Sunday, 21 June 2020

*🛡️தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கடலூர் மாவட்ட கிளையின் செயற்குழு கூட்டம் (காணொளி வடிவில்) - செய்தி துளிகள்*

*🛡️தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கடலூர் மாவட்ட கிளையின் செயற்குழு கூட்டம் (காணொளி வடிவில்) - செய்தி துளிகள்*

*🛡️தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கடலூர் மாவட்ட கிளையின் செயற்குழு கூட்டம் காணொளி காட்சி மூலம் நேற்று சனிக்கிழமை (20-06-2020) மாலை 3.00 முதல் 5.45 வரை நடைபெற்றது.*

*🛡️மாவட்டத் தலைவர் தோழர் இரா.அறிவழகன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில்,*

*🛡️மாவட்டத் துணைத் தலைவர் தோழர் கு.கி.இரவிச்சந்திரன் வரவேற்புரையாற்றினார்.*

*🛡️மாவட்ட செயலாளர் தோழர் ஜோ.கிறிஸ்டோபர்  கடலூர் மாவட்டத்தில் நிலவக்கூடிய ஆசிரியர் பிரச்சனைகள், 17ஆ ரத்து செய்வது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.*

*🛡️மாநிலத் துணைத்தலைவர்  தோழர் அ.ரஹீம் சிறப்புரையாற்றினார்.*

_கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:_

*🛡️17ஆ ரத்து செய்வது தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள விசாரணை அலுவலரின் விசாரணையில் பங்கேற்கக் கூடிய ஆசிரியர்களுக்கு வட்டார, மாவட்ட பொறுப்பாளர்கள் உறுதுணையாக செயலாற்றுவது என தீர்மானிக்கப்பட்டது.*

*🛡️ஆசிரியர்களின் SSLC, HSC, D.Ted சான்றிதழ்களின் உண்மை தன்மையை  காலதாமதம் இன்றி வழங்கிட கடலூர் மாவட்ட தேர்வுத்துறையினரை கேட்டுக் கொள்வதென இச்செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.*

*🛡️வட்டார, நகர கிளைகள் ஜூலை 15ஆம் தேதிக்குள் உறுப்பினர் பட்டியலுடன் தணிக்கை முடிப்பது எனவும், ஜூலை மாதம் 30ஆம் தேதிக்குள் வட்டார நகர தேர்தல்களை நடத்திடுவது எனவும் தீர்மானிக்கப்படுகிறது.*

*🛡️இந்நிகழ்வில்  வட்டார செயலாளர்கள், மாவட்ட துணை பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.*

*🛡️முடிவில் மாவட்ட பொருளாளர் தோழர் ப.சீனிவாசன் நன்றி கூறினார்.*

No comments: