Wednesday 1 June 2022

*🛡️தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறையில் எண்ணும் எழுத்தும் பயிற்சி - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி எதிர்ப்பு!*

*🛡️தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறையில் எண்ணும் எழுத்தும் பயிற்சி - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி எதிர்ப்பு!*

*🛡️கோடை விடுமுறையில் தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ள "எண்ணும் எழுத்தும்" பயிற்சியை உடனடியாக நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பள்ளிக்கல்வித்துறையை கேட்டுக்கொண்டுள்ளது.*

*_இதுகுறித்து சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ச.மயில் வெளியிட்டுள்ள அறிக்கை:_*

*🛡️கடந்த 21.05.2022 முதல் ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்குக் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் 13ம் தேதி கோடை விடுமுறைக்குப்பின் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதன்படி 23 நாட்கள் மட்டுமே கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது வழக்கமான கோடை விடுமுறை அளவைவிட குறைவான நாட்களாகும். 2021-22 ம் கல்வியாண்டில் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக மாணவர்கள் தாமதமாகப் பள்ளிகளுக்கு வருகை புரிந்தாலும், ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரிந்த நாட்கள் 220 நாட்களைத் தாண்டியுள்ளது. இது வழக்கமான ஆண்டின் வேலை நாட்களை விடக் கூடுதலாகும்.*

*🛡️இத்தகு சூழலில் 2021-22ம் கல்வியாண்டில் அளிக்கப்பட்டுள்ள குறைவான கோடை விடுமுறை நாட்களிலும் 01.06.2022 மற்றும் 02.06.2022 ஆகிய இரு நாட்கள் "எண்ணும் எழுத்தும்" பயிற்சிக்கான கருத்தாளர் பயிற்சியும், 1 முதல் 3 ம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 06.06.2022 முதல் 10.06.2022 முடிய "எண்ணும் எழுத்தும்" பயிற்சியும் தமிழ்நாடு முழுவதும் வழங்கிட பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.*

*🛡️இவ்வாறு கோடை விடுமுறையில் அளிக்கப்படும் பயிற்சி மாநிலம் முழுவதும் உள்ள தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கோடைவிடுமுறையில் இதுபோன்ற பயிற்சிகள் இதற்கு முன்பு வழங்கப்பட்டதில்லை. மேலும், பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் கோடை விடுமுறையைத் துய்க்கும் பிரிவினராவர். இதனாலேயே அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவது போல் ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு 30 நாட்கள் ஈட்டிய விடுப்பு அனுமதிக்கப்படுவதில்லை. 15 நாட்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.*

*🛡️எனவே, இக்கல்வியாண்டில் ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள குறைவான கோடை விடுமுறை நாட்களையும் இல்லாமல் செய்யும் நடவடிக்கையாக "எண்ணம் எழுத்தும்" பயிற்சி அமைந்துள்ளது. கோடைவிடுமுறையில் இப்பயிற்சி நடத்துவதை எதிர்த்து 28.05.2022 அன்று திருச்சியில் நடைபெற்ற எங்கள் சங்கத்தின் மாநிலச் செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.*

*🛡️எனவே, பள்ளிக்கல்வித்துறை கோடை விடுமுறையில் நடத்தும் "எண்ணும் எழுத்தும்" பயிற்சியை உடனடியாக நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பள்ளிக்கல்வித்துறையை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.*

இப்படிக்கு,

*_ச.மயில்,_*
*மாநில பொதுச்செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,*