித்துறை நாள்: 24.06.2020*

*🛡️2. அரசாணை எண்: 280 நிதித்துறை நாள்: 24.06.2020.*

*🛡️தமிழக அரசு ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நான்கு ஆண்டுகளுக்கு பல்வேறு நோய்களுக்கானஅறுவைச் சிகிச்சைகளுக்கு ரூ.4 இலட்சம் எனவும், பிரத்யேக அறுவைச் சிகிச்சைகளுக்கு ரூ.7 1/2 இலட்சமும் வழங்கி வருகின்றது.*

*⚔️*
*🛡️தற்போது கொரானா எனும் கொடும் தொற்று உலகையே ஆட்டிப்படைக்கும்இவ்வேளையில் ஆசிரியர் அரசு ஊழியர்களை இத்தொற்றிலிருந்து பாதுகாக்கும் நல்லெண்ணத்துடன் தமிழக முதலமைச்சர் இச்சிகிச்சைக்கு ஆகும் செலவுத் தொகையை மருத்துவக்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பெற்றுக்கொள்ளஏதுவாக பார்வை 2-ல் கண்ட அரசாணை எண்: 280 நிதித்துறை நாள் 24.06.2020-ன்படி 01.03.2020 முதல் 26.04.2020 முடிய இத்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்கான செலவுத்தெகையை மீள பெற்றுக்கொள்ளவும்,*

*⚔️*
*🛡️பார்வை 1-ல் அரசாணை எண்: 279 நிதித்துறை நாள்: 24.06.2020 - ன் படி 01.07.2020 முதல் இந்த மருத்துவக்காப்பீட்டுத்திட்டம் ஓராண்டுக்கு தொடர்வதாகவும், இத்திட்டத்தின் கீழ் கொரானா சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான அறுவைச் சிகிச்சைகளுக்குரூ.4 இலட்சம் எனவும், பிரத்யேக அறுவைச் சிகிச்சைகளுக்கு 7 1/2இலட்சம் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.*

*⚔️*
*🛡️இந்நிலையில் 01.07.2020 க்கு பிறகு கொரானா தொற்றால் பாதிக்கப்படும் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பார்வை 2-ல் கண்ட அரசாணை எண்: 280 நிதித்துறை நாள்: 24.06.2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள படி மட்டுமே கட்டணம் (Package) வழங்கப்படும் மாநிலத் திட்ட ஒருங்கிணைப்பாளர் திட்டவட்டமாக தெரிவித்து வருகின்றார்.*

*⚔️*
*🛡️01.07.2020-க்கு பின் ரூ.7% பார்வை 1-ல் கண்ட அரசாணை எண்: 279 நிதித்துறை நாள்: 24.06.2020 - ன் படி மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஓராண்டிற்கு தொடர்கின்ற நிலையில் அரசாணையில் குறிப்பிட்டபடி கொரானா சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கானஅறுவைச் சிகிச்சைகளுக்கு ரூ.4 இலட்சம் எனவும், பிரத்யேக அறுவைச் சிகிச்சைகளுக்கு ரூ.7 1/2 இலட்சம் வழங்குவது என்பது மீறப்படுகிறது,*

*⚔️*
*🛡️ஆகவே இவ்விசயத்தில் தமிழக அரசு உடன் தலையிட்டு 12 இலட்சம் ஆசிரியர் அரசு ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பார்வை 1-ல் கண்ட அரசாணை எண்: 279 நிதித்துறை நாள்: 24.06.2020-ன் படி காப்பீட்டு நிறுவனம், கொரானா சிகிச்சைக்கு கட்டணமில்லா சிகிச்சை வழங்குமா? என்பது பற்றி தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டுமென தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பின் சார்பில் தங்களை வேண்டுகிறோம்.*

சென்னை
07.08.2020

_இப்படிக்கு,_

*_ச. மயில்,_*
_பொதுச்செயலாளர்,_
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*


Friday 7 August 2020

*🖥️Webinar on National Education Policy 2020 - தேசிய கல்விக் கொள்கை-2020 ஆன்லைன் கருத்தரங்கம்*

*🖥️தேசிய கல்விக் கொள்கை-2020 கருத்தரங்கம்- இன்று (07.08.2020) மாலை 5.30 மணியளவில் ஆன்லைன் வழியே நடைபெற உள்ளது.*

*_பேரன்புமிக்க நம் பேரியக்கத் தோழர்களே!_ வணக்கம்.*

*🖥️இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு (STFI), அகில இந்தியப் பல்கலைக்கழக மற்றும் கல்லூரி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (AIFUCTO) மற்றும் தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (TANFUFA) ஆகிய மிக முக்கியமான ஆசிரியர் கூட்டமைப்புக்கள் இணைந்து இன்று (07.08.2020) மாலை 5.30 மணிக்கு இணையதளம் வழியாக  தேசிய கல்விக் கொள்கை-2020 தொடர்பாக கருத்தரங்கம் ஒன்றை நடத்துகின்றன. இக்கருத்தரங்கில் ஆரம்பப் பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரையிலான பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் பங்கேற்கின்றன. நமது அகில இந்திய அமைப்பான இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் (STFI) இணைப்புச் சங்கங்களின் உறுப்பினர்கள் அனைவரும் இக்கருத்தரங்க நிகழ்வில் இணைந்திட வேண்டும்.*

*🖥️தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி உறுப்பினர்கள் அனைவரும் இக்கருத்தரங்கில் இணைந்து பயன்பெறுமாறு மாநில மையம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது. கீழே கொடுக்கப்பட்டுள்ள Link ஐ click செய்தால் மட்டும் போதும் நேரடியாக youtube வழியாகக் கருத்தரங்கில் இணைந்து விடலாம். இது மிகவும் எளிது. சிரமம் எதுவும் இல்லை.*

*🖥️தேசிய முக்கியத்துவம் வாய்ந்த,நாட்டின் எதிர்காலம் சார்ந்த தேசிய கல்விக் கொள்கை-2020 தொடர்பான இக்கருத்தரங்கில் புகழ்பெற்ற பத்திரிகையாளர் இந்து என்.ராம், மைசூர் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் திரு.L. ஜவஹர் நேசன், புகழ்பெற்ற கல்வியாளர் பேராசிரியர் டாக்டர் ஆர். இராமானுஜம் ஆகியோர் கலந்துகொண்டு உரை நிகழ்த்துகின்றனர். எனவே, நம் இயக்கத்தின் மாநில, மாவட்ட, வட்டார, நகரக் கிளைகளின் நிர்வாகிகள் இந்தச் செய்தியை உடனடியாகச் சமூக வலைதளங்கள் வழியே நம் இயக்க உறுப்பினர்கள் மற்றும் STFI இணைப்புச் சங்கங்களின் உறுப்பினர்கள் அனைவருக்குக்கும் கொண்டு சென்று, அனைவரையும் கருத்தரங்கில் இணையச் செய்து பயனடையச் செய்யுமாறு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில மையம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது.*

*_🖥️கருத்தரங்கில் இணைவதற்கான லிங்க்:_*
👇👇👇👇👇👇👇👇 https://youtu.be/2BNg4G2OHpY

_🤝தோழமையுடன்;_

*_ச. மயில்_*
_பொதுச் செயலாளர்_
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*

Thursday 6 August 2020

*🛡️AIFUCTO ,STFI, TANFUFA ஆகிய கூட்டமைப்புக்கள் இணைந்து நடத்தும் தேசிய கல்விக் கொள்கை-2020 இணையவழிக் கருத்தரங்கம் அழைப்பிதழ்*

*🛡️AIFUCTO ,STFI, TANFUFA ஆகிய கூட்டமைப்புக்கள் இணைந்து  நடத்தும்  தேசிய கல்விக் கொள்கை-2020 இணையவழிக் கருத்தரங்கம் அழைப்பிதழ்*

*⚔️*
*🛡️AIFUCTO ,STFI, TANFUFA ஆகிய கூட்டமைப்புக்கள் இணைந்து  நடத்தும்  தேசிய கல்விக் கொள்கை-2020 இணையவழிக் கருத்தரங்கம் நாளை(07.08.2020)மாலை 5.30 மணிக்கு நடைபெறுகிறது.*

*⚔️*
*🛡️இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் இணைப்புச் சங்கங்களின் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் இக்கருத்தரங்கில் கலந்து கொள்ளவும்.*

*⚔️*
*🛡️இத்துடன் இணையதளக் கருத்தரங்க அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது. அதில் கருத்தரங்கில் இணைவதற்கான Link இடம்பெற்றுள்ளது.*

Wednesday 5 August 2020

*🛡️இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு (STFI) சார்பில் இன்று (05.08.2020) தமிழகம் முழுவதும் முதன்மை கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்ட புகைப்படம் மற்றும் காணொளி தொகுப்பு*

*🛡️இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு (STFI) சார்பில் இன்று (05.08.2020) தமிழகம் முழுவதும் முதன்மை கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.*

*🛡️ஆர்ப்பாட்டத்தின் முடிவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.*

*🛡️நிகழ்வில் STFI நிர்வாகிகள் மற்றும் தோழமைச் சங்க உறுப்பினர்கள்  கலந்துகொண்டனர்.*

*_🗣️தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணைத்தலைவர் _தோழர். ரஹும்_ அவர்கள் ஊடகத்திற்கு அளித்த பேட்டி_*


*_🗣️STFI சார்பாக நடைபெற்ற மாநிலம் தழுவிய மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற கோரிக்கை முழக்க ஆர்பாட்ட புகைப்படத் தொகுப்பு_*

http://tnptfayan.blogspot.com/2020/08/stfi-05082020_5.html



*🛡️STFI சார்பாக 05.08.2020 இன்று நடைபெறும் மாலை நேர ஆர்ப்பாட்டம் - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அன்போடு அழைக்கிறது.*

*🛡️STFI சார்பாக 05.08.2020 இன்று நடைபெறும் மாலை நேர  ஆர்ப்பாட்டம் -  தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அன்போடு அழைக்கிறது.*

*_பேரன்புமிக்க பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!_ வணக்கம்.*

*மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி STFI சார்பாக 05.08.2020 இன்று நடைபெறும் மாலை நேர  ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி எனும் போர்குணம் கொண்ட பேரிக்கத்தின் இயக்க மறவர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.*

*இடம்:* *CEO அலுவலகம் முன்பு, (அந்தந்த மாவட்டம்)*

*நாள்*: *05.08.2020 புதன்கிழமை*

*நேரம்:* *மாலை 4.30 மணி*

_3 அம்ச கோரிக்கைகள்_

*🛑2019 ஜனவரியில் நடைபெற்ற ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் இறுதிவரை களத்தில் நின்ற போராளிகள் மீது எடுக்கப்பட்ட 17 B நடவடிக்கையை திரும்பப்பெற வலியுறுத்துதல்*

*🛑பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் வழங்குவது தொடர்பான கருத்து தெரிவித்த திரு.மா.இரவிச்சந்திரன் மற்றும் திரு பேட்ரிக் ரெய்மாண்ட் ஆகியோர் மீது மேற்கொள்ளப்பட்ட 17 B. நடவடிக்கைகளை திரும்பப் பெற வலியுறுத்துதல்*

*🛑மருத்துவ குழுவினரின் ஆலோசனை பெற்று பள்ளி, கல்லூரிகளைத் திறந்து சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்துதல்*

*⚔️*
*🛡️ஆகிய முத்தான மூன்று  கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு (STFI) சார்பாக நாளை (05.08.2020) புதன்கிழமை மாலை 4.30 மணியளவில் தமிழகம் முழுவதும் முதன்மைக் கல்வி அலுவலகங்கள் முன்பு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.*

*⚔️*
*🛡️தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட  முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு நடைபெறும் கோரிக்கை முழக்க ஆர்பாட்டத்தில் TNPTF இயக்கப் பொறுப்பாளர்களும் இயக்க மறவர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமாறும், ஆர்பாட்டத்தில் இயக்க தோழர்கள் மற்றும் தோழமைச் சங்க தோழர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியினை கடைபிடிக்குமாறும்  அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.*

*🗣️கோரிக்கை முழக்க ஆர்பாட்ட கோஷங்கள் இணைக்கப்பட்டுள்ளது தேவைபடும் தோழர்கள் கீழே உள்ள link ஐ கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.*

*_🤝தோழமையுடன்_

*_ச.மயில்,_*
_பொதுச்செயலாளர்,_
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*


Sunday 2 August 2020

*🛡️TNPTF-ன் 37-ஆம் இயக்க நாள் : திங்களன்று அலுவலகங்கள் முன்பு இயக்கப் பதாகையை உயர்த்திட மாநில மையத்தின் வாழ்த்துச் செய்தி*

*🛡️TNPTF-ன் 37-ஆம் இயக்க நாள் : திங்களன்று அலுவலகங்கள் முன்பு இயக்கப் பதாகையை உயர்த்திட மாநில மையத்தின் வாழ்த்துச் செய்தி*

*⚔️*
*🛡இன்று (02.08.2020) பெருமைக்குரிய நம் பேரியக்கம் தோன்றிய நாள். உதித்த போதே போராட்டத்தில் குதித்த மகத்தான நம் பேரியக்கத்தின் 37வது இயக்க தினம் இன்று.*

*⚔️*
*🛡கடந்த 36 ஆண்டுகால இயக்கத்தின் எழுச்சிமிகு பயணத்தில் எத்தனையோ தியாகம் தோய்ந்த வரலாற்றுச் சாதனைகள்; சோதனைகளைச் சாதனையாக்கிய சரித்திர நிகழ்வுகள்; தொய்வின்றித் தொடரும் பயணத்தில் தன்னிகரற்ற இயக்கத் தோழர்களின் தளர்வறியா களப்பணிகள்.*

*⚔️*
*🛡எத்தகைய இடர்வரினும் சுடர் முகம் கொண்டு சுட்டெரிக்கும் நெஞ்சுறுதியும், நேர்மைத் திறனும் கொண்ட பாசறையாய் நம் பேரியக்கம்.*

*⚔️*
*🛡கல்வி நலனுக்கோர் களங்கமென்றால் களத்தில் இறங்கிப் போராடும் இயக்கம்! ஆசிரியர் நலனுக்கோர் ஆபத்தென்றால் அலை கடலென ஆர்ப்பரிக்கும் இயக்கம்! மாணவர் நலனுக்கோர் மாசென்றால் மறத்தோடும், அறத்தோடும் போராடும் இயக்கம்! சமூக நலனுக்கோர் சங்கடமென்றால் சமரசமின்றிப் போராடும் இயக்கம்!*

*⚔️*
*🛡சாதி என்னும் சதிக்கும், மதமென்னும் பதத்திற்கு இரையாகாத  எழுச்சிமிகு இயக்கம். பங்கமில்லாச் சங்கமென பார் போற்றும் நம் பேரியக்கம்.*

*⚔️*
*🛡இணையற்ற நம் இயக்கம் இன்று (02.08. 2020) 37 ஆம் ஆண்டில் இமாலய எழுச்சியோடு எழுந்து நிற்கிறது.*

*⚔️*
*🛡அனைத்து இயக்கத் தோழமைகளுக்கும் எழுச்சிமிகு இயக்க நாள் வாழ்த்துக்கள்.*

*⚔️*
*🛡இன்று (02.08.2020 - ஞாயிறு) முழு ஊரடங்கு என்பதால் 28.07.2020 மாநிலச் செயற்குழு முடிவின்படி நாளை (03.08.2020) அலுவலகங்கள் முன்பு இயக்கப் பதாகையை உயர்த்துவோம். உறுதியுடன் முன்னேறுவோம்.*

_🤝வாழ்த்துக்களுடன்_

*_ச.மயில்,_*
_பொதுச்செயலாளர்,_
*தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி*