Wednesday, 22 November 2017

*JOCTTO-GEO வழக்கு விசாரணை : TNPTF பொதுச்செயலாளர் அறிக்கை (22.11.2017)*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟


  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2017/11/joctto-geo-tnptf-22112017.html


பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின்  பெருமைக்குரிய தோழர்களே!

வணக்கம்.


🌟ஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கின் அடுத்த கட்ட விசாரணை,


🌟நாளை (23.11.17) பிற்பகல் 2:15 மணிக்கு, உயர்நீதி மன்ற மதுரைக்கிளையில் நடைபெறவுள்ளது.


🌟இவ்வழக்கு விசாரணையில், ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள், திரு.சுப்பிரமணியன், திரு.தாஸ் மற்றும் நிதிக்காப்பாளர் திரு.மோசஸ் உள்ளிட்டோர் நேரில் பங்கேற்க உள்ளனர்.


🌟இடைநிலை ஆசிரியர் உள்ளிட்ட பலரின் ஊதியமுரண் சரிசெய்யப்படாது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊதியக்குழு பற்றியும்,


🌟ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் குறித்தும்,


🌟காலமுறை ஊதியம் தொடர்பாகவும் நமது தரப்பு கூடுதல் விளக்கங்கள் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட உள்ளன.


_தோழமையுடன்,_

*செ.பாலசந்தர்,*
_பொதுச் செயலாளர்,_
*தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி*


தகவல் பகிர்வு:

தோழர்.செல்வ.ரஞ்சித்குமார்


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



No comments: