*கேரள பேரிடர் நிதியாக 10 லட்சம் ரூபாய் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வழங்கியது - ஊடகச்செய்தி*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/10/10.html
*⭐தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல் தவணையாக பத்து லட்சம் ரூபாய் நிதி கேரள முதல்வர் பிணராய் விஜயனிடம் வழங்கப்பட்டது.*
*⭐09.10.2018 அன்று திருவனந்தபுரத்தில் கேரள அரசின் தலைமைச்செயலகத்தில் கேரள முதல்வரைச் சந்தித்த தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின்,*
*⚡மாநிலத் தலைவர் _தோழர்.மூ.மணிமேகலை,_*
*⚡மாநிலப் பொதுச்செயலாளர் தோழர்.ச.மயில்,_*
*⚡மாநிலப்பொருளாளர் _தோழர்.க.ஜோதிபாபு,_*
*⚡துணைப்பொதுச்செயலாளர் _தோழர்.தா.கணேசன்,_*
*⚡இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுக்குழு உறுப்பினர் _தோழர்.ச.மோசஸ்,_*
*⚡முன்னாள் மாநிலத்தலைவர் _தோழர்.தி.கண்ணன்_*
*ஆகியோர் கேரள பேரிடர் நிதியாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பத்துலட்சம் ரூபாய்க்கான வங்கி வரைவோலையை வழங்கினர்.*
*⭐இந்நிகழ்வின்போது கேரளமாநிலப் பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளரும், இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய இணைப் பொதுச்செயலாளருமாகிய ஹரிகிருஷ்ணன் உடனிருந்தார்.*
*⭐இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் _தோழர்.ச.மயில்_ கூறுகையில் தமிழகம் முழுவதும் எங்கள் இயக்க உறுப்பினர்கள் அளித்த கேரள பேரிடர் நிதியை முதல் தவணையாக பத்து லட்சம் ரூபாய் கேரள முதல்வரிடம் அளித்துள்ளோம்.*
*⭐விரைவில் கூடுதலாக நிதியை அளிப்பதற்கும் ஏற்பாடு செய்து வருகிறோம் என்று கூறினார்.*
*⚡தோழமையுடன்;*
*_ச.மயில்,_*
*மாநில பொதுச்செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment