Friday 21 December 2018

*⭐ கஜா புயல் நிவாரண நிதியாக 13.12.2018 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் நிதியுதவி வழங்கியவர்களின் விவரங்கள் குறித்து செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் அவர்களின் செய்தி வெளியீடு*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/12/13122018.html


*செய்தி வெளியீடு எண்: 940, நாள்:19.12.2018*


*⭐“கஜா” புயல் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், கடலூர், திண்டுக்கல், சிவகங்கை, கரூர், திருச்சிராப்பள்ளி உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு காணாத பாதிப்புகளை ஏற்படுத்தியது. வாழ்வாதாரங்களை இழந்த மக்களுக்கு உதவிடவும், நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும்,முதலமைச்சரின்பொது நிவாரண நிதிக்கு நன்கொடைகள் வழங்குமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி மு.பழனிசாமி அவர்கள் 19.11.2018 அன்று பத்திரிகைகளின்வாயிலாக நாட்டு  மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்கள்.*


⭐மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி மு. பழனிசாமி அவர்களின் வேண்டுகோளினை ஏற்று, தமிழ்நாட்டில் “கஜா” புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளுக்காக முதலமைச்சரின்பொது நிவாரண நிதிக்கு ஏற்கனவே *87 கோடியே 88 லட்சத்து 62 ஆயிரத்து 791 ரூபாய்* வழங்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் நிதியுதவி வழங்கியவர்களின் விவரங்கள்.


*_13.12.2018 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் நிதியுதவி வழங்கியவர்களின் விவரங்கள்._*


⚡மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.எம்.ஆர். விஜயபாஸ்கர் அவர்கள் தமிழ்நாடு அரசின் 8 போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் சாலை போக்குவரத்து நிறுவனங்களின் பணியாளர்களின் ஒருநாள் சம்பளத் தொகையான *13 கோடியே 15 லட்சத்து 23 ஆயிரத்து 395* ரூபாய்க்கான காசோலை.


⚡L&T நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் திரு.எஸ்.என். சுப்ரமணியன் அவர்கள் *1 கோடியே 50 லட்சம்* ரூபாய்க்கான காசோலை.



⚡அப்பல்லோ மருத்துவமனைகளின் செயல் துணைத் தலைவர் டாக்டர் ப்ரீதா ரெட்டி, அவரது கணவர் திரு.விஜயகுமார்ரெட்டி மற்றும் மகன் திரு.கார்த்திக் ரெட்டி ஆகியோர் *1 கோடி* ரூபாய்க்கான காசோலை.


⚡சுப்ரீம் கோர்ட் பார் அசோசியேஷன் செயலாளர் திரு.விக்ரந்த் யாதவ் மற்றும் அரசு தலைமை வழக்கறிஞர் திரு. விஜய் நாராயன் ஆகியோர் சுப்ரீம் கோர்ட் பார் அசோசியேஷன் சார்பில் *74 லட்சத்து 62 ஆயிரத்து 221* ரூபாய்க்கான காசோலை மற்றும் மாண்புமிகு உச்சநீதிமன்ற நீதியரசர் இந்திரா பானர்ஜி அவர்கள் வழங்கிய *25 ஆயிரம்* ரூபாய்க்கான காசோலை.


⚡ஆர்.எம்.கே. குழும கல்வி நிறுவனங்களின் நிறுவனத் தலைவர் திரு.ஆர்.எஸ். முனிரத்தினம் அவர்கள் *50 லட்சம்* ரூபாய்க்கான காசோலை.


⚡தமிழ்நாடு நிலஅளவை அலுவலர்கள் ஒன்றிப்பு மாநில மையத்தின் தலைவர் திரு.ரெ.காயாம்பு, பொதுச்செயலாளர் திரு.ஜெ.இராஜாமற்றும் நிர்வாகிகள் *11 லட்சம்* ரூபாய்க்கான காசோலை.


⚡சத்திரப்பட்டி பொது சுத்திகரிப்பு நிறுவனத்தின் (Chatrapatti Common Effluent Treatment Plant Pvt, Ltd.,) தலைவர் திரு.ஏ.சீனிவாசன் அவர்கள் *10 லட்சம்* ரூபாய்க்கான காசோலை.


*⚡தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் _மாநிலத் தலைவர்  திருமதி மூ.மணிமேகலை_ அவர்கள் _10 லட்சம்_ ரூபாய்க்கான காசோலை.*


⚡செங்கல் உற்பத்தியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநிலத் தலைவர் திரு.கே.ரத்தினசேகர் மற்றும் நிர்வாகிகள் *10 லட்சம்* ரூபாய்க்கான காசோலை.


⚡சென்னை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச் சங்கத்தின் செயலாளர் திரு.ஏ. பாலாஜி மற்றும் நிர்வாகிகள் *5 லட்சம்* ரூபாய்க்கான காசோலை.


⭐மேலும், பொதுமக்கள் நேரடியாகவும், ஆன்-லைன் மூலமாகவும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கிய நன்கொடைகளை சேர்த்து, இதுவரை வழங்கப்பட்ட தொகை *108 கோடியே 34 லட்சத்து 99 ஆயிரத்து 624 ரூபாயாகும்.*



*📩வெளியீடு:*


*_இயக்குநர்,_* 

*செய்தி மக்கள் தொடர்புத்துறை,*

*சென்னை-9*



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



No comments: