Wednesday, 16 May 2018

*தலைமையாசிரியர்கள் இல்லாததால் கிராமப்புற அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பாதிப்பு*



🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/05/blog-post_16.html



*🌟கிராமப்புற அரசு பள்ளிகளில் போதிய தலைமையாசிரியர்கள் இல்லாததால் நடப்பாண்டிற்கான மாணவர் சேர்க்கை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.*



*🌟தமிழகத்தில் ஆண்டுதோறும் மே மாதம் தொடக்கக்கல்வி துறையின் இடைநிலை, பட்டதாரி  ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு நடத்தப்படும்.*



*🌟இடைநிலை ஆசிரியர்கள் பதவி உயர்வில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக நியமிப்பதற்கான கலந்தாய்வும், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கான பதவி உயர்வு கலந்தாய்வும் நடத்தப்படும்.*



*🌟ஜூன் முதல் தேதி இவர்கள் பணியில் சேர வேண்டும். ஆனால் தற்போது ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கூட கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இதனால் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை பாதிக்கப்படுகிறது.*



*🌟ஜூன் மாதம் புதிய மாணவர்கள் சேர்க்கை, கல்வித்துறை பல புள்ளி விவரங்கள் கேட்பது, விலையில்லா பொருட்களை மாணவர்களுக்கு வழங்குதல் என பல்வேறு பணிகளை தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்வர்.*



*🌟கடந்த கல்வியாண்டில் (2017-18) நடந்த கலந்தாய்வுக்கு பின்னர், ஏற்பட்ட தலைமை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் இதுவரை நிரப்பப்படவில்லை.*



*🌟விருப்ப ஓய்வு மற்றும் மரணமடைந்த தலைமையாசிரியர்களால் ஏற்பட்ட காலிப்பணியிடங்களும் கடந்த 10 மாதங்களுக்கு மேல் காலியாக இருக்கிறது.கடந்த ஏப்.30ம் தேதியுடன் சுமார் ஆயிரம் தலைமை ஆசிரியர்கள் மாநிலம் முழுவதும் ஓய்வு பெற்றுள்ளனர்.*



*🌟தமிழகத்தில் பல தொடக்கப்பள்ளிகள் ஈராசிரியர் பள்ளிகளாகவே உள்ளன. தலைமை ஆசிரியர் இல்லாத நிலையில் ஒரு ஆசிரியர் இருந்து மாணவர் சேர்க்கைக்கு முயற்சிப்பது சிரமமான காரியம்.*



*🌟எனவே, அருகாமை தனியார், அரசு உதவி பெறும் பள்ளிகளை அணுகி சேர்க்கையை அதிகரிப்பதால், அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் ஆண்டுதோறும் குறைந்து வருகிறது.*



*🌟இதுகுறித்து கல்வித்துறை ஆர்வலர்கள் கூறும்போது, ‘‘தொடக்க கல்வித்துறை இயக்குநர் தனிக்கவனம் செலுத்தி, பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை மே 31ம் தேதிக்குள் நிரப்பி, ஜூன் 1 ம் தேதிக்குள் பள்ளிக்கு சேரும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.*



*🌟இடைநிலை ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வு என்பது 90 சதவீதம் இல்லாமலே போய்விட்டது.*



*🌟தொடக்க கல்வித்துறை இதுவரை தொடக்க, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் பணியிட மாறுதலுக்கான விண்ணப்பம் கூட இதுவரை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவை அனைத்தும் சரிசெய்யப்பட வேண்டும்’’ என்றனர்.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: