Friday 29 March 2019

*பள்ளிக் கல்வி அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு மாணவர் அடையாள அட்டை (Smart ID Card) வழங்குதல் - கல்வித்தகவல் மேலாண்மை மையத்தின் இணையதளத்தில் உள்ளீடு செய்துள்ள விரைங்களை ஆவணங்களுடன்ஒப்பிட்டு சரிப்பார்த்தல் குறித்து தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைக் கடிதம்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2019/03/smart-id-card.html


*🌟அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 12 ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு மாணவர் அடையாள அட்டை (Smart ID Carel) வழங்குவதற்கு கல்வித் தகவல் மேலாண்மை இணையதளத்தில் பள்ளியினால் உள்ளீடு செய்யப்பட்ட தகவல்கள் பயன்படுத்தி அச்சடிக்கப்படவுள்ளது.*



*🌟மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படவுள்ள மாணவர் அடையாள அட்டையில் வழங்கப்படவுள்ள தகவல்கள் அனைத்தும் பிழையின்றி முற்றிலும் சரியான தகவல்களாக அச்சடிக்கும் பொருட்டு பின்வரும் விவரங்கள் அனைத்தும் சார்ந்த பலனளித் தலைமையாசிரியர்களால், பள்ளியில் பராமரிக்கப்படும் ஆவணங்களுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டு அதற்கான இணையவழி ஒப்புதல் பெறப்பட வேண்டியுள்ளது.*



*⚡மாணவ மாணவியின் பெயர் தமிழில்*

*⚡மாணவ, மாணவியின் பெயர் ஆங்கிலத்தில்*

*⚡தந்தை தாயின் பெயர் ஆங்கிலத்தில்*

*⚡பள்ளியின் பெயர் மற்றும் முகவரி ஆங்கிலத்தில்,*

*(பெயர் மட்டும் சுருக்கப்பட்ட முறையில்)*

*⚡பிறந்த தேதி* 

*⚡இரத்தப்பிரிவு*

*⚡தொடர்பு எண்*

*⚡வீட்டு முகவரி ஆங்கிலத்தில்*

*⚡மாணவ /மாணவியின் புகைப்படம் சமீபத்திய (recent photos) புகைப்படம் என்பதை உறுதிசெய்ய வேண்டும், இல்லையெனில் புதிய புகைப்படத்தினை பதிவேற்றம் செய்ய வேண்டும்*



*🌟எனவே, மேற்காணும் விவரங்களை தொடர்புடைய பள்ளி தலைமை ஆசிரியரியர்களை கல்வி தகவல் மேலாண்மை மையத்தின் http://tnschools.gov.in என்ற இணையதளத்தில், கீழ்குறிப்பிடப்பட்டுள்ளவாறு இணைய்வழி சரிபார்த்து மென்நகலில் சான்றளிக்க புதிய இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.*



*🌟எனவே, இதனை பயன்படுத்தி சரிபார்ப்பு பணிகளை மேற்கொண்டு அரசு / அரசு உதவி பெறும் மேலாண்மை வகையின் கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் இணையதளத்திலேயே மாணவர்கள் பட்டியலுக்கு கீழே மென்நகல் ஒப்புகையினை 08.04.2019 ற்குள் அளிக்க சுற்றறிக்கை மூலம் உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ள தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைக் கடிதம் வெளியிட்டுள்ளார்.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм





No comments: