Tuesday 21 April 2020

*TNPTF - கொரனாவால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு பொருளுதவி அளித்த தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டார கிளை - செய்தி துளிகள்*

*TNPTF - கொரனாவால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு பொருளுதவி அளித்த தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி  திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டார கிளை - செய்தி துளிகள்*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

**
*🛡மாணவர் நலன், ஆசிரியர் நலன், சமூக நலன் என்ற தாரக மந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு கொண்டிருக்கும் மிகப்பெரிய மாபெரும் இயக்கமாக நம்முடைய இயக்கம் செயல்பட்டு கொண்டிருக்கிறது இதில் எவ்வித மாற்றமும் இல்லை*,

**
*🛡அடிக்கடி ஏற்படக் கூடிய இயற்கை இடர்பாடுகள், இயற்கை சீற்றங்கள் எப்போது ஏற்பட்டாலும் அவற்றிற்கு சமூக நலன் என்ற அடிப்படையில் முதலில் நின்று பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணமும், உதவிகளையும், வழங்கும் ஒரு மாபெரும் இயக்கமாக நம்முடைய தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செயல் கொண்டிருக்கிறது*,

**
*🛡அந்த வகையில் இன்று தமிழகத்தில் கொரனாவால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு உதவுவது தன் நிலைப்பாடு என்று நிலைப்பாட்டின் மூலமாகவும் , மாநில அமைப்பின் வழிகாட்டுதல் படியும், எதற்கும் சளைத்தவர்கள் நாம் அல்ல என்ற வகையில், திருவண்ணாமலை மாவட்டம் ,வந்தவாசி வட்டார கிளையின் சார்பாக ,வந்தவாசி வட்டத்திற்கு உட்பட்ட வங்காரம் பகுதியைச் சார்ந்த மலைவாழ் மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன், இன்று  மேற்படி இடத்திற்கு (மலைப்பகுதிக்கு) நாம் சென்று 35 குடும்பத்தினருக்கு அத்தியாவசிய நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்ட நிகழ்வு நடந்தது*.

**
*🛡அந்த நிகழ்வில் நம் மாபெரும் இயக்கத்தின் மாநில பொருளாளரும் ,நம் வட்ட கிளையை சேர்ந்தவருமான தோழர் .ஜோதிபாசு அவர்கள் முன்னிலையில் மற்றும் மாநில, மாவட்ட ,வட்டார கிளை பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்துகொள்ளவும்*,

**
*🛡உடன் சிஐடியு,மற்றும் மலைவாழ் மக்கள் சங்கங்களின் மாநில மாவட்ட வட்ட கிளை நிர்வாகிகள் கலந்து கொள்ள ,மேற்படி இடத்திற்கு சென்று அங்கு பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்ட நிகழ்வு நடைபெற்றது என்ற தகவலை பதிவின் மூலமாக தெரிவித்துக் கொள்கிறோம்*.

**
*🛡மேலும் என்றும் ஆசிரியர் நலன், மாணவர் நலன், மட்டுமல்லாது சமூக நலனிலும் அக்கறை கொண்டுள்ள இயக்கமாக திகழும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை*...

_🤝தோழமையுடன்,_

*_வட்டார பொறுப்பாளர்கள்_*,
_வந்தவாசி வட்டார கிளை,_ *திருவண்ணாமலை மாவட்டம்.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

No comments: