Friday 31 January 2020

*ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் மனநிலையினை புரிந்து செயல்பட வேண்டும் - கல்வித்துறைக்கு TNPTF விழுப்புரம் மாவட்ட செயலாளர் வேண்டுகோள்!*

*ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் மனநிலையினை புரிந்து செயல்பட வேண்டும் - கல்வித்துறைக்கு TNPTF விழுப்புரம் மாவட்ட செயலாளர் வேண்டுகோள்!*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

*🤧மாணவர்கள் தொடர்ச்சியாக பதினொரு நாட்கள் பள்ளிக்கு வந்த நிலையில், நாளைய (01.02.2020) தினம் 'பள்ளி வேலை நாள்' என்பது மாணவர்களை மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாக்கும் செயல்.*

*🤧அதுவும் பள்ளி முடியும் தருவாயில் அறிவிப்பு கிடைக்கப்பெற்றால், மாணவர்களுக்கு விடுமுறை அறிவிப்பு  விட்ட நிலையில், தேடித்தேடி மறு அறிவிப்பு வழங்க வேண்டிய சூழல் உருவாகிறது.*

*🤧நாம் குழந்தைகளை எவ்வாறு நடத்த வேண்டும் என்கிற குழந்தை உளவியலை புரிந்து கொள்ளவில்லையோ என்கிற கவலை வருகிறது.*

*🤧மேலும் இதுவரை ஆண்டு முழுவதும் பள்ளி வேலை நாட்கள் விவரம்  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாதது ஏன் என்பதும் புரியவில்லை.*

*🤧வேலை நாட்கள் பட்டியல் வழங்கும் அதிகாரம் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் அவர்களிடம் இருந்தவரை ஆண்டு திட்டம் சிறப்பாக இருந்தது. தற்போது மாநிலப் பட்டியலுக்குச் சென்றதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட சூழல் உருவானது.*

*🤧கல்வித்துறை ஆசிரியர் நிலையிலிருந்து பார்க்கிறதா என்பதும் புரியவில்லை.*

*🤧இன்று 31.1.2020 மாலை 3.30 மணிக்கு பள்ளி சார்பில் 'நாளை பள்ளி விடுமுறை' என்றதும் மாணவர்களின் உற்சாக கூச்சல் நீண்ட தூரம் எதிரொலித்தது. அது நீண்ட நேரம் நீடிக்காமல் காணல் நீராகிப் போனது.*

*🤧தயவுசெய்து மாணவர்களின் மனநிலையிலிருந்து கல்வியை அனுக வேண்டுமென்று கல்வித்துறையை கேட்டுக்கொள்கிறேன்*

_🤧மன உளச்சலுடன்;_

*_இரா.சண்முகசாமி,_*
*மாவட்ட செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,*
*விழுப்புரம் மாவட்டம்*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

No comments: