Tuesday 22 June 2021

🛡️ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்தப் போராட்ட நாட்களை பணிக்காலமாகக் கருதி ஆணையிட வேண்டும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள்!

🛡️ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்தப் போராட்ட நாட்களை
பணிக்காலமாகக் கருதி ஆணையிட வேண்டும்
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள்!

ஊடகச் செய்தி
மாநில அமைப்பின் செய்தியறிக்கை எண் : 09/2021 நாள்: 17.06.2021

🛡️ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்தப் போராட்ட நாட்களை
பணிக்காலமாகக் கருதி ஆணையிட வேண்டும்
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள்!

✍️தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில
பொதுச்செயலாளர் ச.மயில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு
அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது.

🛡️தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் நியாயமான
வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி 2019 ஜனவரி 22 முதல் 30 முடிய
9 நாட்கள் ஜாக்டோ-ஜியோ பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வேலை நிறுத்தப்
போராட்டத்தில் பங்கேற்றதற்காக மாநிலம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான
ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அன்றைய தமிழக அரசால் பழிவாங்கும்
நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர்.

🛡️வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு
ஊழியர்கள் மீது தமிழ்நாடு குடிமைப்பணி (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு)
விதி 17(B) மற்றும் 17(E) ஆகிய பிரிவுகளின் கீழ் ஒழுங்கு நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டன. மேலும், போராட்டத்தில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான
ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீது குற்றவியல் நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டதோடு, தற்காலிகப் பணிநீக்கமும் செய்யப்பட்டனர்.
பணியாற்றிய இடத்திலிருந்து தொலைதூரப் பகுதிகளுக்கு பணிமாறுதல்
செய்யப்பட்டனர். வேலைநிறுத்த நாட்கள் ஊதியமில்லா விடுப்புக்காலமாக
கருதப்பட்டது. மேற்கண்ட நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள்
மற்றும் அரசு ஊழியர்கள் பதவி உயர்வு, தேர்வுநிலை, சிறப்புநிலை,
ஓய்வூதியப் பலன்கள் ஆகியவற்றைப் பெற
இயலாமல் மிகவும்
பாதிக்கப்பட்டனர்.

🛡️இந்நிலையில் மேற்கண்ட ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்தப்
போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீதான
அனைத்து ஒழுங்கு நடவடிக்கைகளையும், குற்றவியல் நடவடிக்கைகளையும்
திரும்பப் பெற்றுக்கொள்வதாக அப்போதைய தமிழக அரசு சட்டமன்றத் தேர்தல்
நெருங்கும் வேளையில் பார்வையில் கண்ட அரசாணையை வெளியிட்டது.

🛡️அதன்படி சில துறைகளில் ஒழுங்கு நடவடிக்கைகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. ஆனால், பள்ளிக்கல்வித்துறையில் சில மாவட்டங்களில் மேற்கண்ட ஒழுங்கு
நடவடிக்கைகள் இன்றுவரை திரும்பப் பெறப்படவில்லை என்பதைத் தங்களின்
மேலான கவனத்திற்குக் கொண்டுவருகிறோம். 

🛡️எனவே, பள்ளிக்கல்வித்துறையில்
மேற்கண்ட ஒழுங்கு நடவடிக்கைகளைத் திரும்பப் பெற்று அதற்குரிய
ஆணைகளை சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு உடனடியாக
வழங்கிட தாங்கள் நடவடிக்கை மேற்கொண்டு உதவிட வேண்டுகிறோம்.

🛡️மேலும், ஆசிரியர் - அரசு ஊழியர்கள் நலனில் மிகுந்த அக்கறை
கொண்ட தாங்கள், பார்வையில் கண்ட அரசாணையைக் கணக்கில் கொண்டும்,
கடந்தகால ஆசிரியர், அரசு ஊழியர் போராட்டங்களின் முடிவில் பின்பற்றப்பட்ட
நடைமுறைகளைப் பின்பற்றியும் ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்தப் போராட்ட
நாட்கள் மற்றும் தற்காலிகப் பணிநீக்க நாட்கள் ஆகியவற்றை பணி
நாட்களாகக் கருதி வரைமுறைப்படுத்தியும், பழிவாங்கும் நடவடிக்கையாக பணி
மாறுதல் செய்யப்பட்ட ஆசிரியர்களின் மாறுதல் உத்தரவுகளை ரத்து செய்து
அவர்கள் முன்பு பணியாற்றிய இடத்தில் மீண்டும் பணியமர்த்திடவும் உரிய
ஆணை வழங்கி உதவிட வேண்டுமாய் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்
கூட்டணியின் மாநில அமைப்பின் சார்பில் தங்களைப் பெரிதும் வேண்டிக்
கேட்டுக்கொள்கிறோம்.

✍️இப்படிக்கு,

ச.மயில்
பொதுச்செயலாளர்
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

No comments: