Wednesday 22 January 2020

*பழிவாங்கும் நடவடிக்கையால் மறுக்கப்பட்டு வரும் TNPTF மேனாள் பொதுச்செயலாளர் தோழர் பாலசந்தரின் ஓய்வூதியப் பலனை மீட்டெடுக்க குமரி மாவட்டக்கிளை காலவரையற்ற உள்ளிருப்புப் போராட்டம் அறிவிப்பு*

*பழிவாங்கும் நடவடிக்கையால் மறுக்கப்பட்டு வரும் TNPTF மேனாள் பொதுச்செயலாளர் தோழர் பாலசந்தரின் ஓய்வூதியப் பலனை மீட்டெடுக்க குமரி மாவட்டக்கிளை காலவரையற்ற உள்ளிருப்புப் போராட்டம் அறிவிப்பு*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

**
*🛡 இடைநிலை ஆசிரியர்களின் மறுக்கப்பட்ட மத்திய அரசுக்கிணையான ஊதியத்தை வழங்கிட வலியுறுத்தி நமது இயக்கத்தால் 26.11.2018 அன்று அரசாணை எரிப்புப் போராட்டம் நடைபெற்றது.*

**
*🛡 இப்போராட்டத்தில் காலந்துகொண்டதற்காக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மேனாள் பொதுச்செயலாளர் தோழர்.சி.பாலசந்தர் அவர்களுக்கு 17(ஆ) குறிப்பானை வழங்கப்பட்டது.*

**
*🛡 தோழர் அவர்கள் 31.05.2019-ல் ஓய்வு பெற்ற நிலையில், கடந்த 8 மாதங்களாக ஓய்வூதிய பலன்கள் அனைத்தும் மறுக்கப்பட்டுள்ளது.*

**
*🛡 பல்வேறு நீதிமன்ற உத்தரவுகளையும் மற்றும் இதேநிலையில் பல மாவட்டங்களில் வழங்கிய 17(ஆ) ரத்து செய்யப்பட்ட உத்தரவுகள் சமர்ப்பித்த போதிலும், பழிவாங்கும் நோக்குடன் திருவட்டார் மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் ஒருசில ஆசிரியர் விரோத விசுவாச ஊழியர்களின் ஆலோசனையின் பேரில், தோழரின் ஓய்வூதியப் பலன்களை மறுக்கும் விதமாக 17(ஆ) ரத்து செய்யப்படாமல் உள்ளது.*

**
*🛡 மேலும், மதிப்புமிகு தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்கள் தொலைபேசியில் பலமுறை 17(ஆ) ரத்து செய்ய சொன்னதைக் கூட உதாசீனப் படுத்தி தொடர்ந்து பழிவாங்கும் நோக்கோடு திருவட்டார் கல்வி அலுவலர்கள் செயல்பட்டு வருகின்றனர்.*

**
*🛡 எனவே, மேற்படி _17(ஆ)-வினை ரத்து செய்யும் வரை, 23.01.2020 வியாழன் முற்பகல் 10:00 மணி முதல் திருவட்டார் மாவட்டகல்வி அலுவலகத்தில்_ (இருப்பு குழித்துறை) _உள்ளிருப்புப் போராட்டம்_ நடத்த தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கன்னியாகுமரி மாவட்டக்கிளை முடிவாற்றியுள்ளது.*

**
*🛡 இயக்க முடிவினை வெற்றி பெறச் செய்ய தோழமை அமைப்புகளின் ஆசிரியர்கள் உட்பட அனைத்து தோழர்களும் கலந்துகொண்டு ஆதரவு நல்கிட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் தோழர்.கே.சசிகுமார் அழைப்பு விடுத்துள்ளார்.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

No comments: