Monday, 30 June 2025

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டாரம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக இயக்க வேர்களுக்கு விழுதுகள் எடுக்கும் பணி நிறைவு பாராட்டு விழா.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டாரம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக இயக்க வேர்களுக்கு விழுதுகள் எடுக்கும்  பணி நிறைவு பாராட்டு விழா.

பணி நிறைவு பாராட்டு விழாவிற்கு
வட்டார தலைவர் தோழர்.க. இளங்கோவன் அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார்,
வட்டார செயலாளர் தோழர். அ. சரவணன் அவர்கள் அனைஐவரையும் வரவேற்று வரவேற்புரை நிகழ்த்தினார்,
தோழர்.சே.குமார் மற்றும் தோழர்.தா.ராசன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்,

STFI அகில இந்திய பொதுக்குழு உறுபினர் தோழர்.கு. சுதா அவர்களும்,
TNPTF மாநில செயலாளர் தோழர்.அ. ரஹும் அவர்களும்,
மாவட்ட தலைவர் தோழர்.பி. சவரிமுத்து அவர்களும்,
மாவட்ட செயலாளர் பா. ஜாகீர் உசேன் அவர்களும்,
மாவட்ட பொருளாளர் தோழர்.அ. ஜீவா அவர்களும் விழாவில் கலந்துகொண்டு பாராட்டுரை நிகழ்த்தினார்கள்,

*தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் ச. மயில் அவர்கள் சிறப்புரை ஆற்றி நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்.*

மேலும் மாவட்ட வட்டார துணை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களை பாராட்டி வாழ்த்துரை வழங்கினர்.

பாராட்டு பெரும் ஆசிரியர்களையும் அவர்களது உறவினர்களையும், ஆசிரிய உறவுகளையும், சங்க வேர்களையும், விழுதுகளையும் ஒருங்கிணைத்து இந்த விழா மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது.

மேலும் NMMS தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் சின்னசேலம் வட்டார தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக கேடயம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

இறுதியாக இவ்விழாவிற்கு வருகைபுரிந்த முன்னாள் இன்னாள் இயக்க பொறுப்பாளர்கள், இயக்க உறுப்பினர்கள், தோழமைச் சங்க பொறுப்பாளர்கள், தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர் பெருமக்கள், மாணவ, மாணவிகள் அவர்களது பெற்றோர்கள் அனைவருக்கும் நன்றி கூறி தோழர். சுகந்தி சரவணன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.

விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் சைவ, அசைவ உணவு வழங்கப்பட்டது.

நன்றியுடன்,

தலைவர், செயலாளர், பொருளாளர்,
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,
சின்னசேலம் வட்டாரம்.