Tuesday 5 November 2019

*புதிய பென்சன் திட்டத்தை கைவிட தேசிய அளவில் ஜன - 8ல் வேலை நிறுத்தம் ஆசிரியர், தொழிற்சங்கத்தினர் பங்கேற்பு*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://tnptfayan.blogspot.com/2019/11/8.html


**
*🛡மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை, புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி 2020 ஜன-8 ல் இந்திய அளவில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்ய உள்ளனர்.*

**
*🛡மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதுடன், ஏழாவது ஊதியக் குழுவில் உள்ள முரண்பாடுகளைக் களைய வேண்டும், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.*

**
*🛡இதற்காக அனைத்து தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு, இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு மற்றும் தொழிற்சங்கங்கள் சார்பில், தேசிய அளவில் ஜன-8 ல் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்ய முடிவெடுத்துள்ளனர்.*
_20 கோடி பேர் பங்கேற்பு_

**
*🛡சமீபத்தில் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய பொதுக்குழு கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்துள்ளது.*

**
*🛡இதில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் _தோழர்.மயில்,_ மாநில தலைவர் _தோழர்.மணிமேகலை,_ இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு தேசிய பொதுக்குழு உறுப்பினர் _தோழர்.மோசஸ்_ பங்கேற்றனர்.*

_பொதுக்குழு உறுப்பினர் மோசஸ் கூறியதாவது:_

**
*🛡வேலை நிறுத்தத்தின் முக்கிய நோக்கம் புதிய கல்விக் கொள்கை, புதிய பென்ஷன் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும். ஏழாவது ஊதியக்குழு முரண்பாடுகளை களைய வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே. இதில் இந்திய அளவில் 20 கோடி பேர் பங்கேற்க உள்ளனர், என்றார்.*

_🙏நன்றி🙏_
*தினமலர் நாளிதழ்*

_🤝தோழமையுடன்;_

*_ச.மோசஸ்,_*
*அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர்,*
*இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு (STFI).*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

No comments: