Tuesday 26 March 2019

*தேர்தல் பணி காரணமாக ஆரம்பப்பள்ளிகள் 210 நாட்களாக இயங்குவதில் சிக்கல்* *_தவிர்ப்பாணை வழங்க தலைமை ஆசிரியர்கள் வலியுறுத்தல்_*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/03/210.html


*🌟ஆரம்பப் பள்ளிகளில் ஆண்டு பள்ளி வேலை நாட்கள் 206 நாட்களே வருவதால் தவிர்ப்பாணை வழங்க தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.*


*🌟நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11ல் தொடங்கி மே 19-ம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 18-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. அதனுடன் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு வாக்குச்சாவடி பணிகள் வழங்கப்பட உள்ளன. இதனால் கல்விப் பணிகள் பாதிக்கப்படாத வண்ணம் பள்ளி வேலை நாட்களை ஏப்ரல் 13-ம் தேதியுடன் முடிக்க தொடக்கக்கல்வி துறை உத்தரவிட்டது. அதற்குள் ஆண்டு இறுதித் தேர்வுகளை முடிக்கவும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அனால், பெரும்பாலான ஆரம்பப் பள்ளிகளில் வேலை நாட்கள் 206 தினங்களே வருவதால் தவிர்ப்பாணை வழங்க தலைமை ஆசிரியர்கள் கோரியுள்ளனர்.*


*🌟இதுதொடர்பாக ஆரம்பப்பள்ளி தலைமையாசிரயர்கள் தொடக்கப் பள்ளிகளுக்கு 210 பள்ளி வேலை நாட்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. இந்த சூழலில் மக்களவைத் தேர்தலையொட்டி அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் கல்வி ஆண்டின் வேலை நாளை ஏப்ரல் 13-ம் தேதியுடன் முடிக்க வேண்டும். வேலை நாட்கள் இழப்பை சனிக்கிழமைகளில் ஈடு செய்ய வேண்டும் என்று இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.*


*🌟ஆனால், ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் 85 சதவீத தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றதால் பெரும்பாலான பள்ளிகள் மூடப்பட்டன. இதனால் நடப்பு கல்வி ஆண்டின் இறுதியில் (ஏப்ரல் 13) பெரும்பாலான பள்ளிகளுக்கு 206 வரையே வேலை நாட்கள் வருகின்றன.*


*🌟சனிக்கிழமைகளிலும் பள்ளிகளை நடத்தினாலும் 210 நாட்களை எட்ட முடியாது. ஞாயிற்றுக் கிழமைகளில் தேர்தல் பயிற்சிகள் நடைபெறுவதால் அன்றும் பள்ளிகளை திறப்பதில் சிக்கல் நிலவுகிறது. ஏப்ரல் 13-க்கு பின் தேர்தல் பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபட வேண்டியிருக்கும். பள்ளிகளில் தேர்தல் பணிகள் நடைபெறும் என்பதால் தொடக்கக் கல்வித்துறை தவிர்ப்பாணைவழங்க வேண்டும்" என்றனர்.*


*✍️நாளிதழ் செய்தி*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: