Friday 21 February 2020

*தொடக்கக் கல்வித்துறையில் இரட்டை அதிகாரம், விடுப்பு எடுக்க முடியாமல் தவிக்கும் ஆசிரியர்கள் - நாளிதழ் செய்தி*

*தொடக்கக் கல்வித்துறையில் இரட்டை அதிகாரம், விடுப்பு எடுக்க முடியாமல் தவிக்கும் ஆசிரியர்கள் - நாளிதழ் செய்தி*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

*🤺வட்டாரக் கல்வி அலுவலர், குறு வள மைய ஒருங்கிணைப்பாளர் அதிகாரம் செலுத்துவதால் தொடக்கக் கல்வித்துறையில் குழப்பம் நீடிக்கிறது. இதனால் தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க முடியாமல் தவிக்கின்றனர்.*

*🤺தமிழகத்தில் மாவட்ட அளவில் தொடக்கக் கல்வி அலுவலகத்தின் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் செயல்பட்டு வந்தன. கடந்த ஆண்டு கல்வித் துறையில் செய்யப்பட்ட சீர்த்திருத்தத்தில் மாவட்டத் தொடக்கக் கல்வி அலு வலகங்கள் கலைக்கப்பட்டன. தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் மாவட்டக் கல்வி அலுவலகங்களுடன் இணைக்கப்பட் டன. இதற்காக மாவட்டக் கல்வி அலுவலகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டன. மேலும் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடங்கள், வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களாக மாற்றப்பட்டன.*

*🤺தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவது, மாணவர்களுக்கான நலத் திட்ட உதவிகளை வழங்குவது போன்ற பணிகள் வட்டாரக் கல்வி அலுவலர்களிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளன. அதேபோல் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பது, ஆசிரியர் களுக்கு விடுப்பு, மாற்றுப்பணி வழங்குவது போன்ற பணிகள் குறுவள மைய ஒருங்கிணைப் பாளர்களாக உள்ள உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்பட் டுள்ளன.*

*🤺இதனால், வட்டாரக் கல்வி அலுவலர்களும், குறுவள மைய ஒருங்கிணைப்பாளர்களும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் அதிகாரம் செலுத்துகின்றனர். இரட்டை அதிகாரத்தால் குழப்பம் நீடிக்கிறது.*

*🤺கடந்த காலங்களில் தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாதநிலை ஏற்பட்டால் வேறு பள்ளியைச் சேர்ந்த ஆசிரியரை மாற்றுப்பணியாக வட்டாரக் கல்வி அலுவலர் நியமிப்பார். தற்போது மாற்றுப் பணி வழங்கும் அதிகாரம் குறுவள மைய ஒருங்கிணைப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவரது கட்டுப்பாட்டில் 10 முதல் 13 பள்ளிகள் உள்ளன. தற்போது 10-க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகளில் ஓராசிரியர் மட்டுமே பணியில் உள்ளார். இதனால் மாற்றுப் பணி வழங்குவதில் சிக்கல் உள்ளது.*

*🤺இதையடுத்து ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.*

_இதுகுறித்து ஆசிரியர்கள் சிலர் கூறுகையில்,_

*🤺ஊதியம் வழங்கும் அதிகாரம் வட்டாரக் கல்வி அலுவலரிடமும், விடுப்பு, மாற்றுப் பணி வழங்கும் அதிகாரம் குறுவள மைய ஒருங்கிணைப்பாளரிடமும் வழங்கியது தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்துகிறது.*

*🤺இதனால் பழையபடி வட்டார கல்வி அலுவலரிடமே அதிகாரத்தை ஒப்படைக்க வேண்டும், என்று கூறினார்.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

No comments: