Friday, 1 May 2020

*😷தொழிலாளர் தினமான மே-1 ல் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டாரத்தின் சார்பாக ரூ.50000 மதிப்பிற்கு அரிசி, மளிகைப் பொருள்கள் அடங்கிய 110 தொகுப்பினை, 110 தொழிலாளர்களுக்கு வழங்கிய செய்தி தொகுப்பு*

*😷தொழிலாளர் தினமான மே-1 ல் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டாரத்தின் சார்பாக ரூ.50000 மதிப்பிற்கு அரிசி, மளிகைப் பொருள்கள் அடங்கிய 110 தொகுப்பினை, 110 தொழிலாளர்களுக்கு வழங்கிய செய்தி தொகுப்பு*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
*தொழிலாளர் தினமான மே 1 ல் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சின்னசேலம் வட்டாரத்தின் சார்பில் கொராணா நிவாரண பொருள்கள் வழங்கிய காணொளி தொகுப்பு*
👇👇👇👇👇👇👇👇
https://youtu.be/ygY703xlurM

*😷கொராணா என்னும் COVID-19 வைரஸின் கோரப்பிடியில் உலக நாடுகள் சிக்கி தவிக்கின்ற வேலையில் தமிழ்நாட்டில் அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.*

*😷கொராணாவின் தாக்குதல் அதிகரிக்கும் சூழலிலும் சுகாதார பணியாளர்களும், துப்புரவு பணியாளர்களும் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் கடுமையாக உழைத்துக்கொண்டிருக்கும் தொழிலாளர்களை கௌரவிக்கும் விதமாக கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டார தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக ரூ.50000 மதிப்பிற்கு அரிசி, மளிகைப் பொருள்கள் அடங்கிய 110 தொகுப்பினை, 110 தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டது.*

*😷நிகழ்ச்சியினை வட்டார தலைவர் திரு.மணி அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார்.*

*😷மாநில துணைத்தலைவர் தோழர் ரஹும் அவர்களும், மாவட்ட தலைவர் தோழர். குணசேகரன் அவர்களும் முன்னிலை வகித்தனர்.*
*😷வட்டார செயலாளர் தோழர். இளங்கோவன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.*

*😷இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளர்கள், வட்டார பொறுப்பாளர்கள் மற்றும் இயக்க உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.*  

*😷நிவாரண பொருள்கள் வழங்கிய நிகழ்வு சமூக இடைவெளியுடனும், முக கவசம் மற்றும் கையுறைகள் அணிந்தும் பாதுகாப்பான முறையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

Monday, 27 April 2020

*அகவிலைப்படி உயர்வு, ஈட்டிய விடுப்பு ஊதியம் ரத்து - கொரோனாவை விடக்கொடுமை - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கண்டனம்.*

*அகவிலைப்படி உயர்வு, ஈட்டிய விடுப்பு ஊதியம் ரத்து - கொரோனாவை விடக்கொடுமை - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கண்டனம்.*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

*மாநில பொதுச் செயலாளரின் செய்தி அறிக்கை எண்: 05/2020 நாள்: 27.04.2020*

**
*🛡அகவிலைப்படி உயர்வு, ஈட்டிய விடுப்பு ஊதியம் ரத்து கொரோனாவை விடக்கொடுமை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கண்டனம்*

_தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் ச.மயில் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை:_

**
*🛡தமிழ்நாட்டில் கொரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியின் காரணமாக ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு மற்றும் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு ஆகியவற்றை தமிழக அரசு முடக்கி வைத்து உத்தரவிட்டுள்ளதற்கும், வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி குறைக்கப்பட்டதற்கும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தனது கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துக் கொள்கிறது.*

**
*🛡தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை எண்: 232 நிதி (படிகள்) துறை நாள்: 27.04.2020 ன் படி தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை 30.06.2021 வரை 18 மாதங்களுக்கு நிறுத்தி வைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. அதே போன்று அரசாணை எண்: 48 (பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை) நாள்: 27.04.2020 ன் படி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பெற்று வந்த ஈட்டிய விடுப்பை ஒப்படைப்புச் செய்து ஊதியம் பெறும் உரிமையை ஓராண்டுக்கு நிறுத்தி வைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.*

**
*🛡அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வு என்பது விலைவாசி ஏற்றத்திற்கு தக்கவாறு மத்திய அரசு கணக்கிடும் விலைவாசிப் புள்ளிகளின் அடிப்படையில் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படுவதாகவும். இன்றைய நிலையில் நாளுக்கு நாள் விலைவாசி உயர்ந்து வரும் நிலையில் கொரோனா நோய்த் தொற்றினால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அடுத்த 18 மாதங்களுக்கு அகவிலைப்படி உயர்வை ரத்து செய்வது என்பது எவ்விதத்திலும் நியாயமானதல்ல.*

**
*🛡மத்திய அரசைப் பின்பற்றி மாநில அரசு செய்துள்ள இச்செயலானது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த 18 மாதங்களுக்கு விலைவாசிப் புள்ளியை 01.07.2019 நிலையிலேயே வைத்திருப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் உத்தரவாதம் அளிக்குமா? என்ற கேள்வி அனைவரது உள்ளத்திலும் எழுந்துள்ளது.*

**
*🛡கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 34 நாட்கள் மட்டுமே ஆகியுள்ளது. ஒரு மாத காலத்திலேயே மத்திய, மாநில அரசுகளுக்கு மிகப்பெரிய நிதி நெருக்கடி ஏற்பட்டு தனது ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வை ரத்து செய்யக்கூடிய அளவிற்கு நிலைமை உருவாகியுள்ளது என்றால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி, அதன் ஸ்திரத்தன்மையின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்துவதாக உள்ளது.*

**
*🛡மேலும் கொரோனா நோய்த்தொற்று இந்தியாவில் பரவி 2 மாத காலம் ஆகிவிட்ட நிலையில், அதை கட்டுப்படுத்துவதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அடுத்த 18 மாதங்களுக்கான அகவிலைப்படி உயர்வை முன்கூட்டியே ரத்து செய்துள்ளது என்பது கொரோனாவைக் காரணம் காட்டி மேற்கொள்ளும் நடவடிக்கையாகவே தோன்றுகிறது.*

**
*🛡மேலும், தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று ஒழிப்பு நடவடிக்கையில் தங்களுடைய உயிரையும் பொருட்படுத்தாமல் இரவு பகலாகக் களத்தில் நிற்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறையினர், வருவாய்த்துறையினர் உள்ளிட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோரது அகவிலைப்படி உயர்வையும், ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பையும் ரத்து செய்துள்ள செயல் என்பது கொரோனா கொடுமையை விட மிகப்பெரிய கொடுமையாகவே ஆசிரியர்கள், அரசு ஊழியர்களால் பார்க்கப்படுகிறது.*

**
*🛡கொரோனா நோய்த்தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள நிதி திரட்டுவதற்கு மத்திய, மாநில அரசுகளுக்கு எத்தனையோ வழிகள் உள்ளன. நாட்டின் பெருமுதலாளிகளுக்கு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வரிச்சலுகை, பல லட்சம் கோடி ரூபாய் வாராக்கடன் தள்ளுபடி, பல லட்சம் கோடி ரூபாய் செலவில் ஆடம்பரத் திட்டங்கள் ஆகியவற்றைச் செயல்படுத்தும் மத்திய, மாநில அரசுகள் 'ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி" என்பதைப் போல் தனது ஊழியர்களின் தலையில் கை வைப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும்.*

**
*🛡எனவே, தமிழக அரசு அகவிலைப்படி உயர்வு, ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு ஆகியவற்றை நிறுத்திவைத்து வெளியிட்டுள்ள அரசாணைகளை மறு பரிசீலனை செய்து ரத்து செய்திட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.*

_🤝தோழமையுடன்;_

*_ச.மயில்_*
_பொதுச்செயலாளர்_
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σm

Saturday, 25 April 2020

*ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது போராட்டக் காலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்யக்கோரி தமிழக அரசுக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை - பொதுச்செயலாளர் அறிக்கை*

*ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது போராட்டக் காலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்யக்கோரி தமிழக அரசுக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை - பொதுச்செயலாளர் அறிக்கை*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

**
*🛡கொடிய நோய்த்தொற்றான கொரோனாவைக் கட்டுப்படுத்த உலகமே போராடிக்கொண்டிருக்கிறது. தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த தங்கள் தலைமையிலான தமிழ்நாடு அரசு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழக அரசின் நடவடிக்கைகளை அமல்படுத்துவதில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறையினர், வருவாய்த்துறையினர் உள்ளிட்ட அரசுத்துறை ஊழியர்கள் இரவு பகல் பாராது தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். இதனால் தமிழ்நாட்டில் கொரோனா சமூகத் தொற்றாக மாறாமல் தடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களும் தமிழ்நாடு முழுவதும் வறிய நிலையில் உள்ள மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிப்பணிகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆங்காங்கே கொரோனா நோய்த் தடுப்புப் பணிகளிலும் தன்னார்வலர்களாகவும் செயல்பட்டு வருகின்றனர்.*

**
*🛡இப்படிப்பட்ட இக்கட்டான சூழலில் தமிழ்நாடு அரசு, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் இணைந்து செயல்பட்டு கொடிய கொரோனா நோய்த் தொற்றை முற்றிலுமாக அழித்தொழிக்க வேண்டிய கடமை நம் முன் உள்ளது.*

**
*🛡இப்படிப்பட்ட அசாதாரண சூழலில் கடந்த ஆண்டு 22.01.2019 முதல் 30.01.2019 முடிய நடைபெற்ற ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்தப் போராட்டம், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் கோரி 26.11.2018 அன்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நடத்திய அரசாணை நகல் எரிப்புப் போராட்டம் ஆகிய போராட்டங்களில் கலந்து கொண்டதற்காக ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தமிழ்நாடு குடிமைப்பணி (ஒழுங்கு நடவடிக்கைகளும், மேல்முறையீடுகளும்) விதி 17(ஆ) நடவடிக்கைகள் மற்றும் காவல்துறையின் குற்றவியல் நடவடிக்கைகளுக்கு உள்ளான 6600 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் நாளது தேதி வரை பணி ஓய்வு பெற இயலாமலும், பதவி உயர்வு போன்ற உரிமைகளைப் பெற இயலாமலும், மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழ்நாட்டு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மத்தியில் மிகப்பெரிய வருத்தமும், வேதனையும் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறது.*

**
*🛡எனவே, தமிழக அரசு நல்லெண்ண அடிப்படையிலும், இணக்கமான சூழலை ஏற்படுத்தும் வகையிலும் பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் துயரத்தைப் போக்கும் வகையிலும் போராட்டக் காலங்களில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது தமிழக அரசு மேற்கொண்ட தமிழ்நாடு குடிமைப்பணி (ஒழுங்கு நடவடிக்கைகளும், மேல்முறையீடுகளும்) விதி 17(ஆ) நடவடிக்கைகளையும், குற்றவியல் நடவடிக்கைகளையும் உடனடியாக ரத்து செய்து உதவிட வேண்டுமாய் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு தங்களை வேண்டிக் கேட்டுக்கொள்கிறது.*
                               
_சென்னை_    
_25.04.2020_

_🤝தோழமையுடன்;_

*_ச. மயில்_*       _பொதுச்செயலாளர்_
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


நம் பேரியக்கத் தோழர்கள் சமூகப்பணியாம் உதவிப்பணிகளைக் கையிலெடுத்து களத்தில் இறங்கி செயலாற்றிக் கொண்டிருப்பது நம் பேரியக்கத்தின் இலட்சியத்தை உயர்த்திப் பிடிப்பதாக உள்ளது - பொதுச்செயலாளர் அறிக்கை*

நம் பேரியக்கத் தோழர்கள் சமூகப்பணியாம் உதவிப்பணிகளைக் கையிலெடுத்து களத்தில் இறங்கி செயலாற்றிக் கொண்டிருப்பது நம் பேரியக்கத்தின் இலட்சியத்தை உயர்த்திப் பிடிப்பதாக உள்ளது - பொதுச்செயலாளர் அறிக்கை*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


*_TNPTF மாநில மையச் செய்தி_*

*பொதுச் செயலாளரின் கடிதம்,நாள்:25.04.2020*

*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!_ வணக்கம்*

**
*🛡கொடிய நோய் கொரோனாவின் தாக்குதலால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் கல்விப்பணியிலும்,  இயக்கப்பணியிலும் எப்போதும்போல் இயங்குவதற்கு வாய்ப்பற்ற நிலையில் மாநிலம் முழுவதும் நம் பேரியக்கத் தோழர்கள் சமூகப்பணியாம் உதவிப்பணிகளைக் கையிலெடுத்து களத்தில் இறங்கி செயலாற்றிக் கொண்டிருப்பது நம் பேரியக்கத்தின் இலட்சியத்தை உயர்த்திப் பிடிப்பதாக உள்ளது*

**
*🛡ஆசிரியர் நலன், மாணவர் நலன், கல்வி நலன், சமூக நலன் என்னும் நம் இயக்க குறிக்கோள்களில் தற்போது சமூக நலனுக்காக முழுவதுமாகச் செயல்படும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது*

**
*🛡அந்த வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு மாநிலம் முழுவதும் நம் இயக்கத் தோழர்கள் இயக்கப் பணிகளில் ஒன்றாம் சமூகப் பணியை காலில் சக்கரம் கட்டிக்கொண்டு செய்து கொண்டிருக்கும் செய்திகள் மலைப்பை ஏற்படுத்துவதாக உள்ளது*

**
*🛡மாதந்தோறும் நடைபெறும் நம் மாநிலச் செயற்குழு கடைசியாக 22.02.2020 அன்று மதுரையில் நடைபெற்றது. கடந்த இரண்டு மாதங்களாக மாநிலச் செயற்குழு கூட்டம் உட்பட மாவட்ட கிளைகளின் கூட்டங்கள், வட்டார நகரக் கிளைகளின் கூட்டங்கள் எதுவுமே நடைபெற இயலாத நிலையில் இயக்கத் தோழர்கள் நேருக்கு நேர் சந்தித்துக் கருத்துப்பரிமாற்றம் செய்வது என்பது இயலாத ஒன்றாகிவிட்டது*

**
*🛡காலச்சக்கரத்தின் இது போன்ற கடின நிகழ்வுகளில் கூட இயக்கப் பயணத்தை எவ்வாறு முன்னெடுக்கலாம் என்பதற்கு ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டக்கிளை  வழிகாட்டி இருக்கிறது*

**
*🛡இன்று (25.04.2020) தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டக் கிளையின் ஆலோசனைக்கூட்டம் காணொளிக் காட்சி மூலம் நேரலையில் நடைபெற்றுள்ளது. முற்பகல் 11 மணி முதல் 12.15 மணி வரை நடைபெற்ற அக்கூட்டத்தில் கொரோனா நோய்த் தொற்று பாதிப்புக்கள்- வேலூர் மாவட்டத்தில் நம் இயக்கத்தின் சார்பில் நடைபெற்றுள்ள உதவிப் பணிகள் குறித்தும், எதிர்கால இயக்கச் செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது*

**
*🛡ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டக் கிளைக்கு மாநில மையத்தின் பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!*

**
*🛡கடந்த 10 தினங்களாக நம் இயக்கத் தோழர்கள் மாநிலம் முழுவதும் ஆற்றிவரும் உதவிப் பணிகள் மூலம் வறிய மக்களுக்கு இதுவரை 60 லட்சம் ரூபாய்க்கு மேல் உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. இன்னும் தொடர்ந்து உதவிப் பணிகள் நடைபெற இருக்கின்றன*

**
*🛡திண்டுக்கல் மாவட்டக் கிளை மட்டும் இதுவரை 5 லட்சம் ரூபாய்க்கு மேல் உதவிப் பணிகளை மேற்கொண்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டக் கிளை 7 லட்சம் ரூபாய் அளவிற்கு உதவிப் பணிகளை இன்று முதல் முன்னெடுத்துள்ளது. பெரும்பாலான மாவட்டக் கிளைகள் ஒவ்வொன்றும் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான உதவிப் பொருட்களை வழங்கியுள்ளன*

**
*🛡நம் இயக்கத்தின் உதவிப் பணிகளை பல மாவட்டங்களில் அரசு உயர் அலுவலர்கள் பாராட்டியுள்ள செய்தி உதவிப் பணிகளுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது*

**
*🛡இன்று (25.04.2020) உதவிப் பணிகளில் பம்பரம்போல் சுழன்று பணியாற்றிய மாநில மையத்தின் கவனத்திற்கு வந்த மாவட்ட,வட்டார,நகரக் கிளைகள் பின்வருமாறு*

*⚡(1)  ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம்- (கடந்த 10 நாட்களாக ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் உதவிப் பணிகள் நடைபெற்றுள்ளன)*

*⚡(2) தூத்துக்குடி மாவட்டம்- கோவில்பட்டி வட்டாரம்*

*⚡(3) கன்னியாகுமரி மாவட்டம்- ராஜாக்கமங்கலம் வட்டாரம், தோவாளை வட்டாரம்*

*⚡(4) திருவண்ணாமலை மாவட்டம்- போளூர் வட்டாரம், வெம்பாக்கம் வட்டாரம்*

*⚡(5) திருநெல்வேலி மாவட்டம்- அம்பாசமுத்திரம் வட்டாரம்*

*⚡(6) தஞ்சை மாவட்டம்- திருவிடைமருதூர் வட்டாரம், தஞ்சாவூர் நகரம்*

*⚡(7) திண்டுக்கல் மாவட்டம் -310 குடும்பங்களுக்கு உதவி பொருட்கள்*

**
*🛡தூய தொண்டால் இன்றைய பொழுதை அளந்த தன்னலமற்ற நம் பேரியக்கத் தோழர்களுக்கு மாநில மையத்தின் பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!*

*_தொடரட்டும் தூய தொண்டு!_*
*_படரட்டும் தன்னிகரில்லா சேவை!_*
*_உயரட்டும் இயக்கப் பதாகை!_*

_🤝தோழமையுடன்;_

*_ச.மயில்_*
_பொதுச் செயலாளர்_ *தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


Thursday, 23 April 2020

*🛡TNPTF உறுப்பினர்கள் போராட்டக்களத்தில் மட்டுமல்ல; சேவைபுரிவதிலும் சமரசமற்ற போராளிகள்*

*🛡TNPTF உறுப்பினர்கள் போராட்டக்களத்தில் மட்டுமல்ல; சேவைபுரிவதிலும் சமரசமற்ற போராளிகள்*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில மையச் செய்தி*

*பொதுச் செயலாளரின் கடிதம்:23.04.2020*

*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!_ வணக்கம்.*

**
*🛡கொரோனாவை அழித்தொழிக்கும் பணியில் தமிழக அரசும் அதற்கு உறுதுணையாக மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறையினர், வருவாய்த்துறையினர் உள்ளிட்ட அரசுத்துறை ஊழியர்களும் இரவு பகல் பாராது இடையறாது பணியாற்றி வருகின்றனர்*

**
*🛡தங்கள் உயிரைக் கொடுத்து மற்றவர்கள் உயிரை காக்கும் தியாக வேள்வியில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர் என்றால் அது மிகையாகாது. பொதுமக்களும் உண்மை நிலை உணர்ந்து,ஆபத்தின் தன்மை புரிந்து பெருமளவில் ஊரடங்கிற்கு தங்கள் ஒத்துழைப்பை நல்கி வருகின்றனர்.இதனால் தமிழகத்தில் கொரோனா ஒரு சமூகத் தொற்றாய் மாறிவிடாமல் இதுவரை தடுக்கப்பட்டுள்ளது.*

**
*🛡ஊரடங்கால் வாடும் ஏழை மக்களுக்கு தமிழகம் முழுவதும் தொண்டுள்ளம் கொண்ட ஆயிரக்கணக்கானோர் உதவி வருகின்றனர். கடந்த சில நாட்களாக நம் பேரியக்கமாம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட,வட்டார,நகரக் கிளைகளின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இயக்க நிர்வாகிகளும்,இயக்க உறுப்பினர்களும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு வாழ்வாதாரப் பொருட்களை வழங்கி உதவி வருகின்றனர்*

**
*🛡இன்றும் (23.04.2020) தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் உதவிப் பணிகளில் நம் இயக்கத் தோழர்கள் ஈடுபட்டனர். அதற்காக மாவட்டந்தோறும் பல இலட்சக்கணக்கான ரூபாய்களை நம் இயக்க உறுப்பினர்கள் மனமுவந்து வழங்கியுள்ளனர்.*

**
*🛡ஒரு அசாதாரணச் சூழலில் சமூக அக்கறையுள்ள ஒரு இயக்கத்தின் உறுப்பினர்கள் எவ்வாறு செயலாற்ற வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக நம் இயக்க உறுப்பினர்கள் செயலாற்றி வருகின்றனர்.*

**
*🛡இன்னும் பல மாவட்டங்கள் தொடர்ந்து வரும் நாட்களில் தங்களது சேவைப்பணிகளைத் தொடர்வதற்கு ஆயத்தமாகி வருகின்றன. நம் இயக்கத் தோழர்கள் செய்துவரும் உதவிப் பணிகளை விளம்பரம் செய்வதற்காகவோ, பெருமை கொள்வதற்காகவோ சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் நாம் அதை வெளியிடுவது இல்லை.தோழர்கள் செய்துவரும் உதவிப் பணிகளை அங்கீகரிக்கவும், அவர்களை ஊக்குவிப்பதற்காகவும், மற்றவர்களையும் இதுபோன்ற உதவிப் பணிகளில் ஈடுபடத் தூண்டுவதற்காகவுமே நாம் தொடர்ந்து அப்பணிகளை வெளியிட்டு வருகிறோம்.அதிலும் ஒருசில மாவட்ட ,வட்டார, நகரக் கிளைகளில் செய்யும் உதவி பணிகளே நமக்கு எட்டுகின்றன. இன்னும் சில கிளைகள் அரவமே இல்லாமல் உதவி பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. நம் தோழர்கள் பலர் தனிநபர்களாகவும் தங்களால் இயன்ற உதவிகளைப் பல இடங்களில் ஆர்வமுடன் செய்து வருகின்றனர். ஈடு இணையற்ற நம் இயக்கப் பொறுப்பாளர்களையும், ஈரமிக்க இயக்க உறுப்பினர்களையும் மாநில மையம் பாராட்டி மகிழ்கிறது.*

**
*🛡மேற்கண்ட நிகழ்வுகள், "TNPTF உறுப்பினர்கள் போராட்டக்களத்தில் மட்டுமல்ல;சேவை புரிவதிலும் சமரசமற்ற போராளிகள்" என்பதை உணர்த்துவதாக அமைந்துள்ளது.*

**
*🛡இன்று (23.04.2020) மாநிலம் முழுவதும் உதவிப் பணிகளில் ஈடுபட்ட நம் பேரியக்கக் கிளைகள் (நமக்குக் கிடைத்த தகவலின்படி) பின்வருமாறு*

*⚡(1)காஞ்சிபுரம் மாவட்டம், அச்சரப்பாக்கம் வட்டாரக்கிளை*

*⚡(2) திருவண்ணாமலை மாவட்டம்,செய்யாறு வட்டாரக் கிளை*

*⚡(3) ஈரோடு மாவட்டம், நம்பியூர் வட்டாரக் கிளை*

*⚡(4 )குமரி மாவட்டம், ராஜாக்கமங்கலம் வட்டாரக்கிளை*

*⚡(5)திருவாரூர் மாவட்டம்,நன்னிலம் வட்டாரக்கிளை*

*⚡(6) திண்டுக்கல் மாவட்டம்,ஆத்தூர், வேடசந்தூர், தொப்பம்பட்டி,பழனி, நிலக்கோட்டை, வத்தலக்குண்டு, வட்டாரக் கிளைகள்*

*⚡(7)தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை வட்டாரக் கிளை*

*⚡(8)தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் நகரக்கிளை*

*⚡(9) தோழர்.உ.நாகராஜன், மாநில செயற்குழு உறுப்பினர் கன்னியாகுமரி மாவட்டம்*

*⚡(10)திருமதி.கீதா, துணைத்தலைவர், புதுக்கோட்டை மாவட்டம்*

*⚡(11) தோழர்.கணேசன், இரணியல் கன்னியாகுமரி மாவட்டம்*

*⚡(12)தோழர்.கனகராஜா,  திருப்பூர் மாவட்டச் செயலாளர்*

**
*🛡மேற்கண்ட மாவட்ட, வட்டார, நகரக் கிளைகளையும் தனிநபர்களாக உதவி வழங்கிய தொண்டுள்ளம் கொண்ட தோழர்களையும் மாநில மையம் பாராட்டுகிறது! வாழ்த்துகிறது!*

**
*🛡வழிபாடு செய்யுங்கள்.... கடவுளுக்கு அருகில் நீங்கள் செல்லலாம்! ஆனால்,சேவை செய்யுங்கள்....கடவுள் உங்களுக்கு அருகில் வருவார்.*
  *- _அன்னை தெரசா_*

*சென்னை
23.04.2020*

_🤝தோழமையுடன்;_

*_ச.மயில்_*
_பொதுச் செயலாளர்*_ *தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

Tuesday, 21 April 2020

*TNPTF - கொரனாவால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு பொருளுதவி அளித்த தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டார கிளை - செய்தி துளிகள்*

*TNPTF - கொரனாவால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு பொருளுதவி அளித்த தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி  திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டார கிளை - செய்தி துளிகள்*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

**
*🛡மாணவர் நலன், ஆசிரியர் நலன், சமூக நலன் என்ற தாரக மந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு கொண்டிருக்கும் மிகப்பெரிய மாபெரும் இயக்கமாக நம்முடைய இயக்கம் செயல்பட்டு கொண்டிருக்கிறது இதில் எவ்வித மாற்றமும் இல்லை*,

**
*🛡அடிக்கடி ஏற்படக் கூடிய இயற்கை இடர்பாடுகள், இயற்கை சீற்றங்கள் எப்போது ஏற்பட்டாலும் அவற்றிற்கு சமூக நலன் என்ற அடிப்படையில் முதலில் நின்று பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணமும், உதவிகளையும், வழங்கும் ஒரு மாபெரும் இயக்கமாக நம்முடைய தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செயல் கொண்டிருக்கிறது*,

**
*🛡அந்த வகையில் இன்று தமிழகத்தில் கொரனாவால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு உதவுவது தன் நிலைப்பாடு என்று நிலைப்பாட்டின் மூலமாகவும் , மாநில அமைப்பின் வழிகாட்டுதல் படியும், எதற்கும் சளைத்தவர்கள் நாம் அல்ல என்ற வகையில், திருவண்ணாமலை மாவட்டம் ,வந்தவாசி வட்டார கிளையின் சார்பாக ,வந்தவாசி வட்டத்திற்கு உட்பட்ட வங்காரம் பகுதியைச் சார்ந்த மலைவாழ் மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன், இன்று  மேற்படி இடத்திற்கு (மலைப்பகுதிக்கு) நாம் சென்று 35 குடும்பத்தினருக்கு அத்தியாவசிய நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்ட நிகழ்வு நடந்தது*.

**
*🛡அந்த நிகழ்வில் நம் மாபெரும் இயக்கத்தின் மாநில பொருளாளரும் ,நம் வட்ட கிளையை சேர்ந்தவருமான தோழர் .ஜோதிபாசு அவர்கள் முன்னிலையில் மற்றும் மாநில, மாவட்ட ,வட்டார கிளை பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்துகொள்ளவும்*,

**
*🛡உடன் சிஐடியு,மற்றும் மலைவாழ் மக்கள் சங்கங்களின் மாநில மாவட்ட வட்ட கிளை நிர்வாகிகள் கலந்து கொள்ள ,மேற்படி இடத்திற்கு சென்று அங்கு பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்ட நிகழ்வு நடைபெற்றது என்ற தகவலை பதிவின் மூலமாக தெரிவித்துக் கொள்கிறோம்*.

**
*🛡மேலும் என்றும் ஆசிரியர் நலன், மாணவர் நலன், மட்டுமல்லாது சமூக நலனிலும் அக்கறை கொண்டுள்ள இயக்கமாக திகழும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை*...

_🤝தோழமையுடன்,_

*_வட்டார பொறுப்பாளர்கள்_*,
_வந்தவாசி வட்டார கிளை,_ *திருவண்ணாமலை மாவட்டம்.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

Monday, 20 April 2020

*கொரோனாவால் தங்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்துக் கொண்டிருக்கும் வறிய மக்களுக்கு உதவி வரும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*

*கொரோனாவால் தங்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்துக் கொண்டிருக்கும் வறிய மக்களுக்கு உதவி வரும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

*TNPTF மாநிலமையச் செய்தி*

*_அன்பான தோழர்களே! வணக்கம்_*

**
*🛡தமிழகத்தில் கொரோனாவின் கோரக் கரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நீண்டுகொண்டே இருக்கிறது. கொடுங்கொரோனாவை தமிழகத்திலிருந்து அழித்தொழிக்க அனைவரது முயற்சியும் மிக மிக அவசியம்*

**
*🛡கொரோனாவால் தங்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்துக் கொண்டிருக்கும் வறிய மக்களுக்கு உதவுவது என்ற நிலைப்பாட்டை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில மையம் எடுத்த தினத்திலிருந்தே மாநிலம் முழுவதும் நம் பேரியக்கத் தோழர்கள் ஆற்றிவரும் சேவைப் பணி தங்கு தடையின்றி தொடர்ந்து கொண்டே இருக்கிறது.கொரோனாவின் வேகத்தைத் தோற்கடிக்கும் வேகத்தோடு நம் இயக்கத் தோழர்கள் தொண்டாற்றிக் கொண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது*

**
*🛡இன்று(20.04.2020) திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை மற்றும் குஜிலியம்பாறை வட்டாரக்கிளைகளின் தோழர்கள் தனித்தனியே தங்கள் தங்கள் பகுதிகளில் கொடிய கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து வறுமையில் வாடிக்கொண்டிருக்கும் ஏழை மக்களுக்கு வாழ்வாதாரப் பொருட்களை வழங்கி உள்ளனர்.மேற்கண்ட இரு கிளைகளின் செயல்பாடுகளும் மிகவும் பாராட்டுக்குரியது*

**
*🛡இந்த கொரோனா விடுமுறையிலும் மிகவும் சிரத்தை எடுத்து நம் தோழர்கள் ஆற்றியுள்ள பணி என்றென்றும் நிலைத்து நிற்கக்கூடிய பணியாகும்.மாநில மையத்தின் வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்!*

**
*🛡ஒன்றுபட்ட திருநெல்வேலி மாவட்டக் கிளையைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட கிளையும் மாவட்ட அளவில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள நமது இயக்க உறுப்பினர்களிடம் இன்று நன்கொடை கோரியது.கோரிய முதல் நாளிலேயே (20.4. 2020)ரூ 1,50,000/ நிதி சேர்ந்துள்ளது நம் இயக்கத் தோழர்களின் தொண்டுள்ளத்தை வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது*

**
*🛡அதிலும் கோவில்பட்டியைச் சேர்ந்த நம் இயக்க ஆசிரியர் சகோதரி ஒருவர் ரூபாய் 10,000 நிதி அளித்ததும், மற்றொரு சகோதரி ரூபாய் 5000 நிதி அளித்ததும் என்றென்றும் நினைவில் நிற்கக்கூடிய நிகழ்வுகளாகும்*

_🤝வாழ்த்துக்களுடன்_

*_ச.மயில்_*
_பொதுச் செயலாளர்_
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

Sunday, 19 April 2020

*நலிவுற்ற குடும்பங்களுக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிவாரணப் பொருட்கள் வழங்கல்.*

*நலிவுற்ற குடும்பங்களுக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிவாரணப் பொருட்கள் வழங்கல்.*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://youtu.be/Si8PKuiRHVA

*_ஏழையின் சிரிப்பில் இறைவனைக் கண்டோம்_*

*_இயன்றதை செய்வோம் இயலாதவர்களுக்கே! என்ற எண்ணத்தில்_*

**
*🛡தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் திருநெல்வேலி மாவட்ட கிளை எடுத்த சிறு முயற்சியின் விளைவு*

**
*🛡நலிவுற்ற கரகாட்ட கலைஞர்கள், தையல் கலைஞர்கள், மாற்று திறனாளிகள், செளராஸ்டிரா மக்கள், மிகவும் விளிம்பு நிலையில் இருக்கும் ஏழை எளிய மக்களுக்கு*

**
*🛡ரூபாய் 2 லட்சம் செலவில் நிவாரணப் பொருட்கள் வாங்கி வழங்கிட நேற்று மரியாதைக்குரிய மாவட்ட ஆட்சியர் (பயிற்சி) சிவகுருநாதன் அவர்களிடம் முறையாக ஒப்புதல் பெறப்பட்டது.*

**
*🛡மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்லூரியில் பயிலும் மூன்று மாணவர்களை*

*_1.மகாலிங்கம்_*
*_2.நவீன்_*
*_3.மீஷாக் ராபின்சன்_*

*தன்னார்வலர்களாக இன்று நம்முடன் வருகை தந்தனர்.*

**
*🛡இவர்களுடன் இணைந்து இன்று திருநெல்வேலி மாநகரில் மொத்தம் 200 குடும்பங்களுக்கு 2 லட்ச ரூபாய் செலவில் 10 கிலோ அரிசி பையுடன் தலா 1000/- ரூபாய் மதிப்புள்ள மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டது.*

**
*🛡உலகையே அச்சுறுத்தும் உயிர்கொல்லி நோயான கோரனாவால் ஊரடங்கு உத்தரவிற்கு ஆட்பட்டு அடுத்த வேளை உணவிற்கே வழி தெரியாது வறுமையில் சிக்கி தவிக்கும் விளிம்பு நிலை ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்கின்ற போது*

*TNPTF என்ற நமது பேரமைப்பு*...

*_ஆசிரியர் நலன்_*
*_மாணவர் நலன்_*
*_சமூக நலனில்_*

*அன்றும் இன்றும் என்றும் அக்கறையுடன் செயல்படும் அமைப்பு என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து இருக்கின்றது.*

**
*🛡இவ்வாறு நாம் செயல்பட காரணமே நமது இயக்கத்தின் நாடி நரம்புகளாய் செயல்படும் நகர,வட்டார கிளை பொறுப்பாளர்களும்*

**
*🛡இரத்தமும் சதையுமாக இருக்கும் நமது இயக்க அடிப்படை உறுப்பினர்களும்தான்  என்பதை மாவட்ட கிளை எப்போதுமே முழுமையாக உணர்ந்துள்ளது.*

**
*🛡இச்சிறு முயற்சிக்கு காரணமாக இருந்த நமது மாநில தலைவர் _தோழர்.மூ.மணி மேகலை_ அவர்களுக்கும்,  *மாநில பொதுச்செயலாளர்* தோழர்.ச.மயில் அவர்களுக்கும் மாநில பொருளாளர் _தோழர்.க.ஜோதிபாபு_ மற்றும் மாநில துணைப் பொதுச்செயலாளர் _தோழர்.சா.கணேசன்_ மற்றும் STFI அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் _தோழர்.ச.மோசஸ்_ அவர்களுக்கும் நெல்லை மாவட்ட கிளையின் நன்றியை உரித்தாக்குகிறோம்.*

_🤝தோழமையுடன்...._

*_செ.பால்ராஜ்_*
*மாவட்ட செயலாளர்*
*திருநெல்வேலி.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

Thursday, 9 April 2020

*கொரோனா கொடுமைக்கு மத்தியிலும் 25 மாணவர்களுக்கும் குறைவான பள்ளிகள் கணக்கெடுப்பு - அரசு விளக்கமளிக்க TNPTF வலியுறுத்தல்!*

*கொரோனா கொடுமைக்கு மத்தியிலும் 25 மாணவர்களுக்கும் குறைவான பள்ளிகள் கணக்கெடுப்பு - அரசு விளக்கமளிக்க TNPTF வலியுறுத்தல்!*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

*_கொரோனா கொடுமைக்கு மத்தியிலும் - 25 மாணவர்களுக்கும் குறைவான பள்ளிகள் கணக்கெடுப்பு - ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சந்தேகம்!_*

*மாநில அமைப்பின் செய்தியறிக்கை எண் : 04/2020  நாள்: 09.04.2020*

_தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொதுச்செயலாளர் ச.மயில் வெளியிட்டுள்ள அறிக்கை:_

**
*🛡கொரோனா என்னும் கொடிய நோய்த் தொற்றின் காரணமாக உலகமே செயலிழந்து நிற்கிறது. உலக வல்லரசுகளெல்லாம் செய்வதறியாது திகைத்து நிற்கின்றன. நம் இந்திய நாட்டிலும் கொரோனாவின் கோரக்கரங்கள் நாளுக்கு நாள் நீண்டு கொண்டே செல்கிறது.*

**
*🛡கொரோனா நோய்த்தொற்று இந்தியாவில் சமூகத் தொற்றாக மாறி விடாமல் தடுத்திட மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. தமிழகத்தில் சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறை ஊழியர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் இரவு பகலாக நோய்த்தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.*

**
*🛡இந்நிலையில் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் 25 மாணவர்களுக்குக் குறைவாக உள்ள ஆரம்ப, நடுநிலைப்பள்ளிகளைக் கண்டறிந்து அதன் பெயர்ப் பட்டியலை குறிப்பிட்ட படிவத்தில் உடனடியாக அனுப்புமாறு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் சார்நிலை அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.*

**
*🛡மேலும் 25 மாணவர்களுக்குக் குறைவான பள்ளிகளில் படிக்கும் மாணவர்களைச் சேர்ப்பதற்கு அருகில் உள்ள பள்ளிகளின் விவரம், அப்பள்ளிகள் அமைந்துள்ள தூரம் போன்ற விவரங்களும் அப்படிவத்தில் கோரப்பட்டுள்ளன. இப்புள்ளி விவரங்களை உடனடியாகக் கேட்டுப் பெறுவதில் அந்தந்த மாவட்டக் காவல்துறையும் மிகுந்த அவசரம் காட்டி வருகிறது.*

**
*🛡இதனால் 25 மாணவர்களுக்குக் குறைவான பள்ளிகள் மூடப்படுமா? அப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பிற பள்ளிகளுக்கு மாற்றப்படுவார்களா? என்ற சந்தேகங்கள் ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.*

**
*🛡கொரோனா நோய்த்தொற்றால் கடந்த 15.03.2020 முதல் தமிழகம் முழுவதும் அனைத்துப் பள்ளிகளும் காலவரையின்றி மூடப்பட்டுள்ள நிலையில் கல்வித்துறை கேட்கும் இப்புள்ளி விவரமானது ஆசிரியர்கள் மத்தியில் தேவையற்ற குழப்பத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.*

**
*🛡பள்ளிகள் அனைத்தும் காலவரையின்றி மூடப்பட்டுள்ள இக்கட்டான சூழலில் திடீரென இதுபோன்ற புள்ளிவிவரங்கள் எடுக்கும்போது கல்வித்துறை அதற்கான காரணத்தைத் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் தேவையற்ற குழப்பங்கள் தவிர்க்கப்படும்.*

**
*🛡ஏற்கனவே தொடக்கக்கல்வித்துறையில் கடந்த சில மாதங்களாகவே பத்துக்கும் குறைவான மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட பள்ளிகள் அருகில் உள்ள பள்ளிகளோடு இணைக்கப்படும் என்று செய்திகள் வந்து கொண்டிருந்தன. அதற்கு பல்வேறு ஆசிரியர் அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில் தற்போது 25 மாணவர்களுக்கும் குறைவான பள்ளிகளைக் கணக்கெடுப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. எனவே கல்வித்துறை இதுதொடர்பாக உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு கேட்டுக் கொள்கிறது.*
         
_🤝தோழமையுடன்;_

*_ச.மயில்,_*
_மாநில பொதுச்செயலாளர்,_
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм