Saturday 12 October 2019

*அரசாணைகளுக்கு எதிராக மாற்றுத்திறனாளி ஆசிரியர்க்கு கட்டாய பணியிட மாறுதல் - சிவகங்கை மாவட்ட கல்வி அலுவலருக்கு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கண்டனம்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://tnptfayan.blogspot.com/2019/10/blog-post_1.html


**
*🛡தொடக்க நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை பொது மாறுதல் கலந்தாய்வு நடத்துவது வழக்கம். அப்பொழுது நிர்வாக காரணங்களை கூறி சில ஆசிரியர்களுக்கு நிர்வாக மாறுதல் அளிப்பது வழக்கம். தற்பொழுது மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலகம் ஒழிக்கப்பட்டு மாவட்ட கல்வி அலுவலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அளவற்ற அதிகாரங்கள் முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் தங்களுக்கு பிடிக்காத ஆசிரியர்களை நிர்வாக காரணங்கள் எனக் கூறி பணியிட மாறுதல் என்பது தொடர்கதையாகி வருவதாக ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.*

**
*🛡அதே நேரத்தில் மாற்றுத்திறனாளி ஆசிரியரை எந்த சூழலிலும் தொந்தரவு செய்யக்கூடாது என அரசாணைகள் இருந்தும் அதை புறந்தள்ளி திருப்புவனம் ஒன்றியத்தில் பணியாற்றும் மாற்றத்திறனாளி ஆசிரியருக்கு கட்டாய பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.*

_இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்டச் செயலாளர் _தோழர்.முத்துப்பாண்டியன்_ கூறியதாவது:

**
*🛡திருப்புவனம் அல்லி நகரம் ஆரம்பபப்ள்ளி தலைமையாசிரியர் பணியிடம் தனக்கு சாதகமான ஆசிரியருக்கு வழங்குவதற்காக கடந்த ஏப்ரல் மாதமே பல லட்ச ரூபாய் விலை பேசப்பட்டுள்ளது. எனவே அப்பணியிடத்தை காலிப்பணியிடமாக அறிவிக்க வேண்டிய நிர்பந்தம் வந்த சூழலில் அங்கு பணியாற்றும் தலைமையாசிரியர் மீது பொய் புகார் பெற்று சிவகங்கை மாவட்ட கல்வி அலுவலர் கட்டாய பணியிட மாறுதல் வழங்கினார்.*

**
*🛡ஆசிரியர் சங்கங்கள் தலையிட்டவுடன் அரசியல் அழுத்தம் என கூறி தனது முறைகேடான மாறுதலை நியாயப்படுத்து முனைந்தார். இந்த விசயத்தை அமைச்சர் அலுவலகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றவுடன் நாங்கள் அப்படி கூறவில்லை என முதன்மைக்கல்வி அலுவலர் உள்ளிட்ட இருவரும் மாறி மாறி கூறினார்கள். எனவே பிரச்சனையை திசை திருப்பும் விதமாக அல்லி நகரத்தில் பணியாற்றும் மூன்று ஆசிரியர்களை கட்டாய பணியிட மாறுதல் செய்தனர்.*

**
*🛡இதற்காக எந்தவித புகாருக்கும் உட்படாத மேலராங்கியம் நடுநிலைப்பள்ளி மாற்றுத்திறனாளி ஆசிரியர் செந்தில்குமாரை தொந்தரவு செய்து இடமாறுதல் உத்தரவை வழங்கியுள்ளனர்.*

**
*🛡ஒரு மாற்றுத்திறனாளி ஆசிரியரை அவர் பணியாற்றும் இடத்தில் இருந்து எவ்வித காரணத்தையும் முன்னிட்டு இடமாறுதல் செய்யக் கூடாது என அரசாணைகள் 217, 218, 270ல் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.*

**
*🛡ஆனால் அரசு வெளியிட்டுள்ள அரசாணைகளை புறந்தள்ளி மாற்றுத்திறனாளி ஆசிரியர்க்கு கட்டாய இட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. தனது உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என நியாயம் கேட்க சென்ற ஆசிரியரை மாவட்டக்கல்வி அலுவலர் உதாசீனப்படுத்தியுள்ளார். இந்த உத்தரவை உடனடியாக ரத்து செய்யப்படவில்லையென்றால் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் மறுவாழ்வு அலுவலரின் கவனத்திற்கு கொண்டுசெல்வதுடன், எங்கள் அமைப்பின் சார்பில் கடுமையான போராட்டத்தை நடத்துவோம் என அவர் தெரிவித்தார்.*

🤝தோழமையுடன்;

*_ஆ.முத்துப்பாண்டியன்_*
*மாவட்டச்செயலாளர்*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*
*சிவகங்கை மாவட்டம்*
*12.10.2019*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

No comments: