Tuesday 26 March 2019

*தேர்தல் பணிகளில் அரசு ஊழியர் வதைபடுவது தொடரக் கூடாது!*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/03/blog-post_2.html


*🌟நடக்கவிருக்கும் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில்,  வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி வகுப்புகள் நடந்து முடிந்திருக்கின்றன. இன்னும் இரண்டு கட்டங்களாக இந்த பயிற்சிகள் நடத்தப்படவிருக்கின்றன. ஆனால் பெரும்பாலான அரசு ஊழியர்கள் தாங்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படுவதை விரும்பவில்லை. அரசு ஊழியர்களின் இந்த தயக்கத்துக்கான காரணங்களை பரிசீலிக்க, தேர்தல் ஆணையம் முன்வர வேண்டியது அவசியம்.*


*🌟வாக்குப்பதிவு அலுவலர்கள் அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்களிடமிருந்து உணவுப்பொருள்களை பெறுதல் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. உணவை தாங்கள் சொந்த பொறுப்பில் ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும் என்று கூறியிருப்பது நடைமுறையில் வேடிக்கையானதும்கூட. வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் அலுவலர்கள் அங்கிருந்து நகர முடியாத அளவுக்கு முழுப் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்யக்கூட தேர்தல் ஆணையத்தால் முடியாதா என்ன?*


*🌟வாக்குப்பதிவு அலுவலர்கள் தேர்தலுக்கு முதல் நாளே வாக்குச்சாவடிகளில் தங்கவேண்டியிருக்கிறது. வாக்குப்பதிவு முடிந்து அன்றைய இரவு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பாதுகாப்பாக அனுப்பி வைப்பது வரைக்கும் அவர்கள் வாக்குச்சாவடிகளில் காத்திருக்க வேண்டும். அநேகமாக நள்ளிரவு வேளையில் தான் அங்கிருந்து அவர்கள் கிளம்ப முடியும்.*


*🌟போக்குவரத்து வசதியற்ற பகுதிகளில் பணியாற்றுபவர்களுக்கும்கூட   தேர்தல் ஆணையம் எந்த ஏற்பாடும் செய்வதில்லை. தொடர்ந்து ஏறக்குறைய மூன்று நாட்களுக்கு ஓய்வின்றி பணிபுரிய வேண்டியிருக்கும் அந்த அலுவலர்களுக்கு உணவு, போக்குவரத்து ஏற்பாடுகளைச் செய்வது தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு.*


*🌟சில வாகணங்களை ஏற்பாடு செய்தால்கூடப் போதும் நூற்றுக்கணக்கான வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் அலுவலர்களுக்கு உணவு, போக்குவரத்து வசதிகளை வழங்கிவிட முடியும்.* 


*🌟பெரும்பாலும் வாக்குச்சாவடிகள் என்பது அந்தந்த பகுதிகளில் உள்ள அரசு பள்ளி கட்டிடங்களாகவே இருக்கின்றன. அனைத்து பள்ளிகளிலுமே கழிப்பறை வசதிகள் இருப்பதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.*


*🌟வாக்குப்பதிவில் முறைகேடுகள் நடந்தால் தொடர்புடைய அலுவலர்களைத் தண்டிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதால்தான் அரசு ஊழியர்கள் தேர்தல் பணிகளுக்கு பயன்படுத்திக்கொள்ளப்படுகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு குறைந்தபட்ச வசதிகளைச் செய்துதருவதில்கூட தேர்தல் ஆணையம் அலட்சியம் கா ட்டுவதை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது!*


*✒செய்தி வெளியீடு;*


*_இந்து தமிழ் நாளிதழ்_*

*26.03.2019*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: