*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி- மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் - (தேனி - 29.11.2020) - தீர்மானங்கள் - பொதுச்செயலாளர் செய்தியறிக்கை*
*_மாநில அமைப்பின் செய்தியறிக்கை எண்: 20/2020 நாள்: 29.11.2020_*
*🛡️15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 3 கட்டப் போராட்டம் அறிவிப்பு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு முடிவு*
*⚔️*
*🛡️தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் தேனியில் உள்ள சங்கத்தின் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.*
*⚔️*
*🛡️கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் _தோழர்.மூ.மணிமேகலை_ தலைமை வகித்தார்.*
*⚔️*
*🛡️STFI அகில இந்தியப் பொதுக்குழு.உறுப்பினர் _தோழர்.ச.மோசஸ்_ முன்னிலை வகித்தார்.*
*⚔️*
*🛡️தேனி மாவட்டச் செயலாளர் _தோழர்.செல்லத்துரை_ வரவேற்புரை ஆற்றினார்.*
*⚔️*
*🛡️மாநிலப் பொருளாளர் _தோழர்.க.ஜோதிபாபு_ வரவு - செலவு அறிக்கை சமர்ப்பித்தார்.*
*⚔️*
*🛡️கூட்டப் பொருள்கள் தொடர்பாகவும், எதிர்கால இயக்க நடவடிக்கைகள் தொடர்பாகவும் மாநில பொதுச்செயலாளர் _தோழர்.ச.மயில்_ விளக்கவுரை ஆற்றினார்.*
*🛡️கூட்டத்தில் 2016 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது தன்பங்கேற்பு ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்வதாக அன்றைய முதல்வர் _ஜெ.ஜெயலலிதா_ அறிவித்த வாக்குறுதியைத் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.*
*🛡️இடைநிலை ஆசிரியர்களிடமிருந்து பறிக்கப்பட்ட மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை மீண்டும் வழங்கிட வேண்டும். 50 ஆண்டுகாலமாகதமிழகத்தில் ஆசிரியர்கள் பெற்றுவந்த உயர்கல்விக்கானஊக்க ஊதியத்தை ரத்து செய்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணைகளைத் திரும்பப் பெற வேண்டும்.*
*🛡️ஆசிரியர் நியமன வயதை 40 ஆக குறைத்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையைத் திரும்பப்பெற வேண்டும்.*
*🛡️தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டை 7.5 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக உயர்த்த வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும்.*
*🛡️ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட 17(ஆ) நடவடிக்கையை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்.*
*🛡️சித்திக் குழு அறிக்கையை உடனடியாக வெளியிட்டு ஆசிரியர், அரசு ஊழியர் ஊதிய முரண்பாடுகளைக் களைந்திட வேண்டும்.*
*🛡️ _"கற்போம் எழுதுவோம்"_ திட்டத்தில் ஆசிரியர்களை ஈடுபடுத்துவதைக்கைவிட வேண்டும்.*
*🛡️உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 3 கட்டப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.*
*⚔️அதன்படி தமிழ்நாடு முழுவதும் 17.12.2020 அன்று வட்டாரக் கல்வி அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திடவும்.,*
*⚔️09.01.2021 அன்று மாவட்டத் தலைநகரங்களில் தர்ணா போராட்டம் நடத்திடவும்,*
*⚔️மார்ச் 2021 ல் சென்னையில் பத்தாயிரம் ஆசிரியர்கள் பங்கேற்கும் உண்ணா விரதப் போராட்டத்தை நடத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.*
*⚔️*
*🛡️துணைப் பொதுச்செயலாளர் _தோழர்.தா.கணேசன்_ நன்றி கூறினார்.*
*⚔️*
*🛡️கூட்டத்தில் தேனி மாவட்ட நிர்வாகிகள் தோழர். _ராஜாராம் பாண்டியன்,_ தோழர். _ராமர்,_ தோழர். _ஜெகநாதன்_ உட்பட பலர் பங்கேற்றனர்.*
_🤝தோழமையுடன்;_
*_ச. மயில்_*
_பொதுச்செயலாளர்_
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*
No comments:
Post a Comment