Wednesday 21 August 2019

*அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி செப்.23 முதல் விழிப்புணர்வுப் பரப்புரை - ச.மயில், பொதுச்செயலாளர், TNPTF*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/08/23-tnptf.html


**

*🛡தேனி, ஆக. 21 ''அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி செப் 23 முதல் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய உள்ளோம்,'' என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் _தோழர்.மயில்_ தெரிவித்தார்.*



_தேனியில் அவர் கூறியதாவது:_


**

*🛡மாணவர்கள் எண்ணிக்கை குறைவு எனக் கூறி, '46 அரசுப் பள்ளிகளை மூடி விட்டு நூலகமாக மாற்றுகிறோம்' என்கின்றனர். 10 மாணவர்களுக்கு குறைவாக உள்ள 1,850 பள்ளிகளை மூட அரசு திட்டமிட்டுள்ளது.*



**

*🛡அவ்வாறு செய்தால் தமிழ்வழிக் கல்வி, இலவச கல்வி கற்க முடியாது. 10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள அரசு பள்ளிகளை ஓராசிரியர் பள்ளிகளாக மாற்றுவதால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படும்.*



**

*🛡ஒரு ஆசிரியர் வாரத்தில் ஒன்று முதல் 5 வகுப்புகளுக்கு 23 பாடங்களை நடத்த வேண்டியுள்ளது. அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் அவசியத்தையும், அரசின் 16 வகையான நலத் திட்ட உதவிகள் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம்.*



**

*🛡மேலும் தேசிய கல்வி கொள்கையால் ஏற்படும் பாதிப்பு பற்றியும், திரும்ப பெற வலியுறுத்தியும் செப். 23 முதல் பிரச்சாரம் செய்ய உள்ளோம்.*



**

*🛡சென்னை, வேலூர், தஞ்சை, திருச்சி, கரூர், தேனி மாவட்டங்களில் துவங்கி கரூரில் நிறைவு செய்வோம், என்றார்.*



🤝தோழமையுடன்;


*_ச.மயில்,_*

*மாநில பொதுச்செயலாளர்,*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: