Wednesday, 5 August 2020

*🛡️STFI சார்பாக 05.08.2020 இன்று நடைபெறும் மாலை நேர ஆர்ப்பாட்டம் - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அன்போடு அழைக்கிறது.*

*🛡️STFI சார்பாக 05.08.2020 இன்று நடைபெறும் மாலை நேர  ஆர்ப்பாட்டம் -  தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அன்போடு அழைக்கிறது.*

*_பேரன்புமிக்க பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!_ வணக்கம்.*

*மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி STFI சார்பாக 05.08.2020 இன்று நடைபெறும் மாலை நேர  ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி எனும் போர்குணம் கொண்ட பேரிக்கத்தின் இயக்க மறவர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.*

*இடம்:* *CEO அலுவலகம் முன்பு, (அந்தந்த மாவட்டம்)*

*நாள்*: *05.08.2020 புதன்கிழமை*

*நேரம்:* *மாலை 4.30 மணி*

_3 அம்ச கோரிக்கைகள்_

*🛑2019 ஜனவரியில் நடைபெற்ற ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் இறுதிவரை களத்தில் நின்ற போராளிகள் மீது எடுக்கப்பட்ட 17 B நடவடிக்கையை திரும்பப்பெற வலியுறுத்துதல்*

*🛑பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் வழங்குவது தொடர்பான கருத்து தெரிவித்த திரு.மா.இரவிச்சந்திரன் மற்றும் திரு பேட்ரிக் ரெய்மாண்ட் ஆகியோர் மீது மேற்கொள்ளப்பட்ட 17 B. நடவடிக்கைகளை திரும்பப் பெற வலியுறுத்துதல்*

*🛑மருத்துவ குழுவினரின் ஆலோசனை பெற்று பள்ளி, கல்லூரிகளைத் திறந்து சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்துதல்*

*⚔️*
*🛡️ஆகிய முத்தான மூன்று  கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு (STFI) சார்பாக நாளை (05.08.2020) புதன்கிழமை மாலை 4.30 மணியளவில் தமிழகம் முழுவதும் முதன்மைக் கல்வி அலுவலகங்கள் முன்பு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.*

*⚔️*
*🛡️தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட  முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு நடைபெறும் கோரிக்கை முழக்க ஆர்பாட்டத்தில் TNPTF இயக்கப் பொறுப்பாளர்களும் இயக்க மறவர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமாறும், ஆர்பாட்டத்தில் இயக்க தோழர்கள் மற்றும் தோழமைச் சங்க தோழர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியினை கடைபிடிக்குமாறும்  அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.*

*🗣️கோரிக்கை முழக்க ஆர்பாட்ட கோஷங்கள் இணைக்கப்பட்டுள்ளது தேவைபடும் தோழர்கள் கீழே உள்ள link ஐ கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.*

*_🤝தோழமையுடன்_

*_ச.மயில்,_*
_பொதுச்செயலாளர்,_
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*


No comments: