Wednesday, 23 May 2018

*24.5.18 ஜாக்டோ-ஜியோ கண்டன ஆர்ப்பாட்டம்.*



🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/05/24518.html


*வாழும் மண்ணையும் மனிதர்களையும் அழிவை நோக்கி கொண்டு சென்றுக் கொண்டிருக்கும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை மூட வலியுறுத்தி*



🌟தொடர்ந்து நூறு நாட்களாக அமைதியான முறையில் உண்ணாவிரதம்,  காத்திருப்பு போராட்டம் என


🌟பல்வேறு வகையான அஹிம்சை வழி போராட்டங்களை நடத்தி வந்த நிலையில்


🌟100 நாட்கள் ஆன பின்பும் தமிழக அரசு கண்டு கொள்ளாததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி அமைதி பேரணி சென்ற

சுமார் 5000 க்கும் மேற்பட்ட மக்கள் மீது எந்தவித அறிவிப்பும் இன்றி



🌟எந்தவித எச்சரிக்கையும் இன்றி வன்முறை வெறியாட்டத்தை கட்டவிழ்த்து விட்டு


🌟காட்டுமிராண்டிதனமாக துப்பாக்கி சூடு நடத்தி மண்ணைக் காத்திட போராட்டம் நடத்தியவர்களில்  12 பேரை தீவிரவாதிகளை போல் கொரில்லா தாக்குல் மூலம் படுகொலை செய்த காவல் துறையினரையும்


🌟படுகொலைக்கு காரணமான தமிழக அரசையும் அரசு ஊழியர் ஆசிரியர் பேரமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில்


*🌟மிக வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.*


🌟100 நாட்களாக போராடியவர்களை இந்த அரசு அழைத்து பேசி சுமூக தீர்வு காணாமல் அதிகாரத்தால் போராட்டத்தை தடுத்து நிறுத்திட இந்த அரசு இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுவருவது கண்டனத்துக்குரியது.


🌟இதே போன்ற வன்முறை  வெறியாட்டத்தை காவல்துறை மூலம் ஏற்கனவே சென்னை மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போதும், ஜாக்டோ-ஜியோ போராட்டத்தின்போதும்  தமிழக அரசு பிரயோகித்தது.


🌟கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்துபவர்களை இந்த அரசு அழைத்து பேசாமல் சமூக விரோதிகளாக பார்ப்பது அவமானகரமான செயலாகும்.


🌟நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாமல் அலட்சியப் படுத்துவதும்

இறுதியில் போராட்டத்தை ஒடுக்க இதுபோன்ற நிகழ்வுகளை நடத்துவதும் தமிழக அரசு  வாடிக்கையாக கொண்டுள்ளது.



🌟தமிழக அரசு  யாரையோ குளிரவைக்க இதுபோன்ற அடாவடி செயல்களை செய்யாமல் யார் செத்தாலும் பரவாயில்லை யார் எந்த இனம் அழிந்தாலும் பரவாயில்லை நமக்கு பதவியும் அதிகாரமும்தான் முக்கியம் என தன்னலத்தோடு இருக்காமல்


🌟நியாயமான வாழ்வாதார  கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடுபவர்களை அழைத்து பேசி சுமூக தீர்வு எட்டிடட வழிவகைகளை ஆராய வேண்டும்.


🌟அதைவிடுத்து போராட்டக்காரர்களின் மேல் காவல்துறை மூலமாக வன்முறை களியாட்டத்தை ஏவிவிட்டு போராட்டத்தை ஒடுக்க நினைக்கவோ


🌟போராட்டக்காரர்களை அச்சுறுத்தி விரட்ட நினைக்கவோ கூடாது.

எனவே,

⚡1.தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு இறந்தவர்கள், காயமடைந்தவர்கள்,பாதிக்கப்பட்ட அனைவருக்கும்,சொத்துக்களை இழந்தவர்களுக்கும் உரிய

நிவாரணத்தை தமிழக அரசு வழங்கிட வேண்டும்


⚡2.துப்பாக்கி சூட்டின்போது விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் 12 பேரின் படுகொலைக்கு காரணமான காவல் துறை அதிகாரிகளை பணிநீக்கம் செய்திட வேண்டும்.


⚡3.ஸ்டெரலைட் ஆலையை உடனடியாக மூட வேண்டும்.                   


⚡4.உரிய நீதி விசாரணை நடத்தவும்.                       


⚡5.இறந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும்

                        

🌟போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோவின் சார்பில் முதற்கட்டமாக


*🌟24.5.18 அன்று மாலை 5 மணியளவில் அனைத்து மாவட்டத்தலை நகரில் பேருந்து நிலையம் முன்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.*      ஆர்ப்பாட்டத்தினை மிக சக்தியாக நடத்திடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.




⚡இவண். 

*_ஜாக்டோ-ஜியோ._*



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



No comments: