Monday, 2 March 2020

*கிடப்பில் போடப்பட்ட ஓய்வூதியம் தொடர்பான வல்லுநர் குழு அறிக்கை தமிழகத்தில் 5.5 லட்சம் அரசு ஊழியர்கள் அதிருப்தி*

*கிடப்பில் போடப்பட்ட ஓய்வூதியம் தொடர்பான வல்லுநர் குழு அறிக்கை தமிழகத்தில் 5.5 லட்சம் அரசு ஊழியர்கள் அதிருப்தி*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

*😡பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து ஆய்வு செய்த வல்லுநர் குழு அரசுக்கு அறிக்கை கொடுத்து ஓராண்டுக்கு மேலாகியும் நடவடிக்கை இல்லாதததால் 5.5 லட்சம் அரசு ஊழியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.*

*😡தமிழகத்தில் 2003 ஏப்.1 முதல் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதில் 5.5 லட்சம் ஊழியர்கள் இணைந்துள்ளனர்.*

*😡இத்திட்டத்தில் அரசு ஊழியர்களிடம் மாதந்தோறும் பிடித்தம் செய்த தொகையை ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்திடம் தமிழக அரசு செலுத்த வேண்டும். ஆனால், ஆணையத்திடம் இதுவரை ஒரு ரூபாய்கூட செலுத்தவில்லை.*

*😡இதன்காரணமாக ஓய்வு பெற்றோருக்கும், பணியில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கும் முறையாகப் பணப்பலன்கள் கிடைக்கவில்லை.*

*😡இதனால் அதிருப்தி அடைந்த ஊழியர்கள், ஆசிரியர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தையே நடைமுறைப்படுத்த கோரி தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.*

*😡இதையடுத்து பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல் படுத்துவது குறித்து ஆராய ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சாந்தா ஷீலா நாயர் தலைமையில் 2016-ல் வல்லுநர் குழு அமைக்கப்பட்டது.*

*😡இக்குழு இறுதியாக ஐ ஏ எஸ் ஸ்ரீதர் தலைமையில் செயல்பட்டது.  2018-ல் இக்குழு அரசிடம் அறிக்கை அளித்தது.*

*😡ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை . இதனால், ஓய்வு பெற்ற ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிருப்தியில் உள்ளனர்.*

_புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த திண்டுக்கல் ஆசிரியர் பிரடரிக் ஏங்கல்ஸ் கூறியது:_

*😡புதிய ஓய்வூதியத் திட்டத்தில் ஊழியர்களிடம் பிடித்த தொகை, அரசின் பங்குத்தொகை என ரூ.35 ஆயிரம் கோடி அரசிடமே உள்ளது.*

*😡புதிய ஓய்வூதியத் திட்டத்தில் பணியில் சேர்ந்தவர்களில் ஓய்வு பெற்றோர், பணியில் இறந்தோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்துக்கும் மேல் இருக்கும். இதில் பாதிக்கும் குறைவானவர்களே ஓய்வூதியத் தொகையைப் பெற்றுள்ளார்.*

*😡புதிய ஓய்வூதியத் திட்டப்படி மத்திய அரசு, பிற மாநில அரசுகள் பணிக்கொடை அளிக்கின்றன. ஆனால், தமிழகத்தில் ஆய்வு பெறுவோருக்கு பணிக்கொடை கொடுப்பதில்லை.*

*😡மேலும் பிடித்த தொகையில் 60 சதவீத பணத்தை வழங்க வேண்டும். மீதியுள்ள 40 சதவீதத்தில் ரூ.1 லட்சத்துக்கு ஆண்டுக்கு ரூ.6,500 ஓய்வூதியமாக வழங்க வேண்டும்.*

*😡பணியின்போது இறந்தோரின் குடும்பத்துக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஆனால், அதை தரவில்லை. பிற மாநிலங்களில் ஊழியர்களிடம் பிடிக்கும் 10 சதவீத தொகையுடன், அரசு 14 சதவீத தொகையைச் செலுத்து கின்றன. ஆனால் தமிழக அரசு 10 சதவீதமே செலுத்துகிறது.*

*😡வல்லுநர் குழு அறிக்கை மீது நடவடிக்கை எடுத்து பழைய ஓய்வூதியத் திட்டத்தையே செயல்படுத்த வேண்டும், என்று கூறினார்.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

No comments: