Wednesday 30 May 2018

*நிதி ஒதுக்கீடு செய்த பிறகும்கூட அரசு பள்ளிகளை மூட நினைப்பதா?கமல்ஹாசன் அரசுக்கு கண்டனம்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/05/blog-post_82.html


*🌟நிதி ஒதுக்கீடு செய்த பிறகும் அரசுப் பள்ளிகளை மூட நினைப்பதா என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்*


*_மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், தனது கட்சி சார்பில் நேற்று வௌியிட்ட அறிக்கை:_*


*🌟அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டால், மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்கும் என்பது இயல்பு*


*🌟ஆனால், தனியார் பள்ளிகளைவிட அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பிறகும்கூட, அரசு பள்ளிகளின் தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படாமல், மாணவர் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்ற காரணத்துடன், அரசு பள்ளிகளை மூட முயற்சிக்கும் பள்ளிக் கல்வித்துறையின் நடவடிக்கை மிகவும் மோசமான முன்னுதாரணம் ஆகும்*


*🌟அனைத்தையும் ஆராய்ந்து பெருவாரியான சட்டங்கள், மசோதாக்கள், மானியக் கோரிக்கைகள் போன்றவற்றைப் பரிசீலிக்க, அனைத்துக் கட்சிகளை உள்ளடக்கிய சட்டமன்ற நிலைக்குழுக்கள் அமைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: