Wednesday, 18 November 2020

*🛡️TNPTF - நவம்பர் - 26 அகில இந்தியப் பொது வேலை நிறுத்தம் / ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆதரவு - பொதுச்செயலாளர் அறிக்கை*

*🛡️TNPTF - நவம்பர் - 26 அகில இந்தியப் பொது வேலை நிறுத்தம் / ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆதரவு - பொதுச்செயலாளர் அறிக்கை*

_மாநில அமைப்பின் செய்தியறிக்கை எண்: 19/2020  நாள்: 18.11.2020_

*_தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் ச.மயில் வெளியிட்டுள்ள அறிக்கை._*

*⚔️*
*🛡️நவம்பர் 26 அன்று நடைபெறும் அகில இந்தியப் பொது வேலைநிறுத்தத்தை ஆதரித்து தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் தோழமைச் சங்கங்களுடன் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்திட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முடிவு செய்துள்ளது.*

*🛡️புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்தல்,*

*🛡️மத்திய, மாநில அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புதல்,*

*🛡️பொதுத்துறை நிறுவனங்களைப் பாதுகாத்தல்,*

*🛡️தேசிய கல்விக் கொள்கை 2020 ஐ திரும்பப்பெறுதல்,*

*🛡️விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துதல்,*

*🛡️பொது விநியோக முறையைச் சீர்படுத்துதல்,*

*🛡️அரசு ஊழியர்களுக்கு முடக்கப்பட்ட அகவிலைப்படி ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு ஆகியவற்றை வழங்குதல்,*

*🛡️தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோதச் சட்டங்களைத் திரும்பப் பெறுதல்,*

*🛡️மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் வேலை நாட்களை 200 ஆக உயர்த்துதல் மற்றும் அத்திட்டத்தை நகர்ப்புறங்களுக்கும் விரிவுபடுத்துதல்*

*⚔️*
*🛡️உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து அகில இந்திய அளவிலான மத்திய தொழிற்சங்கங்களும், மாநில அளவிலான தொழிற்சங்கங்களும் அறிவித்துள்ள நவம்பர் 26 அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தனது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது.*

*⚡கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு கருத்தாலும், கரத்தாலும் உழைக்கின்ற தொழிலாளர் வர்க்கம் 100 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடிப் பெற்ற பல உரிமைகளைப் பறித்து வருகிறது. 44 தொழிலாளர் நலச் சட்டங்களை 4 சட்டங்களாகச் சுருக்கி பன்னாட்டு முதலாளிகளுக்கு ஆதரவாகவும், தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிராகவும் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இதனால் தொழிலாளர்களின் பணிப் பாதுகாப்பு, ஊதியம், மருத்துவ வசதி, விடுப்பு, போனஸ், பணிக்கொடை உள்ளிட்ட உரிமைகளுக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது.*

*⚡8 மணி நேர வேலை என்பது உலகத் தொழிலாளர் வர்க்கம் மிகக் கடுமையாகப் போராடி, இன்னுயிர் ஈந்து, ரத்தம் சிந்திப் பெற்ற உரிமை. அந்த உரிமைக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பல மாநிலங்களில் 8 மணி நேரம் வேலை என்பதை 12 மணி நேரமாக அதிகரித்துச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்தியா முழுவதும் இதை நடைமுறைப்படுத்த மத்திய அரசு முயற்சித்து வருகிறது.*

*⚡தமிழக அரசு மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற மறுத்து வருகிறது.*

*⚡ஜாக்டோ-ஜியோ போராட்டக் காலங்களில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது பழிவாங்கும் வகையில் போடப்பட்ட குற்றவியல் நடவடிக்கைகள் மற்றும் 17(ஆ) நடவடிக்கைகளைத் திட்டமிட்டு திரும்பப் பெற மறுத்து வருகிறது.*

*⚡உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் போன்ற 50 ஆண்டு காலமாக ஆசிரியர்கள் பெற்றுவந்த உரிமைகளை தமிழக அரசு பறித்துள்ளது.*

*🛡️எனவே, நவம்பர் 26 வேலை நிறுத்தம் மிகவும் அவசியமானது என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கருதுகிறது.*

*⚔️*
*🛡️கொரோனா பொதுமுடக்கச் சூழலில் பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ள நிலையில் நவம்பர் 26 அகில இந்திய வேலை நிறுத்தத்தை ஆதரித்து தோழமைச் சங்கங்களுடன் இணைந்து வேலைநிறுத்த நாளன்று அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஆதரவு ஆர்ப்பாட்டங்களை நடத்திட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு முடிவு செய்துள்ளது.*                                      
                                        
சென்னை
18.11.2020

_🤝தோழமையுடன்;_
 
*_ச. மயில்_*       _பொதுச்செயலாளர்_
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*

No comments: