Monday 4 February 2019

*பாதிக்கப்பட்டவர்களை மீண்டும் பணியில் சேர்க்கும் வரை ஜாக்டோ ஜியோ ஓயாது - TNPTF பொதுச்செயலாளர்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/02/tnptf_67.html


*🌟ஜாக்டோ-ஜியோ வின் சார்பாக இன்று மாண்புமிகு அமைச்சர்கள் _திரு. ஜெயக்குமார்,_ _திரு. செங்கோட்டையன்,_ பள்ளிக்கல்வித்துறை செயலாளர், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தம் துறை செயலாளர் ஆகியோரிடம் போராட்டத்தில் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்கள்/பணியாளர்கள்/ஆசிரியர்கள் மீதான குற்றவியல் /தற்காலிக பணிநீக்கம்/பணிமாறுதல் ஆகிய நடவடிக்கைகளை திரும்ப பெற்றுக் கொண்டு அனைவரும் பணியில் சேர உத்திரவிடுமாறு மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளோம்.*


*🌟அவர்கள் அனைவரும் மாண்புமிகு முதல்வரிடம் கொண்டு சென்று நல்ல முடிவுகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்கள்.* 


*🌟நாளை மாண்புமிகு முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோரை சந்திக்க ஜாக்டோ ஜியோ முயற்சித்து வருகிறது.*


*🌟பாதிக்கப்பட்ட அனைவரையும் எல்லா வகையிலும் பாதுகாக்க மாவட்ட ஜாக்டோ-ஜியோ  மாநில ஜாக்டோ ஜியோ ஆலோசனை படி இணைந்து பணியாற்ற வேண்டுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.*


*🌟பாதிக்கப்பட்ட  அனைவரையும் மீண்டும் பணியில் சேர்க்கும் வரை  ஒருங்கிணைப்பாளர்கள்  தொடர்ந்து சென்னையிலிருந்து  அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வார்கள்.*


*🤝தோழமையுடன்;*


*_ச.மயில்,_*

*மாநில பொதுச்செயலாளர்,*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: