Sunday 6 October 2019

*எத்தனை பேர் சத்துணவு உண்கின்றனர்? தினமும் குறுஞ்செய்தி அனுப்ப சத்துணவு ஊழியர்களுக்கு உத்தரவு*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://tnptfayan.blogspot.com/2019/10/blog-post_6.html


*🎙எத்தனை மாணவ, மாணவியர் சத்துணவு சாப்பிடுகின்றனர் என்ற விவரத்தை தினமும் குறுஞ்செய்தியாக வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்குஅனுப்ப சத்துணவு ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.*

*🎙மாணவர்களுக்கு முறையாக சத்துணவு சென்று சேர்வதை உறுதி செய்யும் விதமாக, சத்துணவு சாப்பிடும் மாணவர்களின் எண்ணிக்கையை தினமும் குறுஞ்செய்தியாக (எஸ் எம் எஸ்) வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அனுப்ப வேண்டும் என்று ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.*

*_இதுகுறித்து சமூகநலத்துறை அதிகாரிகள் கூறியது:_*

*🎙சத்துணவு பணியாளர்கள் மூலம் மாணவ, மாணவியருக்கு சத்தான, சுவையான உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. மாணவ, மாணவியருக்கு சத்துணவு முழுமையாக சென்று சேர்வதை உறுதி செய்ய பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.*

*🎙சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவியரின் எண்ணிக்கையை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தினமும் குறுஞ்செய்தியாக அனுப்பி வருகின்றனர். தற்போது _சத்துணவு ஊழியர்களிடம் இந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது._*

*🎙எத்தனை மாணவ, மாணவியர் சத்துணவு சாப்பிடுகின்றனர் என்ற தகவலை தினமும் _சத்துணவு பணியாளர்களே நேரடியாக வட்டார வளர்ச்சி அலுவலருக்கு குறுஞ்செய்தியாக அனுப்ப வேண்டும்._ இவ்வாறு அவர்கள் கூறினர்.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

No comments: