Saturday 31 March 2018

*ஜேக்டோ ஜியோ முடிவுகள் மற்றும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் அறிவிக்கை*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/03/blog-post_31.html


*🌟பேரன்புமிக்க பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்*


*சென்னையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில அலுவலகத்தில் ஜேக்டோஜியோ உயர்மட்டக்குழுக் கூட்டம் இன்று  சனிக்கிழமை (31.03.2018) மாலை 3.00 மணியளவில் நடைபெற்றது.*


*⚡ஜேக்டோ ஜியோ முடிவுகள்:*


*⚡இன்றைய(31.03.2018) ஜேக்டோ ஜியோ  மாநில உயர்மட்டக்குழு முடிவுகள்*


*🌟4 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 08.05.2018 ல் சென்னையில் கோட்டை நோக்கிப் பேரணி 5 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்களைத் திரட்ட முடிவு*


*🌟முற்றுகைப் போராட்டத்தை வெற்றிகரமாக்க தமிழகம் முழுவதும் 11 மண்டலங்களில் 11 மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் 23.04.2018 முதல் 27.04.2018 முடிய போராட்ட விளக்கப் பிரச்சார இயக்கம்*


*🌟ஜேக்டோ ஜியோ உயர்மட்டக்குழு கூட்டத்தில் ஜேக்டோ ஜியோ மாநில நிதிக் காப்பாளர் தோழர். மோசஸ் அவர்களும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் தோழர். ச.மயில் அவர்களும் எழுச்சி உரையாற்றினார்கள்.*


*🌟நமது இயக்கத் தோழர்கள் அனைவரும் மே 8 கோட்டை நோக்கி பேரணியில் கலந்து கொண்டு போராட்டத்தினை வெற்றிபெறச் செய்யுமாறு மாநில அமைப்பின் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.*


*⚡தோழமையுடன்;*

*ச.மயில்*
*பொதுச்செயலாளர்*
*தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм 





No comments: