Wednesday, 11 July 2018

*CPS-அரசிற்கு நிதிச்சுமையையும் அரசு ஊழியர்களுக்கு வாழ்நாள் நெருக்கடியையும் தந்து கொண்டிருக்கும் -CPS திட்டத்தை முற்றிலுமாகக் கைவிட்டுவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். -திண்டுக்கல் எங்கெல்ஸ்.*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/07/cps-cps.html


*🌟ரூ.18,000 கோடியை PFRDA-விடம் செலுத்தக்கோரி அல்ல! மாநிலநிதிச்சுமை குறைய CPS-ஐ முற்றாய் நீக்க வேண்டியே!*



*🌟CPS-ல் பிடித்த பங்குத் தொகை ரூ.18,000 கோடியை PFRDA-விடம்செலுத்தக்கோரி போராடவில்லை.*


*🌟அரசிற்கும், ஊழியர்களுக்கும் ஒருசேர பாதிப்பை ஏற்படுத்தும் *CPSதிட்டத்தையே முற்றாய் நீக்கிவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும்நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே கோரிக்கை.*


*🌟CPS-ஆல் ஊழியருக்குப் பாதிப்பா? அரசிற்கு பாதிப்பா?என்றால் இரண்டிற்கும் ஒரே பதில்,*

*ஆம்!* என்பதே.*


*🌟பழைய ஓய்வூதிய திட்டத்தின்படி அரசு தனது பங்காக எவ்விதத் தொகையும் செலுத்த வேண்டிய அவசியமில்லை._*


*🌟ஆனால், *CPS திட்டத்தில் பணியேற்கும் ஊழியருக்கான 10% தொகையைஊழியர் பணியேற்ற மாதம் முதல் ஓய்வு பெறும் மாதம் வரை அரசு செலுத்தியாக வேண்டும்.*


*🌟இப்படியாக 2003-ல் இருந்து கடந்த 2017 மார்ச் மாதம் வரை CPSதிட்டத்திற்காகத் தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர் & ஆசிரியர்களிடம் பிடித்தம்செய்த தொகை ரூ.9,000 கோடி.*


*🌟இதற்கு ஈடாக தமிழக அரசு செலுத்திய பங்கு ஈடுத் தொகை ரூ.9,000 கோடி.*


*🌟அரசு & அரசு ஊழியர்களின் CPS பங்குத் தொகைகளின் கூடுதலான இந்தரூ.18,000 கோடியை இன்னும் ஏன் PFRDA-விடம் செலுத்த வில்லை எனக்கேட்டுப் போராடவில்லை.*

*மாறாக,*


*🌟CPS திட்டத்தால் அரசு தரப்பு செலுத்த வேண்டிய கட்டாயப் பங்குத்தொகையால் ஏற்பட்டுள்ள நிதிச்சுமையிலிருந்து அரசு விடுபட,*


*🌟CPS-ஐ முற்றிலுமாக நீக்கிவிட்டு, எங்களின் ரூ.9,000 கோடியை வருங்காலவைப்பு நிதியில் சேர்த்து கொண்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தினை எங்களுக்கு நடைமுறைப்படுத்த வேண்டும் .TET, TRB, TNPSC போன்ற போட்டித் தேர்வுகளால் அரசுப் பணியேற்கும் நபர்களின் சராசரி பணிக்காலம் என்பது 35 ஆண்டுகள்.*


*🌟அதே நபர்கள் பணி ஓய்வு பெற்ற பின்னான ஆயுட்காலம் என்பது சராசரியாக10 - 15 ஆண்டுகளே.*


*🌟CPS திட்ட நடைமுறையில் ஊழியருக்காக *35 ஆண்டுகளும் மாதாமாதம் அரசுபெரும் தொகையை வழங்க வேண்டிய கட்டாயம்* உள்ளது.*

*ஆனால்,*


*🌟பழைய ஓய்வூதியத் திட்டத்தில் ஊழியரின் ஓய்வுக்காலத்திற்குப் பின்னான 10 - 15 ஆண்டுகள் நிதி* ஒதுக்கினாலே போதுமானது.*


*🌟இவ்வாறு ஒதுக்கும் நிதியானது 7 ஊதியக்குழுக்களை கடந்துள்ள நிலையிலும்ஒட்டுமொத்த செலவினத்தில் 14% மட்டுமே ஆகும்.*

*மேலும்,*


*🌟NHIS உள்ளிட்ட திட்டங்களில் திருமணத்திற்குப் பின் ஊழியர்களின் பெற்றோர்கள், அதன் பயன்களைத் துய்க்க இயலாத அனாதைகளாக அரசே கொள்கை வகுத்துள்ளது.*


*🌟இந்நிலையில் CPS-ல் இருந்து ஓய்வுபெறும் ஒரு நபருக்கு,*

*குடும்பநலநிதி*

*மருத்துவக் காப்பீடு*

*பணிக்கொடை*

*மாதாந்திர ஓய்வூதியம்*

*உள்ளிட்ட எதுவுமே இல்லாத சூழலில்*


*🌟அவரிடமிருந்து பிடித்த தொகையிலும்100%-தையும் பங்குச்சந்தையில் முதலீடு செய்வது என்பது,*


*🌟இந்நாட்டில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் அதன்பின் உயிருடன் வாழத்தகுதியற்றோர் என்ற நிலையே ஏற்பட்டுள்ளது.*


*🌟இவ்வாறாக, அரசிற்கு நிதிச்சுமையையும் அரசு ஊழியர்களுக்கு வாழ்நாள் நெருக்கடியையும் தந்து கொண்டிருக்கும், CPS திட்டத்தை முற்றிலுமாகக் கைவிட்டுவிட்டு, மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களின் தேர்தல்கால & சட்டசபை அறிவிப்பின்படி,அரசின் நிதிச்சுமையை மேலும் அதிகரிக்கும்படியாகத் தொடர்ந்து காலம் கடத்தாது*


*🌟அரசையும் அரசு ஊழியரையும் காக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனேநடைமுறைப்படுத்திட வேண்டும்.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: