Saturday 22 December 2018

*அரசு ஊழியர்கள் மீது போடப்பட்டுள்ளபொய் வழக்குகளை ரத்து செய்ய கோரி சிவகங்கை மாவட்ட ஜாக்டோ ஜியோ கண்டன ஆர்ப்பாட்டம்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/12/blog-post_59.html


*⭐சிவகங்கை: அரசு ஊழியர் ஆசிரியர் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சார்பில் சிவகங்கை மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் தொடர்ந்து அதிகரித்து வரும் அரசியல் தலையீட்டை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.*



*⚡ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் _திரு.செல்வக்குமார், திரு.முத்துச்சாமி, திரு.ரவிச்சந்திரன்_  தலைமை வகித்தனர்.*


*⚡இணை ஒருங்கிணைப்பாளர்கள் _திரு.முத்துப்பாண்டியன்,_ _திரு.நாகேந்திரன்,_  முன்னிலை வகித்தனர்.*


*⚡மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் _திரு.சங்கர், திரு.ஜோசப் சேவியர்_ கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.* 


*⚡மாநில ஒருங்கிணைப்பாளர் _திரு.சுப்பிரமணியன்_ கண்டன பேரூரை ஆற்றினார்.*


*⭐ஆர்ப்பாட்டத்தில் உறுப்பு சங்கங்களின் நிர்வாகிகள் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பங்கேற்றனர்.*


*⚡ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் _திரு.சுப்பிரமணியன்_ செய்தியாளர்களிடம் கூறியதாவது*


*⭐சிவகங்கை மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வித்துறையில் அரசியல் தலையீடு என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாதுகாப்பற்ற சூழலில் பணியாற்றி வரும் நிலை உள்ளது.*


*⭐கடந்த சில நாட்களுக்கு முன்னால் ஊரக வளர்ச்சி துறையின் மாவட்ட திட்ட இயக்குனரையே அவரது அலுவலகத்தில் வைத்து தாக்கியுள்ளனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகிலேயே நடத்தப்பட்டுள்ள தாக்குதல் மிகவும் கண்டனத்துக்குரியது.*


*⭐அலுவலகத்தில் அத்து மீறி தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்கு பதிந்து கைது செய்ய வேண்டிய காவல்துறை தாக்குதலுக்கு உள்ளான திட்ட இயக்குனர் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. இது மிகவும் மோசமான நிர்வாகத்திறனை காட்டுகிறது.*


*⭐இந்த மாவட்டத்தில் நியாயமான கோரிக்கைகளுக்காக போராடி வரும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீது வழக்கு பதிவதில் தமிழகத்திலேயே சிவகங்கை மாவட்ட காவல்துறை முன்னிலை வகிக்கிறது. இதனை ஜாக்டோ ஜியோ சட்ட ரீதியாகவும், போராட்டத்தின் மூலமாகவும் எதிர்கொள்வோம்.*


*⭐எங்கள் ஊழியர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை ரத்து செய்வதோடு ஊழியர்கள் பாதுகாப்பாக பணியாற்றுவதை மாவட்ட நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.*


*தோழமையுடன்;*


*_முத்துப்பாண்டியன்,_*

*மாவட்ட ஒருங்கிணைப்பாளர்,*

*ஜாக்டோ ஜியோ,*

*சிவகங்கை மாவட்டம்*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: