🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/05/blog-post_20.html
*🌟ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் தோழர்.ச.மயில் நேற்று வெளியிட்ட அறிக்கை:🌟*
*🌟தமிழகத்தில் தொடக்கக்கல்வித்துறைக்கென தனி இயக்குநரகம் வேண்டுமென முதன்முதலில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை எழுப்பியது.*
*அன்றைய தமிழக முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்கள் தலைமையிலான அ.தி.மு.க அரசு நமது கோரிக்கையை ஏற்று*
*⚡GO(MS) NO-588 (Education, Science & Technology Department) Dt.15.07.1994*
*அரசாணையின் மூலம் தொடக்கக்கல்வி துறைக்கென தனி இயக்குநரகம் ஏற்படுத்தி ஆணையிட்டது. அன்றைய அ.தி.மு.க அரசு ஆணையிட்டதை இன்றைய அ.தி.மு.க அரசு 24 ஆண்டுகளுக்குப் பிறகு*
*⚡GO(MS) NO-101 (School Education (Budget 1) Department) Dt.18.05.2018*
*ஆணையின் மூலம் ரத்துசெய்திருக்கிறது.*
*🌟அன்று தொடக்கக்கல்வித் துறைக்கென தனி இயக்குநரகம் ஏற்படுத்துவதற்கு அன்றைய அ.தி.மு.க அரசால் என்னென்ன காரணங்கள் கூறப்பட்டதோ அதே காரணங்கள் இன்னும் உள்ளன. ஆனால் அம்மாவின் வழியில் செயல்படுவதாகக் கூறிக்கொள்ளும் இன்றைய தமிழக அரசு அம்மா செய்த நற்காரியத்தை இப்படி குழி தோண்டி புதைத்திருப்பது என்ன நோக்கத்திற்காக என்பதில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. எனவே தமிழக அரசின் இம்முடிவு தொடக்கக்கல்வித் துறையின் வளர்ச்சிக்கு எவ்வகையிலும் உதவாது என்பதை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சுட்டிக்காட்டுகிறது.*
*🌟தொடக்கக்கல்வித்துறை தனி இயக்குநரகம் மூலம் முன்புபோலவே நிர்வகிக்கப்பட தமிழக அரசு ஆவணசெய்திட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment